இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தொல்காப்பியத் திணை அடிப்படையில் ஔவையாரின் புறப்பாடல்கள்

முனைவர் த. டான் ஸ்டோனி
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை,
தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.


முன்னுரை

தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் முதலிய இயல்களில் இலக்கியம் பாடுவதற்கான பாடுபொருள்களையும், செய்யுளியல், மரபியல் போன்ற இயல்களில் இலக்கியம் பாடுவதற்கான இலக்கணத்தையும் வரையறை செய்கிறார். இதன் அடிப்படையில் ஔவையார், தொல்காப்பியர் இலக்கியம் பாடுவதற்காக வரையறை செய்துள்ள கூற்றுகளின் (தலைவன் கூற்று, தலைவி கூற்று, செவிலி, நற்றாய், கண்டோர் கூற்று), அடிப்படையில் அகப்பாடல்களையும், புறத்திணைகள் அடிப்படையில் புறப்பாடல்களையும் எவ்வாறு இலக்கணம் மாறாமல் படைத்திருக்கிறார் என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். சங்ககால ஔவை 26 அகப்பாடல்களையும், 33 புறப்பாடல்களையும் பாடியுள்ளார். தொல்காப்பியர்;

“வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே”

என புறத்திணைகளை ஏழுவகையாகக் கூறுகிறார்.

இவ்வேழு திணைகளில், ஔவையார் வெட்சித்திணையில் ஒரு பாடலையும் (269), கரந்தை திணையில் இரண்டு பாடல்களையும் (286, 290), தும்பைத்திணையில் ஆறு பாடல்களையும் (87, 88, 90, 295, 311, 89,), வாகைத்திணையில் ஆறு பாடல்களையும் (93, 98, 99,104, 315,100), பாடாண்திணையில் 14 பாடல்களையும் (91, 92, 94, 95, 96, 97, 101, 102, 103,140, 206, 367, 390, 392), பொதுவியல்திணையில் நான்கு பாடல்களையும் (187, 231, 232, 235) பாடியுள்ளார். பிற்காலத்தில் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது இவை புறப்பாடல்கள் என்பதால் இவற்றைப் புறநானூற்றில் சேர்க்கவே, தற்போது இப்பாடல்கள் அனைத்தும் புறநானூற்றில் காணப்படுகின்றன. புறநானூற்றில் முஞ்சியூர்முடிநாகனார் முதல் கோவூர்கிழார் வரை 153 புலவர்கள் 400 பாடல்கள் பாடியுள்ளனர். இதில் பாடியவர் பெயர் இல்லாத பாடல்களும் உண்டு. ஒரே ஒரு பாடல் பாடிய புலவர்களும் உண்டு. 17 பெண்பால் புலவர்களில் ஔவையார் மட்டும் 33 புறப்பாடல்கள் பாடியுள்ளார்.

தொல்காப்பியர் குறிப்பிடும் ஏழு திணைகளில் ஔவை ஆறு திணைகளில் பாடியுள்ளது உற்று நோக்கத்தக்கது. எனினும், திணைகளில் கூறப்படும் துறைகள் அடிப்படையில் காணும் போது ஔவை பாடல்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஔவை பாடவில்லையா? அல்லது தொகுக்கப்பட்டபோது அவை கிடைக்கவில்லையா? என்பது ஆய்வுக்குரியது.

திணை, துறை அடிப்படையிலான ஔவையார் பாடல்கள்

தொல்காப்பியர், ஒவ்வொரு திணைகளிலும் உட்பிரிவாகத் துறைகளை வகுத்து அத்துறைகளின் அடிப்படையில் பாடல்கள் அமைக்க இலக்கணம் வகுத்துள்ளார். எடுத்துக்காட்டாக, வெட்சித் திணையில் ” வெட்சியரவம்… என்பன போன்ற துறைகளை வகுத்து… இந்த இந்தத் துறைகளில் இப்படியான நிகழ்வுகள் தான் நடக்கும் என்பதனை விரிவாக விளக்கியுள்ளார். இவ்வாறு, ஏழு திணைகளிலும், துறைகளை வகுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஔவையார் பாடாண்திணையில் ஒன்பது துறைகளிலும், தும்பைத் திணையில் மூன்று துறைகளிலும், வாகைத் திணையில் மூன்று துறைகளிலும், கரந்தைத் திணையில் இரண்டு துறைகளிலும், வெட்சித் திணையில் ஒரு துறையிலும், பொதுவியல் திணையில் இரண்டு துறைகளிலுமாக இருபது துறைகளில் பாடல்கள் பாடியுள்ளார்.


பாடாண்திணை

ஔவையார் பாடாண் திணையில் வாழ்த்தியல், இயன்மொழி, அரசவாகை, வாள்மங்கலம், பரிசில் விடை, பரிசில் கடாநிலை, பரிசில் துறை, விறலியாற்றுப்படை, கடைநிலை ஆகிய ஒன்பது துறைகளில் பாடியுள்ளார்.

1. தொல்காப்பியர் கூற்றுப்படி வாழ்த்தியல்துறை என்பது தலைவனை வாழ்த்திக் கூறல் என்பது ஆகும். ஔவையார் இத்துறையில் எண் 91, 367 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். பாடல் 91-ல் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற போது அவனைப் புகழ்ந்து பாடுவதாகவும், பாடல் 367- ல் சேர,சோழ, பாண்டிய மன்னர்களான மாவண்கோ, உக்கிரப் பெருவழுதி, பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஓரிடத்தில் இருந்தபோது அவர்களைப் புகழ்ந்து பாடுவதாகவும் அமைந்துள்ளன.

2. இயன்மொழி துறை என்பது ஒருவர் இயல்பைக் கூறுதலும், அவர் முன்னோர் செய்தியை அவர் மேல் ஏற்றிக் கூறுதலுமாகும். ஔவையார் இத்துறையில் பாடல் 92, 96, 97, 102, 392 ஆகிய ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார்.

3. அரசவாகை துறை என்பது அரசனின் வெற்றியைக் கூறும் துறையாகும். ஔவையார் பாடல் 93, 94 ஆகிய இரு பாடல்களைப் பாடியுள்ளார்.

4. வாள் மங்கலம் என்னும் துறை, தலைவனின் வாளைப் பற்றிக் கூறும் துறையாகும். ஔவையார் இத்துறையில் பாடல் எண் 95 என்ற ஒரு பாடலை மட்டும் பாடியுள்ளார்.

5. பரிசில் கடாநிலை என்னும் துறை, புலவர் “நின்னைப் பாடிய பலரும் பரிசில் பெற்றார். யாம் பெற்றிலோம். எமக்கு அருள்க” என்று புரவலனிடம் கேட்கும் துறையாகும். ஔவை பாடல் எண் 101 பாடலை மட்டும் பாடியுள்ளார்.

6. பரிசில் விடை என்னும் துறையானது, “பரிசில் பெற வந்தவன் அதனைப் பெற்றாயினும், பெறாமலாயினும் பரிசில் நாடி வந்தோனிடம் விடை பெறுதல் என்பது போல் பாடப்படும் துறையாகும். ஔவை நாஞ்சில் வள்ளுவன் என்பவனைப் பாடல் எண் 140 இல் பாடியுள்ளார்.

7. பரிசில் துறை, புரவலனிடம் பரிசிலர் “தாம் நினைத்து வந்த பேறு இது” என்று கூறும் துறையாகும். பாடல் எண் 206இல் இத்துறையில் பாடியுள்ளார்.

8. விறலியாற்றுப்படை என்னும் துறையானது, “அரசன் புகழ்பாடும் பாடினியை வழி கூறிச் செல்லுமிடம் செல்ல விடுத்தல் என்பது போல பாடும் துறையாகும். பாடல் 103, இத்துறையில் அமையும்படி ஔவை பாடியுள்ளார்.

9. கடைமொழிநிலை என்ற துறை, அரசனின் அரண்மனை வாயிலில் நின்று பாடும்படியான துறையாகும். ஔவை 392 எண்ணில் உள்ள பாடலைப் பாடியுள்ளார்.


தும்பை

ஔவையார் தும்பைத் திணையில் தானைமறம், உவகை கலுழ்ச்சி, பாண்பாட்டு ஆகிய மூன்று துறைகளில் பாடியுள்ளார்.

1. தானை மறம் என்னும் துறை, இருபக்க படைகளும் தங்களுக்குள் போரிட்டு மடியாதவாறு ஒரு வீரன் பாதுகாத்த வீரத்தைப் பற்றிப் பேசும் துறையாகும். ஔவை இத்துறையில் நான்கு பாடல்களைப் பாடியுள்ளார் (87, 88, 89, 90). நான்கு பாடலிலும் அதியமானைப் பற்றிப் புகழ்ந்து பாடுகிறார்.

2. உவகைக் கலுழ்ச்சி என்னும் துறை, புண்ணுற்ற கணவனைக் கண்டு மனைவி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தல். (கலுழ்தல் - அழுதல்) மேலும் மகன் புண்ணுற்று இறந்தது கண்டு தாய் மகிழ்தலுமாகும். ஔவை இத்துறையில் ஒரு பாடலை (295) மட்டும் பாடியுள்ளார்.

3. பாண்பாட்டு என்னும் துறை, போரில் இறந்துபட்ட வீரருக்குப் பாணர் “சாப்பண்” பாடித் தம் கடன் கழிதல் என்பது போல பாடும் துறையாகும். ஔவை இத்துறையில் ஒரு பாடலை (311) மட்டும் பாடியுள்ளார்.

கரந்தை

ஔவையார் கரந்தைத் திணையில் வேத்தியல், குடிநிலை உரைத்தல், ஆகிய இரண்டு துறைகளில் பாடியுள்ளார்.

1. வேத்தியல் என்னும்துறை, அரசவீரர் போரில் தம் மேம்பாடுகளை எடுத்துக்கூறுதலாகும். இதனை வேத்தியல் மலிபு என்றும் கூறுவர். கள் உண்ணல் குறித்துப் பாடுவதும் ஆகும். ஔவை இத்துறையில் ஒரு பாடலை (286) மட்டும் பாடியுள்ளார்.

2. குடிநிலை உரைத்தல் என்ற துறை “பழமையும், வீரமும் மிக்க குடியின் வரலாற்றைச் சொல்லுதல். ஔவை இத்துறையில் ஒரு பாடலைப் (290) பாடியுள்ளார். பாடலில் “வீரனுக்கு முதலில் கள் தருக” எனக் கூறும்படியாக இப்பாடல் அமைந்துள்ளது.

வாகை

ஔவையார் வாகைத் திணையில் அரச வாகை, வல்லாண் முல்லை ஆகிய இரண்டு துறைகளில் பாடியுள்ளார்.

1. அரசவாகை என்னும் துறையில் ஔவை ஒரு பாடலை (104) மட்டும் பாடியுள்ளார். இத்துறையானது அரசனின் வெற்றியைக் கூறும்படியாகப் பாடப்படுவதாகும்.

2. வல்லாண் முல்லை என்னும் துறையில் ஒரு பாடல் (315) பாடியுள்ளார். “ஒரு தலைவன் வீடு, ஊர், இயல்பு ஆகியவற்றைச் சொல்லி அவன் ஆளும் தன்மையைப் பெருகக் கூறும்படியாகப் பாடும் துறையாகும்.


பொதுவியல்

ஔவையார் பொதுவியல் திணையில் பொருண்மொழிக்காஞ்சி, கையறு நிலை ஆகிய இரண்டு துறைகளில் பாடியுள்ளார்.

1. பொருண்மொழிக்காஞ்சி என்ற துறையிலும் ஔவை, ஒரு பாடலைப் (187) பாடியுள்ளார். “உயிருக்கு நலம் செய்யும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறும்படியாக இத்துறையில் பாடல்கள் அமைத்துப்பாடப் படுவது வழக்கம்.

2. கையறு நிலை என்னும் துறை, “தலைமகன் இறக்க அவன் பெருமையைச் சொல்லி வருந்தி நிற்றல்” என்னும் பொருண்மையில் பாடப்படுவதாகும். ஔவை இத்துறையில் 231, 232, 235 ஆகிய எண் கொண்ட மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

வெட்சி

ஔவையார் வெட்சித் திணையில் உண்டாட்டு என்னும் துறையில் மட்டும் பாடியுள்ளார்.

1. உண்டாட்டு என்னும் துறை, போரில் வெற்றிப் பெற்ற பிறகு வீரர்கள் மது உண்டு மனம் களிப்புறும் போது பாடுவது பாடும் துறையாகும். இத்துறையில் ஔவை ஒரு பாடலைப் (269) பாடியுள்ளார். என இருபது துறைகளில் மட்டும் பாடல்களைப் பாடியுள்ளார். ஔவையார் இருபது துறைகளில் மட்டும் தான் பாடல்கள் பாடியுள்ளாரா? அல்லது அவர் பாடிய மீதி பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லையா? என்பதும் ஆய்விற்குரியனவாகும்.

பாடப்பட்டோர்

ஔவை விறலி என்பதால் பாடிய பாடல்கள் அனைத்தும் அரசர்களைப் பற்றியே அமைந்துள்ளது. அதியமான், பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன் மற்றும் சேர,சோழ,பாண்டியன் பெருநற்கிள்ளி ஆகிய ஆறு அரசர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும், அறிவுறுத்தியும், தூது உரைப்பதுமாகத் தம் பாடல்களைப் பாடியுள்ளார். இந்த ஆறு அரசர்களில் அதியமான் நெடுமான் அஞ்சியை மட்டும் அதிகபட்சமாக 28 பாடல்களும், அதியமான் மகன் பொகுட்டெழினி பற்றி மூன்று பாடல்களும் (96, 102, 392), நாஞ்சில் வள்ளுவன் என்னும் மன்னனைப் பற்றி ஒரு பாடலும், சேரமான் மாவண்கோ - கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி பாண்டியன் - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரையும் ஒரே பாடலில் (367) பாடியுள்ளார்.

முடிவுரை

இக்கட்டுரையானது ஔவையார் பாடிய புறப்பாடல்கள், தொல்காப்பியர் கூறும் புறத்திணை, துறை அடிப்படையில் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதை ஆராயும் நோக்கில் மிகச் சுருக்கமாக எழுதப்பட்ட கட்டுரையாகும். இக்கட்டுரையை மையமாக வைத்து அவை என்ன பாடல்கள், அப்பாடல்களில் உள்ள மையக் கருத்து யாது? அக்கருத்து வழி அறியலாகும் தமிழரின் பண்பாடு, வீரம், கொடை இன்ன பிற செய்திகளை உள்ளடக்கியும், தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரனார், நச்சினார்க்கினியர், சோமசுந்தர பாரதியார், வெள்ளைவாரணார், இராமலிங்கம் போன்றோரின் உரைகளை முன்வைத்து விரிவான ஆராய்ச்சி செய்தால், ஒரு மிகச் சிறந்த ஆராய்ச்சித் தளம் உருவாகும் என்பது உறுதி.

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்

1. முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப. அண்ணாமலை (பதிப்பாசிரியர்கள்), சங்க இலக்கிய மக்கள் பதிப்பு வரிசை தொகுதிகள், கோவிலூர் மடலாயம், கோவிலூர், மக்கள் பதிப்பு, காரைக்குடி, முதற்பதிப்பு - 2003.

2. இளம்பூரனார், தொல்காப்பியம், பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, பதிப்பு - செப்.2010

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p207.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License