இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

பரணர் பாடல்கள் காட்டும் போரியல் உலகம்

முனைவர் கோ. தர்மராஜ்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை- 630 303.


முன்னுரை

தொன்மை மிக்க சமூகத்தில் பண்டைய காலந்தொட்டே இலக்கிய வளத்தாலும், இலக்கண வளத்தாலும் செம்மாந்த சீரமைப்பினைக் கொண்ட ஒரே மொழி தமிழ்மொழி. அத்தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதினுள் முதன்மையாகத் திகழ்வது சங்க இலக்கியம் என்றாலும், அவை தமிழர்களின் காதலையும், வீரத்தையும் இரு கண்களாகப் போற்றிப் பாடுவதில் வல்லமை பெற்றவையாகத் திகழ்கிறது. காதற்பாடற்களை மிகுதியாக இலக்கியத்தில் புலவர்கள் பாடினாலும், பண்டைய சமூகத்தில் மன்னர் ஆட்சியின் கீழ் மக்கள் வாழ்ந்ததால் அம்மன்னர்களின் போரியல் குறித்த உலகத்தைப் பாடுவதில் புலவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அந்த அடிப்படையில் புறநானூற்றில் பரணர் பாடிய பதிமூன்று பாடல்களில் காணலாகும், மன்னர்களின் போரியல் உலகம் குறித்த செய்திகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பகைநாட்டின் நிலையுரைத்தல்

அசைந்தாடும் பிடரி மயிர் உடைய குதிரைகள் பூட்டிய பொன் தேரில் அமர்ந்து அழகான தோற்றத்திலும் நீலவண்ணக் கடலில் மென்மையாகத் தோன்றிய எழும் அழகிய சிவந்த இளஞ்சூரியனைப் போல் வருகின்ற சோழமன்னன். நீ வலிமை உடையவன் என்பதால் உன்னை கோபத்துக்கு ஆளாக்கி உன்னோடு போரிட்டுத் தோல்வியுற்ற பகைநாடு உண்ண உணவின்றி வாடும் தாயில்லாப் பிள்ளைப் போல மிகுந்த துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறார். இதனை,

“நீயே அலங்கு உளைப் பரீஇஇவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
மாக்கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே”(புறம்.4;13-19)

என்ற பாடலின் வாயிலாக அறியமுடிகிறது. போரில் தோல்வியுற்ற நாட்டின் நிலையினை வெற்றி பெற்ற சோழமன்னனுக்குப் பரணர் எடுத்துரைப்பதைக் காணமுடிகின்றது.


போரால் பாழான நாடு

இருபெரு வேந்தர்களாகிய சேரரும், சோழரும் நாட்டைக் கைப்பற்றும் நோக்கில் போரிட்டதால் தங்களின் நாட்டிற்குச் சொந்தமான யானைகள் அம்புகளால் தாக்கி ஆற்றல் இழந்து இறந்தது. வெற்றிப் புகழெய்தி வீர விருதுகள் பெற்ற குதிரைகள் வீழ்ந்தன. தேர்ப்படையில் வந்த வீரர்களும், வெற்றி பெற்றதும் முரசு அரைந்து முழங்குவோர் இல்லாமல் முரசு அநாதையாகக் கிடக்கின்றது. மார்பில் வேல் பாய்ந்து இருபெரும் வேந்தர்களும் போர்க் களத்தில் இறந்து கிடக்கின்றனர். வளமும், வருவாயும் அகன்ற இடமும் கொண்ட நாடாக இருவர் நாடும் இருந்தது. ஆனால் போரால் அழிந்து துயர் நேர்ந்த நாட்டினை எண்ணி பரணர் முறையிடுகிறார். இவற்றை,

“எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படை ஒழிந்தனவே
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட்டனவே
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொருக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே
சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே” (புறம்.63;1-10)

என்ற பாடல் வழி அறியமுடிகின்றது. பண்டைய கால மன்னர் ஆட்சியில் இருபெரும் வேந்தர்கள் போரிடும் முறையைத் தவிர்க்க வேண்டி புலவர்கள் முறையிட்டுப் பாடியிருப்பதைக் காணலாம்.

பேகனைப்புகழும் புலவர்

மதயானைப் படையும், வீரக்கழல் கால்களில் அணிந்து போரிடும் பேகன், வாரி வழங்குவதில் தெரிந்தவர், தெரியாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று தராதரம் பார்க்க மாட்டான் என்றாலும் எதிர்நாட்டுப் படையுடன் மோதிப் போராடும் போது, தனக்குச் சமமான வீரருடன் மட்டுமே போரிடுவான். மற்றவரிடம் போரிட மாட்டான். இதனை,

“கடாஅ யானைக கழற்கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது
படை மடம் படான்பிறர் படைமயக் குறினே!” (புறம்.142;4-6)

என்ற பாடல் உணர்த்துகிறது. போரியல் உலகத்தில் மன்னர்களும், குறுநில மன்னர்களும் தன்னை ஒத்த வீரருடன் போரிட்டுள்ளதைப் பரணரின் பாடலின் வாயிலாக அறிய முடிகின்றது.


பெண்ணால் வரும் போர்

முடியுடைய வேந்தன் தான் விரும்பிய பெண்ணை, பெண் விட்டாரிடம் பெண் கேட்டு வந்திருக்கிறான். இதனை உணர்ந்த பெண்ணைப் பெற்ற தந்தை பெண்ணுக்கு மணம் முடிப்பது தன் கடமை என்ற உண்மையை உணர்ந்து மன்னனுக்குப் பெண் தர மறுக்கிறான். இப்படி இருவரும் நேர் எதிராக இருப்பதால் நாட்டின் நிலை போர் நிகழும் சூழ்நிலைதான் உருவாகும் என்கிறார். இதனை,

“வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே” (புறம்.336;1-5)

என்ற பாடலடியின் வாயிலாகப் பரணர் கூறியிருப்பதைக் காணலாம். நாட்டை ஆளும் மன்னனாக இருந்தாலும், பெண்ணுக்காகப் போரிட்டதைக் காணும் போது, இன்றைய காலத்தைப் போல அன்றைக்கும் பெண்ணுக்காகச் சண்டையிடும் நிகழ்வு இருந்துள்ளதைக் காணமுடிகின்றது. மேலும்,

“வேந்து குறைஉறவும் கொடாஅன் ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
செம்மொழிச் சிலம்பின் இளையோள் தந்தை” (புறம்.341;1-3)

வேந்தன் ஒருவன் பெண் கேட்டு வருகிறான். பெண்ணின் தந்தையும் ஒரு வேந்தன். பெண் தர மறுத்து விட்டான். இதனால் இருபெரும் வேந்தர்க்கும் போர் நடக்கின்றது. இப்படி ஒரு பெண் பொருட்டு இரு பெருவேந்தர்கள் போரிட்டுக் கொண்டால் ஊரின் வளமும், நலமும் பாழாகிப் போகும் என்று போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் புறநானூற்றுப் பாடலை பரணர் பாடியுள்ளார். பெண்ணுக்காக ஊரை அழிக்கும் போர்கள் பண்டைய போரியல் உலகத்தில் நிகழ்ந்துள்ளதைக் காணலாம்.

ஏன் பெற்றாள் - இவள் தாய்

இயற்கைச் சூழ்ந்த ஊர்க்குளத்தில் பூத்த குவளைமலர் போன்ற கண்ணையுடைய அழகியப் பெண்ணை, அவள் தாய் பெற்றதால் பெரியதேர்கள், யானைகள், எங்கள் ஊர், வளமான நீர்நிலை, பெரிய மரங்கள் போன்றவை பாழாகும் படியாகி விட்டது. இத்தகையப் பேரழிவிற்குக் காரணமான பெண்ணை, இவளின் தாய் பெறாமலே இருந்திருந்தால் போர் நிகழ்ந்திருக்காது என்கிறார். இதனை,

“குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
வருந்தின மன்எம் பெருந்துறை மரனே” (புறம்.348;6-10)

என்ற பாடலின் வழியாக உணரலாம். அழகு பொருந்திய ஆடவளை, அவளின் தாய் பெறாமல் இருந்திருந்தால் நாடு பாழாகாமல் இருந்திருக்கும் என்று அவல நிலையில் பாடியிருப்பதைக் காணமுடிகின்றது.


பெண்ணால் ஊர்நலம் கெடுதல்

தேமல் படர்ந்த அழகிய இளமார்புடைய மூங்கில் போன்ற வளைந்த தோளினையுடைய அழகிய பெண்ணின் மான் போன்ற கண்களின் மருண்ட பார்வை, மூவேந்தர்களையும் மயக்கும் அளவிற்கு இருப்பதால், அம்மூவேந்தர்களும் பெண்ணை அடையும் பொருட்டு தங்களுக்குள் போரிட்டு ஊரை அழிக்கின்றனர். இதனை,

“சுணங்கணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
மான்பிணை அன்ன மகிழ்மடநோக்கே!”(புறம்.354;8-10)

என்ற பாடலடி உணர்த்துகிறது. வாழ வேண்டிய வளமான ஊர். ஒருபெண்ணின் பொருட்டுப் போரிட்டு அழிகிறதே என்று வருந்திப் பரணர் பாடியுள்ளதைக் காணமுடிகின்றது.

நிறைவுரை

* எதிர் நாட்டினைக் கைப்பற்றித் தன்னுடைய ஆட்சியின் கீழ்க்கொண்டு வருவதே நோக்கமாக மன்னர்கள் செயல்படுவதால், தோல்வியுற்ற நாட்டின் நிலையினை எண்ணிப் பாருங்கள் என்று மன்னர்களுக்குப் புலவர்கள் சுட்டிக் காட்டியுள்ளதைக் காணமுடிகின்றது.

* யானைக்கு ஒத்த யானைகள் எப்படி மோதிக் கொள்கின்றனவோ, அதுபோல வீரத்தில் மன்னர்கள் தனக்கு ஒத்த மன்னருடன் மட்டுமே போரிடுவார்கள் என்பதை அறிய முடிகின்றது.

* ஒரு பெண்ணின் அழகை அடைவதற்குப் போரிட்டு ஊரையும், மக்களையும் தீக்கிரையாக்கும் சூழலைப் போரியல் உலகத்தில் மன்னர்கள் பின்பற்றியுள்ளதைக் காணலாம்.

* ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ என்ற பழமொழிக்கேற்ப, பல ஊர்களின் வளங்களையும், மக்களையும் மன்னர்கள் அழிப்பதற்குக் காரணம் பெண்ணின் அழகை அடையும் நோக்கு என்பதைப் பரணர் பாடலின் வாயிலாக உணர முடிகின்றது.

* பெண்ணிற்காக ஊரே அழிவதால் அப்படிப்பட்ட அழகு பொருந்திய பெண்ணை அவளின் தாய் பெறாமல் இருந்திருக்கலாம் என்று பரணர் புலம்புவதைக் காணலாம்.

* மன்னர்கள் மத்தியில் மண்ணாசைப் போரை விட பெண்ணாசைப் போரினால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதை போரியல் உலகத்தில் காணமுடிகின்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p230.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License