இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

அத்துச்சாரியை

சு. வினோதா


முன்னுரை

தொல்காப்பியர் வரையறுத்துள்ள சாரியைகளுள் மூன்றாவதாக இடம்பெறுவது அத்துச்சாரியை. அத்துச்சாரியை பெரும்பான்மை மகர ஈற்றுச் சொற்களை அடுத்துத் தோன்றுகின்றது. அத்துச்சாரியை சில குறிப்பிட்ட சொற்கள், மற்றும் குறிப்பிட்ட ஈறுகளை அடுத்துத் தோன்றும் என்பது தொல்காப்பியர் கருத்தாகும். மேலும் அத்துச் சாரியை வேற்றுமை உருபுகளோடு புணரும் தன்மைகளையும் பிற சொற்களோடு அவை புணரும் போது ஏற்படும் மாற்றங்களையும் பிற சாரியைகளோடு இணைந்து வரும் தன்மைகளையும் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். அவ்வாறு அத்துச் சாரியை தோன்றும் சூழல், புணரும் தன்மை, உறும் மாற்றங்களாகத் தொல்காப்பியர் வரையறுத்துள்ள செய்திகளை ஆராய்வதாக இப்பகுதி அமைகின்றது.

அத்துச் சாரியையின் இடங்களும் உறும் மாற்றங்களும்

அத்துச் சாரியை தோன்றும் இடங்களாகத் தொல்காப்பியர் சில ஈறுகளையும் பெயர்களையும் வரையறுத்துள்ளார்.

* மகர ஈற்றுச் சொற்களை அடுத்தும்

* அழன், புழன், கலம் என்னும் அளவுப் பெயர்கள், மகப்பெயர், ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர், நிலா, பனி, வளி, மழை, விண், வெயில், இருள் என்னும் பெயர்கள் நாட்பெயர்கள் ஆகிய பெயர்ச்சொற்களை அடுத்தும்

* மகர ஈற்றுச் சொற்கள், அ, ஆ என்னும் ஈற்றையுடைய மரப்பெயர்ச்சொற்கள் ஆகிய ஈற்றுச் சொற்களை அடுத்தும் அத்துசாரியை தோன்றும் என்பது தொல்காப்பியரது கருத்தாகும்.



அத்துச்சாரியையின் செயல்பாடுகள்

அத்துச்சாரியை, ஐந்து நிலைகளில் செயல்படுகின்றன.

* வரையறுக்கப்பட்ட பெயர்கள்

* வரையறுக்கப்பட்ட ஈறுகள்

* பிற சாரியைகளோடு இணைந்து வரல்

* உருபுகளொடு இணைந்து செயல்படல்

* புணர்ச்சியின் போது உறும் மாற்றங்கள்

என்னும் ஐந்து நிலைகளில் அத்துச் சாரியை செயல்படுவதைத் தொல்காப்பிய விதிகள் உணர்த்துகின்றன.

வரையறுக்கப்பட்ட பெயர்கள்

அழன், புழன், என்னும் பெயர்கள் கலம் என்னும் அளவுப் பெயர், மகப்பெயர், ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர், நிலா, பனி, வளி, மழை, விண், வெயில், இருள் என்னும் பெயர்கள் நாட்பெயர்கள் ஆகிய பெயர்ச்சொற்களை அடுத்து அத்துச் சாரியை தோன்றும் என்பது தொல்காப்பியரது கருத்தாகும்.

‘அழன் புழன்’ என்னும் சொற்களை அடுத்து அத்துச்சாரியை அல்லது ‘இன்’ சாரியை தோன்றும்.

“அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்தது என்ப உணரு மோரே”
(தொல் -எழு-உரு-194)

என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது.

அழன் + ஐ , அழன் + அத்து+ஐ = அழத்தை

புழன் + ஐ , புழன் +அத்து+ஐ = புழத்தை

என்னும் சொற்புணர்ச்சி அழன், புழன் என்னும் சொற்களை அடுத்து ஐ என்னும் வேற்றுமை உருபு தோன்றும் போது இரண்டையும் இணைத்து ஒலிப்பதற்கு எளிமையாக அத்துச் சாரியை தோன்றுவதனைக் காட்டுகின்றது.

‘மக’ என்னும் பெயர்ச்சொல்லை அடுத்து ‘இன்’ சாரியை அல்லது ‘அத்து’ச் சாரியை தோன்றும் என்பது தொல்காப்பிய விதியாகும்.

“மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை” (தொல் -எழு-உரு-219)

“அத்து அவண் வரினும் வரைநிலை இன்றே” (தொல் -எழு-உரு-220)

என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது.



மக +கை , மக+அத்து+கை = மகத்துக்கை

என்னும் சொற் புணர்ச்சி ‘மக’ என்னும் சொல், கை என்னும் சொல்லோடு புணரும் போது அவ்விரண்டையும் இணைத்து ஒலிக்க இடையில் அத்துச் சாரியை தோனறுவதனைக் காட்டுகின்றது.

‘ஆயிரம்’ என்னும் மகர ஈற்று எண்ணுப்பெயரை அடுத்து வேறு எண்ணுப்பெயர்கள் இடம்பெறும் போது இடையில் அத்துச் சாரியை தோன்றும் என்பது தொல்காப்பிய விதி

“அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி
ஒத்த எண்ணும் முன்வரு காலை”
(தொல் -எழு- புள்ளி மயங் -219)

என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது.

அந்த ஆயிரம் என்னும் சொல் அடையொடு தோன்றினும் அத்துச் சாரியை தோன்றும் நிலையில் எவ்வித வேறுபாடும் இருக்காது. (தொல் -எழு- புள்ளி மயங் -220)

பதின் +ஆயிரம்+ஒன்று , பதினாயிரம் +அத்து+ ஒன்று = பதினாயிரத்தொன்று

என்னும் சொற் புணர்ச்சி ஆயிரம் என்னும் சொல் அடையொடு தோன்றி, பிற எண்களுடன் புணரும் போது இடையில் அத்துச் சாரியை தோன்றும் அமைப்பிற்குச் சான்றாகின்றது.

இயற்கைப் பொருள்களைக் குறிக்கும் நிலா, பனி, வளி, மழை, விண், வெயில், இருள், என்னும் பெயர்களையும் நாட்பெயர்களையும் அடுத்து அத்துச்சாரியை தோன்றும் என்பது தொல்காப்பிய விதியாகும். இவற்றுள் பனி, வளி, மழை, ஆகிய சொற்கள் அத்துச் சாரியை அல்லது இன் சாரியை பெற்றுப் புணரும். (தொல் -எழு-229, 242, 243, 288, 306, 378, 403, 332)

* பனியிற் கொண்டான்; பனியத்துக் கொண்டான்

* நிலாத்துக் கொண்டான்

* மழையிற் கொண்டான்; மழையத்துக் கொண்டான்

* வளியிற் கொண்டான்; வளியத்துக் கொண்டான்

* மழையத்துக் கொண்டான்

* விண்ணத்துக் கொட்கும்

* வெயிலத்துக் கொட்கும்

* இருளத்துக் கொட்கும்

* மகத்தாற் கொண்டான்

ஆகிய சொற்கள் இடையில் அத்துச் சாரியை பெற்றுப் புணர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.

இகர ஈற்று நாட்பெயர்ச்சொற்கள் ஆன் சாரியை பெற்றுப் புணரும்.

“நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு
ஆனிடை வருதல் ஐயமின்றே”
(தொல் -எழு- உயிர். மயங் -248)



அதைப் போல மகர ஈற்று நாட்பெயர்ச்சொற்கள் அத்துச் சாரியையம் ஆன் சாரியையும் பெற்றுப் புணரும் என்பது தொல்காப்பிய விதியாகும். இதனை

“நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
அத்தும் ஆன்மிசை வரைநிலை இன்றே
ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர்”
(தொல் -எழு- புள்ளி.மயங் -332)

மகர ஈற்று நாட்பெயர்ச்சொற்கள் அத்துச் சாரியையும் ஆன் சாரியையும் பெற்றுப் புணரும் போது நாட்பெயரின் மகர ஈறு கெடும். இதனை

மகம் + கொண்டான் > மகம் +அத்து+ஆன்+கொண்டான் = மகத்தாற் கொண்டான்

என்னும் சான்று உணர்த்துகின்றது. மேற்கண்ட செய்திகளில் அத்துச் சாரியை அல்லது இன் சாரியை , அத்துச் சாரியை அல்லது ஆன் சாரியை என்று ஒரு சாரியைக்குப் பதிலாக இன்னொரு சாரியை இடம்பெறுவதே புணர்ச்சி அமைப்பாக இருந்தது. ஆனால் மகர ஈற்று நாட்பெயர்ச்சொற் புணர்ச்சிகளில் அத்துச் சாரியையும், ஆன் சாரியையும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது. எனவே, இங்கு இடம்பெறும் ஆன்- சாரியையா? அல்லது மூன்றாம் வேற்றுமை உருபா? ஏன்ற வினா எழுகின்றது. சொற் புணர்ச்சியில் பொருளற்ற இரண்டு சாரியைகள் அடுத்தடுத்து தோன்றியுள்ளது என்று கொள்வதைக் காட்டிலும், பொருள் முழுமைக்காக ஆன் வேற்றுமை உருபம் ஒலிப்பு எளிமைக்காக அத்துச் சாரியையும் தோன்றியள்ளது என்று கொள்வதே இங்கு பொருத்தமுடையது என்று கருத இடமளிக்கின்றது.


வரையறுக்கப்பட்ட ஈறுகள்

மகர ஈற்றுச் சொற்களை அடுத்து அத்துச் சாரியை தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

“மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை” (தொல்- எழு- 186)

என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது. மகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளோடு புணரும் போது, இடையில் அத்துச் சாரியை தோன்றும். இந்நிலை மகர ஈற்றுப்பெயர்ச்சொற்களை ஒலிப்ப எளிமைக்கு உட்படுத்துவதாக அமைகின்றது.

அகர ஆகார ஈற்றையுடைய மரப்பெயர்ச்சொற்கள் கண் என்னும் ஏழாம் வேற்றுமை உருபோடு புணரும் போது இடையில் அத்துச் சாரியை தோன்றும்.

“அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு
அத்தொடுஞ் சிவணும் ஏழன் உருபே” (தொல் - எழு- 182)

என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது.

விள + கண் , விள + அத்து+கண்; = விளவத்துக்கண்

என்னும் சொற் புணர்ச்சியில் விள+கண் = விள கண் என்று புணர்ந்தால் ஒலிப்பு இடர்ப்பாடு ஏற்படும். எனவே அவ்வொலிப்பு இடர்ப்பாட்டை நீக்க, இரண்டிற்கும் இடையில் அத்துச் சாரியை தோன்றுகின்றது.

தொகுப்புரை

* அத்துச் சாரியை மகர ஈற்றுச் சொற்களை அடுத்துப் பெரும்பான்மையாகத் தோன்றுகின்றது.

* அத்துச் சாரியை நிலா, பனி, வளி, மழை, விண், வெயில், இருள், அழன், புழன், ஆயிரம், நாட்பெயர்கள், மக என்னும் பெயர் ஆகிய சொற்களை அடுத்துத் தோன்றுகின்றது.

* அத்தும் ஆனும் அடுத்தடுத்து இடம்பெறும் சூழலில் அவ் ஆன் வடிவத்தை வேற்றுமை உருபாகக் கொள்வதே பொருத்தமுடையதாகின்றது.

* குறிப்பிட்ட ஈறுகளின் அடிப்படையிலும் பெயர்களின் அடிப்படையிலும் அத்துச் சாரியை வரையறுக்கப்பட்டதைக் கொண்டு ஒலிப்ப எளிமைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தன்மையை அறிய முடிகின்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p139.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License