இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

நைடதப் காப்பியத்தில் மெய்ப்பாடுகள்

இல. இராசதுரை
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கீழ்த்திசைச் சுவடிக்காப்பகம் மற்றும் ஆய்வு நிறுவனம்,
கேரளப்பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.


முன்னுரை

மகாபாரதத்தின் கிளைக்கதையாகிய நளன் கதையானது, தமிழ் இலக்கிய உலகில் முழுக்காப்பியமாக உருப்பெற்றது 13 மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் தான். 13 ஆம் நூற்றாண்டில் வெண்பா பாடுவதில் வல்லவரானப் புகழேந்திப் புலவர், நளன்கதையை ‘நளவெண்பா’ என்றும், 16 ஆம் நூற்றாண்டில் விருத்தப்பா அமைப்பில், பாண்டிய மன்னரான அதிவீரராமப் பாண்டியர், ‘நைடதம்’ என்றும் நூலாக்கியுள்ளனர். நைடதத்தில் பெருங்காப்பியப் பண்புகளில் ஒன்றான ‘மெய்ப்பாடு’ அமைந்திருக்கும் விதத்தை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நூல் சுருக்கம்

நளன் அன்னத்தைத் தூது விட்டு, தமயந்தியைச் சுயம்வரம் மூலம் திருமணம் செய்கிறான். பின்பு கலியின் சூழ்ச்சியால் புட்கரனுடன் சூதாடி, நாட்டை இழந்து மனைவியுடன் காட்டை அடைகிறான். அப்போது அங்கு வந்த அன்னத்தைப் பிடிக்க முற்பட்ட நளனின் ஆடையை, அன்னம் கொண்டு செல்ல, இருவரும் அன்று இரவில் ஒற்றை ஆடையுடன் துயிலுகின்றனர். கலியின் சூழ்ச்சியால் நளன் தன் ஆடையை வகிர்ந்து, அவளைப் பிரிந்து காட்டிற்குள் செல்லும் வழியில், தீயில் கிடந்த பாம்பைக் காப்பாற்ற, அப்பாம்பு நளனைத் தீண்டுகின்றது. அப்போது நளன் வேறு வடிவம் பெற்று, அயோத்தி மன்னனான இருதுபன்னனிடம் ஏவலனாய்ப் பணிபுரிகிறான். தமயந்தியோ, அந்தணன் ஒருவன் உதவியால் வீமனின் அரண்மனை சேர்கிறாள். நளன், தமையந்திக்கு இரண்டாம் சுயம்வரம் என அறிந்து, இருதுபன்னனுக்குத் தேரோட்டியாக வருகிறான். அங்கு நளன், தன் குழந்தைகளைத் தழுவியதைக் கண்ட தமயந்தி, அவனை நளமகாராசன் என அறிந்து கொள்கிறாள். நளன் கலிதொடர் காலம் நீங்கித், தன் பழைய உருவம் பெற்று தமயந்தியை அடைந்து, மீண்டும் சூதாடி நாட்டைப் பெறுவதே நைடதத்தின் கதை.

1. மெய்ப்பாடு

தொல்காப்பியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும், அவற்றின் 32 வகைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிடும் எண்வகை மெய்ப்பாடுகளாவன,

”நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.” (தொல் - மெய்ப் - 1197)

என்கின்றார்.


I. நகை (சிரிப்பு)

இகழ்தல், இளமை, அறியாமை, அறிந்தும் அறியாதது போலிருத்தல் ஆகியவற்றால் நகை ஏற்படும் என்பதனை,

“எள்ளல் இளமை பேதமை மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (மேலது - 1198)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,

“நென்னல் வாட்டு நிலவுக் கதிர்மதி
யின்னு மெய்தி விறந்து படுமென” (நைடதம் - 10-2)

என்ற பாடல் வரிகளில், வருத்தத்துடன் காணப்பட்ட தமயந்தியின் பருவத்தை அறிந்த அவளுடைய தாயும் தந்தையும் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் தோழிகள், முன்னாள் நடந்த நிகழ்வின் காரணமாக மீண்டும் மதி தோன்றினால், தமயந்தி இறந்து விடுவாளோ என நினைக்கின்றனர். இங்கு தோழிமார்களிடம் அறியாமை என்ற ’மடன்’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

II. அழுகை

இழிவு, இழப்பு, தளர்ச்சி, வறுமை, அழிவில்லாக் கொள்கை ஆகியவற்றால் அழுகை ஏற்படும் என்பதனை,

“இளிவே இழவே அசைவே வறுமை என
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (தொல் - மெய்ப் - 1199)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,

“பாயரி நெடுங்கணீ ரருவி பாய்தரத்
தூயமென் மலர்க்கர நெரித்துத் துண்ணென” (நைடதம் - 23-11)

என்ற பாடல் வரிகளில், நடுக்காட்டில் நளனை இழந்தத் தமயந்தி அவனைக் காணாதவளாகிப் பெருமூச்சுவிட்டுக் கண்கலங்கினாள். இங்கு ’இழவு’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

III. இளிவரல்

முதுமை, நோய், துன்பம், எளிமை, இவற்றால் இழிவு ஏற்படும் என்பதனை,

“மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே” (தொல் - மெய்ப் - 1200)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,

“மனைவித னருந்துயர் நோக்கி மாழ்னினான்
வினைவலி யிதுவென மெலிவு நீக்கினான்” (நைடதம் - 22-11)

என்ற பாடல் வரிகளில், தமயந்தி உடுத்தியிருந்த ஆடையைக் கலியானவன் கவர்ந்து செல்ல, அச்சமயத்தில் துயரப்படும் அவளைக் கண்டு நளனானவன் வருந்துகிறான். இங்கு ’வருத்தம்’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

IV. மருட்கை (வியப்பு)

காணாததைக் காணல், அளவிற்கதிகப் பெருமை, அளவிற் குறைந்த சிறுமை, ஒன்று பிறிதொன்றாகும் ஆக்கம் இவற்றால் மருட்கைத் தோன்றும். என்பதனை,

“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (தொல் - மெய்ப் - 1201)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,

“ஈந்த வாலரி மெய்தபொற் குருசிதீ யின்றி
யாய்ந்த கேள்வியான் றொடுதலு மடிசிலா யமைய” (நைடதம் -27-13)

என்ற பாடல் வரிகளில், தமயந்தியின் இரண்டாம் சுயம்வரத்திற்கு, இருதுபன்னனுடன் தமயந்தி இல்லம் வந்த நளன், அரிசி போடப்பட்ட பொன் குடத்தைக் கையால் தொட, அவ்வரிசி தீயின்றிச் சோறாகியது. இவ்வதிசயத்தைக் கண்ட தமயந்தியின் தோழியான ’கேசினி’ வியப்பு அடைந்தாள். இங்கு ’பெருமை’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.


V. அச்சம்

தம் ஆற்றலால் துன்பத்தைத் தரும் தெய்வங்கள், கொடிய விலங்குகள், கள்வர்கள் போன்றவர்களால் காரணங்களான அச்சம் தோன்றும் என்பதனை,

“அணங்கே விலங்கே கள்வர் தம்இறை எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல் - மெய்ப் - 1202)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,

“அணுகி யாங்குப் புலம் பெய்து மலர்பு+ங் கோதை மயிலெழிய
வணிக மாக்க ளியாவரையு மதவால் யானை கொன்றேகத்” (நைடதம் - 23-29)

என்ற பாடல் வரிகளில், காட்டினில் தனியாக நிற்கும் தமயந்தி, வியாபாரிகளை வழித்துணையாகக் கொண்டு செல்லும் வேளையில், மும்மதம் பொருந்திய யானை அனைவரையும் கொன்று விட்டு, தமயந்தியை மட்டும் விட்டுவிட்டுச் செல்கின்றது. இங்கு ’அணங்கு’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

VI. பெருமிதம்

கற்ற கல்வி, அஞ்சாமை, நன்னடை, வரும்புகழ், வரையாது கொடுக்கும் வள்ளன்மை ஆகியவற்றால் ஒருவர்க்கு பெருமிதம் தோன்றும். என்பதனை,

“கல்வி தறுகண் இசைமை கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (தொல் - மெய்ப் - 1203)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,

“அனைத்தும் வல்ல அறநெறி அந்தணர்
நினைத்த யாவையு நீரொடு நல்கினான்” (நைடதம் - 14-5)

என்ற பாடல் வரிகளில், நளனின் திருமணத்திற்கு வருகை புரிந்த நான்கு வேதங்களையும் கற்றறிந்த அந்தணர்களுக்கு, அவர்கள் நினைத்த அனைத்தையும் நளன் தானமாகக் கொடுத்தான் என்னும் கருத்தில் ’கொடை’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

VII. வெகுளி

உறுப்புக்களை அறுத்தல், தம் கீழ் வாழ்வோரைத் துன்புறுத்தல், அடித்தல், கொலைபுரிதல் ஆகியவற்றால் சினம் தோன்றும். என்பதனை,

“உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே” (தொல் - மெய்ப் - 1204)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,

“றொய்யின் முலைமேற் புல்லுதற்குத் தொடரத் துஞ்சா வருங்கற்பின்
தையல் முனிந்து நோக்குதலும் சாம்பராயிற்று அவனுடலே” (நைடதம்- 23-24)


என்ற பாடல் வரிகளில், நளனைப் பிரிந்து காட்டில் தனியே நிற்கும் தமயந்தியின் அழகைக் கண்டு, வேடன் ஒருவன் அவளை அணைக்கப் பின் தொடர்கின்றான். அப்போது அவனைத் தமயந்தி சினந்து பார்த்த வேளையில், அவ்வேடனின் உடல் சாம்பலாயிற்று. இங்கு ’கொலை’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.


VIII. உவகை

செல்வம், அறிவு முதிர்ச்சி, புணர்ச்சி, விருப்பமுடையாருடன் விளையாடுதல் போன்றவற்றால் மகிழ்ச்சி ஏற்படும் என்பதனை,

“செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே” (தொல் - மெய்ப் - 1205)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,

“பொன்னவி நிளமுலைப் பூவை தன்னோடு
மண்ணிய மணியனார் வளைந்திட்ட டார்ரோ” (நைடதம் - 18-19)

என்ற பாடல் வரிகளில், திருமணம் முடிந்து விந்த மாநகரம் அடைந்த நளனும், தமயந்தியும், அந்நகரில் உள்ள தடாகத்தில் விளையாடி இன்பம் அடைந்தார்கள். இங்கு ’விளையாட்டு’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

தொகுப்புரை

சீரானக் கதையமைப்பைப் பெற்றுள்ள நைடதக் காப்பியத்தில், பெருங்காப்பியப் பண்புகளில் ஒன்றான எண்வகை மெய்ப்பாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.

துணைநூற்கள்

1. வழித்துணை ராமன் ஏ.எஸ்., நைடதம், பாரிநிலையம், சென்னை. 600 108 (2005)

2. கதிரைவேற்பிள்ளை. நா, நைடதம் மூலமும் விருத்தியுரையும், வித்யாரத் நாகர அச்சுக்கூடம், சென்னை. (1930)

3. ச.வே. சுப்பிரமணியம், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p198.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License