இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மலையாள யாப்பியல் - ஆய்வுகள்

சிவா வெங்கடேஷ். ல


தமிழ் மொழியோடு ஒன்றிணைந்திருந்த மலையாள மொழியானது கி.பி.10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழிலிருந்து பிறந்து ‘மலையாளம்’ என்ற தனித்த மொழி அமைப்பிற்கானத் தகுதியைப் பெறத்தொடங்கியது. இந்நிலையில் மலையாள மொழியில் யாப்பிலக்கணங்களைப் பற்றியதான குறிப்பிடத்தகுந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவைகள் இவ்வாய்வுக் கட்டுரையில் விளக்கிக் கூறப்படுகின்றன.

மலையாளத்தில் யாப்பிலக்கணங்களைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் கேரளக்கௌமுதி, விருத்த மஞ்சரி, விருத்த விசாரம், விருத்த சில்பம், மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘A History of Malayalam Metre’ போன்றவை குறிப்பிடத்தகுந்த நூல்களாக அமைகின்றன. 1904 -ல் சாகித்ய சஹகரன சங்கத்தால் வெளியிடப்பட்ட ஏ. ஆர். இராஜராஜ வர்மாவின் ‘விருத்த மஞ்சரி’ என்ற நூல் மலையாள யாப்பிலக்கண நூல்களுக்கெல்லாம் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. இந்நூலில் ஒன்பது இயல்கள் காணப்படுகின்றன. அதில் ‘பா, விருத்த ப்ரகரணம்’ என்ற எட்டாவது இயலில் மட்டும் கிளிப்பாட்டு, துள்ளல் பாட்டு, கிருஷ்ண காதை மற்றும் இருபத்துநாலு விருத்தம் போன்ற மலையாள விருத்தங்களைப் பற்றிய கருத்துக்களும், பிற அனைத்து இயல்களிலும் சமஸ்கிருத விருத்தங்களைப் பற்றிய கருத்துக்களும் விளக்கப்பட்டிருக்கின்றன. விருத்த மஞ்சரியில் ‘பா‘ விருத்த ப்ரகரணத்தைத்’ தவிர மீதமுள்ள அனைத்து இயல்களும் விருத்த ரத்னாகரம், விருத்த ரத்னாவலி என்ற இரு சமஸ்கிருத யாப்பு நூல்களை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டவை.

ஏறக்குறையத் தெளிவான முறையில் திரு.ஏ. ஆர். இராஜராஜ வர்மா அவர்கள் சமஸ்கிருதம் மற்றும் மலையாள யாப்புக்களின் விதிமுறைகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறியிருப்பினும், இந்நூலில் அதிகமான குறைபாடுகள் காணப்படுகின்றன என்று பிற்கால ஆய்வறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்களில் திரு. குட்டிகிருஷ்ணமாரா, கே. கே. வாத்தியர் மற்றும் என். வி. கிருஷ்ணவார்யார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மலையாளத்தில் விருத்த மஞ்சரிக்குப் பிறகு உருவான ‘காந்த விருத்தம்’, ‘விருத்தசகாயி’, ‘ஸத்விருத்தமாலா’ போன்ற யாப்பிலக்கண நூல்களெல்லாம் மஞ்சரியில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் தொடர்புடையனவாகவே அமைந்திருக்கின்றன என்று என். வி. கிருஷ்ணவார்யார் குறிப்பிட்டுள்ளார். இது மலையாள யாப்பிலக்கணங்களில் இன்றியமையாத நூலாக அமைகிறது. இவ்விருத்த மஞ்சரிக்கு முன்பு புதுப்பள்ளி பி. கெ. பணிக்கரின் ‘விருத்த ரத்னாகரம்’ கொச்சுண்ணி தம்புரானுடைய ‘காந்த விருத்தம்’ போன்ற நூல்கள் இருந்திருக்கின்றன. இவை இரண்டும் சமஸ்கிருத விருத்த சாஸ்திரங்களுடைய தழுவலாகும்.



முதன் முதலில் மலையாள விருத்தங்கள் குறித்த கருத்துக்களைத் தொகுத்து, உதாரணங்களுடன் எடுத்துக் கூறிய பெருமை 1878 -ல் பூர்ணா வெளியீடாக வெளிவந்த வித்துவான் டி. எம். கோவுண்ணி நெடுங்காடியினுடைய ‘கேரளகௌமுதி’ என்ற நூலையேச் சாரும். இந்நூல் விருத்த மஞ்சரியை விட காலத்தால் முந்தியதாக இருப்பினும் மலையாள விருத்தங்களைப் பற்றியதான கருத்துக்கள் போதுமான அளவில் கூறப்படாததால் மலையாள யாப்பிலக்கண நூல்களுக்கெல்லாம் முதன்மையாகக் கொள்ளப் பெறவில்லை. இருப்பினும் “விருத்த மஞ்சரியின் பா‘ விருத்த ப்ரகரணம் என்ற இயலிலுள்ள அனைத்து யாப்புச் செய்திகளும் கேரளகௌமுதியின் வழி வந்தவைகள்தான்” என்று திரு.கே. கே. வாத்தியார் விருத்த விசாரம் என்ற தம் நூலின் முகவுரையில் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தகுந்தது.

இந்நூலிலுள்ள ‘விருத்த லோகம்’ என்ற இயலில் மலையாளம் மற்றும் சமஸ்கிருத விருத்தங்களும், ‘தமிழ் முறைகள்’ என்ற தலைப்பில் தமிழ் யாப்புக்கள் குறித்ததான கருத்துக்களும் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வியலில் கூறியிருக்கும் சமஸ்கிருத விருத்தங்கள் ‘விருத்த ரத்னாகரா’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று என். வி. கிருஷ்ண வாரியார் கருத்து தெரிவித்திருக்கிறார். கோவுண்ணி அவர்கள் விருத்தங்களை மாத்ரா விருத்தம், வர்ண விருத்தம் என இரண்டு வகையாகப் பிரித்து சீர்களில் (கணங்கள்) ‘லகு’(குறில்), ‘குரு’(நெடில்) என்பவைகளைப் பயன்படுத்தி சில விருத்தங்களை மட்டும் எடுத்துக் கூறியிருக்கிறார். மேலும், இந்நூலில் தமிழ் யாப்புக்களின் பாவகைகள், யாப்பியல் உருப்புக்கள், அசை குறித்தக் கருத்துக்கள் மற்றும் ‘அக்‘ரலோகம்’ என்ற தலைப்பில் தமிழ் எழுத்துக்கள் குறித்ததான கருத்துக்களும் அறிமுக நோக்கிலேயே கூறப்பட்டிருக்கின்றன.

பொதுவாக மலையாள இலக்கணத்தைப் பொருத்தளவில் கி.பி. 14-ம் நூற்றாண்டில் வடமொழியில் எழுதப்பட்ட ‘லீலாதிலகம்’ மலையாளத்தின் முதல் இலக்கண நூலாக அமைகிறது. இந்நூல் வடமொழி, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிக்கலப்பில் உருவான மணிப்பிரவாள நடையில் அமைந்த பாட்டு இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகிறது. இப்பாடல்கள் எதுகை, மோனை என்ற யாப்பு அமைப்பைக் கொண்டிருப்பதால் தமிழ் யாப்புக்களோடு நெருங்கிய தொடர்புடையனவாக விளங்குகின்றன. லீலாதிலகம் கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சார்ந்திருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அதாவது கி.பி. 1909, 10-ல் அப்பன் தம்பிரான் அவர்களால் ‘மங்களோதயம்’ என்ற பத்திரிக்கையில் அதன் முதல் பகுதியானது தொடராக முதன் முதலில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகே இந்நூலை முழுமையான மலையாள மொழிபெயர்ப்புடன் ஆத்தூர் பிர்ரடி என்பவர் 1917 -ல் வெளியிட்டிருக்கிறார்.

என். வி. கிருஷ்ணவாரியார் 1947 -ல் மெட்ராஸ் பல்கலைக்கழக மலையாளத்துறையில் ‘A Study of Malyalam Metre’ ( மலையாள விருத்தங்கள் ஓர் ஆய்வு ) என்ற தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக 1977 -ல் ஆங்கிலத்தில் அவர் எழுதிய ‘‘A History of Malayalam Metre’ (மலையாள யாப்பு வரலாறு) என்பது மலையாள யாப்புக்களின் வரலாற்றைக் கூறும் ஒரு சிறந்த ஆய்வு நூலாக அமைகிறது. திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூல் மலையாள யாப்புக்களின் வரலாற்றை ஆய்வதோடு திராவிட மொழிகளுக்கிடையேயான ஒப்பீட்டாய்வையும், குறிப்பாக சஸ்கிருதம், தமிழ் மொழிகளிலுள்ள யாப்புகளுக்கும், மலையாள யாப்புகளுக்குமிடையே காணப்படும் யாப்புக் கூறுகளை விவரிக்கும் முறையில் ஒப்பாய்வையும் மேற்கொண்டிருக்கிறது. பொதுவாக, மலையாள விருத்தங்கள் தாள சங்கீதங்களை அடிப்படையாகக் கொண்டவைகள் என்றும் குறிப்பிடுகிறார்.



‘விருத்த சில்பம்’ திரு.குட்டிகிருஷ்ணமாராரால் எழுதப்பட்டு 1952 -ல் மாரர் சாஹித்ய ப்ரகாசம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. விருத்த மஞ்சரியில் கூறப்பட்டுள்ள கருத்துக்களோடு தொடர்புடைய யாப்பு நூல்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. இந்நூலில் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாம் பகுதியில் மூன்று அத்தியாயங்களும் (இயல்கள்) இரண்டாம் பகுதியில் நான்கு அத்தியாயங்களும் உள்ளன. முதல் பகுதியில் சமஸ்கிருத விருத்தங்கள் பற்றிய கருத்துக்களும், இரண்டாம் பகுதியில் மலையாள மொழி யாப்பிலக்கணங்கள் பற்றிய கருத்துக்களும் விளக்கப்பட்டுள்ளன. மாரர் தன்னுடைய நூலிற்கு ‘விருத்த மஞ்சரி பாஸ்யம் (உரை)’ என்று பெயரிட்டுள்ளார். எனவே, இதன் மூலம் விருத்த மஞ்சரியில் கூறப்பட்டிருக்கின்ற யாப்பு குறித்த கருத்துக்களைத் திறனாய்வு நோக்குடனே அணுகியிருக்கிறார். இராஜராஜ வர்மா பா‘ விருத்தம் பற்றி குறிப்பிடாத பல வியங்களையும் மாரர் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு.கே. கே. வாத்தியார் அவர்கள் 1967 -ல் ‘விருத்த விசாரம்’ என்ற நூலில் மலையாள விருத்தங்களைக் குறித்து, அதாவது விருத்த மஞ்சரி, கேரளகௌமுதி ஆகிய யாப்பிலக்கண நூல்களை அடிப்படையாகக் கொண்டு விமர்சன நோக்கில் தம் ஆய்வுக் கருத்துக்களை விளக்கியிருக்கிறார். இந்நூல் பற்றியதான கருத்துக்கள் நூல் அறிமுகத்தில் விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

ச. வு. பாஸ்கரன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட (1973) Krala Historical Study) ‘Malayalam Poetics’ (மலையாளக் கவிதைகள்) என்ற நூலில் மலையாளக் கவிதைகளையும், குறிப்பாக கிருஷ்ண காதையை முக்கியப்படுத்தியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் இந்நூலின் முதல் பகுதியில் மலையாளக் கவிதைகளும் மற்றும் அற்றின் கொள்கைகளும் கூறப்பட்டிருப்பதோடு மலையாளக் கவிதையியலில் மேற்கொண்டிருக்கும் ஆய்வுகளைக் குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பகுதியில் கிருஷ்ணகாதையைக் குறித்ததான கருத்துக்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.



அறிஞர் கால்டுவெல் திராவிட மொழி இலக்கணங்களுக்கிடையேயான ஒப்பீட்டாய்விற்கு முதன்முதலில் வித்திட்டவராவார். இந்த வகையில் திராவிடமொழி யாப்பிலக்கணங்களுக்கிடையேயான ஒப்பீட்டாய்வை மேற்கொண்டதில் பேரா. எஸ். சுப்பிரமணியன் மற்றும் பேரா. அப்பன் தம்புரான் போன்றோர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். 1977 -ல் பேரா. எஸ். சுப்பிரமணியன் அவர்கள் “The Commess in the Metre of the Dravidian Languages” என்ற தம் ஆங்கில நூலில் திராவிட மொழிகளுக்கிடையேயான யாப்பியல் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டிருப்பது சிறப்பிற்குரியதும், குறிப்பிடத்தகுந்ததுமாகும். எனவே, தமிழ் மற்றும் மலையாள மொழிகளுக்கிடையேயான யாப்பில் ஒப்பீட்டளவில் முதல் நூல் எனக் கருதலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p79.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License