இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

புறநானூற்றில் உணவு

முனைவர் ப. மீனாட்சி
(உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, எஸ். எஃப். ஆா் கல்லூரி, சிவகாசி)


இலக்கியமென்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. மக்களது வாழ்வியல் கூறுகளை வகைமையுடன் எடுத்துரைப்பவை இலக்கியங்கள். இவ்விலக்கியங்களை சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியமெனப் பகுக்கலாம். தொன்மையும் பொருட்செறிவுமிக்க பழந்தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியத்தின் வாயிலாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன. இத்தைகய சொற்கள் குறித்த ஆய்வு மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன. அதனை நிறைவு செய்யும் பொருட்டு புறநானூற்றை மையமாகக் கொண்டு “உணவு” என்னும் சொல் இடம்பெறும் தன்மையை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

உணவு

மனிதனது அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானதாகக் கருதப்பெறுவது உணவு. ஆண்டாண்டு காலமாக ஓடி உழைத்து ஓடாக மனிதன் தேய்வதும் ஒரு சாண் வயிற்றை நிரப்பும் உணவிற்காகவே. சங்க காலத்தைச் சார்ந்த புரவலர்கள் தம் இல்லம் தேடி வரும் புலவர்களின் வயிறும் மனதும் நிறையும் படியாக பரிசில் தருவர் என்பது கூற்று. இதில் முதலிடம் பெறுவது உணவு. இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் உணவினை உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனப் பதிவு செய்யப்பெற்றுள்ளது. இத்தகைய உணவு பல்வேறு பெயர்களால் பல வடிவம் பெற்றுள்ளதை இங்கு காண்போம்.



உணவினைக் குறிக்கும் பொதுப்பெயர்கள்

அமுது, அயினி, இரை, உண்டி, உணவு, ஊண், பதம், கிளவி, மிசைவு என்பவையாகும்.

சோறு

அடிசில் ஆக்கல், கூழ், சோறு, நிமிதல், புன்கம், மடை ஆகியவை சோற்றைக் குறித்தன.

கள்

அரி, அரியல், கந்தாரம், கலங்கல், கள், ஒனை, மட்டு என்பவையாகும்.

உவியல்- அவியல்

கருணை- பொரிக்கறி

புழுக்கல்- அவித்த இறைச்சி

யெப்பு- தாளித்தல்

இவைத்தவிர அரிசி, உழுந்து, ஐவினம் போன்ற சொற்களும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

அசும்பு

மதுவுடன் கூடிய சோறு “அசும்பு” என்பதாகும்.

“நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகும் முன்றில்”
(புறம்:114:5)

புரிமகளிரைப் பற்றிக் கபிலர் கூறும் இப்பாடலில் மதுச்சோறு பற்றிய செய்தி பதிவாகியுள்ளது.

அடிசில்

“சோறு” என்னும் பொருள்படத்தக்கது.

“அமிழ்தட் டானாக் கமழ்குய் அடிசில” (புறம்:10:7)

“சுவைக் கினிதாகிய குய்யுடை அடிசில்” (புறம்:127:7)

“குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில” (புறம்:160:7)

“நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து” (புறம்:188:5)

“குய்குரன் மலிந்த கொழுந்துவை அடிசில்”(புறம்:250:1)

“அமிழ்தன மரபி னூன்துவை யடிசில்”(புறம்:350:17)

இவ்வரிகள் சோறு என்னும் பொருளில் நெய் கலந்த, ஊன்கலந்த சோறு இரவலர்களுக்கு உணவாக அளிக்கப்பட்ட செய்தியை பதிவு செய்துள்ளன.



அமலை

அமலை என்பதற்கு ஆரவாரம், கூத்து, மிகுதி, திரளை, திருமகள், ஒலி, சுத்தம், கடுக்காய், கொப்பழ்க் கொடி எனப் பலபொருள் உண்டு.

சோற்றுத்திரளை என்னும் பொருள்படத்தக்கது.

“ஊன்சோற் றமலை யிண்கடும் பருத்தும்” (புறம் 33:14)

“அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு” (34:14)

“வைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை” (புறம்:177:14)

மாசிகம் கலந்த உணவிற்கு அமலை எனப் பெயரிட்டுச் சுட்டியமை மேற்கூறப்பட்ட வரிகள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.

அமுது

அமுது என்றால் உணவு எனப் பொருள்படும்.

“இசையிற் கொண்டா னசையமு துண்கென” (புறம் 399:21)

அயினி

உணவு எனப் பொருள்படும்.

“-பாலீவிட்
டயினியும் இன்றயின் றனனே”
(புறம்:77:8)

அவிழ்

“நீர்உலை யாக ஏற்றி மோரின்
றவிழ்பதம் மறந்து”
(புறம்:159:12)

“அவிழ்புகு வறியா தாகலின் வாடிய” (புறம்:160:5)

“புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி” (புறம்:360:18)

“மூழ்ப்பப் பெய்த முழவவிழ்ப் புழுக்கல்” (புறம்:399:9)



உணவு

“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” (புறம்:18:21)

“காலுண வாகச் சுடரொடு கொட்டும்” (புறம்:43:3)

“அல்லி யுணவின் மனைவியோ டினியே” (புறம்:250:5)

“இந்நாள் கல்லது உணவும் இல்லை” (புறம்:335:6)

“முகந்து கொள்ளு முணவென்கோ” (புறம்:396:20)

“கடிய முணவென்னக் கடவுட்குந் தோடேன்” (புறம்:399:26)

இரை

“ஊன்நசை உள்ளம் துரப்ப விரை குறித்துத் (புறம்:52:3)

“அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன” (புறம்:78:3)

“வாளை நீர் நாய் நாளிரை பெநூஉம்” (புறம்:283:2)

அளை

அளை என்பதற்கு தயிர், வெண்ணெய், மோர், முழை, புற்று, வளை, குகை, நண்டு எனப் பொருள்படும்.

அளை என்பது மோர் என்னும் பொருள் உடைத்து.

“செம்புற் றீயலின் இன்னளைப் புளித்து”
(புறம்:119:3)

தொகுப்புரை

* புறநானூறு சொல்லாய்விற்கான கலைக்களஞ்சயம் என்றே சொல்லலாம்.

* புழமையான சொற்களை இலக்கியத்தில் திறனாய்வு செய்வதன் மூலம் பொருள் நிறைந்த பழம் சொற்கள் வெளிக்கொணரப்படுகின்றன.

* ஒரு சொல் பலபொருள் மற்றும் பலசொல் ஒரு பொருள் தொடர்பான சொற்களை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

* காலமாற்றம் சொற்சிதைவுக்கான களம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

* அமலை, அவிழ் என்பன போன்ற சொற்கள் உணவிறனை குறிப்பதற்குப் பயன்படுகிறது.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p147.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License