இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

இசுலாமியப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் புதுமைகளும்

செ. சாந்தி


முன்னுரை

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருட்களுள் ஏதேனும் ஒன்று குறைந்து காணப்படும் இலக்கியம் சிற்றிலக்கியம் எனப்பட்டது. இது 96 வகைப்படும். சிற்றிலக்கியம் என்ற சொல்லாட்சி வழக்கிற்கு வருவதற்கு முன்னர் ‘பிரபந்தம்’ என்ற வடமொழிச் சொல்லாட்சி காணப்பட்டது. இது ‘கட்டப்பட்டது’ என்ற பொருளைத் தருகிறது. கிடைக்கப்பெற்ற இலக்கியங்கள் அனைத்துமே ஏதோ ஓர் இலக்கை முன்னுறுத்திக் கட்டப்பட்ட நிலையில் பிரபந்தம் என்ற சொல்லாட்சி சிற்றிலக்கிய வகையை மட்டும் சுட்டவில்லை. எனவே ‘சிறுபிரபந்தம்’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தும் முறை வழக்கிற்கு வந்தது. சிற்றிலக்கியங்களுள் காலந்தோறும் மாற்றங்களையும் புதுமைகளையும் கொண்டு விளங்குவதாக பிள்ளைத்தமிழ் மட்டுமே அமைந்துள்ளது.

இதற்கான தோற்றத்தினைத் தொல்காப்பியம்;

“குழவி மருங்கினும் கிழவதாகும்” (1) (தொல்.புறத்.24)

என்று குறிப்பிடுகிறது.

இசுலாமும் பிள்ளைத்தமிழும்

‘இஸ்லாம்’ என்ற சொல்லானது ‘சில்ம்’ என்ற அரபு வேர்ச்சொல்லிருந்து பெறப்பட்டதாகும். அதற்குச் சாந்தி, பரிசுத்தம், பணிவு, கீழ்ப்படிதல் போன்ற பல பொருள்கள் காணக்கிடைக்கின்றன. எனினும், “இறைவனுடைய ஆணைக்குப் பணிதல் என்றும் அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்றும் பொருள்” (2) என்ற குலாம் முகம்மதுவின் கூற்றும் இங்கு உணரத்தக்கதாகும்.

இசுலாமியர்கள் மாலை, சிந்து, கும்மி, தாலாட்டு, ஞானப்பாடல்கள், கீர்த்தனைகள் முதலிய இலக்கிய வகைகளைப் படைத்துத் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். இவ்விலக்கிய வகைகள் தவிர, பிள்ளைத்தமிழ் நூல்களையும் இயற்றியுள்ளனர். இவ்வகையில் ஏறத்தாழ 32 பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அவற்றுள் பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் மூன்று மட்டுமேயாகும். மீரான் சாஹிபு அவர்களால் ‘பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழும்’ (1920), கவிஞர் கா.மு.ஷெரிப் அவர்களால் ‘ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழும்’ (1991), ஆதிரை தாஹா அவர்களால் ‘நாகூர் செய்யது சுல்தான் பீவி பிள்ளைத்தமிழும்’ (1994) இயற்றப்பட்டுள்ளன. இப்பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் புதுமைகளையும் எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.



மாற்றங்கள்

பழமையைக் கைவிடாது, புதுமையை ஏற்றுக் கொள்ளும் மாற்றமானது வளர்ச்சியின் அடையாளமாகும். “நூலாசிரியர்கள், காலமாற்றம், சமூக மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றியதோடு மட்டுமல்லாமல் நூலின் அடிப்படைக் கோட்பாடுகளையும் மாற்றியுள்ளனர்” (3) என்னும் கா. மீனாட்சி சுந்தரம் அவர்களின் கூற்று இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

இம்மூன்று பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களும், பாடல் எண்ணிக்கையிலோ, பருவ வைப்பு முறைகளிலோ மாற்றங்களின்றி கருத்தமைவுகளில் மட்டும் மாற்றத்தோடு காணப்படுகின்றன.

காப்புப்பருவம்

பாட்டுடைத் தலைமக்களைத் தீய சக்திகளிடமிருந்து காக்குமாறு இறைவனிடம் வேண்டுவது காப்புப்பருவம் ஆகும். இப்பருவத்தில் காக்கும் தொழிலைச் செய்யக்கூடிய திருமாலை இப்பருவத்தின் முதற் காப்புக் கடவுளாகக் கொண்டு பாடப்படுவது பிள்ளைத்தமிழின் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அவரையடுத்து விநாயகர், சிவன், முருகன், அம்மன் முதலியோரைப் பாட வேண்டுமென்று ‘பன்னிரு பாட்டியல்’ எடுத்துரைக்கிறது. ஆனால் இசுலாமியப் பிள்ளைத்தமிழ் நூல்களில் பிற சமயக் கடவுளரை, இஸ்லாத்தோடு தொடர்புடையோரைக் காக்குமாறு குறிப்பிடுவது மார்க்கக் கொள்கைக்கு மாறானது என்பதால், இந்நிலை இஸ்லாமியப் பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம் பெறவில்லை. இதனால் இறைதூதர் மற்றும் பாட்டுடைத் தலைவியரின் உறவினர்களிடம் காப்பு வேண்டுவதான மரபு காணக்கிடைக்கின்றது. சான்றாக, சுல்தான் பீவி பிள்ளைத்தமிழின் காப்புப் பருவமானது அவரது கணவரான யூசுபின் பரம்பரையினரைக் கூறி அவரிடம் காப்பு வேண்டுமாறு பாடப்பெற்றுள்ளது.



முத்தப்பருவம்

பாட்டுடைத் தலைமக்களிடம் முத்தம் தருமாறு அமைத்துப்பாடுவது முத்தப் பருவமாகும். இசுலாமியச் சமயத்தோடு தொடர்புடைய பாட்டுடைத் தலைவியரிடம் ‘முத்தம் தருக’ என்று பாடுவது மரபு மீறிய செயலாகக் கருதப்படுவதால், இசுலாமியப் புலவர்களுக்குப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் முத்தப்பருவம் பாடுவது சிக்கலானப் பணியாக இருந்துள்ளது. எனவே,

1. ‘பாட்டுடைத் தலைவியின் முத்தத்திற்கு விலை இல்லை’ என்று உயர்வாகக் கூறியும்

2. ‘பாட்டுடைத் தலைவியின் முத்தம் அவர்தம் கணவருக்கு உரித்தாகுக’.

என்றவாறு கூறிச் செல்வதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

“மகரசலராசியில் விளைகின்ற முத்துக்கு
மண்மீது விலையுண்டு
... ... ... ... ...
பச்சை மயிலொத்த திருபாத்திமா நங்கையே
பதுமவாய் முத்தமருளே”
(4)

என்றவாறு பாத்திமாநாயகி பிள்ளைத்தமிழிலும், சுல்தான் பீவி பிள்ளைத்தமிழிலும் அமைந்துள்ளதைச் சான்றுகளாகக் காட்டலாம்.

“யூசுபு சீர் கரம் பற்றிச் சேர்ப்பீர் முத்தமே”

என்றவாறு சுல்தான் பீவி பிள்ளைத்தமிழ் அமைந்துள்ளதைச் சான்று காட்டலாம்.



அம்புலிப்பருவம்

பாட்டுடைத் தலைமக்களையும், அம்புலியையும் ஒப்பிட்டுச் சாம, பேத, தான, தண்ட முறைகளால் அமைத்துப் பாடுவது அம்புலிப் பருவம் எனப்படும். இம்முறையே பாத்திமாநாயகி பிள்ளைத்தமிழிலும் சுல்தான் பீவி பிள்ளைத்தமிழிலும் காணப்படுகிறது. ஆனால், ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழில் நபிபெருமானின் முகத்தையும், ஆயிஷா பிராட்டியாரின் முகத்தையும், ஆசிரியர் இரு நிலவிற்கு ஒப்பாகக் கூறியுள்ள திறம் மாற்றமுடையதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை,

“அகமதர் முகமெனும் முழுநிலா முன்னே
ஆடிமகிழும் பெண் ஆயிஷாப்பெண்
செகம்புகழ் அறிவுள ஆயிஷப் பெண்நல்
திருநபி முன்னம் நிற்குங்கால்
இகமதில் இருநிலா இலங்கிடக் காண்பதாய்
இயம்புவார் நோக்கிடும் மாந்தரெல்லாம்”
(5)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.



புதுமைகள்

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே”
(6)

என்பதற்கிணங்க இசுலாமியப் புலவர்கள் பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களில் பருவ வைப்பு முறையில் மாற்றங்களின்றி, ஆனால் பொருண்மைகளில் புதுமையைப் புகுத்தியுள்ளனர். செங்கீரை, சப்பாணி, வருகை முதலான பருவங்களில் முறையே பாட்டுடைத் தலைவியை ஒரு காலை மடக்கி ஒரு கையை ஊன்றி ஆடுக என்றும், இரு கைகளைக் கொட்டியும் தளர்நடையிட்டும் வருக என்றும், அழைப்பதாகப் பாடுவதே மரபு. ஆனால் இசுஸாமியப் பிள்ளைத்தமிழில் பாட்டுடைத் தலைவியரின் குடிச்சிறப்பு, அவர்தம் கணவர் மற்றும் உறவினர்களின் வளமை, வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யுமாறு பாடியிருப்பது புதுமையானதாக அமைந்துள்ளது. இதனைக் கீழ்வரும்

“சூரர் ஜீபையரின் மனைவி தமக்கும் சோதரி” (ஆயிஷா-செங்.3)

“வெற்றி மகளப்துல்லா நற்றவப்பாலராம் வேதமஹ்மது மகளாய்” (பாத்திமா-செங்.4)

“பெருங்குடிப் பிறந்தே பெருமரும்சோதி
பெம்மான் யூசுபின்
பெருமனை இருந்தே அரும் அறம்புரிந்த
திருமகள் சுல்தானீ”
(சுல்தான்-வரு.4)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

ஊசற்பருவம்

ஊசற்பருவத்தில் பாட்டுடைத் தலைவியரை ஊசலாட வருமாறு அழைக்கும் நிலையில் ஊசல் குறித்த வருணனைகள் இடம் பெறா. ஆனால், இசுலாமியப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் பாட்டுடைத்தலைவி ஊசலாட உருவாக்கப்பட்ட ஊசலானது தந்தம், முத்து, வைரம் முதலான பொருள்களால் அணி செய்யப்பட்டுள்ளது என்றவாறு ஊசலின் பெருமை சிறப்புறக் கூறியுள்ள முறை புதுமையானதாகக் காணப்படுகின்றது. இதனை,

“சாமெனும் தேயத்துச் சந்தைதனிலே
தமனியம் சேர்த்திழைத்த தந்தப் பலகை
தக்கதாய் பார்த்து வாங்கி முத்துகள் கோர்த்த
தரமுள நல்ல வடம் சேரப் பிணைத்து
ஏம நன்னாடு விளைபச்சை வைரம்
இணைத்துள தூண்விட்டம் தேடிக் கொணர்ந்து
இந்திய வல்தொழிற் கம்மியர் கையால்
எழில்தரு பொன்னூசல்”
(7)

என்ற ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழின் பாடலடிகள் சான்றுரைக்கின்றன.



நீராடற் பருவம்

புதுப்புனலின் வருகையைக் கூறிப் பாட்டுடைத் தலைவியை நீராட அழைத்துப் பாடுவது நீராடற்பருவமாகும். ஆனால் ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழில் பேரீச்ச மர வருணனை, ஈச்ச மரங்களின் அணிவகுப்பு (நீரா.6) முதலான செய்திகள் இடம் பெற்றிருப்பது புதுமையானதாக அமைந்துள்ளது. மேலும் யூசுபு அவர்கள் சந்தனம் பொழிய சீனத்தூர் சீர்துகில் அணிந்து தலையில் நெய் பூசி திகழுவதாகவும்,

“சுல்தான் பீவியே கானம்
பாடி தோழியர் சூழ நின்றாடுக”
(நீரா.2)

என்றவாறும் அவரது வழி மரபினை (நீரா.4,5,6) பாடல்களிலும் கூறியிருப்பது புதுமையானதாக உள்ளது.

முடிவுரை

* தொல்காப்பியர் பிள்ளைத் தமிழுக்கான தோற்றத்தைக் கூறிச்சென்றுள்ளார்.

* 32 இஸ்லாமியப் பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டிருப்பினும் அவற்றுள் பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் மூன்று மட்டுமே அமைந்துள்ளன.

* பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல் எண்ணிக்கை பருவ அமைப்பில் மாற்றங்களின்றிப் புதுமைகளுடன் இயற்றப்பட்டுள்ளன.

* காப்பு, முத்தம், அம்புலிப் பருவங்களில் கருத்தமைவுகளில் மட்டும் சிறு மாற்றங்களையும் செங்கீரை, சப்பாணி வருகைப் பருவங்களில் வரலாற்று நிகழ்வுகளை இணைத்தும் ஊசல், நீராடற் பருவங்களில் பாடும் பொருண்மைகளில் சில புதுமைகளையும் இணைத்துப் பாடியுள்ளதைக் காணமுடிகிறது.

அடிக்குறிப்பு

1. இளம்பூரணர் (உ.ஆ), தொல் (புறத்) நூ. 24

2. குலாம் முகம்மது. மு, இஸ்லாம் ஓர் அறிமுகம் (பாகம்.1), ப. 1

3. புவனேஸ்வரி. வெ., 20-ம் நூற்றாண்டில் பிள்ளைத்தமிழ் நூல்கள், ப. 11

4. மீரான் சாஹிபு, பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ், முத். 1

5. ஷெரிப்.கா.மு., ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ், அம்பு. 9

6. ஆறுமுகநாவலர், நன்னூல் (காண்டிகையுரை), நூ. 462

7. ஷெரிப்.கா.மு., ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ், ஊசல். 3

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p135.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License