இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

மணிமேகலையில் பெண்ணடிமைக்கூறுகள்

பெ. ஆனந்தி


தமிழில் அழியாப் புகழ்பெற்ற காப்பியங்களுள் மணிமேகலை தனிச் சிறப்புடையது. மணிமேகலை அறம் போதிக்க வந்த பௌத்த சமயக் காப்பியம் எனத் தமிழ் உலகில் வழங்கப்பட்ட போதிலும் இக்காப்பியத்தில் பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் மிகுந்து வருகின்றது. இத்தகைய நிலையை விளக்கும் பொருட்டு இக்கட்டுரை அமையப் பெறுகின்றது.

மணிமேகலை - காப்பியச் சூழல்

மணிமேகலைக் காப்பியத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு ஆகும். மணிமேகலையை எழுதிய சீத்தலைச்சாத்தனாரும் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளும் நண்பர்களாவர். சாத்தனார், கண்ணகியின் வரலாற்றை எடுத்துரைக்க அதனை இளங்கோ காவியமாக்கினார். பின்னர் இக்காப்பியத்தின் தொடர்ச்சியை மணிமேகலைத் துறவு எனும் பெயரில் சாத்தனார் வார்த்தளித்தார். இதனை,

“இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்”
(மணி.பதிகம்: 95-99)

என்ற மணிமேகலையின் பதிக வரிகள் மெய்ப்பிக்கின்றன. மேலும் மணிமேகலைக் காப்பியம் இயற்றப்பட்டச் சூழலில் அரசுரிமையும் ஆண்களிடத்திலேயே இருந்தமை தொடிதோட் செம்பியன் என்ற மன்னனைச் சிறப்பிக்கும் பாடலடிகள் (மணி 1:3-5) மூலம் புலப்படுகிறது. எனவே இந்தக் காப்பியம் ஒரு ஆண் கேட்டு ஒரு ஆண் படைக்க ஒரு ஆண் ஆளும் அரசாங்கத்தில் பாடப்பட்டது என்பது தெளிவாகிறது.



மணிமேகலையில் பெண்ணடிமைக் கூறுகள்

பெண்களின் உணர்வினையும் மரபினையும் சித்திரிக்கும் ஆண் எழுத்துகளை அலசி ஆராய்வதும் இன்றைய திறனாய்வு முறைகளுள் அவசியமாகிறது. இதன் படி மணிமேகலையில்,

* பரத்தமை வலியுறுத்தல்

* முற்பிறவி கடமைகளைச் சுட்டுதல்

* சமயவாதிகளால் ஒதுக்கப்படல்

* மறைக்கப்பட்ட பெண் காதல்

* பிற பெண்ணடிமை நிலைகள்

என்ற வகைகளில் பெண்ணடிமைக் கூறுகளை நாம் கண்டறிய முடிகிறது. அதாவது பரத்தையர் குலப் பெண்ணைத் துறவியாக உயர்த்த சாத்தனார் எண்ணிய போதிலும் அவரை அறியாமலே பல பெண்ணடிமைக் கூறுகளைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரத்தமை வலியுறுத்தல்

மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள். பரத்தையர் குலத்தைச் சேர்ந்த இவள் தன் தகப்பன் இறந்த செய்தி கேட்டு துறவியாகிறாள். துறவியான பின்னும் இவளுக்கு வயந்தமாலை, சித்திராபதி, உதயகுமரன் மற்றும் ஊர்மக்கள் எனப் பலர் வழியிலும் பரத்தமையையே ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு,

“அணியமைத் தோற்றத்து அருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள்”
(மணி 3:149-150)

என்னும் பாடலடிகளைச் சான்றாகக் காட்டலாம். எனவே ஒரு பெண் தன்னை பௌத்தத் துறவியாக உலகிற்கு அடையாளம் காட்ட விரும்பிய போதிலும் அவளை எதிர்த்து ‘பத்தினிப் பெண்டிர் அல்லோம்’ எனக் கூறும் சமூக நிலையை அறிய முடிகிறது.



முற்பிறவி கடமைகளைச் சுட்டுதல்

மணிமேகலையின் முற்பிறவி கணவன் இராகுலன். அவனே இப்பிறவியில் உதய குமரனாவான் என்பதை உணர்ந்த மணிமேகலை,

“என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்
தன்னடி தொழுதலும் தகவென வணங்கி”
(மணி 18:128-129)

என்று தனது முற்பிறவி கணவனை இப்பிறவியில் வணங்குகிறாள் இதோடு மட்டுமல்லாமல் உதயகுமரனின் சொல்லை எதிர்த்துப் பேசவும் நடுங்குகிறாள் (மணி18 :132-133) மேலும் முற்பிறவி கணவனை இப்பிறவியில் பெற்றெடுத்த இராசமாதேவியையும் வணங்குகிறாள். இதன் மூலம் பெண் என்பவள் இப்பிறவி மட்டுமல்லாமல் ஏழேழு பிறவிக்கும் தன் கணவனுக்கும் அவன் சார்ந்த உறவுகளுக்கும் அடிமையாகவே கருதப்பட்டு வந்த நிலை புலனாகிறது.

சமயவாதிகளால் ஒதுக்கப்படல்

சமயங்கள் யாவற்றிலும் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், உரிமைகளில் பாதி கூட பெண்களுக்கு இருந்ததில்லை. மணிமேகலை பௌத்த சமயத் துறவியான பின்பு எல்லாச் சமயங்களின் அறங்களையும் தெரிந்து கொள்ளத் துணிகிறாள். ஆனால்,

“இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்கென”
(மணி26: 68-69)

என கண்ணகி மற்றும் மணிமேகலாத் தெய்வத்தாலும் (மணி 10: 77-80) அறிவுறுத்தப்படுகிறாள். எனவே சமயங்கள் பலவற்றிலும் பெண் எதிர்ப்பு நிலை இருந்துள்ளதை அறிய முடிகிறது. சமயவாதிகள் தத்துவங்களை அறிந்திருந்த போதிலும் பெண் பற்றிய உண்மையை உரிமையை அறியாதிருந்த நிலை புலப்படுகிறது.



மறைக்கப்பட்ட பெண் காதல்

மணிமேகலைத் துறவு எனப்பெயரிட்ட இக்காப்பியம் மணிமேகலையின் துறவினைக் குறித்தது மட்டுமல்ல. அவள் தம் காதல் உணர்வுகளை மறைத்ததுமாகும். பெண்ணின் இயற்கை உணர்வுகளை மணிமேகலையும் பெற்று,

“புதுவோன் பின்றை போனது என்னெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை”
(மணி 5:89-90)

என்று கூறுகிறாள். உதய குமரன் தன் அன்பு நெஞ்சைப் பறித்துச் சென்றதை அவள் கூறும் முன்னே சாத்தனார்,

“இதுவே ஆயின் கெடுக தன் திறமென” (மணி 5: 91)

கூறச் செய்கிறார். எனவே ஒரு பெண் தன் காதலைக் கூட வெளிப்படுத்த முடியாத விதிக்கப்பட்ட வாழ்விற்குள் அது துறவோ கைம்மையோ இல்லறமோ அதற்குள்ளேயே வாழ வேண்டுமென கட்டளை பிறப்பித்திருந்தமைத் தெரிய வருகின்றது.


பிற பெண்ணடிமை நிலைகள்

மணிமேகலைக் காப்பியத்தின் வழி மேற்சொன்னவை மட்டுமின்றி இன்னும் பிற பெண்ணடிமை நிலைகளையும் நாம் காண முடிகிறது.

* உதய குமரனைக் கொன்றவன் காஞ்சனன். இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்தவள் மணிமேகலை. ஆயினும் கொலை செய்த காஞ்சனனை விடுத்து மணிமேகலை மட்டுமே கைது செய்யப்படுவது கவனிக்கத்தக்கது.

* உதய குமரனின் பெற்றோர் மாவண்கிள்ளி, இராசமாதேவி ஆவர். உதய குமரன் இறந்ததையும் அதற்குக் காரணம் மணிமேகலை என்பதையும் அறிந்த இவர்களில் இராசமாதேவி மட்டுமே பழிவாங்கத் துடிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே பெண்ணே பெண்ணுக்கு எதிரி, சூழ்ச்சி செய்பவளாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

* மணிமேகலை முற்பிறவியில் இலக்குமியாகப் பிறந்து துயரத்திற்கு உள்ளானாள். இப்பிறவியிலும் பெண்ணாகப் பிறந்து பல பாடுகளைப் பட்டுவிட்டாள். அடுத்தப் பிறவியில் இவள் ஆணாகப் பிறந்தால் மட்டுமே (மணி 21: 15-176) இவள் வாழ்வு சிறக்கும் என எண்ணிய சாத்தனாரின் எண்ணம் சிந்திக்கத் தக்கது.

* பெண்களை விருந்து பொருளாக மது மாமிசத்தோடு விருந்தினருக்கு தரும் நிலையை நாம் சாதுவன் வழி (மணி 16:76-77) அறிய முடிகிறது.

எனவே மணிமேகலைக் காப்பியத்தின் வழி பெண்ணை அடிமையாகப் பாவித்த பல சூழல்களைக் காண முடிகிறது.

முடிவுரை

மணிமேகலைக் காப்பியத்தின்வழிப் பெண்ணடிமை நிலைகள் பல அறிய வருகின்றன. அதாவது பரத்தையர் குலப் பெண்கள் தாங்கள் விரும்பாத போதிலும் அத்தொழிலையே செய்ய வற்புறுத்தப்பட்டமை, அனைத்துப் பிறவியிலும் கணவனுக்கு அடிமையாதல், சமயவாதிகளால் ஒதுக்கப்படல், பெண் மனம் மறைக்கப்படல், சூழ்ச்சி வஞ்சகம் செய்பவளே பெண் எனல், செய்யாத குற்றத்திற்காகக் கைது செய்யப்படல், விருந்துப் பொருளாதல் முதலிய பல பெண்ணடிமைக் கூறுகளை நாம் மணிமேகலைக் காப்பியத்தில் காண முடிகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p130.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License