இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஆற்றுப்படைகளில் உணவும் தொழிலும்

ச. தனலெட்சுமி


ஆற்றுப்படை இலக்கியங்கள் தமிழரின் கொடை மாட்சி, விருந்தோம்பல், மனிதநேயம், கலைத்திறம் போன்றவற்றைப் பறைசாற்றும் கருவூலங்கள்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்” (தொல்.பொருள்.நூற்.1037)

தொல்காப்பியர், “பரிசில் பெற்று வளத்தோடு வரும் கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் வழியில் எதிர்ப்படும் வறுமையுற்ற, கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோரை பரிசில் பெறுவதற்காக ஆற்றுப்படுத்துவது” என்று விளக்கம் தருகிறார். இவ்வாறு வளம் பெற்றவன், வளம் இல்லாதவன் என்ற இணைப்பில் மிகையாகப் பேசப்படுவது ‘உணவு’. உணவோடு பேசப்படுவது உணவிற்கு ஆதாரமான தொழில்.

குறிஞ்சி - உணவும் தொழிலும்

ஆற்றுப்படை இலக்கியங்களில் குறவர் வாழ்வியல் ‘மலையும் மலை சார்ந்த நிலமாகும்’. இவர்கள் பகற்பொழுதில் ‘தேன் எடுத்தலை’ மேற்கொண்டுள்ளனர். குறவர் தினைச்சோறு, இறைச்சி, பலாப்பழம் போன்றவற்றை உண்டுள்ளனர். ‘பலாப்பழம் அதன் விதைகள்’ குறவருக்கு எளிதாகக் கிடைத்த உணவு வகையாகும்.

மலைப் பகுதியில் இயற்கையாக விளைந்து நிற்கும் கிழங்குகளை அகழ்ந்தெடுப்பர். தினை விதைத்தல், தினை காத்தல், தினை அறுத்தல், தினை குற்றல் போன்ற உணவுக்கான தொழிலை இருபாலரும் மேற்கொண்டுள்ளனர். தினைக்காத்தலில் மகளிர் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. கானவர் பகற் பொழுதின் பெரும்பகுதியை வேட்டையாடி கழித்துள்ளனர். பன்றி வேட்டை, முயல் வேட்டை அவர்களின் உணவுக்கு ஆதாரமாக இருந்துள்ளது.

“அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
... ... ... ... ...

கருங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்” (பெரும்.111-116)

வேட்டை நாய்களைக் கொண்டு வலைகளைக் கட்டி குறு முயல்களை வலையகத்தே வளைத்துப் பிடித்துள்ள செய்தியை பெரும்பாணாற்றுப்படை சான்று பகர்கின்றது. பண்டமாற்று

குறிஞ்சி நில மக்கள் தமது நிலத்தில் கிடைத்த பொருட்களை நெய்தல் நிலத்தில் பண்டமாற்றி தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்றுள்ளனர்.

“தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்” (பொருந. 214-215)

தேனையும், கிழங்கையும் நெய்தல் நிலத்துக்குக் கொண்டு வந்து பண்டமாற்றி அதற்கு விலையாக மீன், நெய், நறவு பெற்றுள்ளனர் என்பதைப் பொருநராற்றுப்படை மூலம் அறியலாம்.



முல்லை - உணவும் தொழிலும்

முல்லை நிலத்தில் வாழும் மக்கள் ‘காடும் காடு சார்ந்த இடத்தையும்’ ஆதாரமாகக் கொண்டனர். இவர்கள் ‘ஆயர்’ எனப்படுவர். ‘ஆ’ என்பது பசு. ‘ஆயம்’ என்பது ‘பசுத்திரளை ஓம்பி வாழ்ந்தவர்’ எனப் பொருள் பெறும். ஆயர், ஆய்ச்சியர் ஆகிய இருபாலரும் ஆநிரைகளை ஓட்டிச் சென்று மேய்த்துள்ளனர்.

ஆயர் மகளிர் வரகுச் சோற்றையும் வேளைப் பூவைத் தயிரில் பெய்து செய்த புளிங் கூழையும் உணவாக உண்டுள்ளனர்.

“நெடுங்குரல் பூனைப் பூவின் அன்ன
... ... ... ... ...
இன் சுவை மூரல்”(பெரும்.192-196)

பெரும்பாணாற்றுப்படை ஆயர்களின் உணவினைப் பதிவு செய்துள்ளது. வரகினது அவிழாத சோறு, அவரை விதையின் பருப்பு உணவாக உட்கொண்டுள்ளனர்.

பண்டமாற்று

ஆயர்கள் மருத நிலத்தில் மாற்றாகப் பொருள் பெற்றுள்ளனர். மோரை விற்று அதற்கு ஈடாக நெல் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். நெய் விற்ற விலைக்குப் பசும் பொன்னை விரும்பி ஏற்காது எருமை அவற்றின் கன்றுகளைப் பெற்றுள்ளனர்.

“புகர் வாய்க் குழிசி பூஞ் அமட்டு இரீஇ
... ... ... ... ...
எருமை நல் ஆன் கரு நாகு பொறூஉம்” (பெரும்.159-165)

ஆயர் வாழ்விடம் - குடில்

ஆயர் குடில்கள் புல்லால் வேயப் பெற்றுள்ளன. சிற்றில் முள்ளிட்டுக் கட்டிய வேலியை உடையன. வளைந்த கால்களை உடைய பந்தரைக் கொண்டன. குடில் முழுவதும் புதுக்கலம் போன்ற செம்மண் பூசப் பெற்றிருக்கும்.

“முரண் தலை கழிந்த பின்ளை மாறிய
குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பை”(பெரும்.147-148)

குடிசைகளில் ஆடுகள் தின்னும் பொருட்டுச் சிறிய கால்களில் தழைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்.



மருதம் - உணவும் தொழிலும்

மருத நிலம் வயல் சார்ந்த இடமும். இங்கு வாழும் மக்கள் ‘உழவர்’ எனப் பெறுவர். இவர்கள் பண்பட்ட வேளாண்மை செய்துள்ளனர்.

நிலத்தை உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல், காவல் காத்தல், அறுவடை செய்தல், நெற்கட்டுகளைக் களங்களுக்கு கொண்டு வருதல், கடாவிடுதல், நெல் அளத்தல் ஆகிய உழவு சார்ந்த நடைமுறை வாழ்வினை மேற்கொண்டுள்ளனர்.

“குடி நிறை வல்சி செஞ்சால் உழவர்
... ... ... ... ...
அரிபுகு பொழுதின் இரியல் போகி” (பெரும்.197-202)

“உழா அ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்” (பெரும்.211-212)

“களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்” (பெரும்.213)

மேற்கண்ட பெரும்பாணாற்றுப்படை பாடல்கள் உழுதல், நடுதல், களையெடுத்தல், குறித்துப் பதிவு செய்துள்ளது.

உழவர் மகளிர் நெல்லினைக் குற்றி அரிசியாக்கி உண்டுள்ளனர்.

“இரும்பு காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்து
அவைப்பு மாண் அரிசி அமலை”(சிறு.193-194)

வெண்ணெய் அரிசிச் சோற்றை நண்டின் கலவையோடு உண்டுள்ளனர். மேலும், சோற்றோடு கோழிப்பெடை பொரியல் சேர்த்து உண்டுள்ளனர்.

“கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (சிறு.195)

பண்டமாற்று

மருத நிலத்தில் கிடைக்கும் கரும்பையும் அவலையும் விற்று, அவற்றிற்கு மாற்றாக மான் தசைகளையும் கள்ளையும் பெற்றுள்ளனர் என்று பொருநராற்றுப்படை சான்று பகர்கின்றது.

“தீங்கரும்போடு அவல் வகுத்தோர்
... ... ... ... ...
மான் குறையொடு மது மறுகவும்”(பொருந.216-217)



நெய்தல் - உணவும் தொழிலும்

பரதவர் வாழ்க்கை முழுவதும் கடலொடு தொடர்புடையதாகும். பரதவர் மீன் பிடித்தலோடு உப்பு விளைத்தல், முத்தெடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எஞ்சிய மீன்களைக் காய வைத்துப் பயன்படுத்தியுள்ளனர்.

இறால் மீன்களின் சுடப்பட்ட தசையினையும் ஆமைப் புழுக்கினையும் உண்டுள்ளனர்.

நுளையர் மகளிர் காய்ச்சி அரித்த தேறலையும் உலர்ந்த குழல் மீனையும் எப்பொழுதும் தம் மனையில் வைத்து உண்டுள்ளனர்.

“நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர்” (சிறு.158-159)

நிலத்தின் தன்மைகளுக்கு ஏற்ப அங்கு வாழும் மக்களின் உணவும் தொழிலும் அமைந்திருந்தன. பாலை நிலத்தைச் சார்ந்த எயினர்கள் புல்லரிசி திரட்டி உண்டுள்ளனர். பாலைக்குத் தனி நிலம் இல்லை என்பதால் முல்லை நில மக்களின் வறட்சி வாழ்க்கையும், குறிஞ்சி நில மக்களின் வறட்சி வாழ்க்கையும் பாலையின் இயல்பாகக் கொள்ளலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p112.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License