இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

நற்றிணை உவமைகள் புலப்படுத்தும் துன்ப மனநிலை

பெ. ஆனந்தி


எட்டுத்தொகை நூல்களுள் சிறப்பு பெற்றது நற்றிணை. இந்நூலில் வரப்பெறும் உவமைகள் வாழ்த்தல், இடித்துரைத்தல், தொழில், அரசியல், நம்பிக்கை போன்ற பல கருத்துப் புலப்பாடுகளுக்கு உதவி நிற்கின்றன. நற்றிணையில் வரப்பெறும் உவமைகள் தலைவன், தலைவி, தோழி, தாயின் துன்ப மனநிலையையும் வெளிப்படுத்துகின்றன.

1. பிரிவுத்துயர்

2. வரைவு வேண்டல்

3. வருவழி ஏதம் கூறல்

4. அலர் தூற்றல்

5. இற்செறிப்பு

முதலான பல துயர நிலைகளையும் நற்றிணை உவமைகள் புலப்படுத்தியுள்ளன. “கவித்துவ உண்மையை நன்கு முற்றும் தெரிந்ததற்கே உவமைகள் கையாளப்படுதல் வேண்டும்” என்ற எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கொள்கைக்கு ஏற்ப நற்றிணையின் உவமைகளும் பொருட் புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.

1. பிரிவுத் துயர்

சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படுவது பிரிவுத் துயராகும். அவ்வகையில் நற்றிணையின் உவமைகளின் வழி

1. பொருள்வயிற் பிரிவு

2. பரத்தையற் பிரிவு

3. களவு காலப் பிரிவு

ஆகிய மூன்று வகைப் பிரிவுகளையும் குறித்து அறிய முடிகிறது.



1.1 பொருள்வயிற் பிரிவு உணர்த்தும் உவமைகள்

பொருள்தேடிப் பிரிந்திருந்த வேளையில் தலைவனும் தலைவியும் படும் துயரினைப் பல உவமைகள் விளக்கி நிற்கின்றன.

“ஆம்பல் அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே”
(நற். 113: 11-12)

எனத் தான் பொருள்வயிற் பிரிந்தமையால் தன் தலைவி அழுது புலம்புவதை ஆம்பல் பண் ஓசைக்கு தலைவன் ஒப்பிடுகிறான். மேலும்,

“இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல மின்னி”
(நற்.214: 10-11)

என தலைவி உவமைப்படுத்துகிறாள்.

மேற்கண்ட பாடலடியில் தலைவனைப் பிரிந்து, தலைவி வருந்துவது குறித்தும், குறித்தப் பருவம் தவறியும் தலைவன் வாராதிருத்தல் குறித்தும், மழைமேகம் எள்ளி நகைப்பது போல மின்னுவதாகத் தலைவி குறிப்பிடுகிறாள். இவ்வகையிலான உவமைகளின் வழித் தலைவன், தலைவியின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

1. 2 பரத்தையற் பிரிவு உணர்த்தும் உவமைகள்

கற்பு வாழ்வில் தலைவன் பரத்தையரை நாடிச் செல்வது தலைவிக்கு துயரைத் தரும். அவ்வேளையில்,

“மாஇருள் முள்ளுர் மன்னன் மா ஊர்ந்து
எல்லித் தரீஇய இன நிரைப்
பல்ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே”
(நற். 291: 7-9)

எனத் தலைவி முள்ளூர் மன்னன் முன் எதிர்த்து நிற்க ஆற்றாது, அவன் பகையெல்லாம் அழிந்தது போலத் தன் நலத்தையெல்லாம் இழந்து விட்டதாகத் தலைவி தன் வருத்தத்தைக் கூறுவது குறிப்பிடத் தக்கது. மேலும்,

“வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே”
(நற்.270: 9-10)

எனத் தலைவனின் பரத்தையற் பிரிவு, வெற்றி பெற்ற நன்னன் தோல்வி அடைந்த எதிரி நாட்டுப் பெண்களின் கூந்தலை அறுத்து வருவதை விடக் கொடுமையானது என உவமைப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பரத்தையற் பிரிவால் ஏற்படும் தலைவியின் மனத்துயரை வெளிப்படுத்தும் பல உவமைகளும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.



1. 3 களவு காலப் பிரிவு

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தப் பின் ஏற்படும் பிரிவு களவு காலப் பிரிவு ஆகின்றது. இப்பிரிவு குறித்து நற்றிணையிலும் பல உவமைகள் அமையப் பெற்றுள்ளன.

“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய பலவே”
(நற். 136: 2-4)

என்ற பாடலடி உவமைகள் தலைவியின் களவு காலப் பிரிவினைத் தெரிவிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளன. அதாவது தலைவனின் பிரிவால் வருந்தி இருக்கும் தலைவியின் தொடி வாட்டத்தால் நெகிழ்ந்தது. இதனைக் கண்ட தந்தை நெகிழாத சிறிய தொடியை செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் தலைவி, தன் தந்தையை மருத்துவருக்கு ஒப்பிடுகிறாள். இதனைத் தலைவன் கேட்க சிறைப்புறமாகக் குறிப்பிடுகிறாள். இதன் வழி களவுகாலப் பிரிவைத் தவிர்த்து விரைந்து மணமுடிக்க வேண்டுகிறாள் எனும் பொருள் புலப்படுகிறது.

2. வரைவு வேண்டல்

சங்க இலக்கியங்களில் களவினைக் கற்பாக்க பல்வேறு முயற்சிகள் தோழியாலும் தலைவியாலும் மேற்கொள்ளப்படும். இத்தகைய முயற்சியில் உவமைகள் வரைவு வேண்டல் எனும் பொருளைப் புலப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

“நீர் அன நிலையன் பேர் அன்பினன் என” (நற். 347: 8)

என்ற பாடலடியில் உள்ள உவமை தலைவனை நீருக்கு ஒப்பிடுகிறது. தன் எதிர்காலம் பற்றித் தலைவி தானும், தலைவனும் சேர்ந்து விருந்து படைக்க, விருந்துண்டவர்கள் தலைவனை மேற்கண்டவாறு வாழ்த்துவதாக எண்ணி மகிழ்கிறாள். இவ்வுவமை வழி தலைவி வரைவு வேண்டுதலையும், தன் எதிர்கால வாழ்வு குறித்துச் சிந்திப்பதுமான பொருள் புலப்படுகிறது. மேலும்;

“வளராப் பார்ப்பிற்கு அலகு இரை ஒய்யும்
அசைவு இல் நோன் பறை போல செல வர”
(நற். 356: 5-6)

என்ற பாடலடியின் உவமை வரைவு மறுக்கப்பட்டத் தலைவனின் துயர நிலையை மிக அழகாகப் புலப்படுத்தியுள்ளது. இது தவிர,

“கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்”
(நற். 88: 4-5)

எனத் தலைவி வரைவு வேண்டி உருகுவதை மழையில் கரையும் உப்போடு உவமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறாக வரைவு வேண்டல் எனும் பொருண்மையை வெளிப்படுத்தும் உவமைகளும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.



3. வருவழி ஏதம் கூறல்

சங்க இலக்கியத்தில் தலைவிக்கும் தோழிக்கும் நிகழக்கூடிய துன்ப மன நிலையில் தலைவன் வரும் வழியின் கொடுமையை நினைத்தலும் ஒன்றாகும்.

“பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே”
(நற். 154: 8-10)

எனத் தலைவி நீர் தெளித்த நெருப்பு சிறிது தணிதல் போல, இவ்வளவு கொடிய வழியில் தலைவர் வாராது இருத்தலே நன்று என தன் மன வேதனையைக் குறிப்பிட்டு கொடுமையான காட்டுவழி குறித்துச் சிந்திக்கின்றாள்.

“குவளை குறுநர் நீர் வேட்டாங்கு
நாளும் நாள் உடன் கவவும் தோளே
தொல்நிலை வழீஇய நின் தொடி எனப் பல் மாண்”
(நற். 332: 2-4)

என்ற அடிகளில் நீர் வாழ் குவளை மலரைக் கொய்பவருக்கே நீர் வேட்கை எடுத்தாற் போல, தலைவன் நாளும் வந்து உன்னைக் காணவும் ஏன் உன் தொடி நெகிழ்கிறது? எனத் தோழி வினவ தலைவி அவன் வருவழியின் ஏதமே என்னை நோகச் செய்கிறது எனப் பதிலுரைக்கிறாள்.

எனவே இவ்வுவமைகளின் வழி, தலைவனைக் காணலும் அவனோடு மகிழ்ந்திருத்தலுமே தலைவிக்கு மிக்க மகிழ்வைத் தரக்கூடியது. ஆயினும் அம்மகிழ்வை விடத் துயரமே மிகுதலால் தலைவன் வரும் வழியின்கண் இருக்கின்ற கொடுமைகளின் திறம் உய்த்துணரப்படுகிறது.


4. அலர்

தலைவன் தலைவியின் களவு வாழ்வை அறிந்த ஊர்ப் பெண்கள் தூற்றுவது அலராகிறது. இதை “அம்பல் என்பது மெய்ப்பாட்டால் தூற்றலாகும், அலர் என்பது சொல்லால் தூற்றலாகும்” என விளக்குவர். இதனை நற்றிணையில்,

“அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து
ஆனாக் கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே”
(நற். 36: 6-9)

என்ற பாடலடி பதிவு செய்துள்ளது. அதாவது தலைவி பெண்டிர் பலரும் அலர் தூற்றுவதால் துயிலாது இருக்கிறாள். தலைவியைப் போல இவ்வூரும் அலர் தூற்றும் செயலை ஓய்வின்றி செய்வதால் துயிலாது இருக்கிறது என்ற பொருளை இவ்வுவமை நன்கு புலப்படுத்தியுள்ளது. மேலும்,

“கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு
நெடுநெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம்போகு ஆகுலம் கடுப்ப
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே”
(நற். 354: 8-11)

என வரும் பாடலடி உவமைகள் அலரின் வீச்சினை எடுத்துரைக்கின்றன. அதாவது உப்பு வணிகர்கள் வியாபாரத்தின் போது எழுப்பும் ஒலி போல அலர் எழுகின்றது. எனவே ஊரில் இருக்கும் அனைவருக்குமே களவு வாழ்வு தெரிந்து விட்டது என்ற பொருளைப் புலப்படுத்துகின்றது. இவ்வாறாகக் களவு காலத் துன்ப நிலை தலைவியை வாட்டிய நிலையைப் பல உவமைகளும் எடுத்துரைக்கின்றன.

5. இற்செறிப்பு

அன்னை, தலைவியின் களவு அறிந்தோ அல்லது களவினால் ஏற்பட்ட மேனி வேறுபாடு கண்டோ அவளை வீட்டினுள் காவல்படுத்துதல் இற்செறிப்பு ஆகின்றது. இந்த இற்செறிப்பு நிகழ்வின் தன்மைகளை நற்றிணை உவமைகள் பதிவு செய்துள்ளன.

“கலிமடைக் கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இற்கடை ஒழிய”
(நற். 295: 7-8)


என்ற பாடலடி உவமையில் கள்சாடி போன்ற மயக்கம் தரும் தன் இளமையும் நலனும் இற்செறிப்பினால் அழிதாகத் தலைவி கூறுகின்றாள். இதில் தலைவியின் காம வேட்கையும் பல நாளாக நீட்டித்த காவல்திறமும் புலனாகிறது. மேலும் இற்செறிப்புற்ற தலைவி

“நல் எயிலுடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போல”
(நற். 287: 3-4)

எனத் தன் நெஞ்சம் தலைவனைத் தேடிச் செல்கிறது என்கிறாள். அதாவது, பகை வீரர்கள் புறத்தே வந்து தங்கியிருக்கும் போதும் ‘நல்ல மதிலை உடையேம்’ என வலிமை குன்றாதிருக்கும் வீரன் போல தலைவியின் நெஞ்சமும் தாயின் கொடுமையை எதிர்த்து நிற்கும் மன வலிமையோடு இருத்தலைத் தலைவி இவ்வுவமை வாயிலாகக் குறிப்பிடுகிறாள்.

இவ்வாறாக இற்செறிப்பின்கண் நிகழும் துயரங்களும் தலைவியின் எண்ணங்களும் உவமைகள் வாயிலாகப் புலப்படுகின்றன.

நற்றிணையில் வரப்பெறும் உவமைகளின் வாயிலாகப் பொருட்புலப்பாடு பெறப்படுகின்றது. அதிலும் குறிப்பாகப் பல்வேறு மனநிலைகளையும், குறிப்புப் பொருள்களையும் தருவதாக உவமைகள் அமையப் பெறுகின்றன. அலர், இற்செறிப்பு போன்ற நிகழ்வுகளையும் தலைவன் வரும்வழியின் துயரையும் பல்வேறு வகையான பிரிவுத்துயரினையும் வரைவு வேண்டுதலையும் எடுத்துரைப்பதாகவும் நற்றிணை உவமைகள் அமையப் பெறுகின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p141.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License