இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

புதினங்கள் சுட்டும் பண்ணையடிமை முறை

பெ. இசக்கிராசா


தொடக்கமாக

ஒரு மனிதனின் சுயங்கள் எங்கே இழக்கப்படுகின்றன என்று உற்று நோக்கின் அவனது அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு, அவனது வாழ்விற்கானத் தேவைகளைப் பிடுங்கிக் கொள்ளும் தருணத்தில் தான். இந்தியப் புவிச்சூழல் என்பது பல்சமய வழிபாடுகளும், பல்வேறு சாதியமும் நிறைந்த புவிப்பரப்பாகும். இங்கு தலைமை பீடங்களும் அதன் படிநிலை சார்ந்த அடுத்த பீடாதிபதிகளின் பதவிகளும் சாதி மற்றும் சமய அடிப்படையில் தான் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. தனிமனித வருமானம் என்பது அவன் மற்றும் அவனது குடும்பம் என ஒட்டுமொத்த செலவுகளுக்கு வருமானம் ஈட்டுவதாக தொழிலே அமைகின்றது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட புதினங்களில் அருந்ததியர்களின் தொழில் பண்ணையத்திற்கு அடிமைவிடுதல், அதாவது ஊர் அமைப்பில் புறத்தே அமைந்த நிலையில் இருந்து கொண்டு இவர்கள் ஒவ்வொருவரும் அங்குள்ள ஆதிக்க சாதியினரையே சார்ந்து வாழ்கின்ற நிலைக்கு ஆளாக்கபட்டு சுயத்தினை இழந்து ஆதிக்கத்திற்கு அடிமைச் சேவகம் செய்கின்ற அவல நிலையில் தான் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றனர் என்பதைப் பதிவு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பண்ணையடிமை

பண்ணையடிமை என்பது இங்கு வருடாந்திரக் மூலியாக குறைவான பணத்தினைப் பெற்றுக் கொண்டு தங்களது குழந்தைகளை ஆதிக்கசாதியினர் வீட்டிற்கு வேலைகளுக்கு அனுப்புகின்றது. வேலை என்றால் சாதாரணமான சூழல் இல்லை ஆதிக்க சாதியினரின் மாட்டுத் தொழுவங்களில் சிறுகுழந்தை தங்க வேண்டும். ஆதிக்கம் இடுகின்ற அனைத்து வேலைகளையும் வயதிற்கு மீறிச் செய்ய வேண்டும். அதனை ஆய்விற்கு எடுத்துக் கொண்ட புதினங்கள் பதிவிடுகின்றதனை அறிந்து கொள்ள முடிந்தது. பண்ணையத்திற்கு வந்த ஆரம்ப நாட்களில் என்ன கத்துக் கத்தினாலும் அசையமாட்டான். விளாறால் காலில் விலாசல் விழும். சுளீர் என்று விழுவது சூலான் கடிதான் என்று தோன்றும். (1)

கூளமாதாரி புதினத்தில் சிறுபிள்ளைகளைப் பண்ணையடிமை முறைக்கு வருடாந்திரக் கூலிக்கு விட்டுவிடுகின்ற மரபின் தொடர்ச்ச்சியினைச் சுட்டிக் காட்டுகின்ற இடத்தில், வருசக் கூலியைக் கூட எப்படியோ நினைவு வைத்திருப்பாள். பேசியது இவ்வளவு. அப்பன் வாங்கிய முன்பணம் இவ்வளவு. கவுண்டரிடம் இருப்பது இவ்வளவு. வரும் நோம்பிக்கு அப்பன் வாங்கப் போவது இவ்வளவு. எல்லாம் தெளிவாக இருக்கும். கூளையனுக்கு ஒன்றும் ஞாபகத்தில் இராது. எல்லாக் கணக்கும் அப்பனுக்கும் அம்மானுக்கும்தான் தெரியும். (2)



மேலும்,

கவுண்டர் இப்படிச் சொன்ன பிறகு என்ன பேசுவது? கூளையனின் அப்பனுக்கும் அம்மாளுக்கும் வாயடைத்துப் போய்விட்டது. அப்பன் தாழ்வாகச் சொன்னார், என்னமோ உங்கள நம்பித்தான் பையன பண்ணத்துக்கு உட்டிருக்கன்... எதுனாலும் நீங்கதான் பாக்கோனும்... (3)

அதே போல பிறகு புதினத்தில் குடும்பங்களே பண்ணையடிமைக்கு இருப்பதனைப் பதிவிடுகின்றது. புதினத்தில் நாயக்கர்களுக்கு பண்ணையடிமை மூலம் காணிக்கிருந்து அவர்களது வயலைப் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு வருமானம் ஈட்டித் தருகின்ற நிலையினை நாவல் முழுக்கவும் அறிந்து கொள்ளலாம். அதே போல கூளமாதாரியிலும் பண்ணையடிமைக்குட் சிறுவர்கள் வருடாந்திரப் பணத்திற்கு வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கின்ற நிலையினையும் இரண்டு ஆசிரியர்களின் பிரதிபலிப்பு ஒரே நேர்கோட்டில் சென்றாலும், வேதனைகள் என்னவோ தனித்தனியாகத்தான் புலப்படுகின்றதனை புதினத்தில் புகுந்து கொள்ளும் போது புரிந்து கொள்ள முடிகின்றது. “அய்யங்குளத்தை எடுத்துக் கொண்டால் செருப்புத் தையல் தொழிலைச் சில பகடைகள் தான் வைத்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் சம்பளத்துக்கும் பங்குமாக சம்சாரத்தனந்தான் பார்த்தார்கள். ஊரில் சக்கிலியக் குடியென்று தனியே கிடையாது. ஊரைச்சுற்றிப் புஞ்சை நெருக்கடியானதால் வீடுகளும் சேர்ந்தாற் போலவே இருக்க வேண்டிய நிர்பந்தம். அதைத்தவிர பேச்சு வார்த்தை கிணறு பழக்கவழக்கங்கள் எல்லாமே தனிதான். (4) என்பதைப் பார்க்கையில் அருந்ததியர்கள் அங்குள்ள ஆதிக்க சாதியினருக்கு உழைத்து, அதன் மூலம் கிடைக்க கூடிய கொஞ்சத்தை வைத்துக் கொண்டு வாழ வேண்டிய நிர்பந்தத்தினைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அங்குள்ள ஒவ்வொரு அருந்ததியின ஆண்களும் ஆதிக்க சாதியான நாயக்கர்களின் பண்ணையடிமையாக இருந்தாக வேண்டிய சூழ்நிலையினை,

காணி பிரித்து விட்டபோது பயம் அற்றுப் போனது. ஆவன் பார்த்த காணியில் முக்கியமானது வில்லிசேரிக்காரன் வீடு ஒண்ணுதான். அது பூர்விகமான வீடு. பழங்காலத்தொட்டே அந்தப் பேர் நிலைத்து விட்டது. (5) என்று காணிக்காரனாக இருந்தே ஆக வேண்டிய நிலையில் அவர்களது பொருளாதாரம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள விதத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது.

மேலும்,

பகடைகளின் குடும்பங்கள் பெருகிவிட்டதால் பழைய காணிமுறையை ஒதுக்கிவிட்டு எல்லாருக்கும் தொழில் இருக்கிறமாதிரி பிரிக்கணுமென்று வண்டாரி சொன்னான். அந்த யோசனை எல்லாருக்கும் நல்லதாகப்பட்டது. (6)

ஊரிலுள்ள ஆதிக்கசாதியான நாயக்கர்களின் நிலத்திற்கு காணிக்காரார்களாக இருப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. என்ற இரு நாவலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் பிறகு நாவலில் பெரியவர்கள் பண்ணையடிமையாகவும், கூளமாதாரியில் சிறுவர்கள் பண்ணையடிமைகளாகவும் இருப்பதுதான். மேலும் அருந்ததியினருக்கு முக்கியமானத் தொழிலாக செருப்புத் தைத்தல் தான் என்பது நாவலின் மூலம் வெளிப்படுகின்றதனையும் அறிந்து கொள்ளலாம்.



கூளமாதரியில் ஆடு மேய்த்தல் தொழில் மட்டுமே முக்கியமான தொழிலாக பண்ணையடிமைகளான சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் பல வீட்டு வேலைகளையும் பார்த்துவிட்டுத்தான் அந்த ஆட்டினை மேயத்து விட்டு வர வேண்டிய நிலையையை அவர்கள் சிறு வயதிலேயே அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் நிலையைக் குறிப்பிடுகின்ற இடத்தில்,

காடு முழுவதும் மொண்டியின் கைகளுக்குப் போய்விட்டது. காடென்ன, பொழுதும்கூட. அவனுடைய ஆடுகள் அணப்புகள் எங்கும் தேனீக்களாய்ச் சொப்பிக் கொண்டன. மற்ற எல்லோருடைய ஆடுகளையும் சேர்த்தால்கூட அவனுடைய ஆடுகள் அளவுக்கு வராது. பெரும்பட்டி. ஒருநாளைக்கு ஒருமுறை பட்டியை அவிழ்த்து இடம் மாற்றுவார்களோ என்னவோ. அத்தனை ஆடுகளையும் அவன் நினைவு வைத்துக்கொள்வது அதிசயம். மேய்ச்சல் முடிந்து ஓட்டிச் செல்லும் போது அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று ஓடிக் கொண்டேயிருக்கும் குட்டிகளைக்கூட சரியாக எண்ணிவிடுவான். குறைந்தாலும் எது குறைகிறது என்பதை உடனே கண்டுபிடித்தும் விடுவான். அவனுடைய ஆடுகளின் கால்களுக்கிடையே மற்ற ஆடுகள் எல்லாம் மறைந்துவிட்டதைப் போலக் கூளையன் உணர்ந்தான்.” (7) என்று ஒரு ஆட்டுக் கூட்டத்தையே சிறுவன் சமாளிக்க வேண்டும் என்கின்ற நிலைகள் என்பது அசாதாரணமான சூழலிலும் அந்தச் சிறுவன் ஆடுகளின் உலகிற்குள் புகுந்து கொண்டு அவற்றுக்குள்ளேயே இருந்து கொள்வதனையும் புரிந்து கொள்ள முடிகின்றது. அதே போல் பிறகு புதினத்திலும் கருப்பன் என்ற அருந்ததியின கதாபாத்திரம் பண்ணையடிமையாக ஒரு நாயக்கருக்கு எருமை மாடு மேய்க்கின்ற நிலையை, கொறஞ்சது நாலஞ்சு வரும் ஒண்ணாத்தான் மாடு மேச்சோம். பெறகு சாணியெடுத்தானே அது எம்புட்டு. நீங்க பேசாம பொண்ணமட்டும் குடுங்க. நான் மாடு மேய்க்க அவ சாணியெடுக்க பொழப்பு எப்பிடியிருக்குனு பாருங்க. இவன் சொல்றான் வௌக்கமத்தவன். (8)

மேலும்,

கருப்பன் துள்ளித் துள்ளி ஓடினான். மாட்டுக்கூட்டத்தில் கலக்கும் வரை அவனது கரிச்சட்டி மண்டை தெரிந்தது. மாடுகளை அமர்த்திப் போட்டுவிட்டு மரத்தடியிலேயே உறங்காலமென்று தோன்றியது கருப்பனுக்கு. ஊரணிக்குள் எதும் போயிருக்கிறதா என்று எட்டிப்பார்த்தான். அவனுக்கு இப்போது தான் தண்ணீர் வற்றிப் போனது ரெம்ப உறுத்தியது. (90 என்று முழு நேரமாக கருப்பன் அடிமையாக மாடு மேய்கின்ற வேலையைத் தவிர ஒன்றுமே தெரியாதது போலவே கட்டமைக்கப்பட்டுள்ளதனை அறிந்து கொள்ள முடிகின்றது.

மேலும் இவர்கள் நாயக்கர் நிலங்களில் கூலிக்கு வேலைக்குப் போகும் முறையும் பதிவிடப்பட்டுள்ளது.



அழகிரிக்குப் பல சோலிகள் இருந்தன. அறுவடை நேரங்களில் கணிசமாகக் களத்து வேலை செய்தான். களத்தில் கொத்து போக, ராசமுடியும் கிடைக்கும். பொலியெடுக்கையில் எந்தக் களத்தில் போய் முந்தியேந்தினாலும் அட்டியில்லாமல் நாழி ரெண்டுபடி என்று களத்துப் பிச்சை கொடுப்பார்கள். சோளக் கட்டை வெட்டு ஆரம்பித்தால் தடபுடலாக இருக்கும். செருப்புத் தொழிலில் ரெம்ப நேரம் உட்காருவான். (10) என்று அறுவடைக் களத்தில் உள்ள வேலைகளையும் அதற்காக கொடுக்கப்படுகின்ற கூலிகளையும் முந்தியேந்திப் பெறுகின்ற நிலையினையும் அதோடு முக்கியமான வேலையாக செருப்புத் தைத்தல் என்பதனையே சுட்டிக்காட்டுகின்றார். அதோடு தொழில் ரீதியாக அருந்ததியின மக்கள் மேல்தட்டு வர்க்கத்தையே சார்ந்து இருக்கின்ற நிலையினை, சரி சாமி எங்கிருந்தா என்ன. ஒழைக்கப் போறோம். பொழைக்கப் போறோம். தேடித் தெரட்டிக் கோடி கோவரமா கெட்டப் போறொம். நீங்க பாத்துக் கூப்புடயில நான் தடுதல சொன்னா மதிப்பில்ல. எங்க குடும்பத்துக்கு வழி பண்ணாமத் தெருவுலயா நிறுத்தீருவீக. நீங்க போங்க சாமி. ரெண்டு நாளைக்குள்ள கௌம்பி வந்துறென்.(11) என்று பொருளாதார ரீதியாக அவர்களைச் சார்ந்து நிற்பதோடு தங்களைக் கைவிடமாட்டார்கள் என்ற கெஞ்சுதல் இல்லையென்றால் ஏற்றுக் கொள்கின்ற முறையிலான நடைமுறையிருப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.

பிறகு நாவலில் உள்ள அருந்ததியர்கள் செருப்புத் தைத்தல், பண்ணையடிமை முறையிருத்தல், போன்ற தொழில்களை செய்கின்ற நிலைமையும் கூளமாதாரியில் அதே போல அருந்ததியின சிறுவர்களின் வேலை வாங்குகின்ற நிலையினை, பச் என்று சலிப்பைக் காட்டியவாறு மொண்டி தலையை அசைத்தான். அதன் பின் மெலிவாய்ச் சொன்னான். எங்கடா உடறாங்க. விடியங்காட்டி நானும் பெரிய கவுண்டரும் வண்டி கட்டிக்கிட்டுக் கக்கூஸ் குப்பையள்ளியாற சந்தப் பேட்டைக்குப் போனம். அது ரண்டு நட. அதுக்கு அப்பறம் திருச்செங்கோட்ல ஊடு கட்டறவுங்க கேக்கறாங்கன்னு மணல் ஒரு நட, நாலு நட ஓட்டறதுக்குள்ள மாடுவளே சோந்து போச்சு. அது முடியறதுக்குள்ள பொழுது உச்சிக்கு வந்திருச்சு. வந்து சோறு குடிச்சிட்டு ஆட்ட வெளியுட்டன். ஒடனே காட்டுக்கு ஓட்டியாந்தா மேயுமா. கடலக்கொடிப் போர்ல உட்டுத் திங்கடிச்சு அப்புறம் ஓட்டியாறன். (12) என்று பண்ணைக்கிருக்கும் சிறுவனான மொண்டியின் வேலை மாடு சேர்ந்து விட்டதென்ற குறியீடு மனிதர்களை மாடு மாதிரி வேலை செய்கின்றான் என்று சொல்வது உண்டு. ஆனால் இங்கு மாடே சேர்ந்து விடடாலும் இவர்களுக்கு ஓய்வில்லை என்பதனை மிகவும் துயரமிகுந்த வரிகளை நாம் புரிந்து கொள்ளவே முடிகின்றது. வேலை செய்கின்ற சிறுவர்கள் வேலைக்குக் கொஞ்சம் தாமதமாக வந்தால் அவர்களுக்கு ஆதிக்க சாதியால் கிடைக்கின்ற வசவுகளை சாதிய ரீதியாக அவர்களையும் அவர்களது பிஞ்சு மனங்களையும் புண்படுத்தும் விதமாக அமைவதனை,



இதே போல வவுறி நேரமாகி வருகிற நாளிலும் நடக்கும் பெரும்பாலும் வவுறி வந்து சேரப் பொழுது கிளம்பி மலைமேல் ஏறிவிடும். அப்போது கவுண்டச்சியின் வார்த்தை வெயிலைவிடச் சுள்ளென்றிருக்கும். எங்கடி வந்த... சக்கிலித் தேவிடியாளுக்கு வர்ற நேரத்தப் பாரு. செனப்பன்னியாட்டம் மூனு வேளை தின்னா காத்தால எந்திருக்க முடியுமா... நாங்க பண்ணயம் பாக்கறதா... பண்டம் பாடியெல்லாம் வித்துப்புட்டு எரந்து குடிக்க போறதா... வந்து சம்பளம் பேசுவானுல்ல உங்கொப்பன். நாளக்கி அவனக் கூட்டிக்கிட்டு வாடி... பேசிக்கறன். (13)

மேற்கண்ட வரிகள் எல்லாம் அருந்ததியச் சிறுவர்களின் மனப் பேராட்டத்தினை உருவாக்கும் விதமாகவே அமைகின்றன.

முடிவுரை

புதினங்களில் பண்ணையடிமை முறையில் பெரியவர்களும், சிறார்களும் ஆதிக்க சாதியனரையே பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கின்ற அவலத்தை பார்க்கின் ஜனநாயத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு புலப்படுகின்றது. புதிகங்கள் முழுக்க முழுக்கச் சிறார்களின் வலியையும், விடுதலை குறித்தான எண்ணங்களையும் பதிந்து செல்கின்றது கூளமாதாரி. அதே போல பிறகு புதினம் அருந்ததியன மக்களின் பண்பாடுகளைப் பதிவிடுகின்ற அதே நேரங்களில் பொருளாதாரத்திற்கு ஆதிக்கத்தினைச் சார்ந்திருக்கின்றதனை உணர முடிகின்றதனை இக்கட்டுரை விளக்குகின்றது.

அடிக்குறிப்புக்கள்

1. கூளமாதாரி. ப.21

2. மேலது. ப.29

3. மேலது.ப.27

4. பிறகு. ப.179

5. மேலது.ப.27

6. மேலது.ப.24

7. கூளமாதாரி. ப.78

8. பிறகு.ப.83

9. மேலது, ப.114

10. மேலது,ப.29

11. மேலது,18

12. கூளமாதாரி, ப.79

13. மேலது,ப.39

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p97.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License