இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

இலக்கியங்களும் அறநெறிக் கோட்பாடும்

வீ. முத்துலட்சுமி


கோட்பாடு

இலக்கியத்தைப் பற்றி நினைக்கும் போது பல்வேறு கருத்துக்கள் தோன்றுகின்றன. பிறகு இவை கொள்கைகளாகவும், கோட்பாடுகளாகவும் ஆகின்றன. ஒரு நினைப்பானது சற்று சந்தேகத்துடன் எடுத்துரைக்கும் போது அது ‘கருத்து’ எனப்படுகிறது. உறுதியாக எடுத்துரைக்கும் போது அதைக் ‘கொள்கை’ என்கிறார்கள். சொன்னவருக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகும், பிறருக்கு அதன்மேல் நம்பிக்கை இருக்குமானால் அது ‘கோட்பாடு’ எனப்படுகிறது.

இலக்கியக் கருத்தைக் கொண்டு இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியும். கொள்கையைக் கொண்டு அதைச் சொன்னவரைப் புரிந்து கொள்ள முடியும். கோட்பாட்டைக் கொண்டு கோட்பாட்டினைப் புரிந்து கொள்ள முடியும் என்பது தான் அதன் பயன்பாடாகும்.

கோட்பாட்டின் பிரிவுகள்

கோட்பாடுகளைப் பொதுவாக மேலைக் கோட்பாடு, கீழைக் கோட்பாடு என்று இரண்டாகப் பிரிப்பார்கள். மேலே இருப்பது மேல் என்பது ‘மிஷனரி பொசிஷன்’ என்று பிற்கால ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டது. ஆகவே மேலைக் கோட்பாடு கருவுருவாக்கம் கொண்டதாகவும், கீழைக் கோட்பாடு கருச் சம்பந்தமாகவும் காணப்படுகிறது.

ஏராளமாக உற்பத்தி செய்து அவற்றை இயன்ற இடமெல்லாம் பரப்பி அவை என்னாகின்றன என்று தெரிந்து கொள்ள முயலாமல், மேலே செல்வது மேலைக் கோட்பாட்டின் உயிரியல் இயல்பு.

எல்லாக் கோட்பாடுகளையும் தனக்குப் பின்னால் ஓடவிட்டு முந்தி வருவதை ஏற்று, பூட்டிக் கொண்டு விழி பிதுங்குவது கீழைக் கோட்பாட்டின் உயிரியல்பு.

கோட்பாட்டின் தொடக்கம் குறித்த அறிஞர்களின் கருத்துக்கள்

மேலைக் கோட்பாட்டின் முக்கியமான தொடக்கம் என்று அரிஸ்டாடில் என்ற அறிஞர் உருவாக்கிய கதார்ஸிஸ் என்பதைக் குறிப்பிடுகிறார்கள். ‘அரிசித் தட்டிலி’ என்ற செந்தமிழ்ச் சொல்லின் மரூஉவே அப்பெயரென்றும், கதார்ஸிஸ் என்பது கதையுரசல் என்ற தீந்தமிழ் சொல்லே என்று அறிஞர் தேவநேயர் சொல்வதை இங்கே குறிப்பிட வேண்டும். இலக்கியப் படைப்பில் ஒன்றிக் கதறி அழும் வாசகர்கள் அதன் மூலம் அப்படைப்பை வாசித்ததையும் சேர்த்து அனைத்துப் பாவங்களையும் களைந்து தூய்மை அடைவதே இவ்வாறு சுட்டப்படுகிறது. ஏராளமாக வாசிப்பவர்கள் அதிகத் தூய்மை அடைந்து, ஒரு கட்டத்தில் அழுக்குகளுக்காக வெளியே தேடியலைய ஆரம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதை முன்னுணர்ந்தே அரிஸ்டாட்டிலின் முன்னோடியான பிளேட்டோ இலக்கியம் முதலிய கலைகளை அவற்றை ரசிக்கும் உணர்ச்சியே இல்லாத தத்துவஞானிகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பிற்பாடு மத அறிஞர்களும், அதன்பின்னர் அரசியல் அறிஞர்களும், அதன் பின்னர் புரட்சிக்காரர்களும் இக்கருத்தையே முன்னெடுத்தார்கள். இன்று கோட்பாட்டாளர்கள் அதைக் கடைப்பிடிக்கிறார்கள்.



கலைக் கோட்பாடு

நல்ல கலை என்பது உள்ளடக்கத்தில் தத்துவத்தைக் கொண்டிருக்கும். தத்துவத்தைக் கேட்பவர்கள் உடனடியாக அதை மறுக்கிறார்கள். ஆகவே கலைக்குள் தத்துவத்தை பேரீச்சையில் கொட்டையைப் போலே உள்ளே வைத்துக் கொடுக்க வேண்டும் என்பது ரோமாபுரியின் உதித்த ஹெலனிஸ்டிக் அழகியல் கொட்டையைப் பக்குவமாகத் துப்பிவிட்டு பேரீச்சையைச் சாப்பிடுவதே நுண்ணிய ரசனை எனப்படுகிறது. சதையைத் துப்பிவிட்டுக் கொட்டையை மெல்வது கதையிலக்கிய விமர்சனம். கொட்டையின் அடிப்படையில் பேரீச்சையை மதிப்பிடுவதன் மூலமே மேலதிக இலக்கியக் கலைக் கோட்பாடுகள் உருவாகின்றன. அவற்றில் இருந்து தந்திரமாகத் தப்புவதற்கான முயற்சியின் மூலம் கலையிலக்கியங்கள் புதிய அழகியலைக் கண்டுபிடிக்கின்றன. இந்த முரணியக்கம் இலக்கியச் செயல்பாட்டின் அடிப்படை விதியாகும். இந்த முரணியக்கத்தை இலக்கியவாதிகள் விமர்சகர்களைக் கண்டதும் ஓடிப்போய்க் கட்டிப்பிடித்து நலம் விசாரித்துவிட்டுத் திரும்பும்போது கெட்ட வார்த்தையை வாய்க்குள் முணுமுணுக்கும் பரவலான வழக்கத்தில் இருந்து அறியலாம்.

காலவாரியாகக் கலைக் கோட்பாடு

உயர்ந்த கலை என்பது உயர்ந்த மனிதர்களைப் படைக்கும் என்று நம்பிய மேலைக் கோட்பாடு கூடவே அக்கலைஞர்கள் கீழ்மையானவர்கள் என்று வகுத்தது. இவ்வாறாக கீழ்மையானவர்கள் கீழ்மையானவர்களாகவே ஆக எண்ணுபவர்களை மேன்மைப்படுத்தும் பொருட்டு உருவாக்குவதே கலை என்ற வரையறை உருவாகியது. இது மத்திய காலகட்டக் கலைக் கோட்பாடு என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் கலைக்கு இரு பக்கமும் இரு வகை மக்கள் உருவானார்கள். ஒருசாரார் கீழே இருந்து கொண்டு மேலே தூக்குகிறார்கள். இன்னொரு சாரார் மேலே இருந்து கொண்டு அதைக் கீழே குனிந்து தூக்குகிறார்கள். முதல் வகையினர் படைப்பாளிகள், கலை அவர்களின் தலைக்கு மேலே உள்ளது. இரண்டாம் வகையினர் ரசிகர்கள், கலை அவர்களின் காலுக்குக் கீழே உள்ளது. பிந்தையவர்கள் முந்தையவர்களுக்குப் பணம் அளித்துப் புரக்க கடமைப்பட்டவர்கள் என்பது மத்தியகால நம்பிக்கை. உணர்ச்சி மீதூறும்போது கையுறைகளைக் கழற்றி கலைஞர்கள் மீது வீசும் வழக்கம் இக்காலகட்டத்தில் உருவானது, அக்காலத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

மத்திய காலகட்ட கலைக் கோட்பாடு

மத்திய காலகட்ட கலைக் கோட்பாடு கலைஞர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது. ஜிப்சிகள் ஜிப்ஸிகளைப் போன்றவர்கள் கிட்டத்தட்ட ஜிப்ஸிகளைப் போன்றவர்கள் முறையே இவர்கள் கீழ்தரக் கலைஞர்கள், நடுத்தரக் கலைஞர்கள், உயர்தரக் கலைஞர்கள் என்று பிரிக்கப்பட்டார்கள். கீழ்தரக் கலைஞர்கள் பிரபுக்களின் இல்லங்களில் மது விருந்துகளில் உயர்தர பரிசுகள் பெற்றுக் கொண்டு ஆடுவார்கள். நடுத்தரக் கலைஞர்கள் மக்கள் கூடும் சந்திப்புகளில் சில்லறைகள் விட்டெறியப்பட்டு நடிப்பார்கள். உயர்தரக் கலைஞர்கள் ஆளில்லாத தேவாலயங்களில் பிலோனாவை இசைத்துத் தங்களுக்குள் பாடிக் கொள்வார்கள். அவர்களுக்காக பாதிரிகள் பிரார்த்தனை செய்வார்கள். அவர்கள் எழுதுவது காவியம் என்றும், பாடுவது செவ்வியல் இசை என்றும், அவர்கள் பாடுவதைக் கேட்டுப் பாடத் தெரியாத பாதிரிகள் பாடுவது காஸ்பல் இசை என்றும் சொல்லப்பட்டது. நல்ல கலை என்பது துக்கத்துக்கோ, தூக்கத்துக்கோ இட்டுச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.



நவீன காலகட்டக் கலைக் கோட்பாடு

நவீனகாலக் கலைக் கோட்பாட்டை உருவாக்கியவர் என்று ஜான் ரஸ்கின் சொல்லப்படுகிறார். இவர் நவீன ஓவியர்களைப் பற்றி ஒரு மிகக் கனமான நூலை எழுதினார். அதில் அவர்கள் கலைஞர்களைப் பொறுக்கிகள் அல்லது நாடோடிகள் என்று சொல்லி அவமதிக்கும் மத்தியகால வழக்கத்தை மிகமிகக் கடுமையாகக் கண்டிக்கிறார். அவர்களை கிறுக்கர்கள் என்று சொல்வதே முறை என்று நிறுவுகிறார். இந்நூல் அத்தனை பெரியதாகையால் அதை வாசிக்காத அனைவருமே அதை நம்பும் நிலை ஏற்பட்டது. விளைவாக கலைஞர்களும் கிறுக்கர்களாக ஆக வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்கு ஆளானார்கள். அவர்கள் மிதமிஞ்சி மதுவருந்திவிட்டு முச்சந்தி சண்டைகளில் ஈடுபடுவது காது முதலிய உறுப்புகளை வெட்டி காதலிக்கு அனுப்புவது சிபிலிஸ் நோய் பெறுவது போன்ற வழக்கங்கள் உருவாயின.

இக்காலகட்டக் கலைக் கோட்பாடு

இந்தக் காலகட்டத்தில் கலைஞர்கள் தங்களை கிறுக்காகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு விசித்திரமான செயல்களைச் செய்து கொண்டே போக அவர்களைப் பின் தொடர்ந்து செல்லும் தத்துவ ஆசிரியர்களும், இலக்கிய விமர்சர்களும் அவற்றுக்கு உளவியல் விளக்கமும், குறியியல் விளக்கமும் கொடுத்து அவற்றை கிறுக்கல்லாமல் ஆக்கிக் கொண்டே போகும் வழக்கம் பிறந்தது. ஆகவே புதிய புதிய கிறுக்குகளுக்கு கலைஞர்கள் தேட ஆரம்பித்தார்கள். சால்வடர் தாலி என்பவர் மீசைக்கு நவச்சாரம் போட்டுக் கொண்டார். அந்தோனின் ஆர்ட்டாட் என்பவர் ஆணுறை என்பது ஒருவகை ஆடையே என்று கண்டுபிடித்தார். அவற்றைக் கலைஞர்களின் அன்றாடப் பழக்கமே என விமர்சகர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் பிறரைத் துணுக்குற வைப்பது நீடித்தது. பொதுவாக ஒரு கலைஞரின் படைப்பூக்கக் கிறுக்குத்தனத்தை அவரைப் பார்க்க வருபவர்களும் சாதாரணமாகச் செய்ய ஆரம்பிக்கும் போதும் அது முடிவுக்கு வருகிறது. இந்த முரணியக்கம் மூலம் கலை முன்னகர்ந்தது. வான்காவின் காதுக்கு மொழியியல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதுவே காதுமைய மொழியியல் என்று பிற்கால பாட நூல்களில் இடம் பெற்றது. மாப்பசானனின் சிபிலிசுக்கு அளிக்கப்பட்ட குறியியல் விளக்கம் ஆச்சரியமாக அமெரிக்கச் சமூகநலத்துறையில் ‘பாத்துப்போடு’ (Play Safe) என்ற கோட்பாடாக மாறி சுவரொட்டிகளில் கூட இடம் பெற்றது.

உளப்பகுப்படிப்படையில் கோட்பாடு

கலைஞர்களை உளப்பகுப்பு செய்யும் முறை அதைத் தொடர்ந்து உருவாக்கிய சிக்மண்ட் ப்ராய்ட் என்பவர் மனநோயாளிகளைச் சாய்வுப் படுக்கையில் படுக்க வைத்து இருட்டில் அமர்ந்து கேள்விகள் கேட்டு அவர்கள் வசியம் செய்த போது, அவர்கள் பல நாவல்களில் தாங்கள் வாசித்த கதைகளின் சாயலில் தாங்கள் புனைந்த பலான கதைகள் மூலம் அவரை திருப்பி வசியம் செய்தார்கள். அந்த முறையே உளப்பகுப்பு முறை என்று சொல்லப்படுகிறது. சிக்மண்ட் ப்ராய்ட் நோயாளிகள் பேசுவது இலக்கியம் போல இருப்பதனால் இலக்கியம் என்பதும் ஒரு நோயே என்ற கோட்பாட்டை வகுத்தளித்தார். இதனடிப்படையில் இலக்கியப் படைப்புகளை வாசித்து விரிவாக நோய் நிர்ணயம் செய்து அதற்கு மருந்துகளை பரிந்துரைப்பதே உளப்பகுப்பு இலக்கிய விமர்சனக் கோட்பாடு என்று சொல்லப்பட்டது.



இலக்கியமும் கோட்பாடும்

இக்கோட்பாட்டின்படி எல்லா மானுடச் செயல்களும் காமத்துக்காகவே செய்யப்படுகின்றன. காமத்தில் நேரடியாக ஈடுபட வாய்ப்பில்லாதவர்கள் கிரிக்கெட் விளையாடுவது, பியானோ வாசிப்பது, அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடுவது, உளப் பகுப்பாய்வு செய்வது போன்ற மாற்று முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இலக்கியமும் அத்தகையதேயாகும். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கிய வடிவங்கள் தீர்மானிக்கப்பட்டன. ஒரே ஒரு உச்சம் இருப்பதனால் சிறுகதை ஆண்தன்மை கொண்டது என்றும், நாவல் பல உச்சங்களுக்கு வாய்ப்புள்ள பெண்மை வடிவம் என்றும் ஆய்வாளர் வகுத்தன்மை குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதை சிட்டுக்குருவி தன்மை கொண்டது என்றும், மரபுக் கவிதை நாய்த்தன்மை கொண்டது என்றும், மேலதிக விளக்கங்கள் இவர்களால் அளிக்கப்பட்டன.

பாட்டி கதைகளும் கோட்பாடுகளும்
ப்ராய்டின் நண்பர் சி.ஜி.யுங் என்பவர் ஆழ்படிமம் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். உலகத்தில் உள்ள அத்தனை பேரும் அவர்களின் பாட்டி சொன்ன கதைகளையே திருப்பிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே இதன் அடிப்படை. அவ்விஷயம் யுங்குக்கு அவரது பாட்டியால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. எல்லாக் கதைகளையும் சுருக்கிச் சுருக்கிப் பாட்டிக் கதைகளாக ஆக்க முடியும், எல்லாப் பாட்டி கதைகளையும் பாட்டிகளாக ஆக்க முடியும், எல்லாப் பாட்டிகளையும் ஒரே பாட்டியாக ஆக்க முடியும். அந்தப் பாட்டியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அவர் நிறுவினார். அந்தப் பாட்டி முன்னரே செத்துப் போய்விட்டாள் என்பதனால் மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே இலக்கியத்தை அதன்பாட்டுக்கு விட்டுவிடலாம் என்பதே அவரது நம்பிக்கை. ப்ராய்ட் யுங் இருவரும் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார்கள். ப்ராய்ட் எழுதிய நூல்கள் தெளிவாக புரியக் கூடியவை. யுங் எழுதிய நூல்கள் வாசித்த பின் ப்ராய்ட் புரியாமலாகிவிடுவார் என்பதனால் அவர்கள் இருவரையும் சேர்த்தே வாசிப்பது கல்வித்துறை மரபு.

அறநெறி அணுகுமுறை

மனித சமுதாயத்தின் மரபு வழிப்பட்ட அறவியல் கோட்பாடுகளை - நீதிநெறிகளை மையமாகக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் இலக்கியங்களை அணுகுவது அறிவியல் திறனாய்வாகும். (Moral / Ethical Approach) இலக்கியங்களில் காணப்படுகின்ற அறவியல் நெறிகளைத் தொகுப்பது இதன் நோக்கமல்ல. அறவியலின் அடிப்படையில் இலக்கியங்களை மதிப்பிடுவதும், குறிப்பிட்ட இலக்கியங்களை அறவியல் எவ்வாறு வழிநடத்திச் செல்கிறது என்று காண்பதும் இலக்கியங்களிலுள்ள அறவியல் நெறியில் பண்புகளையும் ஆற்றல்களையும் காண்பதும் இவ்வணுகுமுறையின் நோக்கமாகும்.

இது, ஒருவகையில் சமுதாயவியல் திறனாய்வின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதற்கு உரியது. குறிப்பிட்ட ஒரு சமுதாயம் அல்லது ஒரு சமுதாயப் பிரிவு ஒரு குறிப்பிட்ட ஒழுக்க முறையினை அல்லது கருத்தமைவினைத் தனக்கு ஏற்புடையதென்று பலகாலமாக அங்கீகரித்திருக்கின்ற ஒன்றனைச் சமுதாய மதிப்பு என்று சொல்கிறோம். அறவியலும் இத்தகையதுதான்.



அறவியல் - விளக்கம்

நல்லது - கெட்டது; தீங்கற்றது - தீங்கானது; ஏற்புடையது - ஏற்புடையதல்லாதது என்ற முறையில் மனிதாபிமான உணர்வும், பிறர்க்குக் கேடற்ற நடத்தையும், சமுதாய நல்லுணர்வோடு தனிப்பட்ட மனிதனின் மனநலனும் கூடி வருகின்ற ஒரு விழுமியத்தைத் தான் (value) அறவியல் என்பது குறிப்பிடுகின்றது. இது காலந்தோறும் மாறுபடக்கூடும். சமுதாய அமைப்புக்கேற்ப மாறுபடக்கூடும். மேலும், இத்தகைய கருத்தமைவு சமுதாய அமைப்போடு சார்ந்திருப்பதாகலின், சமுதாயவியல் நெறியோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.

இலக்கியமும் அறவியலும்

இலக்கியவுலகில் அறநெறிக் கோட்பாடு மிகவும் பழமையானது. அறவியல் அணுகுமுறையாளர்கள் இவ்வாறு உரிமை கொண்டாடுவார்கள். இலக்கியத்தில் ஊடும் பாவுமாக அறவியல் கோட்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது என்று அவர்கள் எடுத்துக் காட்டுவார்கள். தமிழில் இந்தப் பார்வை புதிதல்ல. இலக்கியத்தில் மட்டுமன்றி, இலக்கியத்திற்கென்று எழுந்த உரைகளிலும் கொள்கைகளிலும் இத்தகையதொரு பார்வை உண்டு.

நிலப் பகுப்பிற்கும் அறமே அடிப்படை

குறிஞ்சி, முல்லை முதலிய ஐந்திணை ஒழுக்கம் பற்றிப் பேச வந்த தொல்காப்பியர், வெறுமனே, ‘ஐந்திணை’ என்று சொல்லி நிறுத்தாமல், அதற்கு ஒரு நீண்ட அடைமொழி தருகிறார். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ என்று பேசுகின்றார். ஐந்திணை என்பதற்கு அவர் கூறியுள்ள இந்த நீண்ட அடைமொழி, அறம் பற்றிய அவருடைய கருத்தோட்டத்தைக் குறிக்கின்றது. இன்னோரிடத்தில், ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்று புறனடை பேசுகிறார். சங்க இலக்கியத்திலோ அன்றைய காலத்து அறநெறிக் கருத்துக்கள் ஏராளம். குறிப்பாக அக இலக்கியத்திற்கு அறநெறிகள் அடிப்படை வாழ்நெறியைத் தந்திருக்கின்றன. பின்னர் வந்த காப்பியங்களில் ‘பாவிகம்’ என்பது, இத்தகைய அறநெறிகளின் சாரமாகவே விளங்குகின்றது.

சிலம்பில் அறம்

சிலம்பு கூறுகின்ற ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உருத்து வந்தூட்டும்’ என்பனவும் கம்பன் கூறுகின்ற ‘அறம் வெல்லும் பாவந்தோற்கும்’ என்பதுவும் அவ்வக் காப்பியங்களின் கதை நிகழ்ச்சிகளையும் கதை மாந்தர்களையும் வழிநடத்திச் செல்கின்றன என்று அறநெறித் திறனாய்வு பேசுகிறது.



மேலை நாட்டிலும் அறம்

மேலைநாட்டுத் திறனாய்வுலகில் அறநெறித் திறனாய்வு, ஹொரேஸ் (Horace), ஃபிலிப்சிட்னி (Sir Philip Sydney), மாத்யு அர்னால்டு முதலியவர்களால் போற்றப்பட்டது. எஃப்.ஆர்.லீவிஸ் (F.R. Leavis), யுவர் விண்டர்ஸ் (Yur. Winters) முதலியோர்க்கும் இதில் உடன்பாடு உண்டு. அமெரிக்காவில் இந்நூற்றாண்டில் 20, 30களில் இதற்குச் செல்வாக்கு இருந்தது. ‘நவீன-மனித நேய வாதிகள்’ (New-Humanists) என்ற கொள்கையினர் இலக்கியத்தில் அறவியில் நெறியின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள், இர்விங் பாபிர் (Irving Babbit) மற்றும் பால்மோர் (Paul Elmore More), ஃபோய்ஸ்டர் (Norman Foerster) ஆகியோர்.

அறநெறித் திறனாய்வின் அடிப்படை

இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய ஒரு திறனாய்வே என்று கூறுகிற இவர்கள், இலக்கியத்தின் உத்தி என்பது உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதற்குரிய ஒரு வழிமுறையேயன்றி வேறில்லை என்றும், இலக்கியத்தின் நோக்கம் அல்லது முடிவு, மனிதனைப் பாதிக்கக்கூடியது; மனித சிந்தனையின் ஓர் அங்கமாக இடம்பெறக் கூடியது என்றும் வாதிடுகிறார்கள். மனிதனைப் பிற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துவன அவனுடைய சிந்திக்கும் திறனும் ஒழுக்க நெறிமுறைகளுமே என்று இவர்கள் நினைவு கூறுகிறார்கள். நெறிமுறை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய கருத்துக்களை இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்தப் பார்வை அறநெறித் திறனாய்வுக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது.

சமூகம் மார்க்சீய அடிப்படை

இறுக்கமான நெறிமுறை காரணமாகவும், மிகையான வலியுறுத்தல்கள் காரணமாகவும் இவ்வணுகுமுறை சில காலங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியது. முக்கியமாக அமெரிக்காவில் இலக்கியத்தின் பனுவலுக்கும் அதன் செய்ந்நேர்த்திக்கும் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிற நவீனத் திறனாய்வின் வருகையினால் இது செல்வாக்கிழந்தது. மேலும், டி.எஸ். ஏலியட் போன்றவர்கள், இர்விங் பாபிட் முதலியோரின் இவ்வணுகுமுறையை மறுத்தனர்.

சமுதாயவியல் திறனாய்வும், மார்க்சியத் திறனாய்வும் அடிப்படையில் அறநெறிக் கண்ணோட்டம் உடையனவே என்றும் அவர் கூறுகிறார். ஆனால், மார்க்சியவாதிகள் பேசுகிற மனிதன் பற்றிய படிமங்களும், மனித உறவுகளும், மேற்கூறிய அறநெறித் திறனாய்வாளர்களின் கருத்து நிலைகளிலிருந்து மாறுபட்டவையே என்பதனையும் வில்பர் ஸ்காட் ஒத்துக் கொள்கிறார்.



தமிழும் அறமும்

தமிழ் இலக்கியத்தில் அறநெறிப் பார்வைக்கு இடம் நிறையவே இருக்கிறது. ஏற்கனவே, நீதி நூல்கள், வள்ளுவர் காலம் முதல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை காலம் வரை நிறையவே இருக்கின்றன. இவை, அன்றைத் தமிழ்ச் சமுதாயத்தின் அறவியல் கோட்பாடுகளை அளவிட உதவிடும்.

ஔவையாரின் படைப்புக்கள் அனைத்தும் அறத்தையே போதிக்கின்றன. மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன் போன்ற அனைத்தும் அறத்தையே வலியுறுத்துகின்றன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினோறு நூல்கள் அறத்தையே மக்களுக்குப் புகட்டின.

சங்ககால மக்கள் வாழ்க்கையைத் தன் மனம் போன திசையில் செலுத்தலாயினர். ஆகவே அவர்களுக்கு அறம் பற்றிய எண்ணம் தோன்றவில்லை. அவர்கள் அகவாழ்க்கையிலும், புறவாழ்க்கையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.

எனவே அறத்தை அவர்களுக்குப் போதிக்க விரும்பியே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினென்றும் அறத்தையே வலியுறுத்தி மக்களை அறவழிக்கு அழைத்துச் சென்றன.

வேதநாயகரின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, பெண்ணின் பெருமையைப் பேசுகிறது என்பது மட்டுமல்லாமல், சிறந்த ஆண், சிறந்த பெண், சிறந்த குடும்பம் - எப்படியிருக்க வேண்டும் என்று மரபு வழியிலான தமிழ்ச் சமுதாயத்தின் அறவழியில் நின்று விளக்கமாகப் பேசுகின்றது. அதன் பாத்திரப் படைப்புக்களும், கருப்பின்னலும், சூழலும், உரையாடல்களும், இந்த அறநெறிக் கோட்பாட்டின் மூலமாகவே வெளிப்படுகின்றன. கமலாம்பாள் சரித்திரம் நாவலிலும் தொடர்ந்து தமிழ்ப் புனைகதைகளிலும் இதனைக் கண்டறியலாம்.

மேலும், சங்க இலக்கியம் முதல் இன்றையப் புதுக்கவிதை வரை, அன்றையக் காப்பியங்கள் முதல், இன்றையப் புனைகதை இலக்கியம் வரை, அறநெறித் திறனாய்வுக்கு வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

பாரதியின் அறக்கோட்பாடு

பாரத சபதம் என்று வருணிக்கப்படும் பாரதியின் பாஞ்சாலி சபதம், பல அணுகுமுறைகளுக்கு உட்பட்டது. அறநெறிக் கண்ணோட்டத்துடனும் இதனைப் பார்க்கலாம்.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி செல்லும் எனுமியற்கை
மருமத்தை நம்மாலே யுலகங் கற்கும்”

வீமனின் கூற்றாகப் பாரதி கூறும் இக்கூற்று, இக்காவியத்தின் சாரமான நீதி. இதனை ஒட்டிய பல அறநெறிக் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போலவே தருமன், வீமன், சகுனி, துச்சாதனன், கர்ணன், விதுரன் முதலிய கதை மாந்தர்கள் படைக்கப்பட்டுள்ளனர். கதைமாந்தர் கூற்றாகவும், இடைபுகுந்து பேசும் ஆசிரியர் கூற்றாகவும், இயற்கை வருணனையாகும் நிகழ்ச்சிகளின் ஊடாகவும், பாரதியின் இந்த அறநெறிக் கருத்துக்கள் அழுத்தமாகவும், உணர்ச்சி வடிவமாகவும் பளிச்சிடும்படித் தெரிய வருகின்றன.

இந்த தருமம், வியாசர் கூறும் வருணாசிரமத்தை ஒட்டிய தருமம் அல்ல. பாஞ்சாலி சபதத்திலுள்ள அறநெறிகள் எல்லாம், ‘தேசியம்’ என்ற மையத்தை நோக்கியே நகர்கின்றன. கவிஞரின் கருத்துக்கள் எங்கெங்கே, என்னின்னவாறு என்னின்ன நோக்கத்தில் இடம் பெற்றுள்ளன.

முடிவுரை

அறநெறித் திறனாய்வில் முடிவாகக் கவனிக்கத்தக்கது. அறநெறிகள் என்பவை, காலம், இடம் எனும் தளத்திற்குட்பட்ட சார்புநிலைக் கொள்கைகளே; அதாவது, அவை என்றும் ஒரே மாதிரியாக இருப்பன அல்ல மாறக் கூடியவை; வளரக் கூடியவை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p84.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License