இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மண்ணில் தெரியுது வானம்!

முனைவர் மு.பழனியப்பன்


அதிகாலைப் பொழுது. அமைதியும் அழகும் நிரம்பித் ததும்பும் அற்புதமான பொழுது. கருத்துக் கிடந்த வானம் மெல்ல விடியலை எட்டுகின்றது. மெல்ல மெல்ல வெளிச்சம் எழுந்து வானம் ஒளியால் நிரம்புகின்றது. ஒவ்வொரு விடியலும் அழகு. ஒரு நாள் போல ஒரு நாள் விடிவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயற்கை அழகுடன் காலைப் பொழுது விடிகின்றது. விடியல் என்பது இயற்கையின் அற்புதக் காட்சி. பொழுது புலர்ந்தது யாம் செய் தவத்தால் என்று பாரதி பாடியது எத்தனைப் பொருத்தம்.

மனிதன் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகவேண்டும். எல்லாச் சான்றோர்களின் அரிய கருத்து்களும் மனிதன் உயரவேண்டும் என்பதை எண்ணியே சொல்லப் பெற்றுள்ளன. . மனிதன் அறிவில் உயர வேண்டும். எண்ணத்தில் உயரவேண்டும். மனநலத்தால் உயரவேண்டும். சிகரத்தைத் தொடவேண்டும். வானத்தைத் தொடவேண்டும். என்று பற்பல உயர்ச்சிகள் மனித வாழ்விற்குக் கிடைக்க சான்றோர்களின் கருத்துகள், பாலமாக அமைகின்றன.

உயர்வின் அளவிற்கு வானம் என்பது மிகச் சிறந்த எல்லையாகும். வானத்தை எட்டுவதற்கு என்ன வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். நூற்று நூறு சதவீதம் முழுமை வேண்டும். எதிலும் குறையில்லாமல் நிறைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட உயர்ச்சியே வானம் அளவிற்குச் செல்லும் உயர்ச்சியாகும்.



வானத்திற்குச் செல்ல முயற்சி செய்த ஒரு விமானம் நூற்றுக்கு நூறு சரியான இயக்கத்தில் இயங்கினால் மட்டுமே வெற்றி கரமான பயணத்தைத் தரும். நூற்றில் ஒரு புள்ளி குறையிருந்தாலும் வானத்தை நோக்கிய விமானத்தின் பயணத்தில் தாழ்வு ஏற்பட்டுவிடும். அதுபோல உயர நினைப்பவர்கள் நூற்றுக்கு நூறு அளவில் முழுமையான உழைப்பினைத் தந்தாக வேண்டும். அப்போது வானம் என்னும் மிக உயரமான குறியீட்டினைத் தொடமுடியும். வானத்திற்குச் செல்வதற்கே நூற்றுக்கு நூறு விழுக்காடு உழைப்பு வேண்டும் என்றால் மண்ணில் வானத்தைத் தெரியச் செய்வதற்கு நூற்றுநூறு விழுக்காட்டிற்கு மேலான அறிவு, உழைப்பு, நேர்மை, என அத்தனை நல்ல பண்புகளும் வேண்டும். அப்போதுதான் மண்ணில் வானத்தைத் தெரிய வைக்கமுடியும்.

புதுப் புது விமானங்களைத் தயாரிக்கும் ஆய்வுக் கூடத்தில் அவர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். புதிய ரக விமானங்களை அவர் தயாரித்தார். மத்திய அமைச்சர் அவர் தயாரித்தளித்த புதிய ரக விமானத்தில் ஏற முனைந்தார். பக்கத்தில் இருக்கும் காவல் பணியாளர்கள் ‘‘ஐயா, இது புது ரக விமானம். இதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு உங்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம்’’ என பாதுகாப்பு வளையம் போட்டனர். அமைச்சர் துணிந்து ஏறினார். அத்துடன் அதனைத் தயாரித்த அந்த விஞ்ஞானியையே அந்த விமானத்தை ஓட்டவும் வைத்தார். இப்போது பாதுகாவலர்களுக்கு இன்னும் பயம் அதிகமானது. இந்த விஞ்ஞானி விமானம் தயாரிப்பதில் வல்லவராக இருக்கலாம். ஓட்டுவதில் வல்லவர் இல்லையே, நல்ல பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் பலர் இருக்கையில் அமைச்சர் ஏன் இந்தச் சோதனை முயற்சியில் இறங்குகிறார் என்று எல்லோரும் கவலைப்பட்டனர். ஆனால் புன்சிரிப்புடன் அந்த விஞ்ஞானி விமானத்தை ஓட்ட மிக்க அமைதியுடன் அமைச்சர் அதில் ஏறி அமர்ந்தார். புதிய ரக விமானம் மிக்கச் சிறப்புடன் இயங்கியது. காவலர்களுக்கு ஏற்பட்ட நிம்மதியைவிட தான் தயாரித்த விமானத்தைத் தானே இயக்கி வெற்றிபெறச் செய்ததில் அந்த விஞ்ஞானிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

அந்த விஞ்ஞானிக்கு அடுத்த பொறுப்பு வந்தது. ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிக்கு அவர் அழைக்கப்பட்டார். அந்தப் பணியையும் செம்மைபடச் செய்தார். பல ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. பிருத்வி என்று ஒரு ஏவுகணைக்குப் பெயர் சூட்டப் பெற்றது. பிருத்வி என்றால் பூமி என்று பொருள். ஆகாஷ், நாக் போன்ற பல ஏவுகணைகளும் இவற்றுடன் அவரால் உருவாக்கப் பெற்றன. ஆகாஷ், பிருத்வி இந்தப் பெயர்கள் மண்ணில் வானத்தைப் பார்க்க வைக்கின்ற முயற்சிகள். இவை அனைத்தும் வெற்றி பெற்று இந்திய நாட்டின் வல்லமையை நிலை நாட்டின.



இவற்றுக்கெல்லாம் அடுத்ததாக ஒரு ஏவுகணை தயாரிக்கப்பட்டது. அதற்குப் பெயர் அக்னி என்பதாகும். இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் யார் இந்த விஞ்ஞானி என்று. ஆம் அவர்தான் நம் பெருமதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்கள். முன்னாள் குடியரசுத் தலைவராக விளங்கியவர். நூற்றுக்கு நூறு என்ற எல்லையைத் தாண்டி அவர் செய்த முயற்சிகளின் காரணமாக மண்ணில் தெரிந்தது வானம்.

அக்னி ஏவுகணை கண்டுபிடிப்பு என்பது எளிதாக நடந்துவிடவில்லை. 500க்கும் மேற்பட்ட அறிவியலார்களின் உழைப்பினால் அக்னி ஏவுகணை உருவானது. எனினும் அக்னி ஏவுகணை முயற்சி பல முறை தோல்வியடைந்தது. ஒவ்வொரு முறையும் இந்த ஏவுகணை ஏவப்படுவதற்காக ஏவுதளத்தின் அருகில் இருந்த கிராம மக்கள் வேற்றிடத்திற்குச் செல்ல வேண்டப்பட்டனர். அதற்காக அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகையையும் அரசு வழங்கியது. ஏவுகணை ஏவப்படவில்லை என்றதும் மீண்டும் அந்த மக்கள் அந்தக் கிராமத்திற்கு வந்துவிடுவர். மறுபடி ஏவப்படும் நாள் குறிக்கப்படும். மக்கள் வெளியேறுவர். அதுவும் தோல்வியில் முடியும். இப்படிப் பற்பல தோல்விகள் எழுந்தன.

செய்தித்தாள்கள் கூட இந்தத் தோல்விகளைக் கேலிச்சித்திரங்களாக வரைந்தன. ஒரு வியாபார ஒப்பந்தகாரரிடம் ‘அக்னி’ போல இதுவும் போனியாகவில்லை என்று ஒரு வியாபாரி சொல்வதுபோல் ஒரு கேலிப்படம் வரையப்பட்டது. இவற்றைத் தாண்டி 1989 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் அக்னி ஏவுகணை வெற்றி கரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

இந்த ஏவுகணை ஏவப்படுவதற்கு முதல் நாள் இரவு இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏவுதளத்திற்கு வந்தார். அவர் மதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களிடம் இந்த ஏவுகணை விண்ணில் பாய்ந்து வெற்றி பெற்றுவிட்டால் இந்தியா ஏவுகணை தொழில் நுட்பத்தில் முக்கியமான நாடாக விளங்கும் இல்லையா? என்றார். இவர் ஆம் என்று பதிலளித்தார். அப்படி வெற்றி பெற்றால் இந்த வெற்றியை நீங்கள் எப்படிக் கொண்டாடத் திட்டமிட்டு உள்ளீர்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அடுத்த கேள்வியைத் தொடர்ந்தார்.



மதிப்பிற்குரிய கலாம் அவர்கள் மெல்ல அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார். ‘‘அக்னி ஏவுகணை வெற்றி பெற்றுவிட்டால் இந்த ஏவுதள வளாகத்தில் நடுவதற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகளைத் தாருங்கள்” என்று மென்மையாக பதில் அளித்தார் விஞ்ஞானி கலாம் அவர்கள். மண்ணில் தெரியுது வானம் – அடடா தனக்கென ஒன்றும் வேண்டா புலன் அழுக்கற்ற தூயவரின் பதிலுக்குள் இயற்கையை நேசிக்கும் உயர்ந்த உள்ளம் குடிகொண்டிருக்கிறது. இயற்கையைக் காக்க அவர் கொண்ட எண்ணம் அந்த வளாகத்தையே இன்றைக்கு பசுமை கொஞ்சும்படி செய்துள்ளது.

தன் வாழ்வின் இயல்புகளைப் பற்றி மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்க்கைக் குறிப்பில் ,இப்படி எழுதுகிறார். ‘‘ எனது வாழ்க்கையில் என்னை உயர்த்திக்கொள்ள எந்த வெளிப்புறச் செல்வாக்கும் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. எனக்குள் இருந்ததெல்லாம் அதிகமாகத் தேடும் என் உள்ளார்ந்த வேட்கைதான். எவ்வளவு தூரம் நான் கடந்து வந்தேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதில்தான் என் கவனம் இருக்கும். அதுவே என் ஊக்கசக்தியின் அச்சாணி. தீர்க்கப்படாத பிரச்சனைகளும், பிரகாசமான வெற்றிகளும், இனம் புரியாத தோல்விகளும் சேர்ந்த கூட்டுக் கலவைதானே வாழ்க்கை.’’ என்ற இந்த அர்த்தம் பொருந்திய செய்தியில் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்களுக்குள் நூற்றுக்கு நூறு என்பதற்கு மேலான ஊக்கம் இருப்பதை அறியமுடிகின்றது.

நூற்றுக்கு நூறு முழுமை என்பது வானம் தொடும் வெற்றியைத் தரும். நூற்றுக்கு மேற்பட்ட ஊக்கம், உழைப்பு என்பது வானத்தை மண்ணுக்கு அழைத்துவந்துவிடும் அல்லவா?

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? அட
மண்ணில் தெரியுது வானம். அதுநம்
வசப்பட லாகாதோ?

என்ற மகாகவி பாரதியாரின் கவிச்சொற்களில் எத்தனை பொருள்கள் நிரம்பியிருக்கின்றன. வானத்தில் தெரியும் பொருள்களை எல்லாம் மண்ணுக்குக் கொண்டு வந்திடத் துடிக்கிறார் பாரதியார். அப்படிக் கொண்டு வந்துவிட்டால் வானம் என்ற ஒன்று மண்ணில் உள்ள பொருளாகிவிடும் என்பது அவரின் ஆசை. வானத்தை மண்ணுக்கு அழைக்கும் பெரு முயற்சிகளில் எதிர்கால மனிதன் இறங்க அவனிடம் அதிகமான ஊக்க சக்தி தேவை. அந்த சக்தியை நோக்கி மனிதன் பயணித்துக் கொண்டிருக்கிறான். அதில் மனித குலம் வெற்றிபெறும். உயர்வு பெறும் மேன்மை பெறும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p46.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License