இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

குறுந்தொகைப் பாடல்களில் உளவியல் சார் மொழிபு உத்திகள்

முனைவர் து. ராஜம்மாள்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.


முன்னுரை

தமிழிலக்கிய ஆய்வுக்களம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. சங்க இலக்கியம் பண்டைய தமிழ் நாகரிகம், மொழிச் சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோருக்குச் சான்றாகவும், செய்தி ஊற்றாகவும் அமைகிறது. இவ்விலக்கியம் சமுதாயத்தை வெளிப்படுத்தும் படிமக் கலங்கள் என்று கே.ஆர். நீலகண்டசாஸ்திரி, க. கைலாசபதி, கார்த்திகேசு சிவதம்பி போன்ற அறிஞர்கள் கருதுவர். இப்பின்புலத்திலேயே தமிழ் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டை மேலை நாட்டறிஞர்தம் வரவு உணர்த்தியது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கியக் கொள்கைகள், கோட்பாடுகள் என்ற புதுவகைச் சிந்தனைகள் தோன்றின. தமிழாராய்ச்சி வளர்ச்சியில் தமிழியல் ஆய்வுகள் இருபத்தியோராம் நூற்றாண்டில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வருகிறது. அத்தகைய பரிமாணங்களில் ஒன்று தான் “உளவியல் சார் மொழிபு உத்திகள்”. இதனைக் குறுந்தொகையில் குடவாயிற்கீரத்தனார் பாடல்களைக் கொண்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

உளவியல்

மனித மனமே இலக்கியத்தின் வற்றாத ஊற்றுக் கண் அகத்திணைப் பாடல்கள் அனைத்துமே உள்ளத்து உணர்வுகளின் மொழி வெளிப்பாடுகளேயாகும். பேராசிரியர் ரெனிவெலாக்கின் கூற்றுப்படி இலக்கிய உளவியலை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

* படைப்பாளி உளவியல்

* படைப்பாக்க உளவியல்

* இலக்கிய உளவியல்

* அவையினர் உளவியல்

படைப்பாக்க உளவியலென்பது, ஒரு படைப்பாளியின் உளவியலுக்கும் அவனது படைப்பின் உருவாக்கத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டினை அறிய முற்படுவதாகும். எது ஒருவனைப் படைப்பாளி ஆக்குகிறது. அவனுக்கு அகத்தெழுச்சி (inspiration) எவ்வாறு உண்டாகிறது என்ற கேள்விகள் உளவியல் சார்ந்தவையாகும்.


உளவியலும் மொழியியலும்

உளச் செயல்பாட்டின் முப்பெரும் களங்களாவன னை உள்ளுணர்ச்சித் துடிப்புகளின் உலைக்களன், Ego புற உலகின் தொடர்பினால் செப்பனிடப்பட்ட (id)ன் கூறாகும். நனவு மனம் அமுக்கம் மற்றும் உயர்வழிப்படுத்தல் ஆகிய இரண்டும் ஈகோவின் தற்காப்பு முறை, The Super Ego சமூக அபத்தங்களுக்கேற்ப “இட்” மீது அகத் தணிக்கையைப் பயன்படுத்தும் மனக்களம்.

நனவிலியின் இயல்பு தான் சொல்லாடல்களின் இலக்கண வரம்பு ஆகும். நனவிலி “மொழி” போன்ற கட்டமைப்பு கொண்டது. (unonscious is structural like the language) நனவிலி என்று ஒன்று பிறந்தவுடனேயே வேட்கைகள் அதில் அமுக்கப்படுகின்றன. அவை உருவகங்களாகப் பதிவாகின்றன. உருவகத் தன்மையோடு (Metaphorical nature) உருவக மொழியாக (Metaphorical language) இச்சொல்லாடல்கள் அமைகின்றன.

மனித மனம் சொல்வதையெல்லாம் மொழியைக் கொண்டு சொல்ல வைத்தார்கள் (to make the language speak what the mind speaks) சங்க இலக்கியங்களில் காணப்படும் தனிக் கூற்றுகளும், உள்ளுறையும், இறைச்சியும் நனவிலியின் உருவகத் தன்மையை வெளிப்படுத்தப் பயன்பட்ட உளவியல் சார் மொழிபு உத்திகளாகும்.

* ஒற்றைபரிமாணப் பார்வை (அ) ஒற்றை நனவு உத்தி

* பல்பரிமாணப் பார்வை

* இறை பரிமாணப் பார்வை

* நனவோடை உத்தி

* நேர் அகத் தனிப் பேச்சு

* அயல் அகத் தனிப் பேச்சு

* உரையாடல்

போன்றவை மொழிபு உத்திகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறுந்தொகையில் குடவாயிற்கீரத்தனார் மூன்று பாடல்களைப் படைத்துள்ளார். அம்மூன்றும் பாலைத் திணையைக் காட்சிப் படுத்துவதாக அமைந்துள்ளது.


இறைச்சி

பொருள் வயிற் பிரிந்த தலைமகனை நினைத்த தலைமகள் தோழிக்குத் தன் ஆற்றாமையைக் கூறுகின்றாள். அவ்வாற்றாமையை உரைக்கும் போது தலைவன் சென்ற பாலை நில நிகழ்வுகளை நுண்ணிதாக “இறைச்சி” என்னும் மொழிபு உத்தியால் எடுத்துரைக்கின்றார். அதனை,

“கானயானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமைவளி பொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவையேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்” (குறுந்.79)

என்ற பாடலில் தலைவன் சென்ற பாலை வழியில் கடுமையான வெம்மை காரணமாகக் காட்டில் வாழும் யானை ஓமை மரத்தின் பட்டைகளை உரித்து உண்ணும். அம்மரத்தின் பெரிய கிளையில் பெண்புறாக்கள் தனிமையும் வருத்தமும் தோற்றுவிக்கும் குரல் உடையனவாய் ஆண் புறாக்களை அழைக்கும். அவ்வகையான குடிகளையுடைய கண்ணே தலைவன் தங்கிவிட்டாரோ எனக் கூறி தலைவி வருந்துகின்றாள். இங்கே தலைவியின் தனிமை உணர்வினை பெண் புறாவின் உணர்வோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார். அப்பெண்புறாவினைக் காணும் தலைவன் தலைவியை எண்ணி விரைந்து வருவானெனப் புலவர் கூறுவது புறவெளியில் தலைவியின் பிரிவு கூறிப் பின் அகவெளியில் அன்பினைப் படைக்கின்றார். இறைச்சிப் பொருளாக பெண்புறாவின் அலறலோடு தலைவியின் புலம்பலை ஒப்புமை செய்கின்றார்.


உருவகம்

தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் வயிற் சென்றது கண்டு தோழி ஆற்றுவிக்கின்றாள். ஆனால் தலைவி தன் நிலையைக் கூறும்போது வெண்மணற்பரப்பில் தழைத்த பசிய அடியையும் கருக்கினையும் உடைய திரண்ட பனையினது உச்சியின் கண்ணே உள்ள வெள்ளிய மடலிலே வைத்த வெள்ளிய பூவினைச் சூடிக் கொண்டு மலைகள் பொருந்திய காட்டிடத்தே நந்தலைவர் சென்று விட்டார். அதனை,

“வெண்மணற் பொதுளிய பைங்கால் நருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு
அத்த வேம்பின் அமலை வான்பூச்
சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடிக்
குன்று தலை மணந்த கானம்” (குறுந்-281)

என்ற பாடலில் குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தினை உருவகம் செய்கின்றார். “குன்று தலை மணந்த கானம்” என்ற வரி இதனை புலப்படுத்துகின்றது. தலைவியின் மனநிலையை புலவர் காட்சிப்படுத்துகின்றார். இரு பெண்களின் உரையாடலில் தலைவியின் மனநிலை குன்று தலை மணந்த கானம்போல தலைவனைப் பிரிந்து வெம்மையாகத் தோன்றுகின்றதென்றே தன் உத்தியின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.


உவமை

தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது. தோழி தலைவியை நோக்கி நம் தலைவர் நின்னைத் தம்முடன் அழைத்துச் செல்லுதற்குடம்பட்டார். இனி அவரோடே வாகை நெற்றைக் கோடைக் காற்று அழைத்து ஒலிக்கும் பாலை நிலத்தில் செல்வோமாக என்றாள். அதனை,

“அந்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம் தோழி நல்கினர் நமரே” (குறுந்-369)

என்ற பாடலில் நெற்றைக் கோடை தூக்கும் என்றது தலைவனின் கருத்திற்கு உடன்பட்டு தலைவி தலைவனுடன் உடன்போக்குச் செல்லுதலைக் குறிக்கும். இங்கே வாகை நெற்றுக்கு, பல்வேறு பொருட்கள் உவமை செய்யப் படுகின்றது. தலைவியின் காலிலுள்ள சிலம்பொலி, வாகை நெற்றொலி, தலைவியின் மனநிலை, காற்றின் வேகமென பல்வேறான நிலையில் வினை, மெய், உரு உவமையைப் புலப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. பண்டைய பண்பாட்டுத் தன்மையும் வெளிப்படுத்துகின்றது. ‘சிலம்பு கழிதல்’ திருமணமான பின்பு பெண் சிலம்பு அணிவதில்லை என்ற மரபையும் குறிப்பாக உணர்த்துகின்றது.

குடவாயிற் கீரத்தனாரின் பாடல்கள் அகத்திணை மாந்தர்களின் மாட்சியை விளக்குகின்றன. சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டும் திறம் படைத்தது. உணர்ச்சியும் அறிவும் காட்டும் வகையுடையன முதல் கருஉரிப் பொருள்களின் நுணுக்கமும் நாட்டவல்லன உரிப் பொருளுக்கு ஏற்ப இயற்கையை வடித்துக் காட்டும் தன்மையுடையன. நில, கால, இயற்கை அறிவு மக்கள் வாழ்க்கையை உணர்ந்து உணர்த்தும் அறிவு. இவர் தம் பாடலில் அறிய முடிகிறது. ஆசையின் மீதேறிய மொழி மனமாகச் செயற்படுகிறது.

முடிவுரை

உணர்வுப் பூர்வமாகவும் மொழிபு உத்திகளான இறைச்சி, உவமை, உருவகம், உரையாடல் போன்றவை உளவியலோடு இணைந்தவை. இதனை குடவாயிற் கீரத்தனார் தம் பாடலில் படைத்துள்ளார். இவ்வுத்திகளே படைப்பிற்கு வெளியே நிற்கும் வாசகனுக்கு படைப்பாளியோடும், கதை மாந்தரோடும் பயணிக்க உதவுகிறது. குடவாயிற்கீரத்தனார் சிக்கலான உளவியல் சூழல்களையும் மிக நுணுக்கமாகச் சித்தரித்துள்ளார்.

பார்வை நூல்கள்

1. பொ. வே. சோமசுந்தரனார்(உ.ஆ), குறுந்தொகை

2. ஆஸ்டின் வாரன் ரெனிவெல்லாக் தமிழில் குளோற சுந்தரமதி, இலக்கியக் கொள்கை

3. அமிர்தகௌரி, சங்க இலக்கியத்தில் உரையாடல்

குறிப்பு:கட்டுரையாசிரியர் பார்வை நூல்களில் நூலாசிரியர், நூலின் பெயர் ஆகியவற்றை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். பதிப்பகம், ஊர், பதிப்பு, ஆண்டு போன்றவைகளையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆசிரியர்


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p227.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License