இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தள்ளிப் போடும் மனப்பான்மை தேவைதானா?

முகில் தினகரன்


“நண்பரே! நேற்று உங்களிடம் ஒரு அவசர வேலையைச் சொல்லியிருக்கேனே… முடித்து விட்டீர்களா?

“அதுக்கென்னங்க இப்ப அவசரம்? ஆகட்டுங்க. அப்புறம் மெதுவாப் பார்க்கலாம்” என்றார் சர்வ சாதாரணமாக.

அந்த நண்பருக்கு இளமையிலிருந்தே அந்தக் குணம் உண்டு. எந்தவொரு அவசரமான, தள்ளிப் போட முடியாத காரியத்தைச் சொன்னாலும், பின்னால் பார்த்துக் கொண்டால் போகிறது. இப்போதைக்கு தள்ளிப் போடுவோமே! என்று சொல்லும் மனோபாவம். இத்தகைய தள்ளிப் போடும் மனப்பான்மை இன்று பெரும்பான்மையானவர்களிடம் மண்டிக் கிடக்கும் உடன் பிறந்த நோய் என்றே கூறலாம். இத்தகைய நோயை நாம் வளரவிடாமல் அது தோன்றியதற்கான காரணத்தையும், அதற்கு அடிப்படை என்னவென்பதையும் தீர ஆராய வேண்டும்.

எதையும் காலம் தாழ்த்தாமல் அன்றே செய்து முடிப்பவர்கள்தான் செயல் வீரர்கள். இன்று வேண்டாம். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுபவர்கள் நாளைய வாதிகள். இவர்களெல்லாம் நாளை நாளை என்று கூறிக் கொண்டேயிருப்பார்கள் தவிர, எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க மாட்டார்கள். இதுவே, பலருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாகியிருக்கின்றது. ஒரு விதையை உடனே ஊன்றி நீர் விட்டால்தானே அது வளர்ந்து பலன் தரும். நாளை, நாளை என்று தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தால் அந்த விதை மக்கியல்லவா போய்விடும். அன்றே பாடங்களைப் படித்து விட்டால் தேர்வைப் பற்றி என்றும் அஞ்ச வேண்டியதில்லையல்லவா?



தள்ளிப் போடும் மனப்பான்மைக்கான காரணங்கள்

நமது குழந்தைப் பருவத்தில் நாம் பெற்ற பழக்க வழக்கங்கள். அனுபவங்கள் ஆகியவைகள்தான் நமது பிற்கால வாழ்வில் நம்மை ஆட்சி செய்கின்றன. அத்தகைய பழக்கங்களை நாம் மாற்றுவதற்கு பின்னாளில் மிகவும் தொல்லைப்படுகிறோம். சிலர், நாம் ஒரு காரியத்தைச் செய்தால்தானே நம்மைக் குறை சொல்லி நகைக்கிறார்கள், எந்தக் காரியத்தையுமே செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் தப்பித்துக் கொள்ளலாமே! என்கிற அச்ச உணர்வினால் காரியங்களைத் தள்ளிப் போடுகின்றனர்.

மேலும், சிலரோ சோம்பலின் காரணமாக காரியங்களை ஒத்தி வைத்து, பிறகு அல்லல்பட்டு அவதிப்படுகின்றனர்.

நமது உள்மனம் சில வேளைகளில் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. தள்ளிப்போடும் மனப்பான்மையும் இதன் விளைவே. இளமையில் சில காரணங்களால் நம் மனதினுள் புகுந்து விட்ட சில பழக்க வழக்கங்கள் நம்மையறியாது நம்முடன் இருப்பது தான் காரணம்.



அடுத்து, செய்யும் பணியில் ஊக்கமில்லாமையும் தள்ளிப்போடும் குணத்திற்கு ஒரு காரணமாகும். தளர்ச்சியில்லாத ஊக்கம் உடையவனிடத்தில்தான் செல்வம் தானாக வழி கேட்டு வந்தடையும். அதுபோல், தாமதமில்லாமல் உடனடியாகச் செய்கின்ற காரயங்கள்தான் முழுவீச்சுடன் வெற்றியை அடைந்து வளர்ச்சியின் உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

தள்ளிப் போடும் மனப்பான்மையைப் போக்குவது எப்படி?

எதையும் புரிந்து கொள்ளும் தன்மையே இதற்கு அடிப்படை மருந்தாகும். நாம் ஒரு காரியத்தைச் செய்யும் போது அதுவரையில் செய்வதற்கான காரணம் நாம் என்றும், அதனால் நடக்காத ஒன்றுக்கு காரணம் நாமல்லர் என்றும் துணிய வேண்டும். இதன் மூலம் பழைய உள் எண்ணம் நம்மை ஆட்கொள்வதினின்றும் விடுபடலாம்.

நாம் செய்து கொண்டிருப்பது என்னவென்றும், எதைத் தவிர்க்க வேண்டுமென்றும் நாம் ஒரு முறை உணர்ந்து கொள்வோமானால் பல வழிகளில் தள்ளி வைக்கும் மனப்பான்மையைக் கிள்ளி எறிந்திடலாம்.

எதை எதைச் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்பதைத் திட்டவட்டமாக் குறித்துக் கொள்ள வேண்டும். அதன்படி அதன்படி நடக்கத் தவறக் கூடாது. நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நேரமில்லை என்பதெல்லாம் வெறும் சமாதானம்தானே? இதைவிட சாதாரண விஷயங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்குகிறோமே! உண்மையில் இதில் நமக்கு அக்கறையில்லையா? என நமக்கு நாமே கேட்கும் போது நமது உள்மனம் இதற்கு சரியானதொரு பதிலும் சொல்லும்.



இத்தனை நாளுக்குள் இதை முடித்தே தீருவேன் என்ற சபத மேற்கொண்டு அதை உள்மனதிடம் அடிக்கடி சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும் போது நாம் அதிலிருந்து பின் வாங்குவது நமக்கே இயலாதொன்றாகி விடுகிறது.

எனவே, நாளை பார்க்கலாம் என்பதற்குப் பதில் இன்றே முடிக்கலாம் என்ற வார்த்தைகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு பணிகளைத் துவக்குவோம். “அய்யோ இந்தப் பயணம் பெரிய பயணமாயிற்றே?” என்ற ஆயாசத்தை தூக்கி எறிந்து விட்டு முன்னோக்கி அடிவைப்போம். அதற்கு மேல் பயணம் தாமாகவே ஆரம்பமாகித், தாமாகவேத் தொடர்ந்து, தாமாகவே, வெற்றி இலக்கை எட்டிவிடும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p42.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License