Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

மருட்கையெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்களின் அகநானூற்றுத் திறன்

பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு


முன்னுரை

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர். (தொல்.மெய்.3) அவற்றுள் மருட்கையெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்பனவற்றை விரித்துரைக்கிறார். இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் மருட்கைக்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கிறது.

மருட்கை தோன்றும் களன்கள்

மருட்கையெனும் மெய்ப்பாடு தோன்றும் களனைத் தொல்காப்பியர்,

”புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (நூ.7)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

உரையாசிரியர்களின் பார்வையில் மருட்கை

மருட்கை வியப்பிற் பிறப்பது.(இளம்.மெய்.நூ.3) என இளம்பூரணரும், மருட்கையென்பது வியப்பு, அற்புதமெனினும் ஒக்கும் (பேரா.மெய்.நூ.3) எனப் பேராசிரியரும், மருட்கையாவது வியப்புறுதல். அஃது ஆராய்ச்சி முட்டுப்பாடுற்ற வழி எய்தும் அறிவு நிலையாகும். (ச.பாலசுந்தரம்.மெய்.நூ.3) என பாலசுந்தரமும், மருட்கை - வியப்பு (புலவர்குழந்தை, மெய்.நூ.3) எனப் புலவர் குழந்தையும் மருட்கையெனும் மெய்ப்பாட்டிற்கு விளக்கம் கூறியுள்ளனர். இதன்வழி, மருட்கையென்பது வியப்பு. அது ஆராய்ச்சிக்கு முட்டுப்பாடு ஏற்படும் போது எய்தும் அறிவுநிலை. இஃது அற்புதமெனினும் ஒக்கும் என்பது அறியப்படுகிறது.



புதுமை

புதுமையாவது யாதொன்றானும் எவ்விடத்தினும் எக்காலத்தினுந்தோன்றாததோர் பொருள் தோன்றிய வழி வியத்தல். அது கந்திருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வன (இளம்.மெய்.நூ.7) என இளம்பூரணரும், புதிதாகக் கண்டன (பேரா.மெய்.நூ.7) எனப் பேராசிரியரும், புது ஐமயாவது அதுகாறும் காணாததைக் கண்டலும் நிகழாதது நிகழ்தலுமாம் (ச.பாலசுந்தரம்.மெய்.நூ.7) எனப் பாலசுந்தரமும், புதிதாகக் கண்ட பொருள். இது தன்னிடத்துண்டான புதுமை பற்றி வியத்தலும், பிறரிடத்துண்டான புதுமை பற்றி வியத்தலும் என இரண்டாம்.(குழந்தை. மெய்.நூ.7) எனப் புலவர் குழந்தையும் உரை கூறுவர். இவற்றின் வழி, புதுமையென்பது எக்காலத்திலும் எவ்விடத்திலும் காணாத ஒன்றனைக் காணுதலும் கேட்காததனைக் கேட்டலும் என்பதும் இது தன்னிடமும் பிறனிடமும் தோன்றும் என்பதும் அறியப்படுகிறது. மேலும் இளம்பூரணர் புதுமையை விளக்கப் பொதுவாகவும், ச. பாலசுந்தரனார் பிறனிடம் தோன்றும் புதுமையை விளக்கவும்,

”... ... ... ... ... பெருந்தேர்யானும்
ஏறியதல்லது வந்தவாறு
நனியறிந்தன்றோவிலனே
... ... ... ... ... இல்வயின்நிறீஇ
இழிமின்என்றநின்மொழிமருண்டிசினே” (அகம்.384)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலில், நானும் விரும்பியகாதலோடு பெரியதேரில் ஏறியதை அறிந்தேன். இங்கு வந்த வருகையை நான் அறியவில்லை. முயல்குட்டிகள் தாவிக்குதித்து மகிழும் முல்லைக் காட்டில் கவர்ந்த கதிரையுடைய தினைகள் பொருந்திய சிறிய ஊரில் மென்மையான தன்மையையுடைய தலைவியின் வீட்டின் முன்பு தேரை நிறுத்தி, இறங்குக என்ற உன் சொல்லைக் கேட்டு வியப்படைந்தேன். என்பதன் வழி, புதுமையெனும் மெய்ப்பாடு வெளிப்பட்டமையை அறிய முடிகிறது. மேலும், தன்னிடம் தோன்றும் புதுமையை விளக்கப் பேராசிரியரும் புலவர் குழந்தையும்,

”மலர்தார்மார்பனின்றோற்கண்டோர்
பலர்தில்வாழிதோழியவருள்
ஆரிருட்கங்குல்அணையொடுபொருந்தி
ஓர்யானாகுவதெவன்கொல்
நீர்வார்கண்ணொடுநெகிழ்தோளேனே” (அகம்.82)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலில், தினைப்புனத்தில் ஒரு பால் நின்றோனாகிய மலர் தார்மார்பனைக் கண்டோர் பலர்.தோழியே! அவருள் அரிய இருட்கங்குலில் படுக்கையொடு பொருந்தி நீர்வாருங்கண்ணோடு நெகிழ்தோளினையுடையேன் யானொருத்தியுமே. அங்ஙனமாதற்குக் காரணம் என்னையோ?என்ற வழி தன்னிடம் தோன்றும் புதுமையை அறிய முடிகிறது.

பிறரிடம் தோன்றும் புதுமையை விளக்கப் பேராசிரியரும் புலவர் குழந்தையும்,

”மந்திநல்லவைமருள்வனநோக்கக
கழைவளர்அடுக்கத்தியவியாடுமயில்
விழவுக்களவிறலியில்தோன்றும்நாடம்” (அகம்.82)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலில், நல்ல மந்தித்திரள் ஆச்சரியப்பட்டு நோக்க மூங்கில் வளரா நின்ற மலைப்பக்கத்து உலாவியாடும் மயில் விழவுகளத்திற்புக்கு நடிக்கின்ற விறலியைப் போலத் தோன்றுகின்ற நாட்டையுடையவன் என்ற வழி பிறனிடம் தோன்றும் புதுமையை அறிய முடிகிறது.



பெருமை

பெருமையென்பது பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும் என இளம்பூரணரும், கழியப் பெரியனவாயின எனப் பேராசிரியரும், பெருமையாவது அளவையின் இகந்து கழியப் பெரிதாயினது எனக் கருதிக் கோடலாம் (பெருமை-பெருக்கம்) எனப் பாலசுந்தரனாரும், பெருமை - மிகப்பெரியது. இது, தன் கட்டோன்றிய பெருமை பற்றி வியத்தலும், பிறன் கட்டோன்றிய பெருமை பற்றி வியத்தலும் என இரண்டாம் எனப் புலவர் குழந்தையும் உரை கொள்வர். இவற்றின் வழி, பெருமை என்பது இது கண்காணாத பெரிய அளவிலானதைக் கண்டு வியத்தலாகும். இஃதுதன் கட்தோன்றல், பிறன் கட்டோன்றல் என இருவகையாம் என்பது அறியப்படுகிறது. இதில் தன்கட்டோன்றிய பெருமையை விளக்கப் பேராசிரியரும், புலவர் குழந்தையும் குறுந்.3ஆம் பாடலையும், ச.பாலசுந்தரனார் குறள்.1127 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும், பிறன் கட்டோன்றிய பெருமையை விளக்கக் குறள்.1146 ஐ ச. பாலசுந்தரனார் எடுத்தாண்டுள்ளார்.

சிறுமை

சிறுமையென்பது பிறவும் நுண்ணியன கண்டு வியத்தல். அது “கடுகின்கட்பலதுளை“ போல்வன என இளம்பூரணரும், இறப்பச்சிறியனவும் எனப் பேராசிரியரும், அளவையின் இகந்துதவச் சிறிதாயினது எனக் கருதிக்கோடல்.(சிறுமை - சிறுத்தல்) எனப் பாலசுந்தரனாரும், மிகச்சிறியது. இது, தன்னிடத்துண்டான சிறுமை கண்டு வியததலும், பிறனிடத்துண்டான சிறுமை கண்டு வியத்தலுமென இரண்டாம் எனப் புலவர் குழந்தையும் உரை கொள்வர். இவற்றின்வழி, சிறுமையென்பது ஓர் அணுவின் பல்கூறு போன்றது. அஃதாவது ஏனையவற்றைக் காட்டிலும் மிகச்சிறிது. இஃது தன்கட்டோன்றல், பிறன்கட்டோன்றல் என இரு வகையாகும் என்பது அறியப்படுகிறது. இவற்றுள் தன்கட்டோன்றும் சிறுமையினை விளக்க ச. பாலசுந்தரனார் குறள்.1233 ஐ எடுத்தாண்டுள்ளார்.

ஆக்கம்

ஆக்கம் என்பது ஒன்றன் பரிணாமங் கண்டு வியத்தல். அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மர முதலியன ஆகிய வழி வியத்தலும் நல்கூர்ந்தான் யாதொன்றுமிலாதான் ஆக்கமுற்றானாயின், அதற்குக் காரணமுரணாதலின் அது கண்டு வியத்தலும், இளையான் வீரங்கண்டு வியத்தலுமாம், பிறவும் உலகத்து வியக்கத்தகுவன எல்லாம் இவற்றின் பாற்படுத்திக் கொள்க என இளம்பூரணரும், ஒன்று ஒன்றாய்த் திரிந்தன எனப் பேராசிரியரும், ஒன்றினின்று அதற்கியலாத ஒன்று ஆதலும் ஒன்று பிரிதொன்றாய்த் திரிதலுமாம் என ச. பாலசுந்தரனாரும், ஒன்று வேறொன்றாய்த் திரிதல், ஒன்று திரிந்தொன்றாதல் எனினுமாம். இது தன்னிடத்துண்டான ஆக்கம் பற்றி வியத்தலும், பிறனிடத்துண்டான ஆக்கம் பற்றி வியத்தலுமென இரண்டாம் எனப் புலவர்குழந்தையும் உரைகொள்வர். இவற்றின் வழி, ஆக்கமென்பது ஒன்றன் பரிணாம வளர்ச்சியடைதலாகும். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதைப் போன்றது. இஃது தன்கட்டோன்றல், பிறன்கட்டோன்றல் என இரண்டாகும் என்பது அறியப்படுகிறது. இவற்றுள், தன்கட்டோன்றும் ஆக்கத்தினை விளக்கப் பேராசிரியரும், புலவர் குழந்தையும் புறம்.5 ஆம் பாடலையும், ச. பாலசுந்தரனார் குறள்.1259 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும், பிறன்கட்டோன்றிய ஆக்கத்தினை விளக்கப் பேராசிரியரும் புலவர்குழந்தையும் நாலடி.28 ஆம் பாடலையும், ச. பாலசுந்தரனார் குறள்.1120 ஐயும் எடுத்தாண்டுள்ளனர்.



முடிவுரை

மருட்கையெனும் இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் அகப்பாடல் ஒன்றினையும், பேராசிரியரும், புலவர் குழந்தையும் அகப்பாடல், குறுந்தொகை, புறப்பாடல், நாலடியார் ஆகியவற்றில் தலா ஒன்றும், ச. பாலசுந்தரனார் அகப்பாடல் ஒன்றையும், ஆறு குறள்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியரும், புலவர் குழந்தையும் ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுகளை எடுத்தாண்டுள்ளனர். உரையாசிரியர்கள் (இளம்., பேரா., ச.பால., குழந்தை) அகநானூற்றில் இரு பாடல்களையும் (82, 384), குறுந்தொகையில் (3) ஒரு பாடலையும், புறநானூற்றில்(5) ஒரு பாடலையும், திருக்குறளில் (1104, 1146, 1259, 1120) நான்கு குறள்களையும், நாலடியாரில் (28) ஒரு பாடலும் என ஒன்பது பாடல்களை இம்மெய்ப்பாட்டினை விளக்க எடுத்துக் காட்டியுள்ளனர்.

இவற்றுள் திருக்குறள் அதிகப்படியாக எடுத்தாளப்பட்டிருப்பதும் அதற்கடுத்தப்படியாக அகநானூறு எடுத்தாளப்பட்டிருப்பதும் அறிய முடிகிறது. இவற்றின் வழி உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் அகநானூற்றையும் ஏனைய இலக்கியங்களைப் போலத் திருக்குறளுக்கு அடுத்தாற்போல் எடுத்தாண்டுள்ளனர் என்பது முடிபு.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p172.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License