இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

நம்மால் அன்றி யாரால் முடியும்?

முகில் தினகரன்


நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

முன்னோக்கி நட!!
நடந்து கொண்டே இரு!!
அதாவது…
வாழ்ந்து கொண்டே வளரு!!
வளர்ந்து கொண்டே வாழு!!

வளர்ச்சி என்பது இங்கு வெறும் உடல் முதிர்ச்சியை மட்டும் குறிப்பதல்ல. வாழ்வில் எழுச்சி பெறுதல், முன்னேற்றமான நிலையை எட்டிப் பிடித்தல், சாமான்யனாய் இருந்து சாதனையாளனாக மாறுதல், போன்ற வளர்ச்சிகளைக் குறிப்பதாகும்.

“வந்தான்… வாழ்ந்தான்… மடிந்தான்” என்கிற சாதாரண, சராசரி வாழ்க்கை அறிவடையோர்க்கு அழகல்ல. இயற்கையாகவே நமக்குள் பல அரிய சக்திகள் புதைந்து கிடக்கின்றன. ஆற்றல்கள்… அறிவப்பூர்வமான சிந்தனைகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டு பிடித்து… “முயற்சித்துப் பார்ப்போமே” என்று முனைபவர்களே மனிதர்கள். “நம்மால் அன்றி யாரால் முடியும்?” என்று நம்பிக்கையுடன் இறங்குபவர்களே ஆண்மையாளர்கள்… ஆற்றல் நிறைந்தவர்கள். “வெற்றி கிடைத்தால் கிடைக்கட்டும்... செயலில் ஈடுபட்டோம்... கடமையை நிறைவேற்றி விட்டோம்” என்கிற எண்ணத்தில் மகிழ்ச்சி காண்பவர்களே உண்மையான இலட்சியவாதிகள்.

எந்தச் செயலையும் சிந்திக்கும் போதே “இது நம்மால் முடியுமா? ம்ஹூம்…நிச்சயம் முடியாது” என்று பின்னோக்கி நடப்பது மனிதருக்கு அழகல்ல… பலமுமல்ல.

சிறந்த நம்பிக்கையுள்ளவர்கள் மாத்திரமே அச்சமின்றி சிந்திக்க முடியம்... சிந்தித்ததைச் செயல்படுத்த முடியும்… செயல்பாட்டை வெற்றியாக்க முடியும்… வெற்றியை நிலைப்படுத்த முடியும்... நிலைப்பாட்டினை நீட்டிக்க முடியும்; நம்பிக்கை என்பதே இல்லாதவர்கள்… நம்பிக்கையைத் தொலைத்தவர்கள்... பலவீனர்கள். அவர்களால் ஆசைப் படத்தான் முடியுமே தவிர ஆசையை அரங்கேற்றிக் கொள்ள முடியாது... வெற்றியைத் தொடக்கூட முடியாது... சாதனையைச் சந்திக்கக் கூட இயலாது.



அடுத்து “பலம்”

“பலம்” என்றால் என்?

வெறும் உடல் பலம் மட்டும் பலமா?…இல்லை!!

அதனுள்ளே உள்ள “மன பலம” தான் உண்மையான பலம். மன பலம் உள்ளவர்களிடம் அச்சமில்லாத… தெளிவான சிந்தனை இருக்கும்… திட்டமிட்ட செயல்பாடு இருக்கும்… சலிப்படையாத விடாமுயற்சி இருக்கும். இவர்கள் இந்த உலகத்தை தமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொண்டு எண்ணியதை முடிக்கும் திண்ணியராக வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

ஆகவே நம் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த நோக்கத்தை நோக்கியே தினமும் நமது முழு பலத்தையும்… முழு மனத்துடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நம் இலட்சியத்திற்காக முயன்று தோற்றாலும் பரவாயில்லை. ஒரு செயலில் ஈடுபடாது இருப்பதைக் காட்டிலும் ஈடுபட்டுத் தோற்றுப் போவது கூட வீரம்தான்.

நம்மில் பலர் தங்கள் திறமையைத் தாங்களே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு ஒரு சூன்ய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு குறுகிய வட்டத்திற்குள் தங்களைத் தாங்களே முடக்கிக் கொண்டு கிடப்பதுதான் இம்மனிதர்களின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடைக்கல் என்பதைப் புரிந்து கொள்ளாமல் போய் விடுகின்றனர்.



உயர்ந்த சாதனையாளர்கள் எல்லோரும் தற்காலிகமாக ஏற்படும் தடைகளையெல்லாம் தயங்காமல்… தடுமாறாமல்… தாண்டி வந்தவர்கள்தாம். எப்படி அவர்கள் மட்டும் தம் திறமைகளை சாமார்த்தியமாக கணக்கிடுகின்றனர்?…அறிவார்த்தமாக வளர்த்துக் கொள்கின்றனர்?… செயல்பாட்டின் போதும்கூட ஆழ்ந்த ஈடுபாட்டுடன் காணப்படுகின்றனர்?… என்பதை தீர்க்கமாக யோசித்துப் பார்த்தால், அவர்கள் தம் இலட்சியத்தின் மீது கொண்டுவிட்ட தீவிர பற்றுதான காரணம் என்பது புலப்படும். ஆம்! இலட்சியம்தான் ஒருவரைச் சாதாரணமாயிருந்தாலும்… பெரும் வலிமையுள்ளவராய் மாற்றிவிடும்.

அடுத்து ஒரு மனிதனின் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ஒருவனது பார்வையில் அவனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதுதான் முதல் படி.

அந்தப் பார்வை வழியே எதிர்காலம் அமைய வேண்டும் என்று விரும்புவது இரண்டாம் படி.

அந்த எதிர்கால வெற்றி தான் அமைக்கும் திட்டத்தில்தான் உள்ளது என்று முனைவது மூன்றாம் படி.

தன்னால் தனது திட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவது நான்காம் படி.

ஆக, இப்படியாக… படிப்படியாய் பணியில் நாம் இணைவோமானால் வெற்றியும்... இன்பமும் நம் பக்கமே!



“இது சாத்தியமா?” என எண்ணுபவர்களும் உண்டு. எல்லா மனிதர்களும் வலிமையில் குறைந்தவர்களல்லர்; சுய நம்பிக்கையில்தான் குறைந்தவர்களாய் உள்ளனர்.

நம்மை நாமே உணர்ந்து கொண்டு நமக்கு நாமே உதவிக் கொண்டு நம்மால் முடியும் காரியங்களை நம்பிக்கையோடு தொடர்ந்தால்… நமக்குத்தான் வெற்றி.

நம்மால் அன்றி யாரால் முடியம்?

நம்பிக்கை கொள்… எதுவும் முடியும்... எளிதில் முடியும்.

இளைஞனே!
உன் முயற்சிக் கோடாரி
முனை மழுங்கினால்…
தயக்கக் கிருமியுனைத்
தாக்கி விடும்

தயக்கக் கிருமியுனைத்
தாக்கி விட்டால்…
சோம்பல் நோயினைப்
பீடித்து விடும்

சோம்பல் நோயுனைப்
பீடித்து விட்டால்…
வெற்றிக் கிரீடம்
விலகிப் போய் விடும்

வெற்றிக் கிரீடம்
விலகிப் போன பின்
வெற்று வாழ்க்கையில்
அர்த்தமில்லையப்பா!!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p39.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License