இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

ஆற்றுப்படைகளில் மட்பாண்டப் பொருட்கள்

முனைவர் ம. தனலெட்சுமி
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02.


நுழைவாயில்

மனிதன் நிலைத்த வாழ்வை எய்துவதற்குச் சமூக வளர்ச்சியில், நாகரீக வளர்ச்சியில் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளான். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவை. அவற்றைப் பெற்று வாழ்வில் சிறக்கப் பண்பாட்டிலும் பல வளர்ச்சிகளைப் பெற்று வந்துள்ளான். சமூக, வளர்ச்சியில் குடும்பம் ஓர் அடிப்படை நிறுவனமாகும். குடும்ப வளர்ச்சியே விரிந்து சமூகமயமாதலுக்கு வழிவகுக்கிறது. குடும்ப உருவாக்கம் அறியப்பெறும் நிலையில் ‘இல்லம்’ என்பதே அதன் தோற்றுவாயாக இருந்தது. இல்லத்தில் வாழும் மனிதன் அவன் வாழும் சூழலுக்கேற்றவாறு புழங்குப்பொருட்களைப் பயன்படுத்துகிறான். அந்த அடிப்படையில் ஆற்றுப்படை இலக்கியங்களில் வரும் மட்பாண்டப் பொருட்கள் பற்றி இக்கட்டுரைச் சுட்டுகிறது.

இல்லம் - சொற்பொருள் விளக்கம்

இல்லம் என்பதற்கு, “இடம், வீடு, இல்லறம், மனைவி, மருதமுல்லை நிலங்களில் தலைவியர் குடி, இராசி, தேற்றாங்கொட்டை”(ப.337) போன்ற பல பொருட்களைத் தமிழ்ப் பேரகராதி குறிக்கின்றது. தற்காலத் தமிழ்ப்பெயர் அகராதி, “இல்லம், வீடு என்று குறித்து மாணவர், அலுவலக ஊழியர், முதியோர் போன்றோர் உணவு உண்டு தங்கியிருக்கும் கட்டடம்” என்றுரைக்கின்றது. ஆகவே, இல்லம் என்பதற்கு ‘வீடு’ என்ற பொருளைக் கருத்தில் கொள்ளலாம்.

குடும்பத்தை மையமிட்டு இல்லத்தில் (வீடு) இடம் பெறும் பயன்பாட்டுப் பொருள்கள் பல இருந்தன. சமைத்தல், பரிமாறுதல், சேமித்தல், எறியுட்டுதல் என்பன போன்ற செயல்களுக்குப் பலவிதமான இல்லக் கருவிகளைப் பண்டையத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். அத்தகு பயன்பாட்டுக் கருவிகளில் மண்ணால் ஆன பாண்டங்களை உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

மட்பாண்டப் பொருட்கள்

பொதுவாக, மட்பாண்டங்கள் தண்ணீர் உணவுப்பொருட்கள் முதலியவற்றைச் சேமித்து வைக்கவும், உணவு சமைக்கவும், சாப்பிடவும் உதவும் வகையில் அக்காலத்தில் சுடப்படாத மட்பாண்டங்களைக் காட்டிலும் சுட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். ஏனெனில், சுட்ட மட்பாண்டங்கள் நீடித்திருக்கும் என்ற கருத்து வழக்கில் இருந்தது.

“… … … … … … பசுமண்
கலத்துணீர் பெய்திரிஇ யற்று” (குறள்.666)

என்ற குறள் கூறும் கருத்து இங்கு எண்ணத்தக்கது. பசுமண்ணால் குடம் செய்து நீர் நிறையப் பெய்து வைத்தால் அது ஊறிக் குடத்தையுடைத்து ஓடும் என்பதால் மட்பாண்டங்களைச் சுட்டுப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை உடையவர்களாகப் பண்டைத் தமிழர் விளங்கியமை உணரமுடிகிறது.

மண்ணால் செய்த பொருட்களைப் பெரும்பாலும் நீர், கள் சேகரித்து வைப்பதற்கும், சமைப்பதற்கும் சமைத்ததை வைத்துச் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தினர். அவற்றைக் குழிசி, மிடா, தசும்பு, குடம், சாடி, அகல், வள்ளம், பிழா, நெற்கூடு என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் சுட்டுகின்றன.



குழிசி

‘குழிசி’ என்பதற்குப் பானை என்று பொருள். தடாவும் குழிசியும் மிடாவும் பானை என்று சேந்தன் திவாகரம் குறிப்பிடுகின்றது. ‘குழிசி’ என்னும் பெயர் பத்துப்பாட்டினுள் பெரும்பாணாற்றுப்படையில் மூன்று இடங்களில் பயின்று வந்துள்ளன. ‘குழி’ என்றால் பள்ளம் என்று பொருள். எனவே, குழிவான அமைப்புக் கொண்ட பானை குழிசி என்று பெயர் பெற்றுள்ளது. இதனை, உணவு சமைப்பதற்கு மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், விளிம்பு உடைந்து போன வாயினையுடைய குழிசியில் கிணற்று நீரை முகந்து உலையாக அடுப்பில் ஏற்றியுள்ளனர். இதனை,

“… … … … … … நெடுங்கிணற்று
வல்லூற்றுஉவரி தோண்டி தொல்லை
முரவுவாய் குழிசி முரியடுப் பேற்றி” (பா.வரி.97-100)

என்னும் பெரும்பாணாற்றுப்படை அடிகள் சுட்டுகின்றன. உழவர் மகளிர் புதியோருடைய மிக்கபசி தீரும்படி சோற்றையாக்கும் குழிசி அசையும்படி அடுப்பேற்றியதை,

“சோறடு குழிசி இளக... ... ...” (பா.வரி.367)

என்ற அடிகள் உணர்த்தும்.

”... ... ... ... ... ... நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி புஞ்சுமட்டு இரீஇ” (பா.வரி.158-159)

”ஆறு செல் வம்பலர் காய்ப்பசித் தீர
சோறடு குழிசி இளக, விழூஉம்” (பா.வரி.365-366)

காடி

காடி என்பது பானையின் பெயர்களுள் ஒன்றாகும். இக்காடி குறித்த செய்தி, பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.

“நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசிவீங்கு இன்இயம் கடுப்பக் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடைய மூக்கின்”(பா.வரி.55-57)

என்னும் அடிகளுக்கு விளக்கம் கூறுமிடத்து, ‘காடி வைக்கப்பட்ட மிடாவினையுடைய மூக்கின் மீது’ என்று நாடக மகளிரின் முழவுக்கும் காடி உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, மேற்பக்கம், கழுத்துப் போன்று நீண்டும் அடிப்புறம் முழவு போன்ற அமைப்பும் கொண்ட வடிவினது ‘காடி’ எனக் கொள்ளலாம். இக்காடியில் ஊறுகாய் வைத்திருந்தமையை,

“நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமான் காடியின் வகைபடப் பெறுகுவீர்” (பா.வரி.309-310)

என்னும் பாடலடிகள் சுட்டும். எனவே, புளிப்புத் தன்மையுடைய காடியைக் ‘காடி வைத்த கலன்’ என்று அழைத்தமை விளங்கும்.



தசும்பு

தசும்பு என்பதற்குக் குடம் என்று பொருளுரைக்கின்றது தமிழ்ப்பேரகராதி

“இடங்கள் தசும்பு கடம் கும்பம் குடம்
கன்னல் என்று கருதுவர்புலவர்”

எனக் குடத்தின் பெயர்களில் ஒன்றாகத் தசும்பைச் சுட்டுகின்றது திவாகரம். தசும்பு குறித்த செய்தி பத்துப்பாட்டில் மலைபடுகடாத்தில் இடம் பெற்றுள்ளது. உணவு சமைக்கவும் தேறல் பெய்து வைக்கவும் தசும்பு பயன்பட்டுள்ளது என்பதை,

“வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெருகுவீர்” (பா.வரி.461-463)

என்னும் வரிகள் உணர்த்தும். இவ்வகையில் தசும்பு உணவு சமைக்கவும், பால், தயிர், கள் ஆகியவற்றை நிறைத்து வைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

குடம்

குட என்பது ‘வளைந்த’ குடக்கம் என்னும் பொருளினைத் தருவது. நீலநிறம் அமைந்த பையாகிய குடம் போன்றிருந்த முகம் என்பதை,

“நீலப்பைங்குடம் தொலைச்சி நாளும்” (பா.வரி.374)

என்னும் பாடலடி விளங்குகின்றது.

சாடி

பண்டைக்கால மக்கள் கள்ளை நிரப்பி வைத்துக் கொள்ளப் பயன்படும் பண்டமாகச் சாடியைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சாடி குறித்த செய்தி பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது. இதனை,

“வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த” (பா. வரி.)

என்னும் பாடலடி உணர்த்தும். மீன்பிடிப்போராகிய வலைஞர்கள் மதுவினை அருந்தினர். அத்தகைய மதுவினை உறுதியான வாயையுடைய பெரிய சாடியில் பாதுகாத்தனர் என்பது இதன்வழி அறியப் பெறுகின்றது.



அகல்

தமிழ் லெக்சிகன் ‘அகல்’ என்பதற்குச் ‘ சட்டி’ என்று விளக்கம் தருகின்றது. இவ்வகல் என்னும் சொல் விசாலித்தல் (அ) விருத்தியடைதல் என்னும் பொருளினைத் தருகின்றது. அகல் என்றால் ‘விரிவு’ என்று பொருள். எனவே, அகன்ற வாயினையும், கீழ்ப்பகுதி தரையில் வைக்கும்படியான அமைப்பினையும் கொண்ட கலன் ‘அகல்’ எனப் பெயர் பெற்றுள்ளது.

இவ்வகல் குறித்த செய்தி பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது. அப்பம் விற்கும் வணிகர் கரிய அகலில் பாகொடு கூட்டிச் செய்து நூல் போல் கிடக்கும் இடியாப்பத்தைப் பாலிட்டு வைப்பர். இதனை,

“காரகற் கூவியர் பாகொடு பிடித்த
இழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோல்“ (பா.வரி.377-378)

என்னும் அடிகள் விளக்குகின்றன. இதிலிருந்து அகல் உணவு சமைப்பதற்கும், சமைத்ததை வைத்து உண்ணுவதற்கும் கலமாக அகல் என்னும் கலத்தைப் பயன்படுத்தியமை விளங்கும்.

வள்ளம்

‘வள்ளம்’ என்பது உண்கலமாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. இவ்வள்ளம் குறித்த செய்திகள் பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளன. மகளிர் கள்ளைச் சமைப்பர். கள்குடித்த பின்பு கழுவிய பாத்திரங்களிலிருந்து வடித்த நீர் சேறாக ஓர் இடத்தில் தேங்கி நிற்கும். இதனை,

“கள்அடு மகளிர் வள்ளம் நுடக்கிய’ (பா.வரி.339)

என்னும் பாடலடி விளக்கி நிற்கின்றது.



பிழா

குற்றாத கொழியல் அரிசியை அழகினையுடைய களியாகத் துழாவிட்ட கூழை, அகன்ற வாயையுடைய தட்டிலிட்டு உண்ணும் பிழாவை உண்கலமாகப் பயன்படுத்தியமை விளங்கும். இதனை,

“அசையா வரிசி யங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றி” (பா.302)

என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள் சுட்டும்.

நெற்கூடு

நெல்லைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பெற்ற கருவி. ‘நெற்கூடு’ என்பதாகும். இதன் பெயர் நெடுங்கூடு. தொடுகூடு என்றெல்லாம் வழங்கப் பெற்றுள்ளது. இக்கூடு நெல், வரகு முதலிய தானிய வகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்பட்டுள்ளது. இக்கூடு ஏணிக்கும் எட்டாத அளவு மிக நெடிய வடிவுடனும் மேல்பகுதி திறந்து நெல்லைக் கொட்டுவதற்கு ஏற்றாற்போல் இருந்திருக்க வேண்டும். ஏணிக்கும் எட்டாத மிகவும் நீண்ட உயரமான நெற்கூடு இருந்ததை,

“ஏணியெய்தா நீணெடு மார்பின்
முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற்
குமரிமூத்த கூடோங்கு நல்லில்” (பா.307-309)

என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடும். மேலும்,

“பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்” (பா311.)

என்றும் சுட்டும். இதற்கு விளக்கம் கூறுமிடத்து பெண்யானைத்திரள் முன்றிலில் நிற்கும். வரகு நிறைந்த குதிர்க்கட்டு உவமை என்பதால் குதிர்களில் வரகை நிறைத்து வைத்துக் கொண்டமை விளங்கும். இந்நெற்கூட்டை இன்னும் கிராமப்புறத்து வீடுகளில் நெல்லைப் பாதுகாப்புடன் வைத்தெடுக்கப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நெற்கூடு என்ற பெயர் வழக்கிழந்து குதிர்களுக்கை என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.

முடிவாக

மக்கள் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கவும், உணவு சமைக்கவும் நீர், கள் ஆகியவற்றைச் சேகரித்து வைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் மட்பாண்டங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்

1. தமிழ்ப் பேரகராதி, 1982, சென்ளைப் பல்கலைக்கழகம்.

2. திருக்குறள், 2002, சாரதா பதிப்பகம், சென்னை.

3. சேந்தன் திவாகரம், கழகவெளியீடு, திருநெல்வேலி.

4. ச. வே. சுப்பிரமணியன், 2010, சங்க இலக்கியம் மூலமும் தெளிவுரையும், (பத்துப்பாட்டு) மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை.

5. வி. சி. சசிவல்லி, 1989, பண்டைத் தமிழர் தொழில்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 13.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p180.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License