இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பட்டனாரின் பகவத்கீதையில் புராணச்செய்திகள்

ப. விஜி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.


முன்னுரை

இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத பீஷ்மபர்வத்தில் 25 முதல் 42 வரையிலான அத்தியாயங்களில் ‘பகவத்கீதை’ எனும் அரிய நூல் இடம் பெற்றிருக்கின்றது. வடமொழியில் வியாசமுனிவரால் எழுதப்பட்ட பகவத்கீதையில் 18 அத்தியாயங்களும் 700 சுலோகங்களும் இடம் பெற்றிருக்கின்றன. எந்தவொரு சிறப்பான படைப்பிலக்கியமும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். அந்தவகையில் 13 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டனார் என்பரால் தமிழில் முதன் முதலில் ‘பகவத்கீதை’ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலிற்கு இவர் வைத்த பெயர் ‘பரமார்த்த தரிசனம்’. இந்நூலில் விருத்தப்பாவால் ஆன, கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் உட்பட 560 செய்யுள்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்நூல் தமிழில் முதல் மொழிபெயர்ப்பு நூல் என்பதைச் சிறிதும் அடையாளம் காட்டாது மூலநூல் போலவே காட்சியளிக்கின்றது. இதில் உவமைகள், வருணனைகள், புராணச்செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரை இந்நூலில் இடம்பெறும் புராணச்செய்திகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது.

பூதகி வதம்

ஆயர்பாடியிலுள்ள கிருஷ்ணனைக் கொல்வதற்காக, கம்சன் பூதகி எனும் அரக்கியை அனுப்பி வைக்கிறான். அவள் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் கண்ணனைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றாள். இதையறிந்த கிருஷ்ணனின் நண்பர்கள், இச்செய்தியை நந்தகோபனுக்கு அறிவிக்கின்றனர். நந்தகோபன் ஓலம் கேட்கும் இடம் நோக்கிச் செல்ல, அங்கு பூதகி இறந்து கிடக்கிறாள். கிருஷ்ணனுக்குத் தன்னிடமுள்ள விஷப்பாலை ஊட்ட முனைந்த பூதகியின் இரத்தத்தை உறிஞ்சிக் கொல்கின்றான் கண்ணன் என்னும் செய்தி மாயா விகார அத்தியாயத்தில்,

“பின்னையேர் முறுவலோடும் பேய்முலை யுண்ட பெம்மான்” (மாயா - 23)

என்னும் அடிகளில் விளக்கப்பட்டுள்ளது.

கம்சவதம்

கிருஷ்ணரும் பலராமரும் மல்யுத்தக்களத்தில் யாவரையும் கொன்று, எஞ்சி இருந்தோரை உயிருக்குப் பயந்து ஓடச் செய்தனர். இவர்கள் இருவரையும் ஆயர்பாடியிலுள்ளோர் மகிழ்ச்சியுடன் பாராட்டினர். ஆனால் கம்சனோ இவர்களைக் கண்டு, பொறாமை கொண்டு நீங்கள் மதுராபுரியிலிருந்து வெளியேற வேண்டும். ஆயர்குலச் சிறுவர்களும் விரட்டப்பட்டு, அவர்களின் உடமைகளும் பறிக்கப்பட வேண்டும். நந்தகோப மகாராஜாவை கைது செய்வதோடு, தன் தந்தையாகிய உக்கிரசேனரையும் கொல்ல வேண்டும் என்கின்றான். இதனைக் கேட்ட கிருஷ்ணர் கோபமடைந்து, கம்சனின் கிரீடத்தைத் தள்ளி, மல்யுத்த மேடைக்கு அழைத்து வந்து அடிக்க, அடிதாங்கா கம்சன் இறக்கிறான் எனும் செய்தி, விபூதி அத்தியாயத்தில்,

“கலைவல னவற்றோ டென்றான் கஞ்ச னாருயிர் போய்த்துஞ்ச
வலைகடல் வளரா தேபோந் தாயர்பால் வளர்ந்த பெம்மான்” (விபூதி-26)

என்னும் வரிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


கண்ணன் தூது செல்லல்

பாண்டவர்களுக்குரிய இந்திரப்பிரஸ்தம் எனும் இராஜ்யத்தை துரியோதனன் தரமறுக்கிறான். அமைதியான முறையில் அந்நாட்டை பாண்டவர்களுக்கு வாங்கித் தரும் பொருட்டு, கண்ணன், துரியோதனிடம் தூது செல்கின்றான். கண்ணன் அஸ்தினாபுரத்திலுள்ள விதுரன் மாளிகைக்குத் தங்குவதற்காகச் செல்ல, விதுரனோ தான் புண்ணியம் தேடிக்கொள்ளும் பொருட்டு, கண்ணனை உபசரித்துப் பல பணிவிடைகள் செய்து விருந்தளிக்கிறான் எனும் செய்தி பிரவஞ்ச அத்தியாயாத்தில்,

“வெண்ணை யோவிது ரனிட்ட விருந்தையோவேலை சூழ்ந்த
மண்ணை யேரிண்டு முன்னாள் வரும்பசி தீர்த்த மாயோன்” ( 15 -25)

எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன.

சகடாசுர வதம்

குழந்தை கிருஷ்ணனின் முதல் பிறந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குழந்தை தூங்குவது போல இருந்ததால் பாலூட்ட மறந்த யசோதை அவனை ஒரு சகடவண்டிக்கு அருகிலுள்ள தொட்டிலில் கிடத்தினாள். மேளவாத்தியங்களின் ஒலியால் குழந்தை பசியால் அழுதது கேட்கவில்லை. யசோதையோ அனைவரையும் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். பசியால் குழந்தை காலை உதைத்து அழுதபோது, அதனது கால் அவ்வண்டியின் சக்கரத்தில்பட்டு அவ்வண்டி பல துண்டாகியது. அந்தச்சகடமானது கிருஷ்ணனைக் கொல்ல வந்த ஒரு அரக்கன் ஆகும். அவ்வேளையில் அரக்கன் இறந்துவிட, யசோதையோ கிருஷ்ணனுக்குக் கொடிய தேவதைகளால் தீங்கு ஏற்படாமலிருக்கும் வண்ணம், வேத மந்திரங்களை ஓதும்படி அங்குள்ளோரிடம் கேட்டுக் கொள்கின்றாள் எனும் செய்தி விசுவரூப அத்தியாயத்தில்,

“சுருளார்கின் றதுழாய் முடியாய்ச் சொல்லு மனமுந் தொடர்வரியா
யருளார் சகடமிற வுதைத்தா யுயிர்கட் கெல்லா முள்ளுயிரே” (விசுவ-1)

என்னும் வரிகளில் விளக்கப்பட்டுள்ளது.

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல் மற்றும் நக்னசித்தியை மணத்தல்

ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தை, கிருஷ்ணன் நிறுத்தினான். இதனை அறிந்த இந்திரன் பிரபஞ்சத்தை அழிப்பதான ‘ஸாங்வர்த்தக’ மேகத்தை ‘விருந்தாவனம்’ முழுவதும் படரும்படி கட்டளை இட்டுத், தானும் பெரும்புயல் புடைசூழ ஆயத்தமாகின்றான். மேகங்கள் இடியையும், மின்னலையும், கொடிய மழையையும் ஏற்படுத்த, அங்குள்ள மக்களும், மாக்களும் துன்பத்திற்குள்ளாயினர். விருந்தாவனம் முழுவதும் நீரால் நிரம்பியதைக் கண்ட மக்கள், கிருஷ்ணனை நோக்கி வழிபட, கிருஷ்ணனோ அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, கோவர்த்தன மலையைத் தன் ஒரு கையால் குடைபோலத் தூக்கி நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தான். அதோடு அயோத்தியிலிருந்து கோசல நாட்டை ஆட்சி செய்த நக்னசித்துவின் மகள் நக்னசித்தியை. ஏழு அடங்காக் காளைகளை ஏறுதழுவல் மூலம் வென்று ஆறாவதாக இவளைக் கரம்பிடிக்கிறான் எனும் செய்தி விசுவரூப அத்தியாயத்தில்,

“ஏறுமல்லும் வென்றுகுன் றெடுத்த வண்ண மெண்ணியே
கூறுமல்ல தீர வும்பர் கூறுகின்ற கொண்டலே
வேறுமல்லை யொன்று மல்லை மெய்மைகூ றுமப்பொரு
ளாறுமல்லை என்று நானறிந் திலேனென் மாயனே” (விசுவ - 43)

என்ற செய்யுள் விளக்குகின்றது.


அமுதமெழக் கடைந்தவன்

சிவனுடைய கழுத்திலுள்ள வாசுகிப் பாம்பினை, பாற்கடலைக்கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். பாற்கடலைக் கடைவதற்கு மேருமலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் அமைத்து, அரக்கர்கள் ஒருபுறமும், தேவர்கள் ஒருபுறமும் நின்று கடைந்தார்கள் எனும் குறிப்பு விசுவரூப அத்தியாயத்தில்,

“ஒருநாக நடாவொரு நாகமளா வுயரோதங்
கரநாண்மல ராலமுதா யெழவே கடைவோனே” (விசுவ- 33)

என்னும் பாடலில் இடம்பெறுகின்றது.

கிருஷ்ணாவதாரம்

வசுதேவர்க்கும், தேவகிக்கும் திருமணம் முடிந்ததும் தன் தேரில் அழைத்துச் செல்கின்றான் கம்சன். அப்போது அசரீரி ஒன்று தேவகியின் எட்டாவது குழந்தையால் உனக்கு ஆபத்து என்று கூற, அதைக்கேட்ட கம்சன் அவளைக் கொல்ல முற்படுகின்றான். வசுதேவரோ எங்களுக்குப் பிறக்கும் அத்தனைக் குழந்தைகளையும் கொடுத்து விடுகிறோம் எனக் கூற கம்சன் சம்மதிக்கிறான். நாரதரோ தேவகியின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளில் எது விஷ்ணுவின் அவதாரம் எனக் கண்டறிவது கடினம் எனக்கூற கம்சன், வசுதேவரையும், தேவகியையும் சிறைவைக்கிறான். கிருஷ்ணருக்கு இருக்கும் மாயசக்தியால் பலராமரை தேவகியின் வயிற்றிலும், யசோதையின் வயிற்றில் மாயையையும் கருவாக உருவெடுக்க வைத்துப், பின் பலராமரை ரோகிணியின் வயிற்றுக்கு மாறச் செய்கிறார். கிருஷ்ணரோ தேவகியின் வயிற்றில் கருவாகி, கையில் சங்கு சக்கரம், தாமரை, கதாயுதத்துடன் மகாவிஷ்ணுவாக அவதரித்தார் என்பது குணவிகார அத்தியாயத்தில்,

“றீதிலா வுலகந் தன்னுள்ளே யுதிப்பத் தேவகி திருவயிற் றுதித்தான்” (குண-25)

என்ற வரிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆலிலையில் கண்ணன்

இக்கோலம் தன்னுடைய பக்தரான மார்க்கண்டேய முனிவருக்கு வில்லிப்புத்தூரில் காட்சி தந்த கோலமாகும். பிரளயக் காலத்தில் அனைத்துத் தேவர்களையும், உயிர்களையும், அண்டங்களையும் வயிற்றுள் சுமந்து, கண்ணன் குழந்தையாக இருப்பதை அவர் கண்டதாக நம்பப்படுகிறது. இச்செய்தி குணா அத்தியாயத்தில்,

“சுளியா நின்றபெரு வெள்ளத்திடையே பண்டுதுயில் கொண்டான்”(குணா-23)

என்னும் வரிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


மச்சாவதாரம்

மச்சாவதாரமே பகவான் விஷ்ணு எடுத்த முதல் அவதாரம். சத்தியவிரதன் என்ற மன்னன் விஷ்ணுவின் பக்தன். உண்மையின் நிலைக்களனாக விளங்கியவன். இவன் ஒருநாள் நதியில் அர்க்கியம் கொடுக்க கையில் நீர் எடுத்தபோது, அதில் ஒரு மீன் இருக்கிறது. மன்னா தன்னை நீரில் மீண்டும் விட்டால் என்னைப் பிற உயிர்கள் கொன்றுவிடும் எனக்கூற, அம்மீனைத் தன் கமண்டலத்தில் விடுகிறான். மீன் கமண்டலம் அளவு உயருகின்றது. பின் கங்காளத்தில் விட, கங்காளம் முழுமையும் வளருகின்றது. பின் ஏரியின் அளவு வளருகின்றது. மன்னன் கடலில் விட முடிவுசெய்தான். அப்போது அந்த மீன் தான் நாராயணன் என்றும், இன்னும் பதினைந்து நாட்களில் ஏற்படப்போகும் பிரளயத்தில், நீ ஒரு பெரிய ஓடத்தில் ஒவ்வொரு உயிருக்குமான விதைகளையும், சப்தரிஷிகளையும் ஏற்றிச்செல். அவ்வோடம் பிரளய காலத்தில் மூழ்காமல் இருக்க நான் உங்களைக் காப்பாற்றுவேன் எனக்கூறும் நிகழ்வு தேவர் பூசை அத்தியாயத்தில்,

“சேலா யுலகமுறு புன்னோர் செலுவின் புரையே செலுத்தினோன்” (3-26)

என்னும் வரிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட கண்ணனின் லீலைகளும், அவதாரங்களும் நூலின் இடையிடையே ஆசிரியரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொகுப்புரை

மகாபாரதம், அரிவம்சம், பாகவத புராணம், விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் கண்ணனின் லீலைகள், அவதாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழில் பகவத்கீதைக்கான முதல் மொழிபெயர்ப்பான இந்நூலிலும் ஆசிரியர் மேற்க்கண்டக் கருத்துக்களை உட்படுத்தி இருப்பது சிறப்பிற்குரியன.

துணைநூற்கள்

1. பகவத்கீதை விருத்தம் - கோ. சேதுராமன்

2. பகவத்கீதை - 8000 ( சுவடி)

3. www. Tamil Krishna.org

(துணை நூற்கள் பட்டியலில் ஆசிரியர், நூலின் பெயர், வெளியிட்ட பதிப்பகம், ஊர், பதிப்பு மற்றும் ஆண்டு எனும் வரிசையில் அமைத்தால் நன்றாக இருக்கும் - ஆசிரியர்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p195.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License