இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு

ச. தனலெட்சுமி


நாட்டு மக்களின் நாகரீகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, வரலாற்றை, நாட்டுநடப்பை, உண்மையான முறையில் படம்பிடித்துக் காட்டுவதே நாட்டுப்புறவியலாகும். சமுதாய வாழ்வின் ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்கு முறைகளுக்கும் பாடல்கள் உள்ளன. ‘பாட்டினைப்போல் இன்பம் பாரின்மிசை இல்லையடா’என்றார் பாரதி. நாட்டுப்புறப்பாடலைப் பல வகையாகப் பாகுபடுத்துகின்றனர். அவற்றுள் முதன்மையானதும் முக்கியமானதுமான தாலாட்டுப் பாடல்களைப் பன்முகப் பார்வையில் காண்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

தாலாட்டுப் பாடல்கள்

தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாயின் நாவசைவில் தாலாட்டு என்னும் நல்முத்துப் பிறக்கின்றது. எனவே தான் ‘தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் பரிசு தான் தாலாட்டு’ என்பார் தமிழண்ணல். தாலாட்டு என்ற சொல்லைத் தால்+ஆட்டு எனப் பிரிக்கலாம். தால் என்றால் நாக்கு என்றும், நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு எனும் பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுவர்.

தாலாட்டை ராராட்டு, தாலேலோ, தாராட்டு, ஓராட்டு, ஓலாட்டு, ரோராட்டு, தொட்டில் பாட்டு, திருத்தாலாட்டு எனப் பல்வேறு பெயர்கள் இன்றைய உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் வழங்கி வருகின்றன. மலையாளத்தில் தாராட்டு என்றும், தெலுங்கில் ஊஞ்சோதி என்றும், கன்னடத்தில் ஜோகுல என்றும் கூறுவர்.

தாலாட்டுப் பாடல்கள்- பன்முகப் பார்வை

1. தாலாட்டின் அமைப்பு

2. தாலட்டு - இலக்கியப் பார்வை

3. தாலாட்டு - மொழியியல் பார்வை

4. தாலாட்டு - சமுதாயப் பார்வை

5. தாலாட்டு - மானுடவியல் பார்வை



தாலாட்டின் அமைப்பு

“தாய் ஆழங்காண முடியாத அன்புக்கடல்.
அக்கடலில் விளைந்த வலம்புரிமுத்தே தாலாட்டு” (திரு. ஆறு. அழகப்பன், அன்னகாமு ஏட்டில் எழுதாக் கவிதைகள் பக்-62)

1. தாலாட்டின் தொடக்கம் மாறுபட்ட வகையின பாடுவோரின் மன-இன இயல்புகளுக்கேற்ப இம்மாறுபாடுகள் நிகழ்கின்றன. அனைத்து ஓசைகளின் சொற்கள்தாம் வேறுபட்டதே ஒழிய, இசை ஒன்று தான்.

“ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ ஆராரும் பொன்னாலே” (காதல் வாழ்வு பக்.151)

2. பொருளற்ற ஓசைகள் மட்டுமல்லாது பொருள் உடைய சொற்களும் கலந்து வருவதுண்டு

“ஆராரோ ஆரிராரோ
ஆறிரண்டும் காவேரி” (தமிழ் நாட்டுப் பாடல்கள் பக்.85)

3. தாலாட்டின் முடிவுகளில் பெரும்பாலும் குழந்தையை, தாய் தூங்குமாறே வேண்டுகிறாள். ஒரு தாய் மெத்தைமேல் தூங்கச் சொல்கிறாள்.

“மேலுவலிக்காமே கண்ணே நீ
மெத்தைமேலே படுத்துறங்கு” (மலையருவி 221)

”ஒரு தாய் தொட்டிலில் தூங்கச் சொல்கிறாள்” (மலையருவி 230)

’ஒரு தாய் பொருள் தருவதாகச் சொல்லி அமைதிப்படுத்துகிறாள்” (மலையருவி 232)

4. குழந்தையை விளிக்க சில முன்னிலைப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். இது மரபாகிவிட்டது.

சான்று :கண்ணே, ஐயா,

5. பெரும்பான்மையான தாலாட்டுப் பாடல்கள் தாயே கூறுவது போன்ற ஒரு முகக்கூற்றாகவே அமையும். சில பாடல்களில் தாயின் வினாவுக்கு வேறு ஒருவர் விடை சொல்வதுபோல அமைவதுண்டு. (தாலாட்டு பக் 37)

சில பாடல்களில் குழந்தை பதில் சொல்வதாக அமைவதுண்டு

“யாரும் அடிக்கவில்லை ஐவிரலும் தீண்டவில்லை
பசித்திடவே நானழுதேன் பாசமுள்ள என்தாயே” (தாலாட்டு பக்.116)


இவ்வாறு பல்வேறு விதமான அமைப்புகளைத் தாலாட்டில் காண முடிகின்றது. இவ்வமைப்புகள் என்றும் இருப்பன. இவற்றில் உள்மாற்றம் நடக்கலாமே ஒழியே உருமாற்றம் நடைபெறுவதில்லை.



தாலட்டு - இலக்கியப் பார்வை

“நடையழகில் ஜெயங்கொண்டானையும், இனிமையில் இளங்கோவையும், கற்பனையில் கம்பனையும், சொல்லாட்சியில் மணிவாசகரையும், நாகரீக விளக்கத்தில் சங்கப் புலவர்களையும், ஒப்புமையாகப் பெற்று பெருமையுடன் விளங்குகிறது தாலாட்டு” (தமிழண்ணல் தாலாட்டு பக்.1)

இலக்கியத்துக்கே இலக்கியமாகத் தாலாட்டுப் பாடல்கள் விளங்குகின்றன. இவற்றில் இலக்கியச் சுவைகளையும், இலக்கிய ஒப்புமைகளையும் இலக்கியக் குறிப்புகளையும் காணலாம். தாலாட்டில் சிறந்த கற்பனைகளைக் காணலாம். அக்கற்பனை ஆகாசக் கோட்டைகள் என்றாலும், அன்னையவள் கட்டும் அன்பு கோட்டைகளாகும்.

தாலாட்டு - மொழியியல் பார்வை

பாமர வழக்குகளைத் தாலாட்டில் அதிகளவு காணலாம். பெயர்ச்சொற்களும், வினைச்சொற்களும் இவ்வாறு மாற்றம் பெற்றுள்ளன.

சான்று:

புடிச்சிக்கட்ட - பிடித்துக்கட்ட

விக்கிது - விற்கிறது

பிரியம் - பாசம்

மருத - மதுரை

தாலாட்டுகளில் பழமொழிகளும் இடம் பெறுவதுண்டு “தை பிறந்தால் வழி பொறக்கும்’ என்ற பழமொழியானது தையி பொறக்குமடா “ உங்க தகப்பன் குடிஈடேற என்று வருகிறது.

கவர்னர், கேஸ் போன்ற ஆங்கிலச் சொற்களும் தாலாட்டில் கலந்துள்ளன. கோர்ட் என்பது அயக்கோடு என்றும், பங்களா என்பது மங்களா என்றும் மாற்றம் பெறுகின்றன.

சர்க்கார், உத்யோகம், ஜாடை, தாலுகா, சவரம் போன்ற பிறமொழிச் சொற்களும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெறுவதுண்டு.

கடுகடுண்ணு, பளபளப்பாய், முணுமுணுத்து குடுகுடுன்னு போன்ற குறிப்புத் தொடர்களும் தாலாட்டுப் பாடல்களில் கலந்துள்ளன.

சின்னபின்னம், சுற்றிமுற்றி, பன்றிகின்றி, அம்மான் செம்மான் போன்ற இணைச் சொற்களும் தாலாட்டுப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

அகஸ்மாத்தா, புழுங்கல், காரவீடு, வல்லாட்டு வாந்தல் போன்ற அருஞ்சொற்களும் தாலாட்டில் உண்டு.

ஐயர், குஞ்சரம், கழனி, அரியான் போன்ற இலக்கியச் சொற்களும் தாலாட்டில் இடம் பெறுகின்றன.

தாலாட்டில் நாட்டுப்புறப் பெயர்களும் கலந்திருக்கும்.

“சுப்பிரமணி கிட்ட போய்
மாயாண்டி கிட்ட போய்...”


போன்றவை சான்றுகளாகும்.



தாலாட்டு - சமுதாயப் பார்வை

மக்களின் பழக்க வழக்கங்கள் பலவற்றைத் தாலாட்டில் பார்க்க முடிகிறது. இவற்றை இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று, குழந்தையுடன் தொடர்பானவை, இரண்டு குழந்தையுடன் தொடர்பில்லாதவை

இலுப்பை மரத்தொட்டில் செய்தல் (மலை பக். 230)

தாதிமார் துணை (மலை பக். 250)

உடல் நோய்க்கு ஒற்றடம் (மலை பக். 233)

நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளை இதில் காணமுடிகின்றன.

“முடி எடுப்பதாலும் காது குத்துவதாலும் எமனை ஏமாற்றலாம்”

நாட்டுப்புறத்தில் உள்ள சாதி அமைப்புக்களையும் தாலாட்டு படம் பிடிக்கின்றது.

வம்மிசமாம் செட்டிகுளம் (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 86)

கொறத்தி கொறமாட (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 86)

மக்கள் வணங்கும் தெய்வங்களையும் இத்தாலாட்டுகள் நமக்கு அறிமுகப் படுத்துகின்றன.

பச்சை நிறம் வள்ளி (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 95)

பவள நிறம் தெய்வானை (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 96)

சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகளும் தாலாட்டில் தெளிவாகின்றன.

“ஏழை வீட்டுத் தாய் தன் குழந்தையை
ஏழைக் குடிசையிலே ஈரத்தரைமேலே
தாழம் பாய் போட்டு தவழ்ந்தோட வந்தாயோ” (தமிழ் நாட்டுப் பாமரப் பாடல்கள் பக். 2)

தாலாட்டு - மானுடவியல் பார்வை

தாலாட்டுகளில் தாய் மாமனுக்குத்தான் முதன்மையான இடம். குழந்தையின் அனைத்துச் சிறப்பு விழாக்களிலும் அவர் சிறப்பிக்கப்படுகிறார்.

“மாமன் மடியிலே மாலைபோட்டுக் குந்தவைத்து
கோடி உடுத்தி காது குத்துமென்பார் சுந்தரர்க்கு” (தமிழண்ணல் தாலாட்டு பக்.32)


பிள்ளை குடும்பத்துக்கு முக்கியமான உறுப்பு தாய், தந்தை, பிள்ளை மூன்றும் சேர்ந்ததை மானிடவியலார் நடுவகை குடும்பம் என்றும் முதல் நிலைக் குடும்பம் என்றும் உடனடிக் குடும்பம் என்றும் அழைப்பர். எனவே தான் குழந்தைக்காகத் தவமிருக்கின்றனர்.

தாய் தன் தாலாட்டில் சிலரைப் புகழ்கிறாள். குறிப்பாக, தந்தை, சகோதரன், கணவன் ஆகியவர்களையே போற்றுவதுண்டு.

தாலாட்டுப் பாடல்கள் குறித்தும், தாலாட்டுப் பாடல்களின் வேறு பெயர்கள் பற்றியும், தாலாட்டுப் பாடல்களின் அமைப்புக் குறித்தும் இலக்கியப் பார்வை, மொழியியல் பார்வை, சமுதாயப் பார்வை எனப் பல்வேறு வகைகளில் அணுகலாம் என்பதை அறியலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p89.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License