இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பாலியப்பெண்ணியத் திறனாய்வு

முனைவர் மா. பத்மபிரியா


தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண் விடுதலைக்கான போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், தற்கால மகளிர் கவிதைகளில் ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் - பெண் அந்தரங்கத்தினைப் பாடுபொருளாகக் கட்டமைத்து பெண் விடுதலையை கட்டவிழ்க்கின்றனர். தந்தைவழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிழைந்துள்ளனர் இக்கவிஞர்கள். ‘பாலியப்பெண்ணியம’ என்னும் கொள்கையின் பாற்பட்டோர் பெண் விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் வாகனமாகக் கவிதையை கவனமாகக் கையாண்டுள்ளனர் என்பதை நிறுவுவதாகவும் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

பாலியப் பெண்ணியம்

‘பாலியப்பெண்ணியம்’ என்பது பெண்ணுடல் நுகர்பொருளாதலை விமர்சிப்பது ஆகும். தீவிரப் பெண்ணியத்தின் உட்கூறுகளில் ஒன்று இத்திறனாய்வு முறையாகும். இக்கொள்கைகளைப் பின்பற்றும் பெண்ணியவாதிகள் பாலியப் பெண்ணியம் தொனிக்கும் இலக்கியத்தினைப் படைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். மரபு வழியாக ஆணுடலுக்கான பெண்ணுடல் இப்பெண்ணியவாதிகளால் எதிர் அரசியலுக்கு இட்டுச் செல்லப்பட்டு மாற்றுத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றது.

  • பெண் உடல் பற்றி பெண் நோக்கில் எழுதுவது (Writing on the female body) என்பார் கேட்டிகான்ப்ரை (Katie Conbry)

  • எழுத்து வரம்புகளைத் தகர்த்தெறிதல் (Breaking the bounds of writing) என்பார் டிம்பிள்காடிவாலா (Dimple Godiwala)

  • இலக்கியப் பழமைச் சட்டவேலி எல்லையைக் கடந்து பயணித்தல் என்பார் சிரிஸ்வீடன் (Chrisweedon)

  • தனக்கான புதுவெளியைத் தோற்றுவித்துக் கொள்ளுதல் என்பார் எமிலி கே.பாரடைஸ் (Emily K. Paradise)

    ஒரு படைப்பில் இத்தகு பண்புகள் இடம் பெற்றால் அது பாலியப் பெண்ணிய இலக்கியமாக (Sexist Feminist Literature) ஆகிறது. இத்தகைய கொள்கைகளை உள்வாங்கியது தான் குட்டிரேவதி, சுகிர்தாராணி, சல்மா, மாலதிமைத்ரி,லீனாமணிமேகலை போன்றோர் எழுதிய கவிதைகள் ஆகும்.



  • உடல் அரசியல் போராட்டம்

    உடலே ஆயுதம் எனும் கருதுகோளின் படி பெண்மொழி அவள் உடலில் இருந்து தொடங்குகின்றது. தந்தையின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட தன் உடல் இன்பத்தை மீட்டெடுப்பதற்குப் புதுமொழி தேவையானது. இதனைத்தான் ‘உடற் கூற்றுப் பெண்ணியத்திறனாய்வு’ என்பர். இத்திறனாய்வு பெண் உடலை எழுத்தின் மூலமாகக் இனங்காண்கிறது. இதனையே உடல் மொழி என்பர். பிரெஞ்சு பெண்ணியவாதிகள் உடல் மொழி என்பதற்கு 'எக்ரிடியூர் பெமினைன்' (Ectriture Feminine) எனும் தொடரைப் பயன்படுத்துவர். இத்தொடருக்கு 'உடலை எழுதுவது' என்பது பொருள். ஷொவால்டர் இதனை “மொழியிலும், நூலிலும் பெண் உடலையும் பெண்ணின் வேறுபாட்டையும் பொறிப்பது” என்று விளக்குவார். முன்னைய மரபுகள் பெண்களின் பாலியல் அனுபவத்தை மொழியில் அனுமதிக்கவில்லை. இன்றோ இந்நிலை பெண்ணியவாதிகளால் மாறியுள்ளது.

    ஒரு பெண்ணாய் இருப்பது
    என்னுள் போதையூட்டிக் கொண்டேயிருக்கிறது
    ... ... ... ... ... ... ...
    எத்தனை முறை புணர்ந்த உடலிது
    எத்தனைமுறை ஈன்ற உடலிது
    எத்தனை முறை எரிந்த உடலிது ( குட்டிரேவதி, உடலின் கதவுகள், பக்.54- 55 )

    ‘என்றாலும் ஒரு பெண்ணாய் இருந்து’ என்ற கவிதை உடலின் முழுமையான பாலியல் அனுபவத்தை அவ்வாறே வெளிப்படுத்துகின்றது.

    ... ... ... ... ... ... ...
    ஒரு காமக் கிழத்தியைப் போல
    ஆண்களை ருசிப்போம்
    ... ... ... ... ... ... ...
    கடந்த வரலாற்றில் தொலைத்த உடலை
    இன்றைய போரில் மீட்டெடுப்போம் ( குட்டிரேவதி, உடலின் கதவுகள், ப.17 )



    கடந்த வரலாற்றில் தொலைத்த பெண்ணுடலை மீட்போம் என்று குட்டிரேவதி அறைக்கூவல் விடுத்துள்ளார். அக்கவிஞர் பாலியப் பெண்ணியக் கவிதைகள்தான் பெண்விடுதலையின் திறவுகோல் என்று கருத்தரங்கப் பொழிவில் சுட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு “இந்தியச் சமூக வெளியில் பெண்ணின் உடல் அனைத்து வகை ஒடுக்கு முறைகளும் அழுத்தும் ஒரு அரசியல், சமூகக் குறியீடு மேலைநாடுகளிலிருந்து கடன் வாங்கிய கோட்பாட்டுத் தத்துவங்களாலேயே இங்கு நிலவும் பெண் பிரச்சினைகளைச் சிக்கலெடுப்பது என்பது இதுவரை கைகூடவில்லை.இதுவரை தோன்றி வளர்ந்த அரசியல் இயக்கங்களும் கூடத் தமிழ் மரபு என்ற பெண் மீதான அடக்குமுறைக் கட்டுமானத்தையே மீண்டும் மீண்டும் நிறுவுகின்றன. சாதிமறுப்பு எழுச்சியும், இயக்கமும் பெண் உடல் மீதான அழுத்தத்தை ஏற்படுத்தும் சமூக நிறுவனங்களைக் குலைக்காமல் தீவிரப்படாது. இதற்கிடையில் செயல்படத்தொடங்கியது தமிழ் பெண்ணியக்கவிதை: உடல் அரசியலை, தன் உடல் மீதான சமூக அசைவியக்கத்தை வெளிப்படுத்தும் கவித்துவத்தைக் கண்டடைந்தது.” (1) இவ்வாறு கவிஞர் குட்டி ரேவதி உடல் அரசியல் போராட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

    குட்டி ரேவதியின் ‘உடலின் கதவுகள்’ ‘முலைகள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும், சுகிர்தாராணியின் ‘இரவு மிருகம்’ என்னும் கவிதைத் தொகுப்பும் இவ்வகைமையைச் சார்ந்ததாகும்.

    கிழிந்த தேகத்தை
    நேர்படுத்திக் கொண்டு நிமிர்கிறேன்
    ... ... ... ... ... ... ...
    உயிர் மண் உதிர உதிர
    வெடித்த பிளவுகளில் கசியும்
    எச்சிலும் காமநீரும்
    உடலாறு முழுக்கப் பரவப் பாயும்
    முடிவின் பிந்தைய கணத்தில்
    இரத்தம் தோய்ந்த ஆடையைத்
    துவைத்துப் போடுகிறேன்
    பிரபஞ்சமெங்கும் கலவி வாசனை (சுகிர்தாராணி. இரவுமிருகம், ப.30)



    சுகிர்தாராணியின் ‘கலவிவாசனை’ கவிதை உலகத்தின் இயக்கமே கலவியால் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றது. ‘கலவி’ என்ற குறியீடு புலப்படுத்துவது உயிர்களின் தோற்றுவாய்க்குப் பெண்ஆதாரம்,பெண் முதன்மை ஆகியன. இவ்வாறு மகளிர் கவிஞர்கள்; பாலுறவு குறித்து வெளிப்படையாக எழுதுவது ‘உடலை மீட்கும் போராட்ட உத்தியாக’ கருதலாம்.

    உனது தாகத்துக்கு
    குவளையில் தளும்பும்
    உதிரம்
    ... ... ... ... ... ... ...
    உன் முன்னால் கிடத்தப்படுகிறது
    மலர்ந்த முகத்துடன்
    எவ்விதச் சங்கடமுமின்றி செரிக்கிறாய்
    காலம் காலமாக
    உடல் குதறி உயிர்க்கும்
    நாகரீகம்
    எல்லாம் யோசிக்கும் வேளையில்
    கொள்வதும் உண்பதுமாக முடிகிறது
    உன்னைவிடவா நான் ருசி (மாலதிமைத்ரி, சங்கராபரணி, ப. 52)

    மாலதிமைத்ரியின் ‘நரமாமிசர்’ கவிதை பெண்ணுடல் ஆணுக்கு காலங்காலமாக இரையாக்கப்படுதலைச் சித்தரித்துள்ளது.

    லீனா மணிமேகலை எழுதிய ‘பரத்தையருள் ராணி’ என்னும் கவிதைத் தொகுப்பில் உடல் அந்தரங்கத்தைப் போராட்ட முறையாக்கியுள்ளார்.

    “ நான் லீனா
    இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
    ... ... ... ... ... ... ...
    வாழ்கிறேன்
    என் வேலை
    இரு தொடைகளையும் எப்பொழுதும்
    பரப்பியே வைத்திருப்பது
    ... ... ... ... ... ... ...
    எவன் ஒருவனும்
    வன்புணர்வதற்கு ஏதுவாய்
    யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
    கருங்குழியென செதுக்கி வைத்துக்கொள்ள
    சொல்லித் தந்திருக்கிறார்கள்
    அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லோரும் ஒருவரே
    ... ... ... ... ... ... ...
    ஏதொன்றையும் முகர்ந்து பார்த்தாலும்
    என் உதிர வீச்சமடிக்கும்” (பரத்தையருள் ராணி,ப.44)


    லீனா மணிமேகலை ஆண் × பெண் என்ற தந்தை வழி இணை முரணை பெண் × ஆண் என்று தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டுள்ளார். “புதிய பெண்மொழி தான், ஆண் மேலாண்மைச் சமூகம் பெண்ணை அமுக்கி வைப்பதற்கும் மௌனத்தில் உறைய வைப்பதற்கும் தந்திரமாகப் பயன்படுத்திய தந்தை வழி இணைமுரண் திட்டத்தை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து விடப் போகிறது” (2) என்ற கூற்று பாலியப் பெண்ணியவாதிகளால் சரிவரப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘என் உதிர வீச்சமடிக்கும்’ என்ற லீனாவின் கவிதை வரியானது, புறக்கணிக்கப்பட்ட ‘பெண்ணின் பூப்பினை’ மாற்று அரசியலாகப் பெருமிதப்படுத்தியுள்ளது.

    தொகுப்புரை

  • ஆண்-பெண் உடல் உறவு வரையறுக்கப்பட்டது. ஆணின் பாலியல் நாட்டத்திற்கு ஏற்ப பெண்ணின் பாலியல் விருப்பம் கட்டுப்பட்டது என்ற கோட்பாடுகள் பெண்களைக் குடும்பத்திலும் பாலுறவிலும் பெரிதும் ஒடுக்குவதாக பெண்ணியவாதிகள் கருதியே பாலியப் பெண்ணியத்தை வரையறுத்துள்ளனர்.

  • இன்றைய பெண்ணியவாதிகளை பாலியப்பெண்ணியம் எதிர் அரசியலுக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் வழி மகளிர் புதுக்கவிதையாளர்கள் குட்டிரேவதி, சுகிர்தாராணி,மாலதி மைத்ரி போன்றோர் பெண் விடுதலை வேட்கையைப் பாலுறவுக் குறித்து எழுதியே முன் வைக்கின்றனர்.

  • ஆண்கள்; பல பெண்களுடன் உறவு கொள்வதை ஆணின் பாலியல் விடுதலையாகக் கருதுவது போல, பெண்ணும் தனது உடல்உறவு குறித்துத் தீர்மானிக்கின்ற உரிமையைக் கோருகின்றாள். மரபுவாதிகள் ‘பெண் தனது காம உணர்வினை வெளியிடக் கூடாது’ என்று விதித்த தடைகளை மீறி இக்கவிஞர்கள் பாலுறவு குறித்து எழுதியிருப்பது பெண்விடுதலைக்கான போராட்ட உத்தியாகும்.

  • குறிப்புகள்

    1. அ. பிச்சை (பதி), பாரதிக்குப் பின் பெண்ணும் கவிதையும், ப.78

    2. க. பஞ்சாங்கம், புதிய பெண்ணியக் கோட்பாட்டாளர் ஹெலன்சீக்சூ, ப.17.

    *****


    இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

    இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p68.html
    

      2025
      2024
      2023
      2022
      2021
      2020
      2019
      2018
      2017


    வலையொளிப் பதிவுகள்
      பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

      எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

      சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

      கௌரவர்கள் யார்? யார்?

      தமிழ் ஆண்டுப் பெயர்கள்

      பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

      வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

      பண்டைய படைப் பெயர்கள்

      ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

      மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

      மரம் என்பதன் பொருள் என்ன?

      நீதி சதகம் கூறும் நீதிகள்

      மூன்று மரங்களின் விருப்பங்கள்

      மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

      மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

      யானை - சில சுவையான தகவல்கள்

      ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

      நான்கு வகை மனிதர்கள்

      தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

      மாபாவியோர் வாழும் மதுரை

      கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

      தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

      குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

      மூன்று வகை மனிதர்கள்

      உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


    சிறப்புப் பகுதிகள்





    முதன்மைப் படைப்பாளர்கள்

    வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


    சிரிக்க சிரிக்க
      எரிப்பதா? புதைப்பதா?
      அறிவை வைக்க மறந்துட்டானே...!
      செத்தும் செலவு வைப்பாள் காதலி!
      வீரப்பலகாரம் தெரியுமா?
      உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
      இலையுதிர் காலம் வராது!
      கண்ணதாசனின் நகைச்சுவைகள்
      குறைச்சுத்தான் எடை போடறாரு...!
      அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
      குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
      இடத்தைக் காலி பண்ணுங்க...!
      சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
      மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
      மாபாவியோர் வாழும் மதுரை
      இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
      ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
      அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
      ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
      கவிஞரை விடக் கலைஞர்?
      பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
      கடைசியாகக் கிடைத்த தகவல்!
      மூன்றாம் தர ஆட்சி
      பெயர்தான் கெட்டுப் போகிறது!
      தபால்காரர் வேலை!
      எலிக்கு ஊசி போட்டாச்சா?
      சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
      சம அளவு என்றால்...?
      குறள் யாருக்காக...?
      எலி திருமணம் செய்து கொண்டால்?
      யாருக்கு உங்க ஓட்டு?
      வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
      கடவுளுக்குப் புரியவில்லை...?
      முதலாளி... மூளையிருக்கா...?
      மூன்று வரங்கள்
      கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
      நான் வழக்கறிஞர்
      பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
      பொழைக்கத் தெரிஞ்சவன்
      காதல்... மொழிகள்
    குட்டிக்கதைகள்
      எல்லாம் நன்மைக்கே...!
      மனிதர்களது தகுதி அறிய...
      உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
      இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
      அழுது புலம்பி என்ன பயன்?
      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
      கடவுளைக் காண உதவும் கண்ணாடி
      தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
      உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
      ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
      அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
      கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
      எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
      சிங்கத்திற்கு வாழைப்பழம்!
      வலை வீசிப் பிடித்த வேலை
      சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
      இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
      கல்லெறிந்தவனுக்கு பழமா?
      சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
      வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
      ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
      அக்காவை மணந்த ஏழை?
      சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
      இராமன் சாப்பாட்டு இராமனா?
      சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
      புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
      பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
      தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
      கழுதையின் புத்திசாலித்தனம்
      விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
      தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
      சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
      திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
      புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
      இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
      ஆணவத்தால் வந்த அழிவு!
      சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
      சொர்க்க வாசல் திறக்குமா...?
      வழுக்கைத் தலைக்கு மருந்து
      மனைவிக்குப் பயப்படாதவர்
      சிங்கக்கறி வேண்டுமா...?
      வேட்டைநாயின் வருத்தம்
      மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
      கோவணத்திற்காக ஓடிய சீடன்
      கடவுள் ரசித்த கதை
      புத்தர் மௌனமாக இருக்கலாமா?
      குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
      சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
      தேங்காய் சிதறுகாயான கதை
      அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
      அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
      கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
      சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
      அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
      விமானத்தில் பறந்த கஞ்சன்
      நாய்களுக்கு அனுமதி இல்லை
      வடைக்கடைப் பொருளாதாரம்
    ஆன்மிகம் - இந்து சமயம்
      ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
      தானம் செய்வதால் வரும் பலன்கள்
      முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
      பிரதோஷம் எப்படி விஷேசமானது?
      விநாயகர் சில சுவையான தகவல்கள்
      சிவராத்திரி விஷேசமானது ஏன்?
      முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
      தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
      கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
      எப்படி வந்தது தீபாவளி?
      தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
      ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
      ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
      அனுமனுக்கு வடை மாலை ஏன்?
      திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
      விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
      கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
      சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
      முருகா என்றால் என்ன கிடைக்கும்?
      குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
      விபூதியின் தத்துவம்
      கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
      தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
      கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
      இறைவன் ஆடிய நடனங்கள்
      யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
      செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
      கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
      விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
      இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
      நவராத்திரி பூஜை ஏன்?
      வேள்விகளும் பலன்களும்
      காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
      பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
      அம்பலப்புழா பால் பாயாசம்
      துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
      சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
      ஈசன் உபதேசித்தத் தலங்கள்
      பரமபதம் விளையாட்டு ஏன்?
      வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
      பதின்மூன்று வகை சாபங்கள்
      இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
      சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
      பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
      சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
      உணவு வழித் தோசங்கள்
      திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
      மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
      பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
      நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
      சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
      மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
      இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
      பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
      கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
      அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
      தீர்க்க சுமங்கலி பவா


    தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                  


    இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License