இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியத்தில் வாயில் மறுத்தல்

ச. தனலெட்சுமி


முன்னுரை

சங்கப் புலவர்கள் தமது பாடல்களை சமுதாய நோக்கில் பாடிச் சென்றனர். பின்னர் அகம், புறம் என வகைப்படுத்தி, திணை, துறை மரபுக்குள்ளாகப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மருதத்திணையில் உள்ள “வாயில் மறுத்தல்” என்னும் துறை ஆய்வுக்குரிய பொருளாகும்.

சங்க இலக்கியத்தில் வாயில் மறுத்தல்

• வாயில் மறுத்தல் - விளக்கம்

• வாயில் மறுத்தல் - பாடல்கள்

• வாயில் - இலக்கணம்

• வாயில் மறுக்கும் சூழல்

• வாயில் மறுத்தலில் தோழி

• தலைவனின் கொடுமை கூறல்

• தலைவியின் இல்லற மாண்பு

• வாயில் மறுத்தலுக்கான காரணங்கள்

வாயில் மறுத்தல் - விளக்கம்

மருதத்திணையில்; ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாக அமைகிறது. அதனுள் ஊடலுக்குக் காரணமாகப் பரத்தமை ஒழுக்கம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பரத்தமையை நாடிச் செல்லும் தலைவனைத் தோழி மூலமாக வாயில் மறுக்கின்றாள் தலைவி. களவு வாழ்க்கையின் போது பல அன்பான இனிய சொல்லைக் கூறித் தலைவியின் அன்பைப் பெற்றவன் கற்பு வாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே பரத்தையை நாடிச் செல்கிறான். அவ்வாறு செல்லும் தலைவன், வாயிலாக பாணன், விறலியர், கூத்தர் போன்றோரை அனுப்புகிறான். அவர்களும் தலைவனின் கொடுமையை மறந்து அவனுக்குச் சார்பாகவே வாயில் வேண்டுகின்றனர். இதைத் தொடர்ந்து தலைவனும் வாயில் நேர்வதுண்டு. அதற்குத் தலைவி நேரடியாக வாயில் மறுக்காமல் தன் நலத்தில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தோழியின் மூலம் வாயில் மறுக்கின்றாள்.



வாயில் மறுத்தல் - பாடல்கள்

சங்க இலக்கியத்தில் மொத்தம் 138; பாடல்களை 43 புலவர்கள் பாடியுள்ளனர்.

அகநானூறு - 24

நற்றிணை - 13

குறுந்தொகை - 12

ஐங்குநுறூறு - 77

கலித்தொகை - 10

பரிபாடல் - 2

வாயில் - இலக்கணம்

வாயில் இலக்கணமாக தொல்காப்பியர்,

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்களென்ப”

ஆகிய பன்னிருவரும் வாயில்கள் என்று சொல்லுவார்.

அகவொழுக்கம் நிகழ்தற்கு வாயில் போன்று விளங்குதலால் வாயில்கள் எனப்பட்டனர்.

“எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருளவென்ப”

மேற்சொன்ன பன்னிரு வாயில்களும் தலைவனும் தலைவியும், இன்பமாக வாழும் வாழ்க்கைக்கு உதவுவர். புதல்வனும் தலைவனுக்கு வாயிலாவதைக் காட்டும் பாடலும் உள்ளது.

வாயில் மறுத்தல் என்னும் இத்துறை,

1. வாயில் வேண்டல்

2. வாயில் மறுத்தல்

3. வாயில் நேர்வித்தல்

4. வாயில் நேர்தல்

என்னும் நான்கு அகத்துறைகளை உள்ளடக்கியது.

பரத்தையிற் பிரிவு பற்றிக் கூறும் நம்பியகப் பொருள்,

“வாயில் வேண்டல் வாயில் மறுத்தல்
வாயில் நேர்வித்தல் வாயில் நேர்தல்என்
றாய பரத்தையின் அகற்சிசால் வகைத்தே”

என இந்நான்கு வகையைப் பற்றிக் கூறுகின்றது. எனவே இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என அறியலாம்.



வாயில் மறுக்கும் சூழல்

வாயில் மறுக்கும் சூழலில் பெரிதும் பங்கு கொள்பவள் தோழியே. அவள் தலைவன்இதலைவி, இருவரின் களவு கற்பு ஆகிய இரு காலகட்டத்திலும் உடனிருந்து தலைவனின் தீய செயலை இடித்துரைத்துக் கொண்டே இருப்பவள். தலைவியின் நலத்தில் பெரிதும் அக்கறை கொண்டவளாய், தலைவனை உரிமையோடு கண்டித்தாள். “தலைவன் பரத்தை வீட்டிற்குச் சென்று தங்கிப் பின்னர் தலைவியைக் காண வரும் போது அவன் உள்ளுர அஞ்சினான். இதனால் வீட்டினுள் புக அஞ்சினான். அகத்தினுள் புகுவதற்குத் தலைவன் பாணணை முதலில் வாயில் வேண்டும் பொருட்டு அனுப்பினான். சில சமயம் தலைவனே வாயில் வேண்டுவதாய்ப் பாடல்கள் உள்ளன. அப்படி வாயில் வேண்டும் போது தலைவியின் சார்பாகத் தோழி வாயில் மறுப்பாள்.

வாயில் மறுத்தலில் தோழி

களவுக் காலத்தில் தோழி பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் தலைவன் தலைவியைக் காண வரும் போது திருமணம் செய்து கொண்டு இந்த ஊர் தூற்றுவதை நீக்கிப் பின் தலைவியை அழைத்துச் செல்லுமாறு கூறுவாள். கற்புக் காலத்தில் தலைவன் குறிப்பறிந்து வாயில் மறுப்பதுண்டு. தலைவனுக்குத் தலைவி வாயில் மறுப்பதும் உண்டு. தலைவனையும் தலைவியையும் இணைத்து வைப்பது தோழியின் நோக்கமாக இருந்தது. களவுக் காலத்தில் தலைவன் தலைவியிடம் கொண்ட அன்;பு கற்புக் காலத்தில் குறைகிறது. இதனை இடித்துரைத்தும் தோழி வாயில் மறுக்கிறாள்.

தலைவனின் கொடுமை கூறல்

“பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி
மடத்தகு கிழமையுடைமையானும்
அன்பிலை கொடியை என்றலு முரியன்”

என்ற தொல்காப்பிய நூற்பாவில் பரத்தையொழுக்கத்தைப் போக்குதல் வேண்டியும், தலைவன் கூறியதை உண்மையெனக் கொள்ளும் மடைமைக் குணம் கொண்ட தலைவிக்குத் தன் தோழி தலைவனின் கொடுமையை எடுத்துக் கூறுவாள் என்று கூறுகிறார்.

தலைவன் தான் பரத்தையிடம் இருந்து வந்ததைத் தலைவியிடம் மறைக்கின்றான். தலைவியும் தன் பேதைமையால் அதனை அறியாது கற்பு வாழ்வின் தொடக்கத்தில் தலைவன் கூறுவதையெல்லாம் நம்பி விடுகின்றாள். பின் தலைவன் பரத்தையோடு புனலாடியதைத் தோழி பார்த்துத் தலைவியிடம் கூற தலைவி தலைவனுடன் ஊடல் கொள்கிறாள்.



தலைவியின் இல்லற மாண்பு

தலைமகன் தலைவியைப் பிரிந்து பரத்தையருடன் தங்கி வரும் போது அவனுக்குத் தோழி தலைவியின் இல்லற மாண்புகளையெல்லாம் அவனிடம் எடுத்துக்கூறி, அதாவது “அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், அரசர் முதலானோரை வழிபடுக எனக் கணவன் கற்பித்தவற்றால் அவளும் அதன்படியே வழிபடுகின்றாள். இல்லத்தில் இருப்பவர்களுக்கும், உறவினர்களாக வருபவர்களுக்கும், விருந்தோம்பல் செய்வதும், இரவலர்க்குப் பொன் முதலான கொடுத்தும் அறச்செயல்களுடன் இருக்கும் தலைவியை விடுத்துப் பரத்தையை நாடிச் செல்கின்றாயே எனத் தலைவனைத் தோழி கடிந்துரைக்கின்றாள்.

வாயில் மறுத்தலுக்கான காரணங்கள்

• அலராதல்

• புனலாடல்

• பரத்தமை ஒழுக்கம்

• நலனழிதல்

• அன்பிலனாதல்

• ஈன்றணிமை

• முதுமை

• சூள் பொய்த்தமை

ஆகியவற்றைக் காரணங்களாகக் கூறி வாயில் மறுக்கின்றனர்.

முடிவுரை

சங்ககாலப் பெண்கள் முதல் இன்று உள்ள பெண்கள் வரை தங்கள் கணவனை ஒழுக்கமுடையவனாகவும் கற்புடையவனாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதிலிருந்து வேறுபடுமாயின் வீட்டில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, சங்க இலக்கியங்களில் தலைவியின் பால் அன்பு கொண்ட தோழி தலைவனுக்கு வாயில் மறுப்பதாக அமைகிறது. இல்லற நெறிக்குப் புறம்பான புறஒழுக்கத்துக்கு எதிர்ப்புக் குரலாகவே வாயில் மறுத்தல் துறை அமைந்துள்ளது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p106.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License