இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்

முனைவர் கா. ஸ்ரீதர்


தமிழரின் மரபையும் தொன்மையையும் அறிவதற்கான வரலாற்றுச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற பரந்துபட்ட மனத்துடன் வாழ்ந்த பழந்தமிழனை அடையாளம் காட்டுவதாய் உள்ளன. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மேற்கத்தியத் தாக்கம் போன்றவற்றால் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை இழந்தும், மறந்தும், தவிர்த்தும் வரும் நிலையில் சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் அன்றும் இன்றும் என்ற பொருண்மையிலான சிந்தனை ‘காலத்தின் கட்டாயம்’ என்றே கூறலாம்.

ஆற்றுப்படை இலக்கியம்

பத்துப்பாட்டில் பெரும்பான்மை பெற்றதாக ‘ஆற்றுப்படை’ இலக்கியங்கள் உள்ளன. ‘பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்புவோம்’ என்ற கோட்பாட்டைத் தமிழன் பேச்சளவில் அன்றி, வாழ்க்கையில் பின்பற்றி செயல்படுத்தியவன் ஆவான். பொருளின்றி வாடும் வறுமை நிலையிலும் பொருளின்றி வறுமையில் வாடுபவனிடம் பரிவோடு பேசி, தக்க வள்ளலையும் மன்னனையும் குறிப்பிட்டு அவரிடம் சென்றால் உனது வறுமை தீரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறவனாகப் பரிசு பெற்றவன் இருந்திருக்கிறான் என்பதை ஆற்றுப்படை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.

தன்னையொத்த சகக் கலைஞனிடம் பொறாமை கொள்ளாமல் அன்பு கொண்டு தானாகவே சென்று பரிசில் கிடைக்கும் இடத்தைக் கூறி, போக வழியும் சொல்லும் பண்பாடும், தான் பெற்ற செல்வத்தைப் பிறரது பசியைத் தீர்க்கக் கொடுத்து உதவும் ஈகையையும் காண்கையில் இவர்கள் வள்ளல்களை விட ஒரு வகையில் மேலும் உயர்ந்தவர்கள்; மேன்மைமிக்கவர்கள் என்ற எண்ணத்தை எழச் செய்கிறது.



பழக்கவழக்கங்கள்

‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று மன்னிடம் கூறும் அளவிற்குத் தன்மானம் வாய்க்கப் பெற்றவர்களாக அக்காலப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய மாண்புமிக்க புலவர்களின் இலக்கியப் பதிவில் இடம் பெற்றுள்ள அக்காலத் தமிழர்களின் பழக்க வழக்கங்களைத் தற்பொழுது மறுவாசிப்பு செய்கையில் நிகழ்காலத்திலும் பழக்கத்தில் உள்ள பழங்காலத்தவர்களின் பண்பட்ட செயல்களை அடையாளம் காண முடியும்.

ஒருவரது செயல்பாட்டிலோ அல்லது பின்பற்றலிலோ தொடர்ந்து இருக்கும் ஒன்றைப் பழக்கம் எனலாம். ஒரு கூட்டத்தினர்; ஊரார்; சமூகத்தினர் என குறுகிய வட்டத்தினரின் பின்பற்றலில் இருப்பதை வழக்கம் எனலாம். பெருத்த கூட்டத்தினரின் தொடர்ந்த மற்றும் நெடுங்காலப் பின்பற்றலுக்குரிய செயலைப் பண்பாடு என வரையறுக்கலாம்.

புரவலர்களும் கலைஞர்களும்

‘மக்களைக் காப்பதே கடமை’ என்பதை மனத்தே கொண்டு செயல்படக் கூடியவர்களாக அக்கால மன்னர்களும் நிலக்கிழார்களும் இருந்ததைப் புறநானூறு, பதிற்றுப்பத்து வாயிலாக அறியலாம். அதேபோல் புலவர்களும் கலைஞர்களும் புலன்களாகிய அறிவில் அழுக்கு இல்லாத சான்றோர்களாக வளர்ந்திருக்கின்றனர். பண்புகளால் உயர்ந்தவர்களை மட்டுமே பாராட்டுவதும், பெற்ற பரிசில் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதும் வியக்கத்தக்கதாகும். அக்காலப் புரவலர்களிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கலைஞன், ஒரு சிற்றரசனிடம் படைகளோடு சென்று அவன் செலுத்த வேண்டிய வரியைப் பெற்றுக் கொண்டு திரும்பும் பெரிய மன்னனைப் போன்று காட்சியளிப்பதாய் இலக்கியப் பதிவு உள்ளது.



கலைஞனைப் போற்றல்

‘வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள்’ என்ற அடைமொழி 21ஆம் நூற்றாண்டிலும்; புழக்கத்தில் நிலைத்ததன் வாயிலாக விருந்தினரை அக்காலப் புரவலர்கள் எங்ஙனம் போற்றிக் காத்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். புரவலன் பொருள் வேண்டி வந்த கலைஞனைக் கண்ணால் பருகி, அண்மையில் அமரச் செய்து, ஊனை வெறுக்கும் அளவிற்கு உண்ணச் செய்து, புத்தாடை வழங்கியதை ஆற்றுப்படை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

“விளங்கு பொற் கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி”
(சிறுபாண். 244-245)

“ஈற்றுஆ விருப்பின் போற்றுடி நோக்கிலும்
கையது கேளா அளவை”
(பொருநர். 151-152)

“பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க என
பூக்கமல் தேறல் வாக்குழ தரத்தர
வைகல் வைகல் கைவி பருகி”
(பொருநர் 156-157)

“மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி”
(பெரும்பாண்.478-479)

மேற்கண்ட ஆற்றுப்படை வரிகளின் வாயிலாகப் புரவலன் கலைஞனை முகமலர்ச்சியுடன் வரவேற்று, அருகிலேயே அமர்ந்து பரிமாறியதோடு, ஊட்டி விடவும் துணிகிறான். கலைஞனே, ‘போதும் போதும்’ என்று கூறும் அளவிற்கும் பல்லின் கூர்மை மழுங்கும் அளவிற்கும் புரவலன் விருந்து அளித்து மகிழ்ந்ததை அறிய முடிகிறது.

இதன் நீட்சியாக, மரபாக இன்றும் தமிழகத்தில் விருந்தினருக்கும், யாசகம் கேட்போருக்கும் அருகிலேயே அமர்ந்து அவர்களின் முகம் மகிழ்வு கொள்ளும் வகையில் உணவு பரிமாறுவதைக் காணலாம். விரும்பும் உணவுப் பொருளை அதிகம் வைத்தும், தவிர்க்கும் பொருளை விடுத்தும் பரிமாறுவதே விருந்தளிப்பின் மரபாக இருப்பது பழந்தமிழனின் விழுமியமாகவும் எச்சமாகவும் கருதலாம்.



உணவு முறைகள்

பொதுவாக உயிரினங்களின் உணவு முறையானது நிலம் சார்ந்ததாகவும், உடல், தட்பவெப்பம் மற்றும் தொழில் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும். தனித்து வாழும் ஆற்றலின்றி கூடி வாழும் சமூகப்பிராணியான மனிதனின் உணவுப் பழக்கமும் அவ்வாறேயாகும். பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்தால் காய்கறியையும் சற்று உயர்வாக இருந்தாலும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் திருவிழா மற்றும் இல்லத்து விழாக்களின் பொழுது மாமிசத்தையும் உணவாக உட்கொள்வது வழக்கமாகும்.

ஆற்றுப்படை நூல்களின் வாயிலாகப் புளியங்கறி, கருவாடு, நெல், வரகு, தினைச்சோறு, வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி, சுட்டமீன், இறைச்சி, நண்டுக் கலவை, மாதுளங்காய் மற்றும் மாவடு ஊறுகாய் போன்றவற்றைத் தமிழன் உணவாக உட்கொண்டதை அறிய முடிகின்றது.

“வாராது அட்டவாடு ஊன், புழுக்கல்” (பெரும்பாண். 100)

“குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி…
அவரை வான்புழுக்கு அட்டி பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவீர்”
(பெரும்பாண் 193-194)

என்ற பாடல் வரிகள் இன்றும் உணவுப் பழக்கத்தில் உள்ள கருவாடு, வரகுச்சோறு, பருப்புக் குழம்பு போன்றவை அன்றைக்கும் இருந்ததை மெய்ப்பிக்கின்றன.



போக்குவரத்துக் காவல்

சாலைப் போக்குவரத்திற்குச் சுங்கவரி வசூல் செய்யும் முறை சங்க காலத்திலேயே இருந்ததை,

“அணர்ச் செவி; கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின்”
(பெரும்பாண். 80-82)

என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் வாயிலாக அறியலாம். மேலும் சுங்கப் பொருள் பெறும் இடத்தையும், இடம்பெயரும் விற்பனைப் பொருட்களையும் பாதுகாக்கும் பொருட்டு வில் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. தற்பொழுது ‘நெடுஞ்சாலைக் காவல்’(Highway Patrol) என்று எழுதப்பட்ட வாகனத்தில் காவல் துறையினர் நெடுஞ்சாலையில் திருட்டு, கடத்தல், கொள்ளை, விபத்து போன்றவை நடைபெறா வண்ணம் காத்து வணிகர்களும், மக்களும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்றனர். இந்நடைமுறை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது என்பது வியப்பளிப்பதாகவே உள்ளது.

காவல் காத்தல்

‘சங்க காலம் ஒரு பொற்காலம்’ என்ற சொல்லடையை இலக்கிய வரலாற்றில் பரவலாகக் காணலாம். ஆனால் அக்காலத்தில் வீடு மற்றும் உடைமைகளைக் காக்கும் பொருட்டு வாழ்விடங்களைச் சுற்றி வேலி அமைத்து இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை வழி அறியலாம்.

“... ... ... முன்உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்”
(பெரும்பாண்.184-1485)

என்ற வரிகள் மூலம் அக்கால மக்கள் முள்ளுடைய மரங்களை வரிசையாக வளர்த்து வேலி போன்று அமைத்திருந்ததை அறியலாம். இன்றும் கிராமம் மட்டுமின்றி நகரங்களிலும் முட்செடிகளை வேலி போன்று வீடு மற்றும் வயல்வெளியைச் சுற்றி வளர்ப்பதைக் காணலாம். வீடு மற்றும் விளைச்சல் நிலங்களைக் காவல் காப்பதற்கு ஆங்காங்கே நாய்கள் கட்டப்பட்டிருந்தையும், “தொடர்நாய் யாத்த துன்அருங் கடிநகர்” என்ற பாடல் வரிமூலம் அறியலாம். மேலும், மனிதனின் அடிப்படைத் தேவையான நீர் நிலைகளைக் காவல் காப்பதற்கு வீரர்களை நிறுத்தியதையும்,

“கோடை நீடினும் முறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின்”


என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

கைக்குற்றல் அரிசி

இயந்திர மயமாகிவிட்ட இக்காலத்தில் ‘நெல்’ ஆலைகளில் இயந்திரங்களின் மூலம் பதப்படுத்தப்பட்டு, அரிசியாகி மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. அரிசியின் முனைகளில் தான் நல்ல சத்து இருக்கிறது. இயந்திரங்களுக்குள் நெல் சுழலும் பொழுது அவை மழுங்கடிங்கப்படுகிறது. அதனால் இன்றும் சிலர் உரலில் உலக்கை கொண்டு கையால் முற்றிய நெல்லில் சமையல் செய்து உண்பதைக் காணலாம். இவ்வழக்கமும் பழங்காலத்தில் இருந்ததை,

“இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்ந்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு”


என்ற ஆற்றுப்படை வரி மூலம் அறியலாம்.

முடிவுரை

சமூகப் பிராணியான மனிதன் ‘போலச் செய்தல்’ பண்பிற்கு உட்பட்டவன் ஆவான். பழங்காலத் தமிழனின் பழக்கத்தில் இருந்த பல செயல்பாடுகள், செயல் முறைகள் அறிவியல் வளர்ச்சி கண்ட நிலையிலும் நாகரீகம் மேன்மை கண்ட பின்னும் தற்பொழுது நடைமுறையில் இருக்கிறது. இது பழங்காலத் தமிழனின் பண்பட்ட வாழ்க்கை முறையையே பறைசாற்றுவதாய் உள்ளது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p136.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License