இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஒன்பதாம் திருமுறை உணர்த்தும் அகத்திணைக் கூறுகள்

முனைவர் கு. சரஸ்வதி
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர்


முன்னுரை

தமிழ்மொழியின் முதன்மை இலக்கணமாகிய தொல்காப்பியப் பேரிலக்கணத்தை இயற்றிய தொல்காப்பியர் உலகப்பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கிப் பொருளை அகம், புறம் என்ற பாகுபாட்டில் அமைத்துக் கொண்டது தமிழ்மொழியின் செம்மைக்குச் சிறப்புச் சேர்பபனவற்றுள் ஒன்றாகும். அவற்றில் தொல்காப்பியரின் அகப்பொருட் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்பதாம் திருமுறையில் அமைந்த அகப்பொருட் செய்திகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியரும் அகப்பொருளும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் தொல்காப்பியரின் அகப்பொருள் மரபுகள் தொடர்ந்து இழையோடக் காணலாம். ஆண், பெண் என்னும் இருபாலரது மனதில் அன்பென்னும் உயிர்ப்பண்பு வளர்ந்து நிற்றல் அகப்பொருள் வளர்ச்சி எனலாம். இருவர் உள்ளமும் ஒன்றுபட்ட நிலையில் உளங்கலந்து மகிழ்வுறும் நிலையே அகமாகும். இவ்வின்பம் கலப்புற்ற உள்ளங்களுக்கு புலப்படுமேயன்றிப் புறத்தார்க்குப் புலப்படாததாகும். தொல்காப்பியர் அகத்திணையை,

”கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப” (தொல்-பொருள்-நூ.1)

என்ற நூற்பாவின் வழி அகப்பொருளை எழுதிணைகளுக்கு உட்படுத்துகின்றார்.

அகத்திணைச் செய்யுள்

தொல்காப்பியர் கலிப்பாவையும், பரிபாடலையும் அகப்பொருளுக்குரிய செய்யுளாகக் குறித்துள்ளார். அவற்றுள் கலிப்பா கூற்றும் மாற்றமும் விரவி வந்து சுரிதகமின்றி முடியும். பரிபாடல் தொகைநிலை வகையால் பா இது என்று சொல்லப்படும். இலக்கணம் இன்றி எல்லாப்பாவிற்கும் பொதுவாய் நிற்பதற்கு உரியது. மேலும் கலிப்பா பொதுவாய் நிற்றலின்றிக் கொச்சகம், அராகம், சுரிதகம், எழுத்து என்னும் நான்கையும் தனக்குறுப்புகளாகக் கொண்டு காமப்பொருளாக வரும். இதனை,

“கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு
செப்பிய நான்கும் தனக்குறுப்பாகக்
காமம் கண்ணிய நிலைமைத் தாகும்” (தொல்-பொருள்)

என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சங்க இலக்கியங்களில் அகப்பாடல்கள் ஆசிரியப்பாவில் பாடப்பட்டுள்ளன. எனவே அகப்பாடலுக்குரிய பாவடியில் சங்க காலத்திலேயே நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்பது அறிய முடிகிறது.


இலக்கியங்கள் அகப்பொருளை கையாண்ட பாங்கு

மரபிலக்கியங்கள் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய சங்க இலக்கியங்கள் முதல் இந்நூற்றாண்டு வரை படைக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்களில் அகப்பொருள் பல்வேறு படிநிலை வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. சங்க நூல்களில் அகப்பொருள் எழுதிணைகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு திணையிலும் பலதுறைகள் இடம் பெற்றுள்ளமை காணமுடிகிறது. அகத்திணையாகப் போற்றப்பட்ட முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகளும் நிறைந்த அளவு துறைகளைப் பெற்று அகப்பாடல் பெருகியுள்ளன. கைக்கிளை ஒரு தலைக் காதலாலும், பெருந்திணை பொருந்தாக் காதலாலும் குறைந்த துறைகளே பெற்றுச் சில பாடல்களே பெற்றுள்ளன.

சங்கப் பாடல்களை அடுத்து வந்த திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் ஐந்திணைக்கும் உரிய பாடல்கள் இடம் பெற்றிருப்பினும் திணை, துறை வகுத்துக் கூறப்பெறவில்லை. எனினும் சங்கப் பாடல்களின் அகச்சுவை உணர்வு இந்நூல்களில் சிறிதும் குறையவில்லை. பக்தி இலக்கியக் காலங்களில் அகப்பொருள் பாடல்களில் மாற்றத்தைக் காணமுடிகிறது. இக்காலத்தில் மானுடக் காதலை விடுத்து கடவுள் மீது காதல் கொண்டு கைக்கிளைத் திணையாகக் கொள்ளப்படும் ஒருதலைக் காதலைப் பாடினர். சங்ககாலத்தில் மடலேறுவேன் என்று கூறிய தலைவன் உண்டேயொழிய மடலூர்ந்த தலைவன் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் மடலூர்தலைக் காணலாம்.

சமயநூல்களில் அகப்பொருள்

சமயநூல்கள் இறைவனிடம் கொண்ட பக்தி உணர்வின் வெளிப்பாடாகும். இவ்வாறு போற்றி மதிக்கப்பெறும் சமயநூல்களில் அருளாளர்கள் அகப்பொருளை அமைத்துப் பாடுதல் தகுமா என்ற வினா எழும்.

”சங்க காலத்தில் மக்கள் இயற்கை இறந்தவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்று நிலைகளில் பொருளை வழிபட்ட பாங்கினைத் தொல்காப்பியர் குறிப்பர். மனமாசுகளை அகற்றிப் பேரின்ப நிலையை அடைய முயல்வது கடவுள் வழிபாட்டின் நோக்கமாகும். அன்பு நெறியையே இறைவனிடம் தங்களை ஒப்படைப்பதற்குரிய சிறந்த நெறியாகக் கொண்டனர்” என்று ந. வள்ளியம்மாள் தம் நூலில் கூறியுள்ளார். (தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் கொள்கைகள் - ப.93) “காமப்பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல் -பொருள்-நூ.83)

என்பர் தொல்காப்பியர். இதன் வழி மக்களினம் இறைவனிடம் காதல் கொண்டு அவன் அடியை அடைய முயன்றதை அறியலாம்.


ஒன்பதாம் திருமுறையில் அகப்பொருள்

ஒன்பதாம் திருமுறையில் உள்ள 29 திருப்பதிகங்களில், 10 திருப்பதிகங்களில் அகத்துறைக் கோட்பாடுகளைக் காணமுடிகிறது. திருமாளிகைத் தேவர் பாடிய மூன்றாம் பதிகம் அகத்துறைப் பாங்கினைப் பெற்றதாகும்.

தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் நிலையையும், ஆற்றா நிலையில் அவள் பிதற்றுதலையும், உச்சமாக அவள் பிச்சியான நிலையையும் எடுத்துரைத்து அகத்துறைத் தலைவி ஒருத்தியின் நிலை சித்தரிக்கப்பெற்றுள்ளது.

“செழுந்தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல்
திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்று என்மேல் பகையாட வாடும்
எனைநீ நலிவதென்னே? என்னும்” (திருவிசைப்பா 3.5)

என்று தலைவியின் வாட்டம் செவிலித்தாயால் நற்றாய்க்கு உரைக்கப் பெறுகிறது. காதல் வயப்பட்டோருக்குப் பால் புளிக்கும், பாகு கசக்கும் என்பது தமிழ் மரபு. பிரிந்திருப்போரை அந்திமாலை துன்புறுத்தும், தன்நிலவு சுட்டெரிக்கும், தென்றல் வருத்தும் என்பது சங்கப்பாடல்கள் தரும் செய்தி. இப்பாடற்பகுதியில் தென்றல் காற்று, அன்றில் பறவை, நிலவு, இரவு. கடல், குழலோசை, எருதின் மணிஓசை ஆகியன தலைவிக்கு வாட்டம் தந்தன என்று கூறி சமய இலக்கியத்தில் சங்க இலக்கிய அகக் காட்சியை காணச் செய்துள்ளார். காதலின் உச்சக் கட்டத்தை அடையும் தலைவி பிச்சியாகி விடுகின்றாள் என்பதை,

“திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்
பெருநீல கண்டன் திறங்கொண்டு இவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்” (திருவிசைப்பா 3:10)

என்ற திருப்பாடல் வழி அறியலாம். இவ்வாறு தலைவனைத் தலைவி தேடிச் செல்வதை,

“தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக்கிழவன் உள்வழிப் படினும்” (தொல்- பொருள்-நூ.ப.47)

என்ற தொல்காப்பிய நூற்பாவில் அறியலாம்

“இச்சூத்திரம் களவியலில் இடம் பெற்றிருப்பதால் தலைவனைத் தேடித் தலைவி செல்வது அகன் ஐந்திணையைச் சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை”என்று பழ. முத்தப்பன் என்பார் தரும் விளக்கம் இங்கு கருதத்தக்கது.

சேந்தனார் அகப்பாடல்கள்

சேந்தனாரின் திருவிடைக்கழி பதிகத்தில் புதிய அகப் பொருள் மரபான பெண்பால் மடலேற்றத்தைக் கூறியுள்ளார்.

“எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான” (தொல்-பொருள்-நூ.35)

என்பது தொல்காப்பியர் கூறும் இலக்கணம்.

“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்” (குறள்-1137)

என்னும் திருக்குறள் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும். ஆயினும் பக்தி இலக்கியங்களில் காணும் இந்நிகழ்ச்சி ஒரு மரபு மாற்றமாக அமைந்துள்ளன.


“தொகை மிகு நாமத் தவன்திரு வழக்குஎன்
துடியிடை மடல்தொடங் கினளே” (திருவிசைப்பா.3:8)

என்று செவிலித்தாய் ஒரு பாடலை முதலில் கூறி அடுத்து,

“தொடங்கினள் மடலென்று அணிமுடித் தொங்கல்
புறவிதழ் ஆகிலும் மருளான்” (திருவிசைப்பா 3:9)

என்று மொழிகிறாள். மடலேறிய பிறகும் இறைவன் அருள் கிடைக்கவில்லை என்பதை இப்பகுதி வழி அறியமுடிகிறது. இதனால் பெண்பால் மடலேறிய புதுமரபைக் காணமுடிகிறது. “ இந்த அடிப்படையில் தான் ஆழ்வாரின் சிறிய திருமடலும், பெரிய திருமடலும் அமைந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது” என்ற பழ. முத்துப்பன் என்பார் கூற்று நினையத்தக்கது. எனவே தொல்காப்பியர் கால மரபு ஆழ்வார்கள் காலத்தில் மாற்றம் பெற்றுள்ளது எனவும், அந்த மாற்றத்தைச் சேந்தானரும் பின்பற்றியுள்ளார் என்றும் கருதலாம். இங்கு மடல்தலைவியின் நோக்கம் தலைவன் அணிந்த மலர் அல்லது மாலை பெறுதல் ஆகும். எனவே சீவான்மா பரமான்மாவை அடையத் துடிக்கும் நிலையை இம்மடல் வழி வெளிப்படுத்தினர் எனலாம்.

கருவூர்த்தேவரின் அகப்பாடல்கள்

புறப்பொருள், அகப்பொருள் ஆகிய இருவகை இலக்கியங்களிலும் தூது அனுப்புதல் உண்டு என்பதைத் தொல்காப்பியத்தின் வாயிலாகவும், சங்க இலக்கியங்கள் வாயிலாகவும் அறியலாம். தலைவன் தலைவியரிடையே மட்டும் இருந்த அகப்பொருள் சார்பான தூது விடு மரபுகளைத் தொல்காப்பியம் “வாயில்கள்” வழி விளக்கிக் காட்டும். உயர்திணையேயின்றி அஃறிணையையும் தூது செல்லுமாறு வேண்டும் வழக்கம் தலைவன் தலைவியரிடையே பிரிவுத் துன்பம் மிக்க வழி உண்டு.

“செல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்” (தொல்-பொருள்-நூ.3)

என்று தொல்காப்பியம் தூது மரபுக்கு இலக்கண விதி வகுத்துள்ளது. ஒருவர் கூறுவனவற்றை அறிந்துணர்ந்து அவற்றிற்கேற்றபடி அஃறிணைப் பொருள்கள் நடக்கும் உணர்வு பெற்றவை அல்லவேனும் அங்ஙனம் அவற்றை முன்னிலைப்படுத்தி உரைப்பது ஒரு மரபாக வழிவழியாக இலக்கியங்களில் புலவர் கொண்டிருந்தனர். ஒன்பதாம் திருமுறையில் தலைவி “ திருக்கீழ்க்கோட்டூர் மண்யம்பலத்தில் திருக்கூத்தியற்றுகின்ற இறைவனைக் கண்டு திரும்பி வருகின்ற வண்டுகளே தன் மனத்தினை அவரிடமிருந்து பெற்று வாருங்கள்” என்று தூதனுப்புகின்றாள். இதனை,

“திருநுதல் விழியும் பவளவா யிதழுந்
திலகமும் உடையவன் சடைமேற்
புரிதரு மலரின் தாதுநின் றூதப்
போய் வருந் தும்பிகள் இங்கே
... ... ... ... ... ... ... ... ...
வருதிறல் மணியம் பலவனைக் கண்டென்
மனத்தையுங் கொண்டு போதுமினே” (கருவூர்த்தேவர் திருவிசைப்பா-3:3)

என்ற பாடல் வழி கருவூர்த்தேவர் குறிப்பிட்டுள்ளார்.

சேதிராயரின் அகப்பாடல்

சேதிராயரின் அகப்பாடலில் “தில்லை அம்பலவனே! நீ என் மகளை வருந்தச் செய்தாய்! அவள் தான் வளர்க்கும் கிளியை நோக்கி நின் சிறப்பை கூறினாலாவது மகிழ்வேன் என்கின்றாள்” (சேதிராயர் திருவிசைப்பா 1:6) என்ற நற்றாய் கூற்று இடம் பெற்றுள்ளது. இது ஒரு புது மரபு என்றாலும் இம்மரபை

“சிறையாரும் மடக்கிளியே யிங்கேவா தேனொடு பால்
முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்
பிறையாளன் றிருநாமம் மெனக்கொருகாற் பேசாயே” (திருஞான சம்பந்தர் தேவாரம் 1:60:10)

என்று திருஞானசம்பந்தர் திருமுறையிலும் காணமுடிகிறது.

“ஆமாண்பொன் கூட்டகத்த வஞ்சொலிளம் பைங்கிளியே
பாமாலை யாழ்முரியப் பாயழியப் பண்டருள் செய்
மாமான சுந்தரன்வன் சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகா லின்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யா னின்புறநீ கூறாயே” (நம்பியாண்டார் நம்பி திருக்கலம்பகம் பா.26)

என ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்திலும் இம்மரபைக் காணலாம்.


தொகுப்புரை

பக்தி இலக்கியமே எனினும் ஒன்பதாம் திருமுறை என வகுக்கப்பெற்றுள்ள திருவிசைப்பா பகுதியில் பத்து பதிகங்களில் அகத்துறைச் செய்திகள் அமைந்துள்ளன. அருளாளர்கள் தன்னைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் கருதி களவு, கற்பு நெறிகள் அனைத்திலும் அமைத்துப்பாடி சிற்றின்பத்துறைகளைப் பேரின்பத் துறைகளாக மாற்றி அமைத்தனர். பக்தி இலக்கியக் காதல்கள் அனைத்தும் ஒரு தலைக் காதலாகவே உள்ளன. சங்க காலத்தில் ஆண் மடலேறுவேன் என்று கூறும் மரபு உண்டு. ஆனால் ஒன்பதாம் திருமுறையில் பெண்ணின் மடல் ஏற்றத்தைக் காணமுடிகிறது.

ஒன்பதாம் திருமுறையில் திருமாளிகைத் தேவர் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியின் நிலையையும், ஆற்றா நிலையில் அவள் பிதற்று தலையும், அவள் பிச்சியான நிலையையும் எடுத்துரைத்து அகத்துறைத் தலைவி ஒருத்தியின் நிலையை விளக்குகிறார். தலைவி தலைவனைத் தேடி சென்றதாக இவர் கூறுவது தொல்காப்பிய நெறிக்கு உட்பட்டதேயாகும்.

பார்வை நூல்கள்

1. தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் கொள்கைகள், ந. வள்ளியம்மாள், மக்கள் வெளியீடு, சென்னை, மு.ப.1980.

2. திருமுறைகளின் அகக்கோட்பாடு, பழ. முத்தப்பன், மீனாட்சி நூலகம், மயிலம், மு.ப. 1986

3. திருஞான சம்பந்தர் தேவார திருப்பதிகங்கள், சோமசுந்தர தம்பிரான் (ப.ஆ), தருமபுர ஆதின வெளியீடு, தருமபுரம், மு.ப.1984

4. தொல்காப்பியம் - பொருளதிகாரம், இளம்பூரணர் (உ.ஆ) -கழக வெளியீடு

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p197.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License