‘சமூகப் ருளாதாரச் ழலில் நெய்தல் தலைவி’என்பது இக்கட்டுரையின் தலைப்பாக அமைகிறது. பொருளாதாரச் சூழலில் நெய்தல் நிலம் சார்ந்த தலைவியின் சூழல்கள் அமைந்த திணைப்பாடல்கள், நூல்கள், கட்டுரைகளை இனம் கண்டு தொகுத்துக் கட்டுரை ஆய்வுக்குத் தேவையானவற்றைத் தருவது, இக்கட்டுரையின் பொருளை மேலும் அழகூட்டுவதாகும். கட்டுரைக்கு அடிப்படையாக அமைவது ஆதாரங்களாகும். இலக்கிய வரையறையை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் தமிழ் இலக்கிய வரலாறு போன்ற நூல்கள் முதன்மை ஆதரமாகும். இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் துணைமை ஆதாரங்களாகும். இவ்வாய்வுக் கட்டுரையில் பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சங்க செவ்வியல் இலக்கியத்தில் திணைப்பாகுபாடு என்பது இலக்கியம் சார்ந்த ஒன்றாகவேக் கொள்ள வேண்டும். தொல்காப்பியர் பாடல்களை முன்வைத்து அதில் பயின்று வரும் வாழ்வைப் பாடலின் உள்ளடக்கம் என்னும் வகையில் வகைப்படுத்தியிருக்க வேண்டும். தலைவன் தலைவி ஆகியோருக்கான அடிப்படைத் தகுதிகளையும் வரையுறுத்துள்ளார். ஏவலரும், வினைவலரும் தலைவன், தலைவியாகப் பாடல்களில் சுட்டப்படுவதில்லை - தொல்காப்பியம் இதை அனுமதிக்கவும் இல்லை. ஆனால், ழ்வில் இவர்கள் ஓங்கியிருக்க வேண்டும். எல்லோரையும் போல் வாழ்ந்திருக்கவும் வேண்டும். எனினும், சங்கப்பாடல்களுக்கும் அக்கால வாழ்விற்கும் தொடர்பே இருந்திருக்க இயலாது, எனக் ருதவும் இயலாது. எக்காலத்திலும் கவிஞனுக்கும் வாழ்விற்கும் இடையிலான உறவில்தான் இலக்கியம் உயிர்ப் பெறுகிறது. இந்த உறவு எத்தகையது என்பது கவிதை மீதான ஆழ்ந்த வாசிப்புதான் உணர்த்த முடியும்.
சங்கப் பாடல்களில் நிலம் என்பது பாடலில் சுட்டப்படும் மனிதர்களின் இயங்குதளத்தைக் குறிக்கிறது. ஆனால் இயங்குதளமான நிலமே வாழ்வின் போக்கை, கலாசாரத்தைத் தீர்மானிக்கிறது. தொல்காப்பியரைப் பொறுத்தவரையில் பாலை ஒரு நிலமல்ல. இயல்பான வாழ்க்கை பாலையில் நடைபெறுவதில்லை, இயல்பிற்கு மாறான நிலை பொழுது மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. பொழுது அதாவது வேனிற்கால நண்பகல் நேரம் மனிதனை, உயிரினங்களை வதைக்கின்றது. சங்கப்பாடல்கள் இந்த வதைபடும் காட்சியை மீண்டும் மீண்டும் முன்வைத்துள்ளன. ஏனைய நான்கு நிலங்களும் மனித வாழ்விற்கு உகந்ததே. பாதுகாப்பானதும் கூட.
மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை நிலம்தான் தீர்மானித்துள்ளது. முல்லையிலும் குறிஞ்சியிலும் மிகுபொருள் உற்பத்தி இல்லை. வாழ்விற்குத் தேவையானப் பொருளை இயற்கையிலிருந்து மனிதன் பெற்றுக் கொள்ளுகிறான். உணவிற்காகவே, உணவு,தானியங்களைப் பயிரிடுகிறான். வேட்டையாடுதல் நிகழ்வுதுண்டு. அதுவும் உணவிற்காகவே வசிப்பிடங்கள் எளிமையான சற்றுக் கூடுதலாகக் கிடைக்கும் பொருட்களைப் பிற நிலங்களில் கொடுத்துத் தேவையானப் பொருள்களைப் பெற்றுக் கொள்வர்.
இவையனைத்தும் பாடல்கள் முன் வைக்கும் சித்திரங்களே. குறிஞ்சியின் உறுப்பொருளானகூடல். வாழ்விற்கு அடிப்படையானது இயற்கையானது குறிஞ்சித்திணைப் பாடல்கள் மேலோங்கி இருக்கும், காமம் மிக உயர்வானது. உயிரின் அடிப்படை இயல்பு. முல்லையின் உரிப்பொருளான இருத்தல் காமத்தை நெறிப்படுத்துவது. தொல்காப்பியர் இவ்விரு திணைகளையும் முதல் இருதிணைகளாகச் சுட்டுகிறார். சிக்கலான சமூகஅமைப்பை இவ்விரு நிலத்தைச் சுட்டும் பாடல்களில் காண இயலவில்லை. ஏறுதழுவுதலும் அதைச்சார்ந்த கலாச்சாரத்தையும் கலித்தொகைப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். கலித்தொகையும் பரிபாடலும் காலத்தால் பிந்தியவை என்றும் வையாபுரியின் கருத்தினை நினைவில் கொள்ளவேண்டும்.
மருதமும் நெய்தலும் மிகுபொருள் உற்பத்தி நிகழ்ந்த இடங்கள். இதன் காரணமாக வணிகச்செயல்பாடும் செழித்திருந்தது. பொருளாதாரத்தில் வளத்தை இவ்விரு நிலங்களுமேக் கொண்டிருந்தன. பொருளாதாரத்தை மேலாண்மை செய்ய மனிதன் முற்படும்போது சமூக அமைப்பு சிக்கலாகி விடுகிறது. முல்லையிலும் குறிஞ்சியிலும் உயர்வு தாழ்வு கொண்ட வாழ்வு பாடல்களில் சித்தரிக்கப்படவில்லை. ஆனால், மருதத்திலும், நெய்தலிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூக அமைப்பினை எதிர்கொள்ளமுடிகிறது.
ஒரு பசுவிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் நிலையும் உண்டு. அதேசமயம் பெருநில உடைமையாளர்களையும் காணமுடிகிறது. காதலுக்கு இப்பொருளாதார வேறுபாடு தடையாக அமையாது என்றுதான் கவிஞன் உணர்த்த முயல்கிறான். ஆனால் பெரும்பாலும் ஒத்தப் பொருளாதார நிலையைச் சார்ந்த தலைவன் தலைவி மணவாழ்வில் இணைவதையேக் காணமுடிகிறது. உற்பத்தி செய்பவன் மட்டுமே நிலத்திற்கு உரியவன் ஆவான். உற்பத்திக்குப் பாடலில் தலைவன், தலைவியாகும் தகுதியைப் பெறுவதில்லை.
"நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி யத்தை
பெருங்கனாடன் வரைந்தென வவனெதிர்
நன்றோ மகனே யென்றனன்
நன்றே போலு மென்றுரைத் தோனே”
(குறுந்தொகைபாடல் -389 )
இப்பாடலில் தலைவன் வரைவு மேற்கொண்டச் செய்தியை வந்துரைக்கும் 'மகன் ' நெய்கலந்த உணவு பெறுவதாக, என்கிறாள் தோழி. இவன் தலைவனை ஏவகனாக இருத்தல்கூடும். இவனுக்கும் வாழ்வில் காதல் அரும்பும். ஆனால் அக்காதல் பாடப்படும் தகுதி படைத்தல் அல்ல. பாடல்களைக் கூர்ந்து வாசிக்கும் போது இவர்களுடைய காதலும் பாடல்களில் தலைதூக்குவதைக் காணமுடியும். குறுந்தொகைப் பாடல் - 392ல் சுட்டப்படும் தலைவி,
"துளரெறிநுண்டுகட்கலளஞர்தங்கை"
களை எடுப்பவனின் தங்கை என்றாலும் மருதநிலக் காதல்கள் மருத நிலத்தில் காதல் ஒத்தப் பொருளாதாரச் சூழலில்தான் எழுந்துள்ளது எனக் கூறமுடியும்.
நெய்தல் நிலம்ஏனைய மூன்று நிலங்களிலிருந்து முற்றிலும் வேறாக அமையும். பொருளாதாரத்தின் சமூகநிலை ஏற்றத்தாழ்வுகள் கொண்டவர்களுக்கிடையில் காதல் எழுகிறது. தலைவி பெரும்பாலும் மீன் வேட்டம் நிகழ்த்துபவர்களின் மகளாக தங்கையாக அமைகிறாள். ஆனால் இவர்களை நாடிவரும் காதலன் கொடி அசையும் தேரில் வந்து இறங்குகிறான். சமூகப் பொருளாதார நிலையில் வேறுபட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இடையே நிகழும் காதல் என்ற உணர்வு கவிஞர்களுக்கு இருந்துள்ளது. நற்றிணை 45-வது பாடலைச் சுட்டவேண்டும்.
"இவளேகானல் நண்ணிய காமர்சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்ஏறி பரதவர் மகளே !நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியமமூதுர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல்மகனே ;
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவுநாறுதும்; செலநின்றிமோ!
பெருநீர்விளையும் எம்சிறு நல்வாழ்க்கை
நும்மொருபுரைவதோ அன்றோ ;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே”
(நற்றிணைபாடல் -45)
பெயர் அறியாத புலவர் பாடிய பாடல் இது.
முதல் ஐந்து வரிகளிலும் தலைவி தலைவனின் சமூகநிலைச் சுட்டப்படுகிறது. தலைவி சிறுகுடியைச் சார்ந்த மீன்ஏறி பரதவர் மகள். தலைவனோ நியமமூதூரிலிருந்து கொடிஅசைய தேரில் வந்து இறங்கும் செல்வம் ஒருவரின் காதல்மகன் பெரும்பாலும் வணிகனாகவோ அதிகாரமையத்தைச் சார்ந்தவனாகவோ இருத்தல்கூடும். அடுத்த மூன்றுவரிகளும் சமூகப் பொருளாதார வேறுபாடு துல்லியமாக முன்வைக்கப்படுகிறது. சுறாவின் கசையை உணக்கமுனையும் தலைவியும் அவளைச் சார்ந்தவர்களுக்கு பறவையை விரட்டுவது அவர்கள் பண்பு ஏறிய வாழ்க்கை, புலவுநாறுதும் ‘செல்நின்றிமோ’ ‘மீன்வாடை வீடும் எங்களிடமிருந்து விலகிச்செல்’ என்கிறார் தோழி.
பாடலின் அடுத்த வரியிலேயே தங்கள் வாழ்வு குறித்த இழிவை அல்ல பெருமிதமே உள்ளது என்பது பதிவு செய்யப்படுகிறது. 'பெருநீர் விளைவும் எம் சிறு நல்வாழ்க்கை' கவிஞன் இந்த வாழ்வு செல்வனின் மகனோடு பொருந்தாது என்கிறார். கடைசி வரியாக, 'எம்மனோரில் செம்மலும் உடைத்தே' எங்கள் இனத்திலும் தலைவிக்குத் தகுதியானவன் உண்டு என்பது கவிஞனின் பார்வையைத் துலக்கி விடுகிறது. சங்கப்பாடல்கள் நெய்தல் திணைப்பாடல்களில் மட்டுமே இத்தகையப் பாடல்களைக் காணமுடிகிறது.
நெய்தல் மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர்களின் நிலம். அதேசமயம் கடல் வணிகம் நிகழ்த்தும் வணிகர்கள் வாழுமிடம் நெய்தலாகத்தான் இருத்தல் வேண்டும். இதனால் சமூகம் பொருளாதார ஏற்றதாழ்வு நெய்தலில் இயல்பாக இடம்பெறுகிறது. நெய்தல் பெண்ணின் வாழ்வை வாழ்வின்மீது இது தாக்கததைச் செலுத்துகிறது. மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர் வீட்டில் பெண்களும் உழைத்தாக வேண்டும். மருதத்தில் இந்நிலை இல்லை. அங்கு இல்லறக் கடமைகள் மட்டுமே பெண்கள் ஆற்றிட வேண்டும்.
“ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக்கெளீஇ
திமிலோன் தந்த கருங்கான்வயமின்
தழைஅணிஅல்குல் செல்வத்தங்கையர்
விழாஅயர்மறுகின்விலை எனப்பகளும்”
(அகநானூறுபாடல் - 320)
மீன்வேட்டத்தில் ஆண்கள் கொண்டு வந்த மீனைத் தேவைப்படும் இடங்களைத் தேடிச்சென்று விற்பனை செய்யும் கடமை பெண்களுடையது. இதனால் இவர்கள் வாழ்வு அல்லல் நிறைந்தது.
குறுந்தொகை 269-வது பாடல் நெய்தல்நிலக் குடும்பத்தில் தலைவியின் ஒருநாள் வாழ்வைச் சித்தரித்துள்ளது.
"வயற்சுறாவெறித்த புண்டணிற்தெந்தையும்
நீனிறப்பெருங்கடல் புக்கனன்யாயும்
உப்பைமாறி வெண்ணெற்றரீகிய
உப்புவிளை கழனிச் சென்றனள்"
(குறுந்தொகைபாடல் - 269)
கணவன் சுறா எரிந்து புண்பட்ட போது அவனையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அவளுடையதாகிறது. புண்பட்ட கணவனுக்குப் பணிவிடை செய்வதோடு உப்பு வித்துக் குடும்பச் செலவினுக்கான பொருளையும் திரட்டியாக வேண்டும். கூடவே தன் பெண் பாதுகாக்க வேண்டும். ஏனைய திணைப் பெண்களோடு ஒப்பிடும்போது, நெய்தல்நிலப் பெண் மட்டுமே இப்பெருஞ்சுமையைச் சுமக்க நேரிட்டுள்ளது. மருதநிலப் பெண்கள் கணவரின் பரத்தமை ஒழுக்கத்தால் அல்ல அல்லலுறுகின்றனர். எனினும், பொருள் தேடும் சுமை அவர்களுக்கு இல்லை. குறிஞ்சி, முல்லை நிலத்தில் வாழ்வு எளிமையானது. உடல் உழைப்பின் மூலம் உணவைப் பயிரிடுவர் அல்லது சேகரிப்பர். அங்கும் பெண்கள் உழைத்திருக்கக் கூடும். ஆனால், நெய்தல் வாழ்வு மருதத்தைப் போல் சிக்கலானது. நெய்தல் பெண்கள் போராடியாக வேண்டும்.
நெய்தலில் உயர்குடியினரும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் வாழ்வு மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர் வாழ்விலிருந்து வேறானதாக இருந்திருக்க வேண்டும்.
“புள்ளும்மாவும் புலம்பொடுவதிய
நள்ளெனவந்தநார் இல்மாலை
பலர்புகுவாயில் அடைப்பக்கடவுநர்
வருவீர்உள்ளீரோ எனவும்
வாராதோழி - நம்காதலரே”
இப்பாடலில் மாலை நேரத்தில் வீட்டின் வாயில் அடைக்கப்படும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
வாயிலை அடைக்கும் முன் வீட்டினுள் வர விரும்புகிறவர்கள் உள்ளீர்களாஎனக்கூவி அழைக்கப்படுகிறது. உறுதியாக இது செல்வந்தர்கள் வசிக்கும் வீடுதான். இவர்கள் நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பெரும் வணிகர்களாக இருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் திணை மாந்தரையும், சமகால வாழ்வின் ஜாதிகளையும் கருதக்கூடாது.
மீன்வோட்டம் நிகழ்த்துபவர்கள் கடல் வாணிபம் செய்பவர்கள் நெய்தல் நில மக்களை வணிகர்கள். உயர் பொருளாதாரச் சூழலில் வாழ்ந்த போது மீன்வேட்டம் நிகழ்த்துபவர்கள் அன்றாடம் வாழ்க்கை செலவிற்காகக் கடலில் போராடினர்.
“... ... ... ... ... அல்கல்
இளைஞரும் முதியவர் கிளையுடன்குழிஇ
கோர்ட்சுறா எரித்தன சுருங்கிய நரம்பின்
முடிமுதிர் பரதவர் மடமொழி குறுமகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெருங்கால்
திரைஎழு பௌவம் முன்னிய
கொலை வெஞ்சிரா அர்பாற்பட்டனளே”
(நற்றிணைபாடல் - 207)
இந்த நற்றிணைப் பாடலின் நெடுந்தேரில் வரும் தலைவனுக்கு மனைவியாக வேண்டிய தலைவி கொலை வெஞ்சிறாஅர்களின் ஒருவனுக்கு மனைவியாக நேரிடும் அவலத்தை எதிர்கொள்ள முடிகிறது. கவி மீன்வேட்டம் இனக்குழு மக்கள் ஒருங்கிணைந்து நிகழ்த்த வேண்டிய தொழில் இளையோரும், முதியரும் ஒன்று சேர்ந்து பணியாற்றியாக வேண்டும். வணிகரின் தொழில் வேறானது. கவிஞன் அத்தொழிலையே உயர்வாகக் கருதுகிறான். இந்த ஏனைய மூன்று நிலங்களிலும் இந்த அளவிற்கு இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே நெய்தல் நிலப் பெண்கள் பொருளாதாரச் சூழலில் எழும் வாழ்க்கை சிக்கலை எதிர்கொள்ளும்படியானது. நெய்தல் பாடல்கள் இதை உணர்த்தி உள்ளன.
சங்கப்பாடல்களில் மனிதவாழ்வு அவர்கள் வாழும் நிலத்தின் தன்மைக்கேற்ப அமைந்தது. நெய்தல் மீன்வேட்டம் நிகழ்த்தும் எளியமக்களும் கடல்வாழிடம் நிகழ்த்தும் செல்வந்தர்களும் வாழும் இடமாக அமைந்தது. நெய்தல் நிலத் தலைவன் தலைவியர் இவ்விரு பிரிவினரையும் சார்ந்தவர்களாக அமைந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு இவ்வாழ்வின் மீது தாக்கத்தைச் செலுத்தியது நெய்தல் தலைவி இதை எதிர்கொள்ளும்படியானது.
1. மீனாட்சி சுந்தரனார் தெ.பொ, தமிழ் இலக்கிய வரலாறு, காவ்யா, சென்னை (2005)
2. ஜெயராமன். நா, தமிழ் இலக்கிய நெறிகள், குமரன் பதிப்பகம், மதுரை (1979)
3. சுப்பு ரெட்டியார், அகத்திணைக் கொள்கைகள், பாரி நிலையம், சென்னை.
4. அருணாச்சலம். மு, தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு, தி. பார்க்கர், சென்னை.