இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

திருமூலரும் சித்தரும்

முனைவர் ம. தமிழ்வாணன்
முதுநிலை ஆய்வு வல்லுநர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை - 113


முன்னுரை

பொதுவாகச் சொன்னால் யோக மார்க்கமும் ஞானத் தேடலும் உடையவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது, திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருமூலர் பற்றிப் பல கதைகள் பேசப்படுகின்றன. இருப்பினும் திருமூலர் என்ற ஒரு சித்தர் வாழ்ந்தது உண்மையாகிறது. இவர் நந்தீசரின் சீடராவார். இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை "மந்திர மாலை" என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர். திருமந்திரம் என்று அழைக்கப்படும் அந்த நூலில் பல யோக ரகசியங்களையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார். தாமறிந்த உண்மைகளை உலகத்தவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார்.

"யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே" (திருமந்திரம் பதிக எண்: 5 திருமூலர் வரலாறு 13)

இங்குத் திருமூலரும் சித்தரும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

சித்தர்கள்

சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன்படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாகப் பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.


தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர். அவர்களைக் கீழே காணலாம்.

1. திருமூலர்
2. இராமதேவ சித்தர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போகர்
9. மச்சமுனி
10. கொங்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி சித்தர்
15. சட்டைமுனி
16. சுந்தரானந்தர்
17. குதம்பைச்சித்தர்
18. கோரக்கர்

இதர சித்தர்கள் 145 பேரைச் சுட்டுகின்றனர்.

திருமூலர் - சித்தர்

மானிட சமூகத்தில் சித்தர்கள் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். தங்களுடைய ஆன்மிக பலத்தால், உள்ளறிவால், தூய கரணங்களால், தெளிவான சிந்தனையால், தம்முள் பெற்ற இறை உணர்வினால், பரந்த மனிதாபிமானத்தால் சித்தர்கள் மக்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்கின்றார்கள். சித்தர்களை எல்லா நாடுகளிலும், சமுதாயம், சாதி போன்றவற்றிற்குச் சித்தர்கள் அப்பாற்பட்டவர்கள். அவர்களுடைய குறிக்கோள் ஒன்றே! அவர்கள் நாடுவதும் ஒன்றே! அவர்கள் அடைவதும் ஒன்றே! அவர்களுடைய அறிவுரைகளும் ஏறத்தாழ ஒரே தன்மையைப் பெற்றவைகளாலும் இருக்கின்றன. சித்தர்கள் வரலாற்றைப் பொறுத்தவரை நமது நாடு தனிப்பட்ட பெருமைக்குரியது. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளிலே ஊறி நிற்கின்ற ஆன்மிகமும் அவர்களுடைய வாழ்க்கையுடன் பின்னிக் கிடந்து இருக்கின்ற சமய நெறிகளும் எளிமையான வாழ்வும் உயர்ந்த பண்புகளும் சித்தர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நன்கு உழப்பட்ட நிலங்களாக அமைந்திருக்கின்றன. ஆகவே, சித்தர்கள் என்றால் இந்திய நாட்டுச் சித்தர்களைக் குறிப்பிடுவதே வழக்கமாகும்.


பக்தியால் உண்டாகும் இறை அனுபவத்தை முற்றிலும் பெற்ற காரணத்தினால் திருமூலர் ஓர் ஒப்பற்ற சித்தராக விளங்குகிறார். சித்தர்களுக்கெல்லாம் தலைவராவார். அவரைத் தொடர்ந்து வந்த பல அருளாளர்கள் தாங்கள் திருமூலர் உருவாக்கிய சித்தர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று பெருமை கொள்கிறார்கள். சித்தர் இலக்கணத்திற்குத் திருமூலர் வழிவகுத்தார் என்றும் கூறலாம். திருமூலர் இறைவனின் முதற் சீடனான நந்தி தேவனிடம் உபதேசம் பெற்றவர். எண்ணற்ற காலம் தவம் செய்தவர். இறைவனைத்தன்னுள் முழுமையாக உணர்ந்தவராக அறியப்படுகிறார்.

“செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே” (திருமந்திரம், பாயிரம் 13)

நமது வாழ்வில் பெறும் அறிவைச் சிற்றறிவு என்று மெய்யுணர்வாளர்கள் குறிப்பிடுவதைக் காணலாம். அதைத் தவிர பேரறிவு என்று ஒன்று இருக்கின்றது. அதுதான் இறைவனைப் பற்றிய அறிவு. நாம் எல்லாவிதமான அறிவைப் பெற்றிருந்தாலும், பேரறிவைப் பெறாதவரை நாம் இந்த உலகில் பிறந்து வாழ்வதனுடைய நோக்கம் நிறைவேறாது என்பது மெய்யுணர்வாளர்களுடைய கருத்தாகும். இந்த அறிவை நாம் பெற வேண்டும். இறை அறிவைப் பெற்ற மாத்திரத்திலேயே நான் என்னும் தன்மை மாறி, இறை என்னும் உணர்வு பிறந்து, அந்த உணர்விலே மூழ்கிக் கிடந்து பேரின்பத்தைப் பெறலாம்.

மகான் திருமூலர் அவர்கள் பேரறிவை அனுபவித்த காரணத்தால், தனது சிந்தனையைத் தெள்ளத் தெளிவாக நமக்கு அருளிச் செல்வது சிறப்பாகும்.

“எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே” (திருமந்திரம் - 2596)

அறிவியல் அறிவைப் பயன்படுத்திப் பல பொருள்களை விளக்கி விடலாம். ஆனால் இறைவனைப் பற்றிய பேரறிவை நமது சுட்டறிவால் மட்டும் அடைந்துவிட முடியாது. இறைவன் நமது அறிவுக்கு எட்டாதவன் ஆவான். அவன் காட்டும் குறியும் கடந்தவன். கரையில்லாத கடல் போன்றவன். அவனைப் பற்றிய அறிவை ஏடுகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் பெற இயலாது. அவனுக்கு உரை காண்பதும் கடினம். “நூல் அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக!” என்பார் காரைக்கால் அம்மையார். “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதீ” என்பது திருஞானசம்பந்தரின் கூற்றாகும்.


நல்லறிவின் வழியாக இறைவனை அறிந்து கொள்ள முயலுவதை விட்டு உணர்வின் வாயிலாகத் அறிந்து தெளிவதுதான் சித்தர்களுடைய ஞானமாகும். எந்த வாக்கினாலும், எந்த விரிவுரையானாலும் பிற பொருளைப் போல் அறிய முடியாத பொருளே இறைவனாகிய பரம்பொருளாகும். இந்த இறைவனை அனுபவிக்க வேண்டுமென்றால் முதலில் சிந்தையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். களங்கங்களை நீக்க வேண்டும். திரையற்ற நீர்போல் அசைவற்று நிற்க வேண்டும். இந்த உயர்ந்த தியான நிலையில் இறைவன், மாசு, மறு, அற்றவன், வெளிப்பட்டு அருள் செய்வான் என்பது தெளிவாகும்.

“உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே” (திருமந்திரம் - 2955)

தன்னுடைய அறிவுக் கண்களால் பார்ப்பதைவிட அருள் கண்களால் பார்ப்பதே இறைவனை அடைவதற்கு ஒரு முக்கிய சாதனமாகும் என்பது சித்தர்களுடைய ஞானமாகும். சித்தர்கள் முழுமையாக இந்த அருள் அனுபவத்தைப் பெற்றவர்கள், தன்னை மறந்து, தனது கரணங்களை மறந்து, உடலை மறந்து, சித்தத்தைச் சிவமாக்கி அந்த சிவானந்தப் பேரின்பத்தில் திளைப்பவர்கள் சித்தர்கள். எனவேதான் சித்தர்களை அருளாளர்கள் என்றும் மெய்யுணர்வாளர்கள் என்றும் அழைக்கின்றோம். சித்தர்கள் வெறும் சித்த வேலைகளைச் செய்பவர்கள் மட்டுமல்லர். பல சித்தர்கள் பல வியப்புச் செயல்களைச் செய்து காட்டியது உண்மைதான். ஆனால், அவர்கள் வெறும் சித்து வேலைக்காரர்கள் மட்டுமல்லர். தங்கள் பயிற்சிகள் மூலம் பல ஆன்ம ஆற்றல்களை அவர்கள் பெறுகின்றார்கள். முக்திப் பேற்றை நோக்கி வழி நடக்கும் பொழுது பல சித்திகளைச் சந்திக்கின்றார்கள். ஆனால், அவர்களுடைய நோக்கம் ஆன்மிகப் பாதையின் எல்லையை அடைந்து, இறைவனுடைய திருவடிகளிலே தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அத்தகையவர்கள் சித்துகள் போன்ற சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் இறைவனை அடைவதே. அதற்காக எல்லாத் தத்துவங்களையும் படிப்படியாகத் தங்களிடமிருந்து விலக்கிக் கொள்கின்றார்கள். தத்துவங்களை அறிந்து கட்டமென்று சித்தர் பெருமக்கள் நமக்கு விளக்குகின்றார்கள். சொல்லுவதற்கு அரிய பரம்பொருளை அனுபவித்துத் தெளிவடைகின்றார்கள். ஒப்பில்லாத ஆனந்தம் பெறுகின்றார்கள். ஒளிமயமான நிலையில் புகுந்த பேரின்ப நிலையில் தங்களை அமர்த்திக் கொண்டு இன்புறுவர்.

“முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந் தாரே” (திருமந்திரம் - 126)

இறைவனுடைய திருநாமங்களைத் தொடர்ந்து பல காலம் ஓதி. இறைவனைப் பொருந்தி வழிபட்டு. பேரறிவாகிய இறைவனின் நிழலில் அமர்ந்து. இனிமையான அனுபவத்தைப் பெற்றதைத் திருமூலர் பெருமானே விளக்கக் காணலாம்,

“இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே” (திருமந்திரம், பாயிரம் 19)

மெய் ஞானம் பெற்ற சித்தர்களுடைய நிலை ஒர் உணர்வு நிலையாகும். உணர்வு உள்ளத்தைச் சார்ந்தது. அந்த உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவன் குடி கொண்டுள்ளான். அதை ஆய்ந்தறியாமல் சீவன் பொறிகளின் அட்டகாசத்தினால் புறத்தே செல்கின்றது. அவற்றைத் திருப்பி உள்ளடக்குவது சித்தர்களுடைய சாதனையாகும். அப்பொழுது சீவன் உள்ளமாகிய பெருங்கோயிலில் கலந்து நிற்கும். அதாவது சிவமயமாகி விடும். அதற்கென்று ஆசைகளோ பாசங்களோ இருக்காது. தன் செயல் சிவத்தின் செயல் என்று இருக்கும்.

“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன் எனக்கு அருளியவாறார் பெறுவார் அச்சோவே” (திருவாசகம்-அச்சோப் பதிகம் 1:3-4)

இது மாணிக்கவாசகரின் கூற்றாகும். இது அவருடைய ஆழ்ந்த அனுபவத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது. சீவனுக்கு அறிவு உண்டு. சிவத்தை உணர்ந்த நிலையில் சீவனுடைய அறிவாகிய ஒளி சிவத்தின் ஒளியில் போய் ஓடுங்கும்.

“சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்” (திருமந்திரம் - 135)

இந்த நிலையைப் பெற்றவர்கள் சிவசித்தர்கள் என்று திருமூலர் கூறுகின்றார். இதுவரை அந்தத் தளைகளிலிருந்து விடுபட்டு, தான் பெற்ற உலகியல் அறிவை உதறித் தள்ளி விட்டுச் சிவமாகிய பேரறிவில் நிற்கும் நிலையைச் சித்தர்கள் பெற்று சிறப்பு செய்கிறார்கள்.

“வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறுந்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே” (திருமந்திரம் - 124)


சித்தர்கள் சிவத்தைக் காண உலகெங்கும் சுற்றவில்லை. அவர்கள் சிவத்தை இங்கேயே தரிசிக்கின்றார்கள். தம்முள் கண்டுகொள்கின்றார்கள். "சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்" என்பார் திருமூலர். அவர்களுடைய உணர்வுகளெல்லாம் சிவமயமாகி நிற்கின்றன. அவர்களுடைய செயல்களெல்லாம் சிவனை நோக்கியே அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன.(திருமந்திரம் - 127) சித்தர்கள் இறைவன் தன்னுடைய அன்பர்களுக்குத் தரும் சாலோகம். சாமீபம், சாரூபம் போன்ற பதங்களை வேண்டுவதில்லை. பாசங்களை வலுப்படுத்தும் மாயாகாரியங்களைப் பற்றுவதில்லை. ஆணவமாகிய இருளைத் தன்னிடமிருந்து அகற்றி, தான் என்னும் நினைப்பையும் ஒழித்து, இறைஉணர்வுடன் எங்கும் எப்போதும் கலந்து நிற்பதையே சித்தர்கள் விருப்பம் கொள்கிறார்கள். (திருமந்திரம் - 2525)

இறைவனால் அளிக்கப்படும் எல்லாவிதமான பதங்களுக்கும் சித்தர்கள் முழுமையாகத் தகுதி பெற்றவர்களாக இருந்தாலும், இறைவனுடைய வியாபகத்தில் ஒன்றிக் கொண்டதால் அவற்றிற்கும் மேலான நிலைமை அடைந்து இறைத் தன்மையைப் பெறுவார்கள்.

“சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே” (திருமந்திரம் - 2526)

கடவுள் காலனை வென்றவன். காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலம் போன்ற கலைகள் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. காலனை வென்றவன் குறிப்பு அறிந்த சித்தர்கள் தங்களுடைய உடலைப் பற்றியும், உயிரைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் முழுமையான ஞானத்தைப் பெற்றவர்களாக இறைவனுடைய ஒளியைத் தன்னொளியாகப் பெற்று நிற்கின்றார்கள். அதனால் அவர்கள் காமம், வெகுளி, மயக்கம் போன்ற முக்குற்றங்களை அறவே நீக்கி விடுவார்கள். உடல் இருப்பதையும், இல்லாமல் போவதையும் பற்றிச் சித்தர்கள் கவலைப்படுவதில்லை. இதுவே சித்தர்கள் அடையும் ஒளி நெறி அல்லது சன்மார்க்க நெறி என்று திருமூலர் குறிப்பிடுகிறார். சித்தரின் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கின்றது. அது இறைவனைப் பற்றுதலாகும். அந்த நோக்கத்தை நாம் அறிந்து கொள்ளாதவரை ஓயாத துன்பம் தரும் உலக வாழ்க்கையில் மூழ்கிக் கிடப்போம். உலக வாழ்க்கையும் ஓயாது அடித்து வரும் கடலில் அலைகள் போல உள்ளத்தில் விளங்கும் ஒளியை நாம் எல்லோரும் நாட வேண்டும். அங்கே ஒளிக்கு ஒளியாய்ச் சிவன் விளங்குகின்றான். அந்தச் சிவத்தை நாடிப்பற்றிக் கொள்ள வேண்டும். துன்பக் கடலைக்கடக்க உதவும் தெப்பமும் அதுவே எனலாம்.

“கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளளி நாடி
உடவிலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே” (திருமந்திரம் - 3028)

மேற்கண்ட செய்திகளால் திருமூலரும் சித்தரும் பற்றிய செய்திகள் வெளிப்படக் காணலாம். மேலும் திருமூலரின் திருமந்திரம் இறைவனை அறியாது இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்களை உய்விக்கச் செய்யும் பாதையைக் காட்டுகிறது. அதனால் இறை மெய்ஞ்ஞான அறிவைப் பெற திருமந்திரத்தைக் கற்று, உணர்ந்து, தெளிந்து, இறைவனுடைய அருள் பெற்று, இம்மைக்கும் மறுமைக்குமான எல்லாவிதமான பயன்களையும் பெற்று, இறைவன் திருவடிகளைச் சார்ந்து இன்புறுவோம்.

கருவி நூற்கள்

1. திருமந்திரம் மூலமும் உரையும், ராமையா பதிப்பகம், சென்னை. (2010)

2. பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம், முனைவர் சுடலி தியாகராசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. (2009)

3. திருமந்திரம் விரிவுரை, ஜி.வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ் சென்னை. (2012)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p215.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License