இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியின் அகச் சிறப்புகள்

முனைவர் மீ. கோமதி
உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை,
சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர்


முன்னுரை

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் தோன்றியவை சங்க இலக்கியங்கள் எனப் போற்றப்பெறும் பாட்டும் தொகையும் ஆகும். இவை தோன்றிய பிறகு அற இலக்கியங்களும், அவற்றை ஒற்றிய காலக்கட்டத்தில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் தோன்றின. எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியம் ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் 2381-ல் உள்ள 1862 பாடல்கள் அகப்பொருள் பற்றியன ஆகும். பொருளிலக்கியம் என்பது அகம், புறம் என்னும் இருதிணை வடிவமைந்ததாகும்.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்-பொருள்-பொருளியில் - 219 நூ)

அகப்பாடல்கள் உயிரிகள் பிறத்தற்கும், பிறப்பிப்பதற்கும் அடிப்படையான இன்ப உணர்வை உலகின் மருங்க அறாது வழிமுறைக் காக்கும் காமத்துடிப்பைக் பொருளாக கொண்ட தன்மையுடையது ஆகும்.

சங்ககால மக்களின் வாழ்க்கை முறையானது அகம், புறம் என இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. அகம் என்பது உள்ளத்தால் மட்டும் உணரக்கூடிய உணர்வுகளையும், புறம் என்பது அகமல்லாதவற்றையும் குறிப்பது. சுருங்கக்கூறின் அகம் என்பது மக்கள் தம் காதல் வாழ்வினையும், புறம் என்பது வீரம், வெற்றி கொண்ட முதலியவற்றையும் குறிப்பது. அகவாழ்க்கை என்பது களவு, கற்பு என இருபாற்பட்டது. களவு என்பது திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வையும், கற்பு என்பது திருமணத்திற்கு பிந்தைய இல்வாழ்க்கையும் சுட்டுவதாகும். சங்க அகமரபை திவ்வியப் பிரபந்தம் அடியொற்றி பாடப்பெற்றது என்பதை ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

அகப்பாடல் மரபு

பக்தி இலக்கியத்தில் அகமரபு, பக்தியை வெளிப்படுத்துகின்ற கருவியாக விளங்குகின்றது. சங்க அக இலக்கியத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலிய மாந்தர்கள் இடம்பெறுவது போல பக்தி இலக்கியத்திலும் இடம்பெறுகின்றன. பழந்தமிழ் அகமரபினை ஒட்டி தலைமக்கள் இவரெனக் கூறுதல் இல்லை. பக்தி இலக்கியத்தைப் பொறுத்தவரை இறைவன் தலைவனாகவும் பாடுகின்ற அடியவர் தலைவியாகவும் சுட்டிக் கூறப்படுகின்றனர். இதனால் சங்க அக இலக்கிய மரபு பக்தி இலக்கிய வளர்ச்சிக்கு ஓர் அடிப்படையாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது. அகப்பொருளின் தலைமை மாந்தர்களாக தலைவனும் தலைவியும் விளங்குகின்றனர்.


அகத்தூது

ஒருவர் கருத்தை மற்றவருக்கு வெளிப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றுள் தூது செல்லுதல் ஒன்று. தூது இலக்கியங்கள் தூதுக்குரியதாக அகப்பொருளை எடுத்துக் கொண்டன. இறைவனைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் தூதின் வழி இறையன்பை வெளிப்படுத்தினர். அத்தகைய வகையில் அடியார்கள் தன்னைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் பாவித்து அகப்பொருள் அமைப்பில் பாடிய பாடல்களில் தூது இடம்பெறுகிறது. ஆழ்வார்கள் தூது அனுப்பும் பாடல்கள் நம் உள்ளத்தை உருக்குவனாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் நாரையைத் தூது விடுகின்றார்.

தலைவனைப் பிரிந்த தலைவி காம மயக்கத்தால் அஃறிணை பொருள்களையும், உயர்திணைப் பொருள்களையும் கொண்டு தூதாக அனுப்புவது முறையாகும். அத்தகைய வகையில் கொடிய சிறகுகளை உடைய கருடனைக் கொடியில் உயர்த்திய இறைவனிடம் நம்மாழ்வார் நாரையைத் தூது விடுகின்றார். இதனையே;

“அஞ்சின்ற மடநாராய் அளித்தாய் நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் அது என்று எனக்கு அருவர்
வெஞ்சிறைப்புண் உயர்த்தாற்கு என விடுதூதாய் சென்றக்கால்
வன்சிறையில் அவன்னுக்கில் வைப்புண்டால் என் செயுமோ” (முதல் பத்து - நான்காம் திருவாய்மொழி பா- 2115)

என்ற பாடல் வரிகள் உணர்த்தும். அன்னத்தைத் தூது விட்டுத் தன் பக்தியினை நம்மாழ்வார் வெளிப்படுத்துகின்றார்.

மெல்லிய நடையை உடைய அன்னங்களே வாமன வடிவத்தால் விளங்கும் பிரமச்சாரியாக இருக்கும் பெருமானிடம் தூதாகச் செல்லுங்கள் என்று அன்னத்திடம் கூறுகின்றார். “விதையினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்கள்
மதியினாள் குறள்மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே”(முதல் பத்து - 4ம் திருவாய்மொழி- பா-2117)

என்ற திருவாய்மொழி பாசுரத்தில் தலைவனாம் தூது செல்ல அன்னத்தை அனுப்பிய தலைவியாக நம்மாழ்வார் தன்னை நிறுத்திப் பாடுகின்றார்.

வாடாத மலர் போன்ற திருவடிகளில் வைத்து வணங்குவதற்காகவே இவ்வுயிர்களைப் படைத்தவனிடம் பனிக்காற்றை அழைத்துத் தூதாக அனுப்பும் தலைவியின் மனநிலையைக் கூறுகின்றார்.

“நாடாத மலர்நாடி நாடாறும் நாரணன்றன்
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்றது
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என்செய்வதோ
ஊடாடு பனிவாடாய் உரைத்து ஈராய் எனது உடலே” (முதல் பத்து - 4ம் திருவாய்மொழி - பா-2123)

இப்பாடலில் நம்மாழ்வார் நாரை, அன்னம், காற்று ஆகியவற்றைத் தூதாக அனுப்பிப் பெருமானைத் தலைவனாகவும், தன்னைத் தலைவியாகவும் பாவித்துப் பாசுரங்களை அகமரபினை ஒட்டி அமைத்துள்ளார்.


பசலை நோய்

தலைவனின் பிரிவால் தலைவியின் உடலில் ஏற்படும் வாட்டமும் மேனி மாறுபாடும் ‘பசலை நோய்’ என்று அழைக்கப்படுகிறது. தலைவியாய் பாவிக்கும் நம்மாழ்வார் தனக்கும் பசலை நோய் உண்டானதை உரைப்பதாக இப்பாடல் அமைகின்றது.

நாரையை நோக்கி என் தாயும் நித்திய சூரிகளும் தூங்கினாலும் நீ தூங்குவதில்லை. ஆதலால் நீயும் என்னைப் போல் பசலையாய் உடலெங்கும் பரவும்படி திருமாலால் நெஞ்சம் கொள்ளப்பட்டாயோ எனக் கூறுகிறார்.

“வாயும் திரை உகளும் கானல் மடநாராய்
ஆயும் அமர் உலகம் துஞ்சினும் நீ துஞ்சாமல்
நோயும் பயலையும் மீதூர எம்மேபோல
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டவே” (இரண்டாம் பத்து - 1ம் திருவாய்மொழி பா- 2192)

என்ற பாசுரங்கள் மேனி முழுவதும் மாறுபட்டுள்ளதை நம்மாழ்வார் வெளிப்படுத்துகின்றார். இளமையாலும் அன்புடன் கூடிய சொற்களாலும் வடிவில் பசுமையாலும் வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டு பண்ணுவதால் என் எலும்பைத் துளைத்து, அதில் நூல் இழையைக் கோர்த்தது போன்ற குளிர்ந்த வாடைக்காற்று அறுக்கிறது. எலும்பும் நரம்பும் ஆகும்படி உடல் இளைத்து மாறி வருவது என்பதை நம்மாழ்வார் இறைவனைக் காணாது தான் உடலாலும் மனத்தாலும் படும் துன்பத்தை எடுத்துரைக்கின்றார்.

“என்பு இழை கோப்பது போலப் பணிவாடை ஈர்க்கின்ற
என்பிழையே நினைந்தருளி அருளாக திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுத்தென்று ஒருவாய்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே” (முதல் பத்து - 4ம் திருவாய்மொழி பா-2121)

என்று சந்திரனைப் பார்த்து நான் பசலை நோய்கண்டு மேனியழகை இழந்தது போல நீயும் பசலையற்று அன்றாட அழகில் குறைந்து கொண்டு வருகிறாயோ எனத் தலைவி வினவுவதாக அமைகின்றது.

தாய் இரங்குதல்

சங்க அக இலக்கியங்களில் நற்றாய், செவிலித்தாய் ஆகிய இருவரும் தாய் நிலையில் சித்தரிக்கப்படுகின்றனர். தலைவியின் உடல் மன வேறுபாடுகளைக் கண்ணுறும்பொழுது நற்றாய், செவிலித்தாய் இருவரும் கவலை கொள்வதும் அவள் நிலை கண்டு இரங்குதலும் அகமரபுகளின் சுட்டப்பெறுகின்றது.

ஆழ்வார் இப்போது தாமான தன்மை இழந்து தலைவி நிலையில் நிற்கிறாள். பராங்குச நாயகியாகிய இவளுடைய நிலைமையைத் தாயானவள் தலைவியை நோக்கிக் கூறுவதாக இத்திருமொழி அமைகின்றது.

தலைவியானாவள் ஓர் இடத்தில் இல்லாமல் பல இடங்களிலும் உலாவி மனமும் கரைந்து இசையோடு பல பாடி எல்லா இடங்களிலும் இறைவனைத் தேடுகிறாள்.

“ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வான்னுதலே” (இரண்டாம் பத்து நான்காம் -திருவாய்மொழி பா- 2225)

என திருவாய்மொழி உணர்த்துகிறது.

குவளை மலர் போன்று அவள் கண்களில் நீர் வருவதைக் கண்ட தாய், துளசி மாலையை அவளுக்குத் தரலாகதோ என வினவுகிறாள்.

“இவன் இராப் பகல்லாய் வெரி இத்தனை
குவளை ஒண்கண்ணீர் கண்டாள் வண்டு
திவளும் தண் அம்துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே” (இரண்டாம் பத்து -நான்காம் திருவாய்மொழி - பா-2229)

என்று குறிப்பிடுகின்றார். இதனை அவளுடைய கண்களிலிருந்து நீர் வருவதைக் கண்டு தன் பக்தியினை நம்மாழ்வார் வெளிப்படுத்துகின்றார்.

என் மகள் உன்னை நினைத்துச் செயல்களாலும் குணங்களாலும் வஞ்சித்தவனே என்று உன்னை வணங்குகின்றாள். இவள் படுகின்ற துன்பங்கள் கணக்கற்றவை. உடல், உள்ளம், சொல் ஆகிய முக்காரணங்களால் இவள் இத்தனையும் படவேண்டியது என்கின்றாள் தலைவி.

“வஞ்சனே என்னும் கைதொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சமென் றிவள்பட்டனவே” (இரண்டாம் பத்து - நான்காம் திருவாய்மொழி - பா-2232)

இப்பாடலில் தாய் இரங்கிக் கூறுவதாக ஆழ்வார் தம் பாசுரங்களில் அகமரபினை ஒட்டி அமைத்துள்ளார்.


தொகுப்புரை

இவ்வாறாக, சங்க இலக்கியத்தில் அகம், புறம் கோட்பாடுகளின் நீட்சியாக விரிந்த ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் பல புதிய உண்மைகள் வெளியாகும் என்பதில் ஐயமில்லை.

பார்வை நூல்கள்

1. அருணாசலம். ப, பக்தி இலக்கியம், முல்லை நிலையம், சென்னை.

2. இராமசுப்ரமணியம் வ. த., (பதிப்பாசிரியர்), ஸ்ரீ வைணவத் திருத்தொண்டர், மூதறிஞர், வி.எஸ்.வி. இராகதாசன், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - மூலமும், தெளிவுரையும், மூன்றாம் ஆயிரம், முல்லை நிலையம், 9, பாரதிநகர், முதல் தெரு, தி.நகர். சென்னை-6000017.

3. தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், 6/161 தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005.

4. முனைவர் சு. ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு, கண்மணி பதிப்பகம், திருச்சி-2.

(குறிப்பு: பார்வை நூல்களில் நூல்களின் பதிப்பு, ஆண்டு குறிப்பிடுவது மேலும் சிறப்பாக இருக்கும்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p199.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License