இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

வீரம் செரிந்த தமிழ்நாடு

புலவர் ச. ந. .இளங்குமரன்


முன்னுரை

இது பாரதியின் பாட்டு வரிகள் மட்டுமல்ல, நம் தமிழ் நாட்டுக்கு அமைந்த பாராட்டு வரிகள். கடந்த கால வரலாற்றையும், எதிர்கால நிலைப்பாட்டையும் உணர்த்திய ஒற்றைவரி அது தான் வீரம் செரிந்த தமிழ்நாடு. இந்திய நாடு விடுதலை அடைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே

“ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே...”

என்று பாடிய பின்பே பாரதநாடு விடுதலை பெற்றது. அதைப்போல 1967 - ல் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே “வீரம் செரிந்த தமிழ்நாடு” என்று பாடிய அந்தத் தொலைநோக்குப் பார்வையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று காதல், மற்றொன்று வீரம்.

“போர்க்களத்தில் பகைவர்கள் வேல்கொண்டு எறிய ஒருகணம் கண்களை மூடித் திறந்தால் அது வீரனின் வீரத்திற்கு இழுக்காகும்” (775) என்று வள்ளுவர் வீரத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

அப்படிப்பட்ட வீரர்களை உருவாக்குபவர்கள் தாய்மார்களேயாம். பெற்ற குழந்தைகளுக்குப் பாலோடு வீரத்தையும் ஊட்டிய வீரத்தாய்மார் பலரைப் பண்டைத் தமிழர்களின் வரலாற்று ஆவணமான புறநானூறு படம் பிடித்துக் காட்டுகிறது.



பொருளுரை

இதோ ஒரு தாய் மீனை உணவாக உண்ணுகின்ற கொக்கின் இறகைப்போல முழுவதுமாக நரைத்த தலையை உடையவள். தூய வெள்ளை நரை அவளின் முதுமையைக் காட்டினாலும், உள்ளமோ இளமையின் இருப்பிடமாகத் திகழ்ந்தது.

தன் நாட்டு மன்னனுக்குத் துனையாகப் போர்க்களத்தில் பகைவர்களை வெல்வதற்காகத் தன் மகனைப் போருக்கு அனுப்பி வைத்துக் காத்திருந்தாள். அந்த வீரத்தாயின் மகன் கட்டிளங்காளை. போர்களத்தில் யானைப்படைகளைச் சிதறடித்து ஆண் யானையைக் கொன்று மார்பிலே விழுப்புண் பட்டு மாண்டு போனான்.

இந்தச் செய்தி, அந்த வீரத்தாயின் காதுகளை எட்டுகிறது. பொதுவாக ஒரு பெண் இரண்டு முறை மகிழ்ச்சியடைகிறாள். ஒன்று தான் கருவுற்ற பொழுது, அடுத்து தன் வயிற்றில் உருவான இணையற்ற கருவை உருவாக்கிப் பிள்ளையாகப் பெறும் பொழுது. இந்த இரண்டு மகிழ்வினையும் தாண்டி, தன் நாட்டைக் காக்கும் போரில் தன் மகன் விழுப்புண்பட்டு வீரச்சாவடைந்தான் என்று கேட்டவுடன் அந்தத் தாயின் கண்களில் கண்ணீர் பெருகியது. அது அவலக் கண்ணீரல்ல, ஆனந்தக் கண்ணீர். அந்தக் கண்ணீர் மலைப்பகுதியில் அடர்ந்திருக்கும் மூங்கில் புதரின் மேல் பெய்த மழையானது எப்படிச் சிதறுமோ அதைப்போல அவளின் கண்ணீர்த்துளிகள் சிதறி ஓடினவாம். இந்த வீரத்தாயைப் பற்றிப் பாடிய புலவரும் ஒரு வீரத்தாயாம். அவர் பெயர் பூங்கன் உத்திரையர் என்பது. அவர் பாடிய பாடல் இது;

“மீனுண் கொக்கின் தூவி யன்ன
வானவரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெறிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதறினும் பலவே” (புறம் - 277)

இன்னொரு தாய் தன் மகனை நல்ல வீரனாக வளர்த்தாள். குழந்தைப் பருவத்திலிருந்தே போர்க்களப் பயிற்சிகள் அனைத்தையும் பழக்கப்படுத்தினாள். போர்முரசம் கேட்டால் போதும் மகனை மகிழ்ச்சி பொங்க அனுப்பி வைத்தாள். போர் மறவன் போன இடங்களிலெல்லாம் வெற்றியையே தன் தாய்க்குப் பரிசாகக் கொண்டு வந்தான்.

இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஒருநாள் போர்முரசம் முழங்குகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வீரர்கள் புலிக்கூட்டம்போல் போர்க்களம் நோக்கி வீரர்கள் செல்லலாயினர்.



பக்கத்து வீட்டுப் பெண்ணொருத்தி வீரத்தாயின் வீட்டிற்கு வந்து, வீட்டின் முன்பிருந்த சிறிய தூணைப் பிடித்துக் கொண்டு, “அம்மா உன் மகன் எங்கே?” என்று கேட்டாள். அதற்குப் புன்முறுவல் பூக்க அந்த வீரத்தாய், “என் மகன் எங்கே என்று நான் அறியேன், அந்தப்புலி தங்கிச் சென்ற கற்குகைபோன்ற, அவனை ஈன்றெடுத்த வயிறு இதுதான். அவனை நீ பார்க்க விரும்பினால், எங்கே போர் நடக்கிறதோ அங்கே சென்று பார்” என்றாள்.

தாயின் வயிறு புலி வாழ்ந்த குகையாக இருந்தது. மகனோ புலியாக இருந்தான். பின்னர் அவனின் வீரத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? தனது வீட்டில் நடந்த சிறிய நிகழ்வை அழகுத் தமிழில் பாட்டாகப் பாடி அவனியில் அழியாப் புகழுடன் நிலைத்துவிட்ட அந்த வீரத்தாயின் பாட்டு வரிகள் இவை.

“சிற்றில் நற்றூன் பற்றி நின்மகன்
யாண்டுள னோஎன வினவுதி என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகியே கல்லலை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!” (புறம் -86)

மற்றொரு மறக்குடி மூதாட்டி தன் நாடி நரம்புகளிலெல்லாம் வீரம் விளைந்து கிடக்கின்றதை வெளிப்படுத்துகின்றாள். அந்த வீர மறத்தியின் வீரம், துணிவு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

படைமறவன் படைக்களத்தில் வெட்டுண்டு உடல் சிதைந்து மாண்டு கிடக்கின்றான். உடன் சென்ற வீரர்கள் போர் முடிந்து வீடு திரும்புகின்றனர். மகனின் மரணச் செய்தி அறியாமல் அந்தத்தாய் அவனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள்

வறண்டுபோன தோள்களின் மேல் நரம்புகள் புடைத்துக் கிடந்த உடலும், தாமரை மலர்போன்று வெளிரிக்கிடந்த வயிறும் அந்த மூதாட்டியின் முதுமையைப் பறைசாற்றியது. போர்க்களத்திலிருந்து திரும்பிய வீர்ர்கள் மகனுக்காகக் காத்திருந்த அந்த மூதாட்டியிடம், உன் மகன் போர்க்களத்தில் புறமுதுகு காட்டி, புறப்புண்பட்டு இறந்து விட்டான் என்று சொல்லிச் செல்கின்றனர்.

இதைக் கேட்ட முதியவளின் உடல் வெம்மையுற்றது. தீப்பிழம்பாகச் சிவந்த கண்கள் அவள் சினத்தின் உச்சியில் இருப்பதை வெளிப்படுத்தின. நாட்டைக் காக்கும் போரில் என் மகன் புறப்புண் பட்டு இறந்து கிடப்பானாயின் அவனுக்குப் பால் கொடுத்து வளர்த்த என் மார்பை அறுத்தெறிவேன் என்று வஞ்சினம் முழங்கி உண்மை அறியும் நோக்கத்தில் கையில் வாளோடு போர்க்களம் சென்றாள்.



போர்க்களத்தில் சிதறியும், குவிந்தும் கிடந்த பிணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தாள். வெட்டுண்டு சிதைந்து கிடந்த பிணங்களில் ஒன்றாகத் தன் மகனது உடலும் இருக்கக் கண்டு அவற்றைப் புரட்டி ஒன்றாக்கினாள். அவன் முகத்திலும், மார்பிலும் விழுப்புண் பட்டு மாண்டு கிடக்கும் தனது மகனது உடலைத் தன் மடியில் கிடத்தியவாறு அந்த மறவனை, மாவீரனைப் பெற்றெடுத்த நாளில் அடைந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியோடு களத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்த அந்த மான மறத்தியின் மறமாண்பை பாடியவர் காக்கைப்பாடினியார் நற்செல்லையார் என்னும் பெண்பாற்புலவராவார்.

காலத்தால் அழியாத அந்தப் பாடல் வரிகள்;

”நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து, மாறினன்` என்று பலர்கூற,
மண்டு அமர்க்கு உடைந்தன்ன் ஆயின், உண்டஎன்
முலை அறுத்திடுவென், யான் எனச் சினைஇ,
கொண்ட வாளொடு படுபிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞன்றினும் பெரிது உவந்தனளே! (புறம் - 288)

நிறைவுரை

வீரத்தின் விளைநிலமாகச் சங்க காலத்தில் பெண்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் தான் வாழும் நாட்டின் மீது மிகுந்த பற்று வைத்திருந்திருக்கின்றனர். பகைவர்களிடம் இருந்து தன் தாய்நாட்டைக் காக்கும் விதத்தில் தன்னுடைய பிள்ளைகளுக்குத் தாய்நாட்டுப் பற்றையும், வீரத்தையும் ஊட்டி வளர்த்திருக்கின்றனர். தாய்நாட்டைக் காப்பதற்காகத் தங்கள் உயிரை ஈகம் செய்வதைப் பெருமையாகக் கருதியிருக்கின்றனர். தன் நாட்டை ஆளும் மன்னனைத் தங்களின் உயிராக நேசித்திருக்கின்றனர். மக்கள் மன்னனைத் தங்களின் உயிராக நேசித்தார்களென்றால் மக்களின் மேல் மன்னன் வைத்திருந்த மதிப்பைச் சொல்லவும் வேண்டுமோ? பாரதியின் “வீரம் செரிந்த தமிழ்நாடு” என்பது வெறும் வார்த்தையல்ல அது வரலாறு.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p82.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License