இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

பழந்தமிழரின் சூழலியல் அறிவு

முனைவர் மா. பத்மபிரியா


மனிதன் தன் தேவைகளுக்காகத் தாவரங்களையும் விலங்குகளையும் அழிக்கிறான். காடுகள் அழிவதால் பூமியில் உள்ள சூழ்நிலை மண்டலம் பாதிக்கப்படுகின்றன. நீர் மாசு (Water Pollution), காற்று மாசு (Air Pollution) போன்றவைகள் சமுதாயத்திற்குக் கேடுவிளைவிப்பன. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மேற்கண்ட காரணிகளால் பூமியின் மேலுள்ள ஓசோன் படலம் துளையிடப்பட்டு (Ozone Depletion) பூமி வெப்பமயமாகி (Global Warming) ‘அபாயத்தை நோக்கி பூமி’ இதனைத் தடுக்கும் நோக்கத்துடன் பழந்தமிழரின் இயற்கைப் பாதுகாப்புச் சிந்தனைகளைச் சங்கஇலக்கியங்கள் வழி எடுத்துரைத்து இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தல் கட்டுரையின் நோக்கமாகும்.

சூழலியல் திறனாய்வு (Eco Criticism)

‘இலக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவினைக் கற்பதே சூழலியல் திறனாய்வாகும்’

மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைப் பெருக்கம், எரிசக்தியின் தேவைக்கான அணு உலையின் பெருக்கம் போன்றன நம்மை எதிர் நோக்கியுள்ள சிக்கல்கள். சுற்றுப்புறத்தை நச்சடைய வைக்கும் திட, திரவ மற்றும் வாயுக் கழிவுகள் போன்றவற்றால் நிலம், நீர், காற்று, வெளி என ஐம்பூதங்களின் மாசுபாடுகள் இன்று தவிர்க்க முடியாமல் பிரச்சினைகளில் சிக்குண்டுள்ளோம். ‘இந்தப் பூமியைக் காப்போம்’, ‘வரும் தலைமுறைக்கு வாழ்விடம் அளிப்போம்’ என்ற கருத்தாக்கத்தின் விளைவால் இலக்கியங்களைச் சூழலியலுக்கு உட்படுத்தி உருவான நவீனத் திறனாய்வே ‘சூழலியல் திறனாய்வு’ ஆகும். இத்திறனாய்வு முறையைச் சங்கஇலக்கியங்களில் பொருத்திப் பார்த்தால் பழந்தமிழரிடம் காணப்படும் பல்லுயிரின வேறுபாடும் அதன் பாதுகாப்பு (Biodiversity and it’s Conservation), பேரிடர் மேலாண்மை (Disaster Management), நீர்த்தேக்க மேலாண்மை (Watershed Management), நிலச்சரிவு மேலாண்மை (Land Slides Management) போன்ற சூழலியல் மேலாண்மைகள் வெளிப்படும்.



காற்று மாசுபாட்டினைத் தடுத்தல்

காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டமாக ‘ஒவ்வொரு நகரத்தைச் சுற்றிலும் பசுமை வளையங்கள் ஏற்படுத்துதல் வேண்டும்’ என்று சுற்றுச்சூழலறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பழந்தமிழரிடம் காற்று மாசுபாட்டினைத் தடுக்கும் செயல் திட்டம் இருந்தமையைப் பட்டினப்பாலை பதிவு செய்துள்ளது.

கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத்தெறுவின் கவின்வாடி
நீர்ச்செறுவின் நீள்நெய்தல்
... ... ... ... ...
கோள்தெங்கின் குலைவாழைக்
காய்க்கமுகின் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளைஇஞ்சி.” (பட்டினப்பாலை: 9-19)

“மரங்கள் தங்கள் இலைப்பரப்பு மூலம் காற்றிலுள்ள தூசுக்களையும், பிற வாயு மாசுக்களையும் பிடித்து வைத்துக் கொள்கின்றன. ஒரு ஹெக்டேர் பரப்பிலுள்ள வளமான காடுகள் ஆண்டொன்றுக்கு முப்பது டன் தூசுக்களைத் தன் இலைப் பரப்பில் பிடித்துக் கொள்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.” (ஜே.தர்மராஜ், சுற்றுச்சூழல் இயல், ப.164) இத்தகைய அறிவியல் உண்மையைப் பட்டினப்பாலை பதிவு செய்யத் தவறவில்லை. கரும்பு ஆலைகளில் இடையறாது புகை வந்து கொண்டிருப்பதால் அருகில் உள்ள நெய்தல் மலர் அழகிழந்து காணப்படுதல் ‘கவின்வாடி நீர்ச்செறுவின் நீள்நெய்தல்’ என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. காற்றில் கலந்த மாசுக்களை நெய்தல் பிடித்து வைத்தமை இதன் மூலம் தெளிவாகின்றது. காற்று மாசடைதல் இத்தகைய பசுமை வளையங்களால் தடுக்கப்பட்டுள்ளன என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.

நிலச்சரிவு மேலாண்மை (Land Slides Management)

இன்றைய சூழலில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்படும் நிலச்சரிவினால் மனித குடியிருப்புகள் அழிந்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. பழங்காலத்தில் ஆற்றுப் பெருக்கினால் உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு மக்களை மரங்கள் தடுப்புகளாக இருந்து பாதுகாத்தமை பரிபாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி,
விளிவு இன்று,கிளையோடு மேல்மலை முற்றி,
தளிபொழில் சாரல் ததர் மலர் தாஅய்
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு, வாழை,ஞெமை,ஆரம்,இனைய,
தகரமும்,ஞாழலும்,தாரமும்,தாங்கி,
நனிகடல் முன்னியது போலும், தீம் நீர்
வளிவரல் வையை வரவு.” (பரிபாடல்.பா.எண்.12)

மலையின் மேலிடமெல்லாம் மழைபெய்து வையை ஆறு கடல்போல் விரைந்து வந்தாலும் நிலச்சரிவு ஏற்பட்டதாக இலக்கியம் பதிவு செய்யவில்லை. காரணம், மலைச்சாரலில் வளர்ந்திருக்கும் காடுகள் ஆகும். நாகம், அகில், சுரபுன்னை,ஞெமை, சந்தனம், தகரம், தேவதாரம், ஞாழல் போன்ற மரங்கள் நிற்பதால் காற்றுப்போல் விரைந்த வையை வரவு நிலச்சரிவை ஏற்படுத்தவில்லை. மேற்கண்ட சான்று பழந்தமிழரின்; நிலச்சரிவு மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.



ஒலி மாசுபாட்டினைத் தடுப்பு (Noise Pollution)

ஒலி மாசுபாட்டினைத் தடுக்கும் சூழமைவுகள் பழங்காலத்தில் இருந்தமை மதுரைக்காஞ்சியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

“புணர்ந்துடன் ஆடும் இசையே அனைத்தும்
அகலிரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்பக்
... ... ... ... ... ... மருதம் சான்ற தண்பணை சுற்றி,ஒருசார்.” (மதுரைக்காஞ்சி:266-270)

“மரங்கள் ஒலி தாங்கும் மண்டலமாக அமைகின்றன. இவை ஒலிஆற்றலைக் கிரகித்துச் சிதறடிக்கக்கூடிய வல்லமை பெற்றுள்ளன. நெடுஞ்சாலை, தெருவோரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் நெட்டிலிங்கம், வேப்பமரம், புளியமரம், தென்னை போன்ற மரங்களை ஒலி கிரகிக்கும் அமைப்பாக நடவேண்டும். வீட்டிற்கு ஒரு மரம், குழந்தைக்கு ஒரு மரம் என்று மரத்தின் முக்கியத்துவத்தை அரசும் போதித்து வருகிறது. இவ்வாறு வாகனப்போக்குவரத்து இரைச்சல் மற்றும் பல்வேறு வழிகளில் எழும் இரைச்சலை மரம் வளர்ப்பதால் விளையும் பசுமை அடைப்புகள் (Green Covers) கிரகித்துக் கொள்கின்றன. ( ஜே.தர்மராஜ், சுற்றுச்சூழல் இயல், ப.199)

மருத நிலப் பகுதியில் இயற்கையாக அமைந்த வயல் வளம் பேரொலியை இனிய ஒலியாக மாற்றுகிறது. அதனால் பேரொலி ‘விழைவு கொள் கம்பலை’ (மதுரைக்காஞ்சி:526) என்று மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை (Disaster Management)

கடல்நீர் நிலப்பரப்பில் உட்புகாதவாறு மரங்கள் தடுப்புகளாக நின்று முன்னோர்களைக் காத்துள்ளன. கடற்கரையோர அடர்ந்த மரங்களால் தான் கடல்நீர் தடுக்கப்படுகின்றன என்ற உண்மையும் பழந்தமிழருக்குத் தெரிந்துள்ளது. இதற்கான சான்றாதாரங்கள் அகநானூறு, பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

“வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
... ... ... ... ... ...
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை.” (அகநானூறு:பா.எண்10)

கடல்நீரின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்கும் தன்மையாக புன்னை மரம் நின்றமை மேற்கண்ட பாடலில் புலனாகியுள்ளது.

“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, படப்பை நின்ற முடந்தாள் புன்னை.” (அகநானூறு:பா.எண்180)

கடற்கரையோரங்களில் தாழை, ஞாழல், புன்னை போன்ற மரங்கள் அடர்ந்து நின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொரா
விளங்கு இரும் புணரி உரும்என முழங்கும்
... ... ... ... ... ...
குவிஇணர் ஞாழல் மாச்சினை...
அடும்பு அமல் அடைகரை... ... ... ” (பதிற்றுப் பத்து:பா.எண.;51)

ஆழிப்பேரலையின் சீற்றத்தினை புன்னை, ஞாழல், அடும்பு போன்ற தாவர இனம் தடுப்புகளாக அமைந்து தடுத்தமையை மேற்கண்ட பாடல் பதிவுசெய்துள்ளது.

‘அடும்பு அமல் அடைகரை’ என்ற பதிவு அடும்பு சூழப்பெற்ற கடற்கரையைக் காட்சிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பழந்தமிழர்கள் பேரிடர் மேலாண்மையைத் (Disaster Management) தெரிந்து கொண்ட செய்தி புலனாகின்றது.



நீர்த்தேக்க மேலாண்மை (Watershed Management)

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. இந்தப் பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் கடல் நீரால் மனிதர்களின் தண்ணீர் பிரச்சினை தீராது. நமது நன்னீர்த் தேவைகளை மழைநீரும், ஆறுகளும், நிலத்தடிநீரும் பூர்த்தி செய்கின்றன. இன்றைய சூழ்நிலையில் நீரின் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நீர்வளத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு தனிமனிதனும் முயற்சி செய்ய வேண்டும். நமது முன்னோர்கள் குளம் அமைத்துத் தண்ணீர் சேமிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டமை இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளம் அமைத்து தண்ணீர் சேமிக்கும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்தமையை அகநானூறு பதிவுசெய்துள்ளது.

“... ... ... ... ... ஈங்கைத் -
தூய்அவிழ் பனிமலர் உதிர வீசித்
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையும் துயில்மறந் தன்ன?
... ... ... ... ...” (அகநானூறு:252:9-14)

நீர்ப்பெருக்கால் குளம் உடையும் அபாயம் ஏற்படும் தருணம், அதைக் கண்காணிக்க காவலர் அமைத்துப் பாதுகாத்தமை மற்றும் பழந்தமிழரின் நீர்ப் பாதுகாப்பும் பேரழிவு மேலாண்மையும் புலனாகின்றது.

‘சுற்றுச்சூழல் கல்வியை எதிர் காலச் சந்ததியினருக்கு அளிக்கும் சங்க இலக்கியங்கள்’ என்றால் மிகையாகாது. இயற்கைப்பாதுகாப்பிற்கு முன்னோர்கள் மேற்கொண்ட அறவாழ்வு மேற்கண்ட சங்க இலக்கியச் சான்றாதாரங்களால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p111.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License