இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சிலப்பதிகாரத்தில் கற்பு மூலப்படிவம்

முனைவர் பா. பொன்னி
உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா்,
எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.


இயற்கையின் படைப்புகளில் மிகவும் சிக்கலான ஒன்று மனித மனம். மனிதனின் எண்ணங்கள் செயல்பாடுகள் இவற்றிற்கான உண்மையான காரணங்களை வரைறுப்பது என்பது கடினமான ஒன்றாகும். எந்த ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல்பாடுகளுக்குப் பின்னரும் அவனது சூழலும் சமூகமும் ஆழ்மனமும் இன்றியமையாத இடம் வகிக்கும். அதன் அடிப்படையிலேயே இலக்கியப் படைப்புகளில் குறிப்பிட்ட சில கருத்துருவாக்கங்கள் ஒரே அடிப்படையில் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. சிலப்பதிகாரக் காப்பியத்தில் கற்பு என்னும் மூலப்படிவம் பதிவு செய்யப்பட்டுள்ள தன்மையினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கூட்டுநனவிலிமனம்

கூட்டுநனவிலி மனம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவா் யுங் ஆவார். யுங் மனித ஆளுமையை நனவு ஈகோ (Conscious Ego), தனியா் ஈகோ (Personal Ego) கூட்டுநனவிலி (Collective or Transpersonal Unconscious) என்று மூன்று கோணங்களில் விவரித்துள்ளார்.

நனவிலி மனதிலிருந்து வேறுபட்டது கூட்டுநனவிலி மனமாகும். தனிமனித நனவிலி மன எண்ணங்கள் என்பவை அவனது நனவுமன எண்ணங்களே ஆகும். இவ்வெண்ணங்கள் காலப்போக்கில் நனவிலிமன எண்ணங்களாக மாறுகின்றன. மேலும் இவை பரம்பரை பரம்பரையாக மனித ஜீன்களின் வழியாகக் கடத்தப்பட்டு, கால எல்லை வேறுபாடுகளைக் கடந்து தங்களைத் தாங்களே வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாக விளங்குகின்றன என்பது யுங்கின் கருத்து. இத்தகைய எண்ணங்களைக் கடத்துகின்ற மனப்பகுதியே கூட்டுநனவிலி மனமாகும். இந்தக் கூட்டுநனவிலி மனம் உலகப் பொதுமை வாய்ந்தது. இக்கூட்டு நனவிலி மனதிற்குள் இருக்கும் எண்ணங்களும் உலகப் பொதுமை (Universalization ) வாய்ந்தவை. இது நனவு நிலையால் எந்த வகையிலும் உணரமுடியாத இருண்ட பகுதியாக இருக்கக் கூடியதாகும். இந்தப் பகுதியை உள ஆற்றலின் தேக்கியாக யுங் கண்டறிந்தார். அந்த ஆற்றல் பல கூறுகளாகக் கூட்டுநனவிலியில் பொதிந்து கிடக்கின்றன. இவற்றையே யுங் மூலப்படிவங்கள் என்று குறிப்பிட்டார்.

மூலப்படிவங்கள்

தொன்மைக்காலம் தொட்டு மனித இன உள் அனுபவங்களால் பெற்றமைந்த அமைப்பியல் உளக் கூறுகளே மூலப்படிவங்கள் எனலாம். இவை கருத்துருக்களாக அமைந்து அனைவரின் நனவிலிக்குள்ளே பொதுநிலையில் உள்உணா்ச்சி போல் மனதிற்குள் செயல்படுபவை ஆகும். மறுபுறம் இவை தனியரற்ற நிலையிலும் (Impersonal) விளங்குகின்றன. யுங் படைப்பு ஆளுமை என்பது தனியரற்ற நிலையுடன் தொடா்புடையது என்று குறிப்பிடுகிறார். அதாவது ஒவ்வொரு படைப்பும் கூட்டுப்படைப்பு (Collective creation) என்பது அவரது வாதம்.

தாய், அனிமா, அனிமஸ், முதல் தந்தை, சாயல், தெய்வீகக் குழந்தை, அச்சுறுத்தும் தாய், ஞான முதியவன், ஏமாற்றுக்காரன் அல்லது குறும்புக்காரன், சுயம், மண்டலம், நாயகன் இவை அனைத்தும் இடவேறுபாடு இனறிக் காணப்படும் மூலப்படிவங்கள் ஆகும் என்று யுங் குறிப்பிடுகிறார்.



மூலப்படிவங்களின் இயல்புகள்

மூலப்படிவங்களின் முதன்மையான இயல்பு திருப்பம் ஆகும். சமய சந்தா்ப்பம் கிடைத்தவுடன் இவை உடனுக்குடன் வெளிப்படுபவை. குறிப்பாகக் கனவிலும் புனைவிலும் இவை எளிதாக வெளிப்பட்டு விடும். மனிதனின் முதல் இலக்கியம் முதல் இந்நாள் உள்ள இலக்கியங்கள் வரையிலும் இவை தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தது இல்லை. செவ்வியல் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், நவீன இலக்கியம் என்று எந்த வகையான இலக்கியமாக இருந்தாலும் இலக்கிய வடிவங்களுக்கு ஏற்ப மூலப்படிவங்கள் அவற்றுள் தம்மைக் கட்டமைத்துக் கொள்கின்றன. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் கற்பு பற்றி குறிப்பிடடுள்ள கருத்துகள் கூட்டுநனவிலி மனதின் வெளிப்பாடே எனலாம்.

கற்பு மூலப்படிமம்

கற்பு என்ற மூலப்படிமத்தினை நாம் சங்க காலம் தொடங்கி இன்று வரையுள்ள இலக்கி்யங்கள் வரையிலும் காண இயலுகின்றது. சிலம்பில் கண்ணகி, கோப்பெருந்தேவி என்ற பாத்திரங்களோடு நின்று விடாமல் வஞ்சின மாலையில் இடம் பெறும் பத்தினிப் பெண்டிர் தொடா்பான கதைகளும் கற்பு மூலப்படிவத்திற்கும் கூட்டுநனவிலிக்கும் சான்றாக அமைகின்றன.

கற்பு - விளக்கம்

கற்பு என்ற சொல் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

“கற்பு என்ற சொல்லிற்கு ‘chastity’, ‘conjugal’, ‘fidelity’ ஆகிய பொருட்கள் தரப்பட்டுள்ளன. ‘Chastity’ என்பதற்குக் கன்னிமை, தூய்மை, தற்கட்டுப்பாடு என்ற பொருட்கள் தரப்படுகின்றன. ‘Conjugal’, ‘fidelity’ என்ற சொற்களுக்கு, மணவாழ்வில் கணவன் - மனைவி இருவரிடத்தும் ஏற்படும் பற்று, மாறா உறுதிப்பாடு என்ற பொருள் தரப்படுகிறது. அதாவது கணவன் மனைவியிடத்தும், மனைவி கணவனிடத்தும் பற்று மாறாமல் இருக்கும் தன்மை” (இரா. பிரேமா கற்பு - கலாச்சாரம் பக் - 7-8) என்று குறிப்பிடுவா்.



இலக்கியங்களில் கற்பு என்ற சொல்லாட்சி

அகநானூற்றில் கற்பு என்ற சொல்லாட்சி, பயிற்சி என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது.

"இகல்அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி" (அகம் 396 - 5)

என்ற பாடலடியில் தான் சொல்லிய சொல் பிழையாது போர் வெல்லும் பயிற்சியுடைய மிஞிலி என்றும்,

"வெளிறு இல் கற்பின் மண்டு அமா் அடுதொறும்" (அகம் 106 - 11)

என்ற பாடலடியில் குற்றம் இல்லாத படைப்பயிற்சியுடன் கூடிப் போர் செய்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறியலாகின்றது.

பதிற்றுப்பத்தில் கற்பு என்னும் சொல் கற்றல் என்னும் பொருளில் ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"உலகந்தாங்கியமேம்படுகற்பின்
வில்லோர் மெய்ம்மறை" (பதி 59-8 - 9)

என்ற அடியில் கற்க வேண்டியவற்றைக் கற்றவன் என்னும் பொருள்பட கற்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளமையை அறியலாகின்றது. இருப்பினும், கற்பு என்ற சொல் பெண்ணோடு தொடா்புபடுத்தப்பட்டு பெண்ணுக்குரிய பண்புகளில் ஒன்றாகச் சுட்டப்படுவதனை

“முல்லைசான்றகற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே” (நற் 142 9-10)

“நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்” (அகம் 9- 24)

“மனைமாண் கற்பின் வாணுதல் ஒழிய” (அகம் 33 - 2)

“திருநகா் அடங்கிய மாசுஇல் கற்பின்” (அகம் -114 -12)

“உவா் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி” (அகம் 136 - 19)

“முல்லைசான்றகற்பின்
மெல்இயற் குறுமகள்” (அகம் 274 13-14)

என்ற அடிகளால் அறியலாகின்றது.

சங்க இலக்கியங்கள் கணவன் இறந்த உடனேயே தானும் இறந்த பெண்கள் (புறம் 62, குறுந் 57 69) கணவனோடு உடன்கட்டை ஏறிய பெண்கள் (புறம் 240 ) ஆகியோரைச் சிறப்பிப்பதனைக் காணமுடிகிறது. வேறு சில கடமைகளுக்காக கணவனுக்குப் பின்னரும் உயிர் வாழும் பெண்கள் கைம்மை பூண்டு வாழ்ந்தமையையும் சங்க இலக்கியங்கள் (புறம் 125, 224, 237, 242, 246, 248, 249, 250, 253, 261, 272, 280, 326, 353) பதிவு செய்துள்ளன. இதன் வழி கற்பு என்பது சமூகத்தின் கூட்டுநனவிலியாக விளங்கியமையை அறியலாகின்றது. இதன் தொடர்ச்சியினைக் காப்பியங்களிலும் காணமுடிகிறது.



காப்பியங்களில் கற்பு மூலப்படிவம்

இளங்கோவடிகளின் கூட்டு நனவிலி மனத்திலும் இத்தகைய கற்பு பற்றிய மூலப்படிவங்கள் பதிந்து இருந்தமையாலே அவரது காப்பியத்தில் பெண் பாத்திரங்களைக் கற்புக்கு முதன்மை தரும் பாத்திரங்களாகப் படைத்துக் காட்டியுள்ளனா் எனலாம். சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் வஞ்சின மாலையில் இடம் பெறும் பத்தினிப் பெண்டிரின் கதைகள் கற்பு குறித்த கூட்டுநனவிலி கருத்துருவிற்குச் சிறந்த சான்றாக அமைகின்றன.

பூம்புகார் நகரத்துக் கற்புடைய மகளிர்

அஃறிணைப்பொருள்களான வன்னி மரத்தினையும் மடைப்பள்ளியையும் பேசச் செய்தல், கணவன் என்று கூறப்பட்டதால் மணலால் ஆன பாவையினை நீங்காது இருந்த பெண், காவேரியில் மூழ்கிய கணவனை மீட்ட ஆதிமந்தி, பொருளீட்டச் சென்ற கணவன் வரும் வரை கல்லுருவம் கொண்ட பெண், கிணற்றில் வீழ்ந்த மாற்றாளின் குழந்தையை மீட்ட பெண், கணவனைத் தவிர வேறு எவா்க்கும் அழகாகத் தெரியக் கூடாது எனத் தன் முகத்தைத் தானே குரங்காக மாற்றிக் கொண்ட பெண், தாயின் உறுதிமொழிக்காக ஆண்குழந்தையைக் கணவனாக ஏற்றுக் கொண்ட பெண் என்று பத்தினிப் பெண்களின் கதை கூறப்பட்டுள்ளது.

இவை வழி வழியாக வழங்கி வந்த, பெண் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கூட்டுநனவிலியின் வெளிப்பாடே எனலாம்.


கண்ணகி

கண்ணகி என்ற மூலப்படிவம் கணவன் எந்தத் தவறு செய்தாலும் எதிர்த்துப் பேசாத இல்லறக் கடமையினை மட்டுமே கருத்தில் கொண்டு தன் துயரை மறைத்து வாழும் கற்புடை பெண்ணிற்கான படிவமாகும். கணவன் எத்தகைய துன்பத்தைத் தந்தவனாக இருப்பினும் அவனுக்குப் பழி ஏற்பட்டால் அப்பழியில் இருந்து கணவனைக் காப்பதே கற்புடைய பெண்ணின் கடமை . அவ்வாறு இருந்தால் அவள் உலகோர் புகழும் சிறப்பினை அடைவாள் என்பதும் இதன் வழி மகளிர்க்குப் புலப்படுத்தப் படுகிறது எனலாம். சங்க காலத்திலும் பேகன் என்னும் மன்னன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்த நிலையிலும் அவள் கணவனுக்காகவே வாழ்ந்த நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது இங்கு சுட்டத்தக்கது.

தேவந்தி மற்றும் மணிமேகலையில் இடம்பெறும் ஆதிரை பாத்திரங்களும் இவ்வகையில் படைக்கப்பட்டனவே எனலாம்.

கோப்பெருந்தேவி

அரண்மனை வாழ்வு பெருஞ்செல்வம் அனைத்தும் இருப்பினும் கணவன் உயிர் இழந்த பின் உயிர் வாழ்தல் கற்புடைய மகளிர்க்கு அழகன்று என்பதனைப் புலப்படுத்துவதான மூலப்படிவம். சங்க காலத்திலும் கணவன் இறந்த பின்னா் மகளிர் உயிர் துறந்தமை குறிப்பிடப்படுவது இங்கு சுட்டத்தக்கது.

மாதவி

ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலையில் பரத்தை குலத்தைச் சார்ந்தவராக இருப்பினும் ஒருவரோடு ஒருவா் என்று வாழ்வதனை வெளிப்படுத்தும் கற்பு என்னும் மூலப்படிவம்.

கற்பு என்ற மூலப்படிவம் அரசநிலையில் இருக்கும் கோப்பெருந்தேவி, அரசா்க்கு அடுத்த நிலையில் இருக்கும் வணிக குலத்தைச் சார்ந்த கண்ணகி என்ற இரு பாத்திரங்களிலும் தன்னை வெளிப்படுத்துவதனைக் காணமுடிகிறது. இவ்விரு பாத்திரங்களையும் தாண்டி பரத்தை குலத்தைச் சார்ந்த மாதவியின் பாத்திரத்திலும் வெளிப்படுவதனைக் காணலாகின்றது.

துணை நூற்பட்டியல்

—
1. இரவிச்சந்திரன் தி.கு, சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2005.

2. ------------------------, ஃப்ராய்ட் யூங் லக்கான்: அறிமுகமும், நெறிமுகமும், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், 2007.

3. இரவிச்சந்திரன் தி.கு, புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும் (ஃப்ராய்ட்: யூங்: லக்கான்), அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2017

4. நடராசன் தி.சு, திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், சென்னை, 2016. 10வது பதிப்பு.

5. பிரேமா இரா, கற்பு - கலாச்சாரம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை. 2006.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p174.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License