இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு

மு. பூங்கோதை


சங்க இலக்கிய வரிசையில் இடம் பெற்றுள்ள பத்துப்பாட்டு பண்பாடும் கலையும் நிரம்பிய வரலாற்றுப் பெட்டகமாகும். அவற்றுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில், சங்ககால மக்கள் வாழ்ந்த சூழலில் எழுந்த, எழுப்பப்பட்ட ஒலிகளை அறிவதை ஆய்வு நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.

மதுரைக்காஞ்சி

சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களில் ஆறாவதாக இடம் பெறுவது மதுரைக்காஞ்சி ஆகும். 782 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இடையிடையே வஞ்சியடிகளும் விரவி வந்துள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமை தத்துவங்களை அறிவுறுத்துவதற்காக மாங்குடி மருதனார் பாடியது ஆகும். மதுரையை ஆண்ட மன்னனுக்கு காஞ்சித்திணை கூறப்பட்டதால் மதுரைக்காஞ்சி எனப்பெயர் பெற்றது.

ஒலிச்சூழல்கள்

மதுரைக்காஞ்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிகளை,

* அஃறிணை சார்ந்து எழும் ஒலிகள்

* உயர்திணை சார்ந்து எழும் ஒலிகள்

என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.

அஃறிணை சார்ந்து எழும் ஒலிகள்

கடல்

அகன்ற நீர்ப்பரப்பில் உயர்ந்து வருகின்ற அலைகளைக் கொண்டது கடலாகும். பேரோசையைக் கொண்டது கடல் என்பதை ஒலி, முழங்கு போன்ற சொற்களைக் கொண்டு மாங்குடி மருதனார் பதிவு செய்திருப்பதை,

“ஓங்குதிரை வியன்பரப்பின்
ஒலி முந்நீர் வரம்புஆக”
(மது.கா,1-2)

“முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு” (மது.கா.,199)

“முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்” (மது.கா.,315)

என்ற அடியின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.



பறவை

பறவைகள் எழுப்புகின்ற ஒலியானது இசையாக இருந்தது மகிழ்ச்சியை அளித்தது என்பதை,

“புள்இமிழ்ந்து ஒலிக்கும் இசையே” (மது.கா.,111)

என்ற அடியின் வாயிலாக மருதனாரின் ஒலிகளை உற்று நோக்கிய திறத்தை அறிந்து கொள்ள முடிகின்றது. உயர்ந்த மலைகளில் மயில்கள் ஓசை எழுப்பி மகிழும் என்பதை,

“…………….உயர்சிமையத்து
மயில்அகவும் மலிபொங்கர்”
(மது.கா.,332-333)

என்ற அடி உரைக்கின்றது. மருத நிலத்தில் பலவகையான ஒலிகள் எழுந்த சூழலில் குருகுப் பறவையின் ஒலி எழுந்ததை,

“குருகுநரல மனைமரத்தான்” (மது.கா.,268)

என்ற அடியின் வாயிலாக பறவைகளின் ஒலியை மதுரைக்காஞ்சியில் ஆசிரியர் கூறியுள்ள திறத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

வண்டு

மென்மையான இலைகளையுடைய ஆம்பல் பூக்களில் வண்டுகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன என்பதை,

“மெல்லிலை அரிஆம்பலொடு
வண்டுஇறை கொண்ட கமழ்பூம் பொய்கை”
(மது.கா.,252-253)

என்ற அடியின் வாயிலாக வண்டின் ஒலியை அதன் சூழலோடு கூறிய முறையை அறிந்து கொள்ள முடிகின்றது.

அருவி

மலையில் இருந்து வீழ்கின்ற அருவியின் ஒலி மலையில் எதிரொலித்து ஒலித்தது என்பதனை,

“இலங்குவெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட” (மது.கா.,299)

என்ற அடியின் வாயிலாக அருவி எழுப்புகின்ற ஒலியை உற்றுநோக்கி பதிவு செய்துள்ள மருதனாரின் செவித்திறனை அறிந்து கொள்ள முடிகின்றது.



நெற்பயிர்

மதுரையில் உள்ள முதுவெள்ளிலை என்ற ஊரில் மழை வளத்தால் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து ஒன்றோடு ஒன்று உரசி ஒலி எழுப்புகின்றன. இதனை,

“வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை……”
(மது.கா.,110-111)

என்ற அடியின் வாயிலாக நெற்பயிர்கள் அதிகமாக வளர்ந்து ஓசை உண்டாக்குவதையும், மதுரையின் இயற்கை வளத்தையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

புலி

கரிய நிறத்தினை உடைய பன்றியை புலி அடித்துக் கொன்று வேட்டை ஆடுகின்ற போது உண்டாகின்ற ஒலியினை,

“……….இருங்கேழ்
ஏறுஅடு வயப்புலி பூசலோடு”
(மது.கா.,297-298)

என்ற அடியின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

உயர்திணை சார்ந்து எழும் ஒலிகள்

“உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே“ என்ற தொல்காப்பிய வரிப்படி மக்கள் எழுப்புகின்ற ஒலிகள் உயர்திணை சார்ந்து எழும் ஒலிகள் என்று குறிப்பிடப்படுகின்றது.

வேலை செய்பவர்கள் எழுப்பும் ஒலிகள்

நீரை முகந்து இறைக்கின்ற தொழிலாளர்கள் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக பாட்டு பாடி வேலை பார்ப்பதால் எழும் ஓசையை,

“நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்

பாடுசிலம்பும்……..”
(மது.கா.,89-90)

என்ற வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. வயல் நிலங்களில் செழிப்பாக வளர்ந்த நெற்பயிர்களை கதிர் அறுப்போர் எழுப்புகின்ற ஆராவாரத்தை,

“…………..அரிநர் கம்பலை” (மது.கா.,110)

என்ற அடி உணர்த்துகின்றது. கடலிலே சென்று மீன்களை வேட்டையாடி கரைவந்து சேரும் மீனவர்கள் ஆரவாரம் செய்வதை,

“நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை” (மது.கா.,116)

என்ற அடி உணர்த்துகின்றது.



போர் செய்பவர்கள் எழுப்பும் ஒலிகள்

மதுரையின் தென்பகுதியில் வஞ்சினங்களைக் கூறிக்கொண்டு ஆரவாரம் செய்யும் மக்கள் இருப்பதை,

“ஒன்றுமொழி ஒலிஇருப்பின்
தென்பரதவர் போர்ஏறே”
(மது.கா.,143-144)

என்ற அடி உணர்த்துகின்றது. பாண்டிய மன்னன் பகைவர்கள் நடுங்கும் வண்ணம் அகன்ற வானில் ஆரவாரம் முழங்க மழை போல் அம்புகளை எய்தான் என்பதை,

“அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ
பெயல் உறழக் கணைசிதறி”
(மது.கா.,182-183)

என்ற அடி விளக்குவதை அறியமுடிகின்றது.


உயிரினங்களை விரட்டுகின்ற போது எழும் ஒலிகள்

மணி போன்ற நிறமுடைய அவரையினது தளிரை மேய வருகின்ற காட்டுப்பசுவை விரட்டுகின்ற கானவர்கள் ஆரவாரம் செய்வதை,

“மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்”
(மது.கா.,292-293)

என்ற அடியானது விளக்குகின்றது.

வியாபாரம் செய்யும் போது எழும் ஒலிகள்

பெரிய உப்பங்கழியில் உப்பு வயல்களில் வெள்ளை உப்பை விற்கின்ற வியாபாரிகள் எழுப்புகின்ற ஓசையை,

“இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலிஓவாக் கலியாணர்”
(மது.கா.,117-118)

என்ற அடி உணர்த்துகின்றது.

விழாக்கள் கொண்டாடுவதால் எழும் ஒலிகள்

திருவிழாக்கள் கொண்டாடும் போது ஏழாம் நாள் திருவிழாவின் போது விழாவின் நிறைவாக தீவினைகளைக் கழுவ நீராடல் இருக்கும். அந்நாளில் மிகுந்த ஆராவாரம் நிகழும் என்பதை,

“கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே”
(மது.கா.,427-428)

என்ற வரியின் வழி அறிய முடிகின்றது.

கூத்து நிகழ்வதால் உண்டாகும் ஒலி

குரவைக்கூத்து

மணல் பரந்து இருக்கின்ற கடற்கரைச் சோலையில் பரதவர் மகளிர் ஆடும் குரவைக் கூத்தினால் எழும் ஓசை,

“மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப”
(மது.கா.,96-97)

என்ற வரியின் வழி அறியமுடிகின்றது.

முடிவுரை

மாங்குடி மருதனார் அஃறிணை சார்ந்து எழும் ஒலிகளையும், உயர்திணை சார்ந்து எழுகின்ற ஒலிகளையும் உற்றுநோக்கி மதுரைக்காஞ்சியில் பதிவு செய்துள்ள திறத்தினை அறியமுடிகின்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p131.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License