இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

நாலடியார் காட்டும் அறம்

மு. ரேவதி பாரத்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
நியூ சித்தாபுதூர், கோயம்புத்தூர்.


முன்னுரை

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த நீதி நூல் ஆகும். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகும். இதை நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் வழங்குவர். வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமையாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, சொல்லாய்ந்து நாலடி நானூறும் நன்கு இனிது, பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில் என்னும் கூற்றுக்கள் திருக்குறளுக்கு இணையாக நாலடியாரைப் போற்றுவதை உறுதி செய்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாலடியார் புகட்டுகின்ற அறத்தினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

செல்வம் நிலையாமை

“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் கல்லாரோ டுண்க
அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்” (நா-2 ப. 6)

செல்வம் ஒருவரிடம் மட்டுமே நிலைத்து நிற்காமல் வண்டியின் சக்கரம் போல் பலரிடமும் சுழன்று செல்லக்கூடியது. எனவே மக்கள் ஏர் பூட்டி உழவுத்தொழிலால் நல்வழியில் உற்பத்தி செய்த செல்வத்தையும் உணவையும் அனைவர்க்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது.

அறன் வலியுறுத்தல்

நம் வாழ்நாளில் இறுதி நாள் இன்றோ, நாளையோ, வேறு எந்நாளோ என்று வீணாகச் சிந்தித்துக் கொண்டு இருக்காமல் உன் உயிரைப் பறிப்பதற்குக் காலன் காத்திருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்து இன்று முதலே தீய செயல்கள் செய்வதை விடுத்துப் பெரியோர்கள் கூறிய அறச்செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகிறது. மேலும், சிறிய அளவிலான ஆலம் விதை தழைத்து எல்லையற்று விரிந்த நிழலைத் தருவது போல அறச்செயல்களின் பயனாகிய புண்ணியமும் செய்வது சிறியதாக இருந்தாலும் தக்கவரிடம் சென்று அடைந்தால் வானமே சிறுத்துப் போகும்படி பெரிய புண்ணியப் பயனைத் தரும் என்று கூறுகிறது.


சினம் இன்மை

“காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால்…” (நா. 63 ப. 39)

கோபம் கொண்டு ஒருவன் அடக்கம் கெட்டுக் கூறிய கோபச்சொல் எக்காலத்திலும் சொன்னவனையே வருத்தும். எனவே, ஆராய்ந்து தெளிந்த ஞானம் உடையவர்கள் அத்தகையக் கோப மொழிகளைக் கூறமாட்டார்கள் என்கிறது. மேலும் கீழ்மக்கள் கொண்ட கோபமானது, நீண்ட காலமானாலும் தனியாமல் பெருகிக்கொண்டே போகும். ஆனால் சான்றோர்கள் கொண்ட கோபமானது, கொதிக்கும் போது வெப்பம் அடைந்த நீர் பின்னர் தானே தணிந்து விடுவது போன்று தணிந்து விடும் என்று கூறுகிறது.

பொறையுடைமை

“அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலவெப்பச்செய்து- பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது” (நா. 74 ப. 45)

நன்கு கற்று அறிய வேண்டியதை அறிந்து, அடக்கம் உடையவராய் பயப்பட வேண்டியதற்குப் பயந்தும், தமக்குத் தகுந்தவாறு உரிய செயல்களை உலகம் மகிழுமாறு செய்து அதனால் அடையத்தகும் பயனைப் பெற்று இனிமையோடு வாழ்பவர் வாழ்க்கையில் எக்காலத்திலும் துன்பம் என்பதே இல்லை என்று கூறுகிறது.

பிறன்மனை நயவாமை

“அறம்புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்
பிறந்தாரம் நச்சுவார்ச் சேரா…” (நா. 82 ப. 49)

தருமம், புகழ், நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புவரிடம் சேராது. அத்தகையோரிடம் பகை, பழி, பாவம், பயம் ஆகிய நான்கு தீயபண்புகள் தான் சேரும் என்கிறது.


ஈகை

தம்மிடம் பொருள் இல்லாத போதும், பிறர்க்கு இயன்ற அளவு பொருள் உடையவர் போன்று பெரிதும் மகிழ்ந்து கொடைத்தன்மையோடு விளங்கும் ஈகைக் குணம் கொண்ட மாந்தர்க்கு அடுத்தப் பிறவியில் பேரின்பமாகிய வீட்டுக்குச் செல்லும் கதவுகள் அடைப்படாமல் திறந்தே இருக்கும் என்கிறன்றது. மேலும்,

“இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின்…”(நா. 94 ப. 55)

இம்மியளவு அரிசியானாலும், உம்மை அடைந்தவர்க்கு நாள்தோறும் கொடுத்து, அதன்பிறகு உணவு உண்ண வேண்டும். முற்பிறவியில் யாருக்கும் கொடுக்காதவர்களாய் இருந்தவர்களே கடல் சூழ்ந்த இவ்வுலகில் வறியவர்களாக இருக்கிறார்கள் என்று சான்றோர்கள் கூறுவதாகக் கூறுகிறது.

சிறந்த அழகு

“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி யழகே அழகு”(நா. 131 ப. 74)

தலைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப் பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவர்களாக இருக்கிறோம் என்னும் உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்கம் தரும் கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும்.

நல்லினம் சேர்தல்

“பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்…” (நா. 177 ப. 95)

பாலுடன் நீரைக் கலந்தால், நீரானது தன் நிறம் கெட்டுப் பாலின் வெண்மை நிறமடையும். அதுபோல, கீழ்மக்கள் ஆனாலும் பெரியோருடன் சேரும் போது பெருமை பெறுவர். மேலும், ஊரிலுள்ள சாக்கடை நீர் கடல் நீரோடு சேர்ந்தால் அதன் பெயரும் மாறிப் புனிதம் நிறைந்த தீர்த்தமாகிப் பெருமை கொள்ளும். அது போல நற்குலப் பெருமை இல்லாதவரும், நல்ல மாட்சிமை உடையோரைச் சாரும் போது அவர்களும் மலை போன்ற சிறப்பை அடைவார்கள் என்கிறது.


நட்பில் பிழை பொறுத்தல்

நெல்லில் உமியும், நீரில் நுரையும், பூவில் வாசனையற்ற புற இதழும் ஆகிய வேண்டாப் பகுதிகள் இருக்கும். இவைபோலவே, நாம் நல்லவர் என மிகவும் விரும்பி நட்புக் கொள்கின்றவரிடமும், சிறுசிறு குறைகள் இருக்கும். இக்குறைகளைக் கண்டால் பொறுத்து, அவரை நம்முடனே சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறது.

தன்மானம்

தன்மானம் உடையவர்கள் எலும்பு தேய்ந்து, தசை அழிந்தாலும் நற்குணம் இல்லாதவரிடம் தங்களுடைய துன்பங்களைக் கூறமாட்டார்கள். தம் வறுமை நிலையைத் தாம் உரைப்பதற்கு முன்பே உணர்ந்து உதவ வல்ல அறிவுடையவரிடமே சென்று தம் துன்பத்தைக் கூறி உதவி வேண்டுவர் என்கிறது.

கயமை

தனக்கு ஒரு நன்றியைச் செய்தவர்கள், பின்பு நூறு கெடுதல்களைச் செய்தாலும் சான்றோர் பொறுத்துக் கொள்வர். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்து பின்பு ஒன்று கெடுதியாக அமைந்தாலும் அவ்வெழுநூறு நன்மைகளும் மறந்து அவர்களால் தீமைகளாகவே கருதப்படும் என்கிறது.

முடிவுரை

சான்றோர்களின் பட்டறிந்த உண்மைகளே அறக்கருத்துகளாக நாலடியார் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவ்வறக் கருத்துக்களை மக்கள் மனதில் நன்கு உள்வாங்கிக் கொண்டு வாழ்வினை வாழ முற்பட்டால் அவர்களின் வாழ்வும் சமுதாயமும் மேன்மையடையும்.

பயன்பட்ட நூல்

1. நாலடியார் மூலமும், உரையும், தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 49.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p222.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License