இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கோவுண்ணி கூறும் தமிழ் யாப்பியல்

சிவா வெங்கடேஷ். ல


மலையாள மொழி இலக்கண நூல்களில் ஒன்றான ‘கேரளக் கௌமுதி’ வித்துவான் டி. எம். கோவுண்ணி நெடுங்காடி (1831-1889) அவர்களால் எழுதப்பட்டு, பூர்ணா பதிப்பகத்தாரால் (கோழிக்கோடு) 1878-ம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூலில் பதினாறு இயல்கள் காணப்படுகின்றன. அதில் ‘விருத்தலோகம்’ என்பது பதிமூன்றாவது இயலாக அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வியலில் சமஸ்கிருதம் மற்றும் மலையாள விருத்தங்களும், ‘தமிழ்முறகள்’ என்ற தலைப்பில் தமிழ் யாப்புக்கள் குறித்ததான சில சுருக்கமான கருத்துக்களும் கூறப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், மலையாள இலக்கண நூலில் தமிழ் யாப்பியல் கருத்தமைவிற்கான காரணங்களையும், அவற்றின் பயன்பாடுகளையும் கண்டறிந்து கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

இந்நூலில் பாவகைகளையும் மற்றும் அசை, சீர், அடி இது போன்ற தமிழ் யாப்பியல் உறுப்புக்களையும் குறித்ததான கருத்துக்கள் ஒரு சில சூத்திரங்கள் மூலம் கூறப்பட்டிருக்கின்றன. அவை பின்வருமாறு விளக்கிக் கூறப்படுகிறது.

பாவகை குறித்த கருத்துக்கள்

289-வது சூத்திரத்தில் தமிழ் யாப்புக்களின் பாவகைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. இதன் உரை விளக்கத்தில், “தமிழ் கவிதை இலக்கணத்தின்படி நான்கு துறை காணப்படுகிறது.

உ-ம் வெம்பா, கலிப்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா.

இவைகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஏராளமான விருத்தங்கள் உண்டு. இருபத்தியாறு சந்தஸ்களுக்கு ஒரு விதத்தில் இவை ஒத்துப் போகின்றன.” என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறர். ஆனால் அவை எவ்விதத்தில் ஒத்துப்போகின்றன என்பதற்கான சான்றுகள் தரப்படவில்லை. வேதங்களில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள இருபத்தாறு சந்தஸ்களும் மாத்ராக்ரமம் (மாத்திரை அடிப்படையில்), வர்ணக்ரமம் (எழுத்துக்களின் அடிப்படையில்), மாத்ராவர்ணக்ரமம் (மாத்திரை, எழுத்து அடிப்படையில்) என மூன்று விதங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், இந்நூல் 274-ம் சூத்திரத்தில் கூறியிருக்கிறது. இங்கு “சந்தஸ்” என்பது வடமொழி யாப்புக்களைக் குறிப்பதாகும். மேலும் “சந்தஸ்” என்பதற்கு வடமொழியில் பல அர்த்தங்கள் இருப்பதாக முனைவர். ம. பிரபாகரன் அவர்கள் “வீரசோழிய யாப்பு” (பக். 64) என்னும் தம் நூலில் “வடமொழி யாப்பியல்” பகுதியில் விரிவாகக் கூறியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.



யாப்பியல் உறுப்புக்கள் குறித்த கருத்துக்கள்

தமிழில் எழுத்து முதல் தொடை ஈறாக உள்ள ஆறு யாப்பியல் உறுப்புக்களை 290-வது சூத்திரத்திலும், அவை ஒவ்வொன்றிற்கும் நிகரான, மலையாளத்தில் பயன்பாட்டிலுள்ள யாப்புக் கலைச்சொற்களை 291-வது சூத்திரத்திலும் கூறியிருக்கிறார். அவை பின்வருமாறு,

தமிழ் மலையாளம்
எழுத்து வர்ணம்
அசை மாத்ர (மாத்திரை)
சீர் கணம்
தளை யதி
அடி பாதம்
தொடை -----

இச்சூத்திரத்திற்கான உரை விளக்கத்தில் ‘வர்ணம்’ முதல் ‘பாதம்’ வரையிலான சொற்கள் அனைத்தும், மலையாள மொழி யாப்புக்களின் கலைச் சொற்களென்றோ, வடமொழி யாப்புக்களின் கலைச் சொற்களென்றோ வெளிப்படையான குறிப்புகள் எதுவும் தரப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் வடமொழிச் சொற்களாகும். எனவே, மலையாள யாப்பிலக்கணப் பயன்பாட்டிலுள்ள இச்சொற்களை மலையாள மொழி யாப்பிலக்கணக் கலைச்சொற்களாகக் கருதவியலாது.

சமஸ்கிருத விருத்தங்களில் ‘யதி’ (Metrical Pause) என்பது முக்கியமானது. வர்ண விருத்தத்தின் தனிச்சிறப்பாக ஒரு அடியின் நடுவில் (In the Middle of Line) ‘யதி’ என்கிற அமைப்பு காணப்படுகிறது. அதாவது ஒரு அடியின் நடுவில் நிறுத்திச் சொல்லுதலால் இதனைத் தமிழில் ‘நிறுத்தம்’ (Pause) என பொருள் கொள்ளலாம். இது செய்யுளை ‘நினைவுபடுத்தி ஒப்பித்தல்’(Recitation) என்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வேத சரணங்களில் (Vedic Stanzas) த்ரிஸ்துப் (Tristubh), மற்றும் ஜகதி (Jagati) வாரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழில் ‘அசை’ (Matrical Syllable) என்பது எழுத்துக்கள் சேர்ந்து வருவதும், ‘மாத்திரை’(Quantity) என்பது அவ்வெழுத்துக்களின் அளவைக் குறிப்பதாகவுமாகிறது. இந்நிலையில் அசையும், மாத்திரையும் வெவ்வேறு பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால் ‘அசை’ என்றால் ‘மாத்திரை’ என்று மட்டுமே பொருள் கொள்ளும் விதத்தில் கேரள கௌமுதியில் குறிப்பிட்டிருப்பது மறுக்கப்படுவதும், ஆய்விற்குரியதாகவும் அமைகிறது. இதனையே ஏ. ஆர். இராஜராஜ வர்மா ‘விருத்த மஞ்சரி (பக்-76) என்னும் தம் நூலில் சமஸ்கிருதத்திலுள்ள ‘மாத்திரை’ என்ற சொல் தமிழில் ‘அசை’ என பொருள் கொள்ளப்படினும் இவை இரண்டும் வெவ்வேறு பொருட்தன்மைகளைக் கொண்டவை என்று கூறியுள்ளார்.

அடி குறித்ததான சூத்திரத்தில் (சூத் -293) அடிவகைகளைக் கூறிவிட்டு, “அவைகளுக்கு இங்கு உதாரணம் கொடுப்பது பயனற்றது” என்றும் நூலாசிரியர் தன் உரை விளக்கத்தில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

‘தொடை’ என்ற சொல்லிற்கு நிகரான சொல்லைக் குறிப்பிடாமல் “ஈரடி முதல் மேலெல்லாம்” என்று மட்டுமே உரை விளக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.



அசை குறித்த கருத்துக்கள்

292-வது சூத்திரத்தில் நேர், நிரை என இருவகை அசைகளைக் குறிப்பிட்டு, நேரசையை ‘லகு’ என்றும் நிரையசையை ‘குரு’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவை இரண்டும் சமஸ்கிருத சொற்களாகும். மேலும், மலையாளத்தில் ‘லகு’ என்றால் ‘குறில்’ என்றும் ‘குரு’ என்றால் ‘நெடில்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

கோவுண்ணி கருத்துக்கள் ஏற்பும், மறுப்பும்

“மலையாளத்திலுள்ள சில விருத்தங்கள் தமிழ் யாப்புக்களோடு ஒத்துப் போகின்றன” என்ற இந்நூலாசிரியரின் கருத்திற்கு மலையாள அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிலர் உடன்படவும் செய்திருக்கின்றனர் அவை பின்வருமாறு,

மலையாளத்தில் துஞ்சனின் ‘கிளிப்பாட்டுக்கள்’ தமிழில் ஈரடிப்பாடல்களான குறளடியோடும், இருபத்தி நான்கு விருத்தங்களில் சில விருத்தங்கள் கலிப்பாக்களோடும் ஒரு விதத்தில் ஒத்துப்போகின்றன என்று கூறுவதோடு மட்டுமின்றி, அதற்கான உதாரணப் பாடல்களையும் குறிப்பிட்டிருக்கிறார். பைங்கிளிக் கண்ணியில் ‘அகமேவு……’, பராபரக்கண்ணியில் ‘சீராறு தைவதிருவருளாம்’, கலிப்பாவில் ‘பொன்னமாதர’ என தொடங்கும் பாடல்கள் உதாரணமாகச் சுட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாகச் சுட்டிய கலிப்பாடலானது இருபத்தி நான்கு விருத்தங்களில் ஒன்றான ‘சூர்யே வம்சே’ என்ற விருத்தத்திற்குப் பொருத்தமானது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு.கே. கே. வாத்தியார் ‘விருத்த விஜாரம்’ (பக்-22) எனும் தம் நூலில் “மலையாளம் மற்றும் தமிழ்மொழி யாப்புகளுக்கிடையே குறிப்பிடும்படியான ஒற்றுமைக் கூறுகள் ஒன்றுமில்லை” என கோவுண்ணியின் கருத்திற்கு மறுப்பு தெரிவிப்பது மட்டுமின்றி முனைவர். எஸ். கே. நாயர் “தெலுங்கினுடனோ, கன்னடத்துடனோ, மற்றும் தமிழினுடனோ மலையாளத்தை ஒப்பீடு செய்வோமேயானால் யாப்பிலக்கணத்தைப் பொருத்தளவில் குறிப்பிடத்தகுந்த ஒற்றுமைகள் ஒன்றுமில்லை” என ‘பாஷா விருத்தமஞ்சரி’ (ஜயகேரளம் ஆண்டு பதிப்பு) என்ற நூலின் முன்னுரையில் கூறியிருக்கும் கருத்துக்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும். எனவே, முனைவர். ச. எஸ். கே. நாயர் அவர்கள் யாப்பிலக்கணத்தைப் பொருத்தளவில் இவைகளுக்கிடையே குறிப்பிடத்தகுந்த ஒற்றுமைகள் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டிருப்பது மறுக்கத்தக்கதாகும். மேலும், ஏ. ஆர். இராஜராஜ வர்மா, குட்டிக்கிருஷ்ண மாரார், ஆர். நாராயண பணிக்கர், உள்ளுர் பரமேஷ்வர ஐயர், இளங்குலம், மற்றும் என். வி. கிருஷ்ணவாரியார் போன்றோர்கள் தமிழ், மலையாள மொழிகளுக்கிடையே ஏராளமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன என்று கூறியிருக்கும் கருத்துக்களைப் பேராசிரியர் எஸ். சுப்பிரமணியன் அவர்கள் ‘The Commenness in the Metre of the Dravian Languages’ (பக்-398) என்ற தம் ஆங்கில நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.



முடிவுரை

கேரள கௌமுதியில் கூறப்பட்டிருக்கின்ற தமிழ் யாப்பு குறித்த கருத்துகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது கோவுண்ணி அவர்கள் போதுமான அளவில் தமிழ் யாப்பிலக்கணத்தைப் பற்றிய செய்திகளைத் தம் நூலில் முழுமையாகக் குறிப்பிடவில்லை. என். வி. கிருஷ்ண வாரியார், கே. கே. வாத்தியார் போன்றோர் கோவுண்ணியின் தமிழ் யாப்பு பற்றியதான தவறான புரிதலைத் தத்தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளன. எனவே, கோவுண்ணி அவர்கள் தமிழ் யாப்புச் செய்திகளை மேற்குறிப்பிட்ட சூத்திரங்களின் வழி சுருக்கமாகக் கூறியிருப்பது ஒரு அறிமுக நோக்கத்திற்காக மட்டுமே என்பது தெளிவாகிறது.

பயன்பட்ட நூல்கள் (Reference Books)

1. Kounni nedunkadi - Keralakoumuthi (1977) Published- DLA, Trivandrum

2. A. R. Rajaraja Varma - Viruthamanjari (1904)

3. K. K. Vathyar - Vrithavicharam (1967)

4. N. V. Krishna Warriar - A History of Malayalam Metre (1977) DLA, Trivandrum

5. S. Subramanyan - The Commenness in the Metre of the Dravian Languages (1977) DLA, Trivandrum

6. Dr. M. Prabhakaran - Veeracholiya yappu- 2014, Published Kaaviya.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p80.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License