இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

அரசு உயர் பதவியை விட்டதால் வந்த விளைவு!

உ. தாமரைச்செல்வி


தங்கள் மகனுக்கு எதில் ஆர்வமிருக்கிறது என்பதை அறிந்து, அவர்கள் விருப்பப்படி செயல்படும் தந்தைகளை விட, தங்கள் விருப்பப்படியே மகன் செயல்பட வேண்டும் என்கிற எண்ணத்தில், அவர்களை வழி நடத்தும் தந்தைகளே இன்றும் அதிகமாக இருக்கின்றனர். சர். சி. வி. இராமனின் தந்தையும் இப்படித்தான் போலிருக்கிறது. தனது மகனுக்கு அறிவியலில் ஆய்வில் இருந்த ஆர்வத்தைப் புறக்கணித்து, மகனை அரசாங்க அதிகாரியாக்கிப் பார்க்க வேண்டுமென்கிற தனது ஆசையைத் தன் மகனிடம் திணித்தார்.

1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று திருச்சிராப்பள்ளி, திருவானைக்காவல் எனுமிடத்தில் பிறந்த சர். சி. வி. இராமன், தனது பள்ளிப் படிப்புகளுக்குப் பின்பு, 1904 ஆம் ஆண்டில் சென்னை, பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் சிறப்புப் பாடத்துடன் இளநிலைப் பட்டப்படிப்பில் (B.A.) முதல் வகுப்பில் தேர்ச்சியும், தங்கப் பதக்கமும் பெற்றார். அதைத் தொடர்ந்து, இயற்பியல் பாடத்திலான முதுநிலைப் பட்டப்படிப்பில் (M.A.) சேர்ந்தார். 1907 ஆம் ஆண்டில் அப்படிப்பிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர், அவர் இங்கிலாந்து சென்று மேல்படிப்புகளைப் படிக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால், அவரது தந்தை, அப்போதைய ஆங்கிலேய அரசுப் பணிகளில் உயர் அதிகாரிப் பணிகளுக்கான எப்.சி.எஸ் (F.C.S) எனும் போட்டித் தேர்வினை எழுதி அரசு அதிகாரியாகும்படி வற்புறுத்தினார். அவரும் தந்தையின் விருப்பத்திற்காக அந்தத் தேர்வை எழுதினார். அந்தத் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாகவும் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து, கல்கத்தாவில் உதவிக் கணக்காய்வுத் தலைவராக (Assistant Accountant General) அரசின் உயர் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

அறிவியல் ஆர்வம்

இராமன், உதவிக் கணக்காய்வுத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அவருக்கு அந்தப் பணியை விட, அறிவியலில் ஆய்வு செய்து, புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிய வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது. தன்னுடைய அறிவியல் ஆர்வத்தைச் செயல்படுத்த, அவர் மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஒரு நாள், கல்கத்தாவில் அவரது அலுவலகமிருந்த டல்கௌசி சதுக்கத்திலிருந்து டிராம் வண்டியின் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, “இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்” (Indian Association for the Cultivation of Science) எனும் பெயர்ப்பலகை அவரது கண்ணில் பட்டது. அன்று, அங்கு அறிவியல் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில், அறிவியல் ஆய்வாளர் சர் ஆசுதோஷ் முகர்ஜி உட்பட சில ஆய்வாளர்கள் கூடியிருந்தனர். அந்தக் கழகத்தை நிறுவியிருந்த மகேந்திரலால் சர்க்கார், அமிர்தலால் சர்க்கார் ஆகியோரிடம் அந்த அறிவியல் கழகத்தைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். தன்னையும் அந்தக் கழகத்தில் ஒருவராக இணைத்துக் கொண்டார்.

அதன் பின்பு, தனது அலுவலகப் பணியை முடித்து வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில், இரவு நேரத்தில் அந்த அறிவியல் கழகத்துக்கு வந்து சில மணி நேரங்கள் அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். அவரது இரவு நேர ஆய்வுப் பணிகளுக்கு அறிவியல் கழகமும் ஒத்துழைப்பு அளித்தது. இதனால், அவர் பல நாட்கள் இரவு நேரத்தில் வீட்டுக்குச் செல்லாமல், தன்னுடைய ஆய்வுப் பணிகளில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார்.



இடமாற்றம்

இந்நிலையில் அவருடைய அறிவியல் ஆய்வுப் பணிகளுக்கு இடையூறாக அவரது பணியிட மாற்றம் வந்து சேர்ந்தது. அவர் கல்கத்தாவிலிருந்து ரங்கூனுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ரங்கூன் சென்ற அவருக்கு அறிவியல் ஆய்வில் இருந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை. கல்கத்தாவில் அவர் செய்து வந்த ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்ய விரும்பினார். அதற்காக, அவருடைய அலுவலகத்தின் ஒரு பகுதியை ஆய்வுக்கூடமாக மாற்றினார். அங்கு, இரவு நேரத்தில் தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அடுத்தும் அவருக்குப் பணியிட மாற்றம் வந்தது. அவர் ரங்கூனிலிருந்து நாகபுரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், 1911 ஆம் ஆண்டில் நாகபுரியிலிருந்து கல்கத்தாவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். கல்கத்தா வந்த அவர் மீண்டும் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் தனது இரவு நேர ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார்.

இயற்பியல் பேராசிரியர்

கல்கத்தாவிலிருந்த பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியை நிறுவனமாக மாற்ற அறிவியல் ஆய்வாளர் சர் ஆசுதோஷ் முகர்ஜி செய்த விடாமுயற்சியும், சர் தாரக்நாத் பாலித் மற்றும் டாக்டர் ராஷ் பிகாரி கோஷ் ஆகியோர் அளித்த நிதியுதவியும் ஒன்றிணைய அந்த அறிவியல் கல்லூரி பாலித் பீடம் எனும் நிறுவனமாக உயர்வடைந்தது. இராமனுக்கு இயற்பியல் துறையின் மேலிருந்த ஆர்வத்தையும், அறிவியல் ஆய்வில் அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய சர் ஆசுதோஷ் முகர்ஜி, அந்நிறுவனத்தில் இயற்பியல் பேராசிரியாகப் பணியாற்ற வரும்படி இராமனுக்கு அழைப்பு விடுத்தார். அவருடைய அழைப்பினை ஏற்ற இராமன், 1917 ஆம் ஆண்டில், அதிகச் சம்பளம் கிடைத்த அரசு அதிகாரிப் பணியிலிருந்து விலகி, குறைவான சம்பளம் கொண்ட இயற்பியல் பேராசிரியர் பணியில் சேர்ந்து கொண்டார்.

அதன் பிறகு, அவரது இயற்பியல் தொடர்பான ஆய்வுப் பணிகள் அதிகமானது. உலகின் புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல வெளியாகிக் கொண்டிருந்தன. அவரது ஆய்வுக் கட்டுரைகளைப் படித்த, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் அவருடைய ஆய்வுகளைப் பாராட்டத் தொடங்கினர். உலகப் புகழ் பெற்ற ஆய்வாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்ட இலண்டன் மாநகரிலிருந்த ராயல் சொசைட்டி எனும் அமைப்பு 1924 ஆம் ஆண்டில் அவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது.

இராமன், 1926 ஆம் ஆண்டில் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) எனும் அறிவியல் இதழைத் தொடங்கி, அதன் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். இந்த இதழில், 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 அன்று ஒரு புதிய கதிர் இயக்கம் (A New Radiation) எனும் தலைப்பில் தனது ஆய்வுக் கண்டுபிடிப்புகளைக் கட்டுரையாக்கித் தன்னுடன் சேர்ந்து செயல்பட்ட கே. எஸ். கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து வெளியிட்டார்.



இராமன் விளைவு

புதிய கதிர் இயக்கம் எனும் தலைப்பிலான இந்த ஆய்வுக் கட்டுரையில், ஒளி புகும் ஊடகம் ஒன்றின் வழியாகச் செல்லும் ஒளி சிதறடிக்கப்பட்டு அதன் அலை நீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இவ்வாறு சிதறும் ஒளி

1. படுகதிருக்குச் சமமான அலை நீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி
2. முதன்மை வரியை விட அதிக அலை நீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்
3. முதன்மை வரியை விட குறைவான அலை நீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்

எனும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது என்று இராமன் தான் ஆய்வில் கண்டறிந்திருந்த தனது அரிய கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டிருந்தார். இராமன் கண்டறிந்து சொன்ன இந்த ஒளிச்சிதறல், பின்னர், அவரது பெயராலேயே இராமன் சிதறல் (Raman Scattering) அல்லது இராமன் விளைவு (Raman Effect) என்று அழைக்கப்படுகிறது.

இராமன் கண்டறிந்த இராமன் விளைவு இயற்பியலை விட வேதியியலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு இராமன் விளைவு முதன்மையானதாகப் பயன்படுத்தப்படுகிறது. திரவங்கள் மட்டுமின்றி, வளிம, திடப் பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். பெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல், சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச் செல்லப் பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணுதல், வண்ணப்பூச்சுகள் இருகும் போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதைக் கண்டறிதல், அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல் என்று இதன் பயன்பாடுகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே இருக்கின்றன. இதுபோல், சுமார் 10 வினாடிகளே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளைப் பதிவு செய்வதில் ஒளி வேதியியலாளர்கள் மற்றும் ஒளி உயிரியலாளர்களுக்கு இராமன் நிறமாலைத் தொழில் நுட்பங்கள் பெரிதும் உதவி வருகின்றன.



நோபல் பரிசு

இராமன் விளைவு கண்டுபிடிப்புக்குப் பின்பு, 1929 ஆம் ஆண்டில் அவருக்கு பிரிட்டிஷ் அரசு நைட் ஹீட் எனும் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது. இதே ஆண்டில் இங்கிலாந்து அரசி இவருக்கு சர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, 1930 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட இராமன், “இந்த விருதை இந்தியச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இதன் பிறகு, 1933 ஆம் ஆண்டில், கல்கத்தாவில் தான் பணியாற்றி வந்த பேராசிரியர் பணியை விட்டு விலகிப் பெங்களூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இங்கு 15 ஆண்டுகள் பணீயாற்றி ஓய்வு பெற்ற சர். சி. வி. இராமன், 1948 ஆம் ஆண்டில் தனது பெயரிலேயே “இராமன் ஆய்வுக் கழகம்” (Raman Research Institute) ஒன்றை நிறுவித் தனது கடைசிக் காலம் வரை, பல அறிவியல் ஆய்வுப் பணிகளைச் செய்து வந்தார். 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசு, அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கிச் சிறப்பித்தது. 1957 ஆம் ஆண்டில் “அகில உலக லெனின் பரிசு” வழங்கப்பட்டது. இவை தவிர, பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் அவருக்குப் பல பரிசுகளையும், பட்டங்களையும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.

மறைவு

தந்தையின் விருப்பத்திற்காக, அரசு உயர் அதிகாரியாகப் பணியாற்றினாலும், தந்தையின் மறைவுக்குப் பிறகு, தான் ஆர்வம் கொண்ட துறைக்கு மாற்றம் கண்டு, அத்துறையில் உலகின் உயரிய விருதான நோபல் பரிசைப் பெற்று, தன்னை உலகப் புகழ் பெற்றவர்களுள் ஒருவராக உயர்த்திக் கொண்ட சர். சி. வி. இராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று தனது 82 ஆம் வயதில் பெங்களூரில் காலமானார். இந்திய அரசு சர். சி. வி. இராமனின் நினைவைப் போற்றும் வகையில், இராமன் விளைவைக் கண்டறிந்த பிப்ரவரி 28 ஆம் நாளைத் “தேசிய அறிவியல் நாள்” என்று அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு கொண்டாடி வருகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p59.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License