இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

திராவிடமொழி கோத்தர் இனமக்களின் மொழியும் நம்பிக்கையும்

மா. கணேசன்


மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவியாகும். கையசைவுகளாலும் முகக்குறிப்புகளாலும் தங்கள் எண்ணங்களை கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டமனித இனம் மொழியைக் கண்டுபிடித்துப் பேசுவதற்குமட்டும் அதைப் பயன்படுத்தத் தொடங்கியது. இன்றளவும் பேச்சுவழக்கு மொழியாகவே உள்ளமொழிகள் எண்ணிலடங்காதவை. அதில் கோத்தர் இன மக்களின் மொழிமற்றும் நம்பிக்கைகள் பற்றி ஒருசிலக் கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

உலகமொழிகளை எட்டு மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.


இந்திய மொழிகளை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.

1. திராவிடமொழிக்குடும்பம்

2. ஆஸ்டிரிக் மொழிக்குடும்பம்

3. சீனோ-திபெத்தியமொழிக்குடும்பம்

4. இந்தோ-ஆரியமொழிக்குடும்பம்


‘கோவ் என்னும் கோத்தர் இனமலையானமக்கள் பேசும் மொழி’கோவ்’என்பதாகும்.இவர்கள் கோவ் மட்டுமின்றித் தமிழ்மொழிகன்னடமொழிஆகியமொழிகளையும் பேசுகின்றனர். கோவ் மக்கள் தமிழர்கன்னடியர்ஆகியோருடன் கலந்தநிலையில் வாழும் சூழலின் பாதிப்புஅவர்களதுபண்பாடுமொழிஆகியவற்றில் பிரதிபலிக்கின்றது’. (பக்தவத்சலபாரதி, தமிழ்ப் பழங்குடிகள் 2013)

கோத்தர்

நீலகிரியில் 1200-லிருந்துவசித்துவரும் கோத்தர்கள் கொல்லிமலையிலிருந்துவந்தார்கள் என்பர். ஆனாலும் தொல்குடிப் பழங்குடிகளானஆரம்பகாலம் பற்றிச் சரியானகுறிப்புகள் எதுவும் இல்லை. கோஎன்றஅரசனால் இந்த ஊர் நிறுவப்பட்டதாகக் கூறுவர்.

நீலகிரிமாவட்டத்தில் கோத்தர்கள், தோடர்கள், காட்டுநாயக்கர்கள், குறும்பர்கள், பனியர்கள், இருளர்கள் உள்ளிட்ட ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் கோத்தர் இன ஆதிவாசி மக்கள் ஊட்டி கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அய்யனோர், அம்மனோரைக் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.


கோவ் மக்கள் என்றழைக்கப்படும் கோத்தர்கள் நீலகிரிமலையில் உள்ள ஏழு இடங்களான கோத்தகிரி கீழ்க்கோத்தகிரி, கொல்லிமலை, திருச்சிக்கடி, குந்தாகோத்தகிரி, சோளுர், கோக்காள், கூடலூர் ஆகிய ஊர்களில் வாழ்கின்றனர். இவர்கள் சிவந்து காணப்படுகின்றனர். பெண்கள் நான்கு அடியும் ஆண்கள் ஐந்து அடியும் சராசரி உயரம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் வெண்ணிறத் துணியை இரட்டையாக மடித்து உடலைப் போர்த்திய நிலையில் உள்ளனர். கோவ் மக்கள் ஊருக்குக் கோக்கால் என்று அவர்தம் மொழியில் கூறுகின்றனர்.



கோத்தர்களின் மொழி

தமிழ் மொழி பேசுவோர் எண்ணிக்கையில் கூடியவர்களாக விளங்குவதோடு கலாச்சாரம் பண்பாடு எழுத்து மொழி ஆகிய நிலைகளிலும் உயர்ந்துள்ளனர். இக்காரணங்களால் கோத்தர்களது எழுத்துவடிவம் பெறாதகோவ் மொழியில் எழுத்துவடிவம் கொண்ட தமிழ்மொழியின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகின்றது.

கன்னடம் பேசும் பகுதியிலிருந்து நீலகிரிக்குக் குடிபெயர்ந்தவர்கள் எனதங்களைக் கூறிக்கொள்ளும் படுகர்கள் தங்களது படுகமொழியுடன் கன்னடமொழியையும் பேசுகின்றனர். கோத்தர்கள் கன்னட மொழியோடு படுகர் மொழியையும் தெரிந்து வைத்துள்ளனர்.

கோத்தர்கள் குடிகொண்டுள்ள பகுதிகளைச் சுற்றிப் படுகர்கள் வாழ்கின்றனர். வாழ்க்கைத் தரம் கூடியவர்களாகவும் எண்ணிக்கையில் கூடியவர்களாகவும் படுகர்கள் விளங்குகின்றனர். படுகர்கள் கொண்டாடும் விழாக்களுக்குக் கோத்தர்கள் இசைக் கருவி வாசிப்பவர்களாகவும் உள்ளனர். கோத்தர்களின் விழாக்களுக்குப் படுகர்கள் மேள தாளங்களுடன் மரியாதையுடன் அழைக்கப்படுகின்றனர். தமிழ்மொழிக்கு அடுத்தநிலையில் கோத்தர்கள் படுகமொழியைக் கொண்டுள்ளனர். மாநில எல்லையோரங்களில் வாழும் மக்கள் தம் சொந்தமொழியோடு அண்டை மாநில மொழியையும் அறிந்து வைத்திருப்பது இயல்பு.

சேலமரம்


நீலகிரியைச் சுற்றியுள்ள இந்த மலைவாசிகள் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கைவிடவில்லை. பிறப்பாக இருந்தாலும் இறப்பாக இருந்தாலும் தன்தாய் மரமான “சேல” மரத்தினை வணங்கிவிட்டு பின்புதான் வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்தத் தாய்மரத்தின் வேர்களை அண்டிக் கிடக்கும் இந்தகோத்தர் இனத்தின் கடவுள் அங்கு வளர்ந்திருக்கும் ஆதிகாலத்துச் சேலமரம் தான். கோத்தர்களின் மகிழ்ச்சியும் சடங்குகளும் இந்தமரத்திற்குத் தெரியாது நடப்பதில்லை. கிட்டத்தட்ட 1000வருடங்கள் பழைமைவாய்ந்ததாகக் கருதப்படும் சேலமரம்தான் கோத்தர்களின் சாமி.

கோத்தகிரி, கீழ்க்கோத்தகிரி, கொல்லிமலை, திருச்சிக்கடி, குந்தாகோத்தகிரி, சோளுர், கோக்காள், கூடலூர் ஆகிய ஊர்களில் வசிக்கும் மக்களுக்கும் ஒட்டுமொத்த கடவுள் இந்தமரம்தான். தோடர்களுக்குத் தாரநாடு மந்துகோவில் எவ்வளவு முக்கியமோ, குறும்பர்களுக்கு பனிசோலை முக்கியமானது. அதே போல் கோத்தர்களும் இந்தமரத்தையே தான் முக்கியமானதாகக் கருதுகின்றனர்.


இந்த மரத்தின் இலைகள் காய்கள் ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். சிவராத்திரி அன்று இந்தமரத்தின் அடியில் ஆடிக் களிக்கின்றனர். தங்களுக்குரிய முதல் கடவுளாகச் சிவனையும் பார்வதியையும் வணங்கி வருகின்றனர். இந்தமரத்தின் அடியில் மண்பாண்டம் செய்யும் தொழிலையும் நடத்தி வருகின்றனர்.

சிலப்பதிகாரத்தில் கோத்தர்கள்

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் பலதொல்குடிகளைப் பற்றி அறிய முடிகின்றது. சிலப்பதிகாரத்தில் நீலகிரியில் வாழும் கைவினைத் தொழில்கள் செய்யும் கோத்தர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்; எனும் கருத்தை மிகநுட்பமாகப் பிலிப்கே.மல்லி (2011:23-4) ஆராய்ந்திருக்கிறார்.

கோத்தர் (மழவாயச) என்னும் சொல் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வழக்கில் வந்ததாகும். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர்ப்படுகர்கள் இவர்களைக் கோவ என்றே அழைத்துள்ளனர். இதன்பொருள் குயவன் என்பதாகும். இதற்கான பொருளை விளக்க இலக்கியமும் கல்வெட்டுகளும் சான்றுகளாக உள்ளன.


கோத்தர்கள் தங்களைக் ‘கோவ்’என்றே குறிப்பிடுவார்கள். தோதவா இவர்களைக் ‘கூவ்’என்று அழைப்பார்கள். இவர்கள் மண் வினைஞர்களாக உலோக வினைஞர்களாக இசைக் கலைஞர்களாக மரவேலைசெய்யும் ஆசாரிகளாக உள்ளார்கள். இதனால் படுகர்கள் இவர்களைப் பேச்சு வழக்கில் கோவ என்பதற்கு ஓவ என்றும் அழைத்து வந்தார்கள்.



கோவ-ஓவ எனும் எதிரொலிச் சொற்கள் படுகர்மொழியில் இடம்பெறுவது சாதாரணமானதாகும். இத்தகைய சொற்களின் பொருண்மை நீட்சிகளை மொழியியல் அறிஞர் எமனோவ்(1967) மிகவிரிவாக ஆராய்ந்துள்ளார். கோவ-ஓவ ஆகிய சொற்களின் பன்மைத் தொடர்களான கோவர் ஓவர் ஆகியவை பழந்தமிழ் நிகண்டுகளில் காணப்படுகின்றன. கன்னடத்தில் ஓஜ (சிலபடுகர் ஓஜி எனவும் சொல்லுவார்கள்.) எனும் சொல்லுக்கு ஆசாரி என்பதுபொருள். ஆக ஓவ என்பதற்குத்திரிபுச் சொல்லாக இது வழங்குகிறது என்பது தெளிவாகிறது.

சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் கால்கோட்காதையில்

‘உலகமன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
ஆலும் புரவிஅணிந்தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும்புறத்து இறுத்தாங்கு’ (வரிகள்85124)

என்ற வரிகள் (புலியூர்க்கேசிகன், சிலப்பதிகாரம்2009) சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் எடுக்கச் சென்றபோது நீலகிரியின் நெடும்புறத் தேகடந்து சென்றான் என்ற மரபானபழங்கதை இன்றும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு குறிப்பிடப்படும் ஓவர் என்போர் கோத்தர்களாகவே இருத்தல் வேண்டும் என்று கருதுகிறார் பி. கே.மல்லி(2011). அவர்கள் கடந்து சென்றபோது’ ஊழிவாழி’ என்ற ஓவர் தோன்றிப்புகழ்ந்ததாகக் காண்கிறோம்.

சிலப்பதிகார உரைகளில் ஓவரை ஏத்தாளர் என்னும் சொல்லுக்கும் படகமொழியில் வழங்கும் ஆத்திக்குது அல்லது வாழ்த்துதல் என்ற சொல்லுக்கும் உள்ள உறவு கவனத்திற்குரியது என்கிறார். கோத்தர்களின் முன்னோடிகளாக ஓவர் இருந்துள்ளனர். இவர்கள் சேரன் செங்குட்டுவனுக்கு வரவேற்பு அளித்துள்ளனர். ‘ஓவ’ என்பதன் திரிபாக விளங்கும் ‘ஓஜ’ எனும் மலையாள வழக்கு பறையறைவோன் எனும் பொருளை உணர்த்துகிறது.


கோத்தர்கள் ஹறெகோல் (பறைஊதுகோல்) இல்லாமல் படகர் தொதுவர் சடங்குகளில் இசைஊழியம் செய்வதில்லை. இதன்மூலம் ஆதி இசைவாணராகியஓவரிள் தொடர்ச்சியாகவே ஓவ எனும் கோத்தர் இன்றும் காணப்படுகின்றனர் என்கிறார் (பிலிப்கே. மல்லி(2011) தென்மொழி, நவம்பர் இதழ்.பக்.23-24.)

நீலகிரிமலையில் தோடர் இருளர் பணியர் முள்ளுக்குறும்பர் கோத்தர் எனப் பலவகை மலையின மக்கள் வாழ்கின்றனர். நாட்டுப்புறச் சமவெளிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையிலிருந்து மலையினமக்கள் வாழ்க்கைபெரிதும் வேறுபட்டுள்ளது.

மொழியின் அடையாளம் அற்றுப் போதல்

இந்தியாவில் நாடுகள் உருவாவதற்கு முன்பு எண்ணற்ற பழங்குடிகள் தத்தம் மலைகாட்டுப் பகுதிகளைத் தம் வாழ்வுக்குரியதாகக் கொண்டிருந்தனர். முன்னோர்கள் காலத்திலுங்கூட பெரும் இழப்பு ஏற்பட்டதில்லை. ஆங்கிலேயரின் வருகைக்குப்பின் பழங்குடிகள் சிந்திக்கத் தொடங்கிய நிலம் காடு தொடர்பான சிக்கல்கள் ஒருபுறம் இருக்க இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பழங்குடிகளின் அடையாளமும் ஒருங்கிணைப்பும் பண்பாடும் சிதையத்தொடங்கின.


  • பேச்சு மொழியிலிருந்து எழுத்து மொழிக்கு வளராத நிலையில் உள்ள கோத்தர் மொழிக்கு எழுத்து மொழியான தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலிருந்துகடன் வாங்கப்பட்டுள்ளது.

  • கோவ்மொழியில் தமிழ் முதல் நிலையிலும், கன்னடம் இரண்டாம் நிலையிலும் உயிர்ப்பெற்றுள்ளன.

    மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பழங்குடிகளின் மொழிகளோ பண்பாடோ கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் ஒரேபழங்குடி இரண்டு அல்லது மூன்று நான்கு மாநிலங்களில் வாழ்வோராகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு ஆட்சியமைப்பின் கீழ் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.

  • *****


    இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

    இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p67.html
    

      2025
      2024
      2023
      2022
      2021
      2020
      2019
      2018
      2017


    வலையொளிப் பதிவுகள்
      பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

      எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

      சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

      கௌரவர்கள் யார்? யார்?

      தமிழ் ஆண்டுப் பெயர்கள்

      பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

      வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

      பண்டைய படைப் பெயர்கள்

      ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

      மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

      மரம் என்பதன் பொருள் என்ன?

      நீதி சதகம் கூறும் நீதிகள்

      மூன்று மரங்களின் விருப்பங்கள்

      மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

      மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

      யானை - சில சுவையான தகவல்கள்

      ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

      நான்கு வகை மனிதர்கள்

      தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

      மாபாவியோர் வாழும் மதுரை

      கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

      தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

      குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

      மூன்று வகை மனிதர்கள்

      உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


    சிறப்புப் பகுதிகள்





    முதன்மைப் படைப்பாளர்கள்

    வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


    சிரிக்க சிரிக்க
      எரிப்பதா? புதைப்பதா?
      அறிவை வைக்க மறந்துட்டானே...!
      செத்தும் செலவு வைப்பாள் காதலி!
      வீரப்பலகாரம் தெரியுமா?
      உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
      இலையுதிர் காலம் வராது!
      கண்ணதாசனின் நகைச்சுவைகள்
      குறைச்சுத்தான் எடை போடறாரு...!
      அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
      குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
      இடத்தைக் காலி பண்ணுங்க...!
      சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
      மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
      மாபாவியோர் வாழும் மதுரை
      இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
      ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
      அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
      ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
      கவிஞரை விடக் கலைஞர்?
      பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
      கடைசியாகக் கிடைத்த தகவல்!
      மூன்றாம் தர ஆட்சி
      பெயர்தான் கெட்டுப் போகிறது!
      தபால்காரர் வேலை!
      எலிக்கு ஊசி போட்டாச்சா?
      சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
      சம அளவு என்றால்...?
      குறள் யாருக்காக...?
      எலி திருமணம் செய்து கொண்டால்?
      யாருக்கு உங்க ஓட்டு?
      வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
      கடவுளுக்குப் புரியவில்லை...?
      முதலாளி... மூளையிருக்கா...?
      மூன்று வரங்கள்
      கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
      நான் வழக்கறிஞர்
      பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
      பொழைக்கத் தெரிஞ்சவன்
      காதல்... மொழிகள்
    குட்டிக்கதைகள்
      எல்லாம் நன்மைக்கே...!
      மனிதர்களது தகுதி அறிய...
      உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
      இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
      அழுது புலம்பி என்ன பயன்?
      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
      கடவுளைக் காண உதவும் கண்ணாடி
      தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
      உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
      ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
      அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
      கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
      எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
      சிங்கத்திற்கு வாழைப்பழம்!
      வலை வீசிப் பிடித்த வேலை
      சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
      இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
      கல்லெறிந்தவனுக்கு பழமா?
      சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
      வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
      ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
      அக்காவை மணந்த ஏழை?
      சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
      இராமன் சாப்பாட்டு இராமனா?
      சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
      புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
      பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
      தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
      கழுதையின் புத்திசாலித்தனம்
      விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
      தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
      சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
      திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
      புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
      இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
      ஆணவத்தால் வந்த அழிவு!
      சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
      சொர்க்க வாசல் திறக்குமா...?
      வழுக்கைத் தலைக்கு மருந்து
      மனைவிக்குப் பயப்படாதவர்
      சிங்கக்கறி வேண்டுமா...?
      வேட்டைநாயின் வருத்தம்
      மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
      கோவணத்திற்காக ஓடிய சீடன்
      கடவுள் ரசித்த கதை
      புத்தர் மௌனமாக இருக்கலாமா?
      குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
      சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
      தேங்காய் சிதறுகாயான கதை
      அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
      அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
      கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
      சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
      அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
      விமானத்தில் பறந்த கஞ்சன்
      நாய்களுக்கு அனுமதி இல்லை
      வடைக்கடைப் பொருளாதாரம்
    ஆன்மிகம் - இந்து சமயம்
      ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
      தானம் செய்வதால் வரும் பலன்கள்
      முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
      பிரதோஷம் எப்படி விஷேசமானது?
      விநாயகர் சில சுவையான தகவல்கள்
      சிவராத்திரி விஷேசமானது ஏன்?
      முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
      தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
      கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
      எப்படி வந்தது தீபாவளி?
      தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
      ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
      ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
      அனுமனுக்கு வடை மாலை ஏன்?
      திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
      விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
      கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
      சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
      முருகா என்றால் என்ன கிடைக்கும்?
      குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
      விபூதியின் தத்துவம்
      கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
      தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
      கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
      இறைவன் ஆடிய நடனங்கள்
      யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
      செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
      கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
      விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
      இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
      நவராத்திரி பூஜை ஏன்?
      வேள்விகளும் பலன்களும்
      காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
      பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
      அம்பலப்புழா பால் பாயாசம்
      துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
      சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
      ஈசன் உபதேசித்தத் தலங்கள்
      பரமபதம் விளையாட்டு ஏன்?
      வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
      பதின்மூன்று வகை சாபங்கள்
      இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
      சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
      பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
      சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
      உணவு வழித் தோசங்கள்
      திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
      மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
      பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
      நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
      சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
      மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
      இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
      பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
      கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
      அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
      தீர்க்க சுமங்கலி பவா


    தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                  


    இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License