இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

திருக்குறளின் பொருளுணர்தற்குத் தொடரமைப்புமுறை உறுதுணையாதல்

முனைவர் ப. கொழந்தசாமி
பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி.


முன்னுரை

உலகப்பொதுமறை, வான்மறை, வாழும் வள்ளுவம் என்றெல்லாம் போற்றப்படும் திருக்குறள் ஓர் அரிய அற இலக்கியப்பனுவல். ஆகவே இதில் இலக்கியத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளமை இயல்பே. அமைப்பியல், அழகியல், எடுத்துரைப்பியல், கருத்தியல் அன்னகாரணங்களால் திருக்குறளின் பல பகுதிகள் முயன்று பொருளுணரத்தக்கனவாக இயன்றுள்ளன. ஆனால் சரியான கருத்தை அறிந்தால்தான் திருக்குறளின் பயனும் பெருமையும் புலனாகும். பொருண்மையியல் அணுகுமுறையில் இத்தகைய பொருள்புரியா இடர்ப்பாட்டைக் களையலாம். இதற்கு மொழி அமைப்புகள் துணையாகும். அவ்வகையில் திருக்குறளின் பொருளுணர்தற்குத் தொடரமைப்பு முறை உறுதுணையாவதை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

செய்யுள்தொடரியல்

இரட்டை வழக்கு மொழியான தமிழில் செய்யுள் வழக்கும் உரைநடை வழக்கும் இயல்கின்றன. இவ்இரண்டிற்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுவாக, தமிழ்த் தொடரமைப்பில், எழுவாய் +செயப்படுபொருள்+ வினைமுற்று என்னும் அமைப்பில், முருகன் வள்ளியை மணந்தான் என்றவாறு தொடர்கள் இயலும். இதை முறைமாற்றி, வள்ளியை மணந்தான் முருகன், வள்ளியை முருகன் மணந்தான் என்று அமைப்பதும் ஏற்புடையதே; இதனால் நடைமாற்றம் நிகழுமே தவிர, பொருள் மாற்றமோ குழப்பமோ ஏற்படாது. அவ்வாறே தோன்றா எழுவாய் அமைய, பாலைக் குடித்தான் என்றும் தொடர்கள் அமையலாம். தமிழின் வேற்றுமை இலக்கணம் இதற்கு வாய்ப்பாகின்றது. இத்தகைய தொடரமைவுகள் செய்யுளிலும் உரைநடையிலும் பயில்கின்றன.

குறள் தொடரியல்

குறள் வெண்பா யாப்பில் இயன்றுள்ளதால் ஒவ்வொரு குறட்பாவிலும் ஏழுசீர்கள் அமைவதால் திருக்குறளின் தொடரமைப்பு யாப்பியல் கட்டுப்பாடுக்கு உட்பட்டது. ஆயினும் வள்ளுவர் இந்தக் கட்டுப்பாட்டைச் செம்மையாக வென்றுள்ளார். சான்றாக,

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடிசேராதார்" (10)

என்னும் குறட்பாவைக் கருதலாம்.

இக்குறளில், இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர். இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என்னும் முரண்பொருள் கொண்ட இரண்டு முழுத்தொடர்கள் பொருள் நிலையில் அமைந்துள்ளன. ஆனால் புறவடிவில், முதல்தொடரில் இறைவனடி சேர்ந்தார் என்னும் எழுவாயும், இரண்டாம் தொடரில் பிறவிப் பெருங்கடல் என்னும் செயப்படு பொருளும் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய குறைத் தொடர்க் குறட்பாக்களைப் படிக்கும் போது முழுத் தொடர்களைப் பொருள் நிலையில் அமைத்துக் கொண்டால் தெளிவு ஏற்படும். இதனால் ஒரு திருக்குறளில் எத்தனைத் தொடர்கள் உள்ளன எனக் காண்பதும், அவற்றுள் ஏதேனும் உறுப்புக்குறைபாடு உள்ளதா? எனஅறிந்து நிறைப்பதும் தேவையானவை என்பதை அறியலாம்.



அடுத்ததாக, ஒரு குறட்பாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்கள் இருக்கும் போது, அவற்றுக்கிடையிலான பொருள் தொடர்பை உணர வேண்டும். காட்டாக,

“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” (01)

என்னும் குறட்பாவில் உள்ள இரண்டு தொடர்களுக்கிடையிலான பொருள் தொடர்பு அறியப்பட்டால் மட்டுமே இந்தக் குறட்பாவின் கருத்தை முறையாக உணரமுடியும். இதில் எழுத்தெல்லாம் அகரமுதல. உலகு ஆதிபகவன் முதற்று என்னும் இரண்டு கொள்கைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. இந்தத் தொடர்களுக்கிடையில் அதுபோல என்னும் உவமம் அமையுமானால் கண்ணுக்குத் தெரிந்த மொழியமைப்பைக் கொண்டு கருத்துக்குப் புலனாகும் செய்தியை உரைப்பதாக இயலும். உவமம் அமையாமல் தனித்தனித் தொடர்களாக எடுத்துக் கொண்டால் தத்துவ விளக்கமாக, பொருட்களின் இயல்பை எடுத்துரைப்பதாக உணரப்படும். எனவே இத்தகைய தொடர்ப் பொருண்மை அணுகுமுறையால் பொருள் தெளிவு வாய்ப்பாகும்.

முறைமாற்றம்

எழுத்துகள் சேர்ந்து சொல்லும், சொற்கள் பொருள் தரத்தக்க முறையில் இணைந்து தொடரும் ஆக்கப்படுகின்றன. தொடராக்கத்தில் அமைப்பியல்படி இடம் பெறும் சொற்கள் உறுப்புச் சொற்கள் எனப்படுகின்றன. ஒரு தொடரின் உறுப்பாகும் சொற்கள் பொருள் ஏற்புடைமையோடு இணைய வேண்டும். இதை வழக்கு வரையறை என்பர். சான்றாக, காகிதத்தை வெட்டினான் என்றும் மரத்தைக் கிழித்தான் என்றும் கூறுவது பொருள் பொருத்தமுடையதல்ல. காகிதத்தைக் கிழித்தான்; மரத்தை வெட்டினான் என்றே அமைக்க வேண்டும். இதை அண்மையுறுப்பு என்று கூறலாம். இத்தகைய தொடர்ப் பொருண்மையை இலக்கணிகள் பொருள் கோள் என்று குறிப்பர்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (45)

என்னும் குறட்பாவில் வள்ளுவம் இல்வாழ்க்கையின் பண்பையும் பயனையும் வகுத்துரைக்கின்றது. ஆயினும் கருத்துகளைச் சுட்டும் சொற்களைத் தொடர்ச்சியாக அமைக்காமல் நிரல்நிறையாகப் பெய்துள்ளார். இத்தகைய முறைமாற்றத்தை முறைப்படுத்தித் தெளிவு பெறலாம்.



ஒரு திருக்குறளில் எத்தனை தொடர்கள் உள்ளன எனக் காண்பதும், அவற்றுள் ஏதேனும் உறுப்புக் குறைபாடு உள்ளதா? முறைமாற்றம் காணப்படுகிறதா? என அறிந்து கொள்வதும் தேவையானவை. ஒரு குறட்பாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்கள் இருக்கும் போது, அவற்றுக்கிடையிலான பொருள் தொடர்பை உணர வேண்டும். இவ்வாறு, திருக்குறளின் பொருட்செம்மையை அறியத் தொடர்ப்பொருண்மை வாய்ப்பாகின்றது.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p156.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License