இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

இனவரைவியல் நாவல்களில் விழுமியங்கள்

பெ. இசக்கிராசா


முன்னுரை

பண்டைய தமிழனின் முற்போக்குத் தனமான தரத்தினை நாம் கண்டு கொள்ள வேண்டிய அல்லது பயணிக்கும் பாதையாகத் தமிழ் இலக்கியத்தினைக் காணலாம். வழக்கமாக சொல்லப்படுகின்ற மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இலக்கியங்கள் இன்றளவும் இருந்து வருகின்றன. மொழியின் இலக்கண ஒழுக்கத்தைப் போதித்த தொல்காப்பியம் தொடர்ந்து சங்க இலக்கிய நூல்களும், தனிப்பாடல் நூல்களும், காப்பியமான சிலம்பும், உலகம் போற்றும் வள்ளுவமும் அவை வழங்கிய வாழ்வியல் விழுமியமும் இன்னும் உயிர் கொண்டுதானிருக்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே ஞானத்தினை வளர்க்கும் விதமாக ஆத்திசூடி முதலான எண்ணிலடங்க அறநெறி இலக்கியங்கள் அதிகமே. அதே போல் இக்கால இலக்கியமான நாவல்களில் விழுமியங்கள் பற்றியத் தேடலில், நாவல்கள் தன்னில் தாங்கி நிற்கும் தொல் தன்மை, குடும்ப அமைப்பு, நட்பு, வாழ்வியல் சடங்கு என ஒவ்வொன்றும் விழுமியங்கள் தான். அதனை எடுத்தியம்பும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

விழுமியம்

தனக்கு எது தேவையோ, அதுவே தர்மம் என்று சொல்லப்படுகின்ற மனோபாவத்திற்கு வந்து விட்ட இன்றைய தமிழ் தலைமுறையினர் தங்களது மூதாதையர்களின் முற்போக்கான பாங்கினை மறந்து விட்டனர். காரணமின்றி முந்தையோர் அறக் கருத்துக்களை வழங்கியதன் தேவையை இன்றைய சூழலில் வாழ்கின்றவர்கள் தங்களது தனிமனித உள்ளத்தின் வழியாக நின்று சிந்திக்கும் பொழுது தமது முன்னோர்களின் ஒவ்வொரு பதிவும் முக்கியமான விழுமியங்கள் என்பது புலப்படவே செய்யும். அஞ்ஞாடி நாவலில் ஒரு இனத்தின் ஒட்டுமொத்தப் பதிவும் காலங்கடந்த வரலாற்றையும் நமக்கு ஒரு சமூக விழுமியங்களாக தருகின்றன.



குடும்ப அமைப்பு

இந்தியப் புவிச்சூழலில் பரப்பில் குடும்பம் என்பது தனிநபர் சார்ந்ததல்ல. அது கலவைகளின் தொகுப்பு. அதாவது, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, பேரன், பேத்தி இப்படியாகத் தொடரும் வம்சவிருத்தியோடு அன்றிணைந்த சொல்பாடுதான் குடும்பம். ஒரு நபர் குடும்பத்தின் அங்கம் ஒரு குடும்பம். கிராமத்தின் அங்கம் என இவ்வாறாக நாட்டின் அங்கத் தன்மையினை பெற்றிருப்பதுதான். உலகச் சூழலில் குடும்பம் என்ற கூட்டமைப்பு தந்தை வழிச் சமூகமாகவே இன்று நடைபெற்று வருவதை அறிய முடிகின்றது. அதே போல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாவலில் குடும்ப அமைப்பு என்பது ஆசிரியர் கட்டமைக்கும் விதத்தினைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

அஞ்ஞாடி நாவல் பல தலைமுறைகளைக் கடக்கின்றது. சண்டிவீரி, நல்லான்குடும்பன், அடுத்து ஆண்டி கருப்பி, அடுத்த ராக்கன் - சொக்கம்மாள், வீரம்மா கருத்தையன், இவ்வாறாக ஜந்துக்களும் மேற்பட்ட தலைமுறைகளையே காட்டிச் செல்கின்றது நாவல்.

“வீரம்மா கருப்பிக்கு முதல் பேத்தி, சொக்கம்மாளுக்கு மூத்த மகள், பிள்ளைகளை ஊட்டி வளர்த்தார்கள். தொட்டிவீட்டுக்குக் கண்ணுக்குட்டிகள் துள்ளி விளையாடுவதைப் பார்க்கும்போது ஆண்டியின் மனசு துள்ளியது” (1)

என்று ஆசிரியர் பல தலைமுறைகளை உள்ளதனை தனது நாவலின் விவரித்துச் செல்கின்றார்.

“ஏற்கனவே கலியாணத்துக்கு நோங்கிக் கொண்டிருந்த ராக்கன் அஞ்ஞை உண்டாகியிருப்பதால் நெருக்கவில்லை. குழந்தை பிறக்கட்டுமென்று இருந்து விட்டான். அவனுக்குங்கூடத் தம்பியையோ, தங்கச்சியையோ அள்ளிச் சீராட்டப் போகும் சந்தோஷம் அடிமனசில் குமிழியடித்தது. அதனால் இளவட்டங்களின் நக்கலைச் சட்டை செய்யவில்லை. கருப்பியைப் பெண்கள் கேலி செய்தார்கள். ‘ஆண்டிக் குடும்பன். வீட்ல ரெண்டு தொட்லு ஆடும்’, ‘மாமியா ஒரு பக்கமும் மருக ஒரு பக்கமும் உக்காந்து ஏறக்கட்டுவாக” (2)

மேற்கண்ட கூற்று அன்றை நடைமுறை வாழ்வியலில் ஒரு குடும்பத்தின் பண்பாட்டைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமின்றி அதனை அடுத்த தலைமுறைக்கும் அப்படியே கொண்டு சேர்ப்பதையும் காணலாம். நாவலில் வருகின்ற குடும்பர்கள், வண்ணார்கள், நாடார்கள், தேவர்கள், கோனார்கள், செட்டியார் என பல சமூகங்களின் செயல்பாடுகள் சுட்டிக்காட்டப்படவில்லை. மேற்கண்ட குடும்பங்களின் வம்சா வழியினரைப் போன்றே வண்ணார்களின் தலைமுறையும் அடுக்கடுக்காக நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதையும், மேலும் ஆண்டிக் குடும்பனின் குடும்ப மதிப்பினையும் இதன் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.



நட்பு

நட்பிலிருந்து தான் நாவலே தொடங்குகின்றது. இந்நாவலில் காணப்படுகின்ற நட்புக்குச் சாதிகள் இருந்தாலும் அதையும் தாண்டி சாதியெல்லாம் வெளியுலகத்திற்கு மட்டுமே உள்மனக்கிடக்கைக்குள் இல்லை அப்படியே இருப்பினும் வெறிகொண்டு இவர்களுடன் தான் பழக வேண்டும், பேச வேண்டும் என்று வரையறுத்து வைத்திருப்பினும் அதனைத் தாண்டியே எல்லை தாண்டியதாகவே இருக்கின்றது. ஆண்டிக்கும், மாரிக்குமான நட்பு மிகவும் நெருக்கமானவை. அப்படிப்பட்ட நெருக்கம் சமூகக் கண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதனை,

“ஆண்டிக்கும் மாரிக்குமான இடையிலான நட்பு அவர்களை உடனிருந்து பார்க்கக்கூடிய கதாபாத்திரங்களுக்கு வினோதமாகத்தான் இருக்கிறது. விவசாயம் செய்கின்ற குடும்பர் வீட்டுப் பையனுக்கும் அவர்களுக்குச் சலவை செய்யக்கூடிய வண்ணார் வீட்டுப் பையனுக்குமான கூடாவுறவாகவே அதை மதிப்பீடு செய்கிறார்கள். எனவே ஒன்று கேலி பேசுகிறார்கள் அல்லது கோபப்படுகிறார்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுகிறார்கள்” (3)

என்று பேராசிரியர் டி. தர்மராஜன் அவர்கள் விமர்சிக்கும் திறன் சரியானதாகவே இருக்கின்றது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக,

“காலசனியனே நீ உழுகிறதுக்குப் பெறந்தாயா வெளுக்கிறதுக்குப் பெறந்தாயா” (4)

மேலும்,

“புழுக்க முண்ட ஒனக்கு ஒண்ணுந் தெரியாதோ. பெத்துவச்சிருக்கியே அதென்ன புள்ளையா. ஊரு சோத்த தின்னுட்டுக் கள்ளக் கறி வளத்துட்டுத் திரியுது. வண்ணாக் கழுதைக்கும் எம் புள்ளைக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா பேதியில போறவன்” (5)

மேற்கண்ட கூற்றுக்கள் எல்லாம் படிநிலை சமூக அமைப்பின் தனக்கும் கீழான சமூகத்தினரிடம் நட்போ, காதலே எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது. அதனை நட்புக்குள்ளாகும் இருவர் ஒத்துக்கொண்டாலுலம் சமூகத்தின் கண் எவ்வாறு இருக்கின்றது என்பதனை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கின்றார் பூமணி.

சமூகத்தின் தீண்டாமைப் பார்வையை நட்பு அலட்சியப்படுத்தும் போதும் அதனையும் தாண்டி அந்த இருவருக்குண்டான நட்பில் சாதியம் இழையோடி இருப்பதையும் ஆசிரியர் பதிவு செய்கின்றார்.

“தெருவுல சோறெடுக்கிறவன் கொட்டாரத்துக்கெங்க போனான்” (6)

ஆண்டிக்குடும்பன் மனதிலேயும் சாதிய மனோபாவம் நாவல் பூராவும் விரவிக் கிடக்கின்றது. இருப்பினும் அதனையும் மரபாக மீறவே செய்கின்றான். மேலும் சமூகப் படிநிலையின் தனக்கு மேலேயுள்ள சமூகத்தின் அடக்கமுறையை இயலாமையால் ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றார்கள் என்பதை,



“உயர்சாதிக் குடும்பர்களின் அடக்குமுறையை தாழ்ந்த சாதி வண்ணார்கள் சகித்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களை ஓரளவிற்கு அஞ்ஞாடி கோடிட்டுக் காட்டுகிறது. முதலாவது ஆண்டிக் கதாபாத்திரங்கள் அடக்குமுறை நிறைந்த சூழலைத் தங்களின் சாத்வீக அணுகுமுறையின் மூலம் சுமூகமாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் காட்டும் கருணை, உருவாக்கும் பாதுகாப்பான சூழல் பேச்சின் மூலமும் செயல்பாட்டின் மூலமும் தரக்கூடிய நம்பிக்கை போன்ற அனைத்தும் குடும்பர்கள் வெளிப்படுத்தும் ஒடுக்குதல்களின் வெம்மையை வண்ணார்கள் சகித்துக் கொள்வதற்கான மனவலிமையை வழங்குகின்றன” (7)

என்ற பேராசிரியரின் கூற்றுப்படி சாதியப்படி நிலையில் உயர்வில் இருக்கும் குடும்பர்களின் சாதிய மனோநிலை தனக்கு கீழ் இருக்கும் வண்ணார் சமூகத்தின் மீதான ஒடுக்குதல்கள் தீட்டுதல் போன்றவை எல்லாம் வெறித்தனமான சாதி வெறியைப் பதிவு செய்யவில்லை. ஏனெனில் அஞ்ஞாடியில் தீண்டாமையை குடும்பர் சமூகம் வண்ணார்களுக்கும் கொடூரமாக வழங்கவில்லை. அதற்கு கருப்பின் (அஞ்ஞாடி), அனந்தி (வண்ணார்) வீட்டுப் பெண்களின் நட்பும் அதிகமாக இழையோடியிருப்பதையும், சமூகத்தின் சாதிய மனநிலை நட்புக்குத் தடையாயிருப்பினும், தடைதகர்ந்து அந்த நட்பு வளரும் மதிப்பினை அறிந்து கொள்ள முடிகின்றது.



வாழ்வியல் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும்

மனிதர்களுடைய வாழ்வியலில் சடங்குகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் வளமும், நற்செயல் நிகழ வேண்டும் என வேண்டிப் பல்வேறு சடங்குகளை மேற்கொள்கின்றான். இவ்வாழ்வியல் முறைகளில் தமிழ் வாழ்வியல் சடங்கு முறைகளான பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, இறப்புச் சடங்கு என ஒவ்வொரு பருவங்களுக்குத் தகுந்தாற் போலவே மனிதனின் சடங்குகளும் அதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகளும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. இவற்றில் நாம் பள்ளர் இனமக்களின் வாழ்வியல் சடங்குகளைக் காணலாம்.

அஞ்ஞாடியில் ஆண்டியின் மகள் வீரம்மாளுக்கு பெயர் சூட்டு விழா பதிவு செய்யப்படுகின்றது.

“ரெண்டு கூடார வண்டி கிளம்பியது. வண்டி நிறையப் பெண்கள். அரிவாற் கம்புடன் காவலுக்கு ஆண்கள் கூடாரத்தில் கட்டிய தொட்டிலை இறுகப் பிடித்திருந்த கருப்பி கலியாணப் பெண்ணாக உட்கார்ந்திருந்தாள். காதும், கழுத்தும், பிடிக்காமல் நகைகள் பாம்படம், தண்டட்டி முடிச்சு, கொட்டு முருகு, கொன்னப் புத்தட்டு பச்சைக்கல், பேசிறிப் பதக்கம், சங்கிலி காசுமாலை, கடலைக் காய்மணி, காப்பு தண்டை மிங்சி அடேயப்பா சாமியலங்காரம் தோற்றுப் போகும்” (8)

தங்கள் குலசாமி கலிங்கலூரணியில் இருந்து சில்லாங் குளத்துக்கு வண்டி கட்டிப் போய், அங்கு பிறப்புச் சடங்கினை நிகழ்த்தி விட்டு வருவதையும் அதற்கு ஆண்டியின் மனைவியின் அலங்காரத்திற்கு சாமி தோற்றம் போகுமென்ற வர்ணனை ஆண்டிக் குடும்பமானது குடும்பம் அவ்வளவு செல்வ செழிப்பாக இருந்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மேலும்,

“சில்லாங்குளத்துக்குப் போய்ச் சாவல், கிடா வெட்டிப் பொங்கலை வைத்தார்கள். இருளப்ப சாமியைக் கும்பிட்டுக் குழந்தைக்கு மொட்டையடித்து பூப்போட்டுப் பார்த்து வீரம்மா என்ற பேர்விட்டார்கள். நல்லானும், சண்டிவீரியும் பாக்கி வைத்திருந்த நேமிக்கம் அத்தனையும் செல்லக்கட்டியாயிற்று” (9)

என்று ஆண்டியின் மகளுக்குப் பெயர்சூட்டி வந்ததை ஆசிரியர் மேற்கண்டவாறு பதிவு செய்கின்றார்.

வாழ்வியல் சடங்குகள் என்பது சமூக மதிப்புகளில் முக்கியமானதாக இருப்பதனை அறிய முடிகின்றது.

முடிவுரை

ஆதிகால மனிதன் தனக்கும் மேற்பட்;ட ஆற்றல் இருப்பதனை உணர்ந்தான், நம்பினான். இந்த நம்பிக்கையே மரபு நீட்சியின் தொடராக இன்று சமயம் என்ற உருவங் கொண்டுள்ளது. ஆதிமனிதனின் வழிபாட்டு முறைகள் எல்லாம் வேளாண்மை, உணவு, வேட்டையாடுதல் போன்றவற்றினைச் சார்ந்ததாக இருந்தது. அதேபோலத்தான் மருதநில மக்களாகிய வேளாண்குடிச் சமூகத்தின் வழிபாட்டு முறைகளும் மழை வேண்டி பயிர் செழிக்க, இந்திரனை வழிபடல், இந்திர விழா போன்ற பல்வேறு வழிபாடுகளைச் சார்ந்தே இச்சமூகம் இருந்து வந்துள்ளதை விழுமியங்கள் வழி அறியமுடிகின்றது.

அடிக்குறிப்புக்கள்

1. பூமணி, அஞ்ஞாடி, ப.88.

2. மேலது, ப.84.

3. டி. தர்மராசன், நான் ஏன் தலித்தும் அல்ல, ப.191.

4. பூமணி, அஞ்ஞாடி, ப.12.

5. மேலது, ப.15.

6. மேலது, ப.42.

7. மேலது, ப.49.

8. டி. தர்மராசன், நான் ஏன் தலித்தும் அல்ல, ப.197.

9. பூமணி, அஞ்ஞாடி, ப.86..

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p94.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License