இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியத்தில் புகை

முனைவர் தி. கல்பனாதேவி
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம்.


தொடர்ச்சி - பகுதி 2

6. முனைப்புலம் சுடு - மாப்புகை

அதியமான் நெடுமான் அஞ்சியின் புறப்பாடலில், முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த இருட்சியை உடைய கரிய புகை, மலையைச் சூழும் முகில் போல இளங்களிற்றைச் சூழும் என்பதனை,

“முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூர் மஞ்சின் மழகளி றணியும்” (புறம், பா.எ. 103: 6 - 7, ப.236)

எனும் இவ்வடிகளால் அறியலாம்.

7. புகையினை உவமையாகக் கையாளுதல்

திருமுருகாற்றுப்படை உவமை கந்தருவரின் ஆடை திருஆவினன்குடி பதிகத்தினுள், கந்தருவர் அணிந்துள்ள ஆடையைக் குறிப்பிடும் இடத்து புகையை முகந்து கொண்டாலொத்த நுண்ணிய, அழுக்கேறாத, ஆடையை உடையவர் என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. புகை என்பதற்குப் பாலாவி என்றார். ஆடையின் நுண்மைக்கம், நிறத்பிற்கம் ஈண்டுப் புகை உவமையாகலான் ஏனைப் புகைகள் கருப் பொருளாய் கருமை முதலிய நிறமுடையனவாதலும் உண்மையின் அவை உவமையாகாது.

மேலே “ புகை விரிந்தன்ன பொங்கு துகில்” (புறம், பா.எ.39: 1-6)

புறம் 391. 6 என்பதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

“புகைமுகந் தன்ன மாசில் துாவுடை” (திருமுருகு, பா.அ.138 - 142, ப.77)

அடி, ப.13. எனும் அடி இதனை மெய்ப்பிக்கின்றது.

கலி - புகையழல் - அரக்கு மாளிகை

வடமொழிப் பெயர் பெற்ற வயக்குறு மண்டிலம் போலும் முகத்தவனுடைய மக்களுள் மூத்த துரியோதனன் சூழ்ச்சியாலே, ஐவரென்று உலகத்தார் புகழுந் தன்ம புத்திரர் முதலியோர் உள்ளேயாகக், கையாலே புனையப்பட்ட களிப்பு விளங்குகின்ற மதத்தவாகிய கடிய களிறுகள் உள்ளேயாக, உலர்ந்த மூங்கிலை உடைய உயர்ந்த மலையைச் சூழ்ந்த முழுங்குகின்ற அழலைக் கணையத்தை மாறுகின்ற தடக்கையினையுடைய தன் இனத்தைக் காக்கும் அழகினை உடைய வேழம், புகையழலை உடைத்தாகிய ஔ்ளிய உருவத்தினை உடைய அவ்வரக்கில்லை அந்த வீமசேனன் அழித்துத் தன் உள்ளத்திற்குப் பொருந்தின சுற்றத்தோடே பிழைக்கப் போகின்றவனைப் போல, அதர்படும்படி மிதித்துத் தம்முடைய திரளோடே கூடிப் போதுங் காட்டுப் பரப்புச் சூழ்ந்த குன்று அழலும் வெய்தாகிய சுரம் என்பதை, பாலைக்கலிப்பாடல் சான்று பகர்கின்றது.

“எழுவுறழ் தடக்கையின் இனங்காக்கு மெழில்லேழம்
அழவஞ்சூழ் புகையழல் அதரபட மிதித்துத்தங்” (பாலைக்கலி, பா.எ.25:9-10, பக்.67- 68)

எனும் பாடலடிகள் புகையழலைச் சுட்டுகின்றது.


புகை உவமை - வெண் மேகங்கள் தவழ்தல்

அகம் களிற் குரவம் மலர்ந்து முன்பனிக்காலம் நீங்கப்பெற்ற அரிய செவ்வியை உடைய இளவேனில் காலத்தே, அறல் விளங்கும் நீண்ட மணலையுடைய அகன்ற ஆற்றின் கரையிடத்தே, துறையை அழகு செய்யும் மருத மரங்களோடு தொகுதியாக உயர்ந்து, அழகு ஒழுகும் தளிரைக் கொண்ட பெரிய கிளைகளை உடைய மாமரத்தின், கொத்துக்களாக நெருங்கிய புதிய பூக்கள் செறிந்த சோலைகளிலே, புகையினை ஒழித்த அழகிய வெண் மேகங்கள் தவழ்ந்ததை, அகம் நிறுவுகின்றது.

“கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்
திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ் சூர” (அகம், களிற், பா.எ.97: 20 - 22, ப.249)

எனும் இப்பாடலடிகள் புகையினை வெண்மேகங்கட்கு பயன்படுத்தியதைச் சுட்டுகின்றன.

8. சூளைப்புகை கிள்ளி வளவனின் தாழிப்புகை

ஐயூர் முடவனார் பாடலில் அடுகலம் வனையும் வேட்கோவே! சுடு கலம் வனையும் வேட்கோவே! இருள் நீங்கி ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய், திரண்டமிக்க புகை, அகலிய பெரிய ஆகாயத்தின் கண் சென்று தங்கும் சூளையையுடைய அகலிய இடத்தினை உடைய பழைய ஊரின்கண் கலம் வனையும் வேட்கோ என்று கலம் - சூளைப்புகை ஆனது புறப்பாடலில் குறிப்பிடப் பெற்றுள்ளது. (புறம், பா.எ. 228:1 - 4, ப.62)

9. செங்கண் புகை

புறம் ஔவையார் தம் பாடலில், ஒரு அருவீரனின் வீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்துரைக்கின்றார். போர்க்களத்தில் துணையாக ஒருவரும் இல்லாமல் தான் ஒருவனே நின்று சிறப்புடைய தன் கண்கள் சிவந்து புகையெழ நோக்கி, தன் ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைகளைத் தடுக்கும் வலிமையுடையவன் என்பதை,

“சிறப்புடைச் செங்கண் புகையவோர்
தோல்கொண்டு மறைக்குஞ் சால்புடை யோனே” (புறம், பா.எ. 311: 6 - 7, ப.219)

என்று அவனின் சினப் புகையினை இங்கே குறிப்பிடுகின்றார்.

10. ஊர் எரி புகை

அண்டர் நடுங் கல்லினார் பாடலில் பண்பில் ஆண்மையாவது மக்கட்பண்பாகிய அருளும், அறமும் இன்றிக் கொலை விலங்கு போல உயிர்கட்குத் தீமை தருவது. ஒரு மகளைக் கொள்வோன், அவளுடைய தந்தை, தன்னையரைக் கொன்று, அவள் பிறந்த ஊரையும், மனையையும் தீக்கிரையாக்கிக் கோடல் பெரியதொரு பண்பில் செயல் என்று புறப்பாடல் சான்று பகர்கின்றது.

“புகைபடு கூரொடி பரப்பி பகைசெய்து
பண்பி லாண்மை தருத லொன்றோ” (புறம், பா.எ.344: 5 - 6: ப.288)

எனும் இவ்வடிகள் சான்று பகர்கின்றது.

ஊர் சுடு புகை

மேலும் பதிற் அம்புக்கட்டுடைமையால் கடத்தற்கரிய அகமதிலும் உடைய அகநகரை அழித்து ஊர் சுடு புகை படிந்த பகைவரை அட்ட செருக்கினால் விரிந்த மார்பினை உடையவன். 10. அட்டுமலர் மார்பன் எனும் தலைப்பில் “அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்” என்பதனால் அறியலாம். (பதிற், பா.எ.20: 21, ப.57)


11. ஈமவிளக்கு

காடு படர்ந்து கள்ளி மிகுந்து, பகற் தீயாகிய விளக்காலும், அகன்ற வாளையுடைய பேய் மகளிராலும், இந்தப் புகை தவழும் சுடுகாடு என்று கதையங் கண்ணனார் புறப்பாடல் சான்று பகர்கின்றது.

“ஈமவிளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகிடு” (புறம், பா.எ.356: 3 - 4: ப.311)

எனும் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றது.

12. விண்மீன்கள் புகை

மதுரை நக்கீரர் பாடிய பெருஞ்சாத்தன் பாடலில், எப்படிப்பட்ட தீய நிலைகள் ஏற்பட்டாலும் இம்மன்னன் குறைவில்லாது சிறந்து வாழ்க என வாழ்த்தினார்.

வானகத்தே எரி மீன்கள் மிகுதியாகத் தோன்றிடினும், குளமீனும், தாள்மீனுமாகிய விண்மீன்கள் புகைந்து தோன்றுமாயினும், இம்மன்னன் பெரிய வயலிடத்து விளைந்த நெல்லினுடைய நகம் போலும் சோற்றை, பசிய துண்டுகளாகிய பொரிக்கறியும், சூட்டிறைச்சியுடனும் உண்டு விளைத்த ஒன்று வௌ்ளமென்னும் அளவிற்றாக விளையக் கொள்க என்று சான்றோர் வாழ்த்துமாறு வாழ்த்தினச் செய்தியை,

“மிகவானு ளெரிதோன்றினும்
குளமீனொடுந் தாட்புகையினும்” (புறம், பா.எ.395: 34 - 35: ப.444. செய்தி 1-11 அடிகள், ப.68)

எனும் புறப்பாடலடிகள் எரிகொள்ளிகள் எரிநட்சத்திரங்கள் இவற்றின் புகைகள் இங்கே சுட்டப் பெறுகின்றன. மண்ணிற்கு அழிவினைத் தரும் போது அவை தோன்றும். அப்படி அவை தோன்றினாலும் அம்மன்னன் அவன் தாளாண்மையால் சிறந்தே வாழ்வான் என்று அவனை வாழ்த்தும் போது இச்செய்தி இடம் பெறுகின்றது.

13. போர்ச் சுடு கமழ் புகை: பகை புலத்து எரி புகை

பதிற்றுப்பத்து அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்து முதல் பாடல். 1. குறுந்தாண் ஞாயில் போரின் கண்ணே சுடுதற்காக எடுத்த தீயானது பகைவர் ஊர்களைக் கவர்ந்துண்டலால் சுடு நாற்றம் நாறுகின்ற புகை, மிக்கெழுந்து பரந்து, திசைகளை மறைத்தது, என்பதனை, (மே, ப.340)

“ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப” (பதிற், பா.1: 9 - 10, ப.339)

இவ்வரிகள் சுட்டுகின்றன.

போருடற்றுவோர் பகைப்புலத்தே தீ வைத்தல் முறையாகலின், போர்ச்சுடு என்றார். இதனை எரிபரந்தெடுத்தல் என்றும், உழபுல வஞ்சி என்றும் ஆசிரியர் கூறுவர். ஊர் முழுவதும் எரி பரவுவதால் புகை மிக்கெழுந்து எம்மருங்கும் சூழ்ந்து கொள்ளும் திறத்தை, “உருத்தெழுந் துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப” இனி, 'உருத்தெழுந்துரை ஊர் கவர” என்று இயைப்பினுமமையும் பழைய வுரைகாரரும், “உருத்தெழுந் துரைஇ ஊர் எரி கவர எனக் கூட்டுக” பகைவர் ஊரிடத்தே நீ எடுத்த தீயானது அவ்வூர்களைக் கவர்ந்துண்ண, அதனால் எழுந்த பெரும்புகை மாதிரம் மறைக்க, நீ அப்பகைவருடைய எயிலை வௌவினை என்பார். (மே, ப.342)

14. மழைப்புகை

பெரும்பாணாற்றுப்படையில் குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் நின்னைப் புரப்பாரைப் பெறாமல், பெய்கின்ற மழை துறத்தலாலே நிலத்தின் கண் எழுந்த ஆவி சூழ்ந்த மலையிடத்து என்பதனை,

“தண்கடல் வரைப்பி தாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்” (பெரும், பா.அடி. 18 - 19, ப.17. செய்தி, ப.45)

எனும் இப்பாடல் அடிகள் சான்று பகர்கின்றன.


15. ஈயல் புகை

நற்றிணையில் அன்பு மிகுதலாலே உள்ளங் கலந்து நம்பால் விரும்பிய கொள்கையுடனே என்றுந் தன்னெஞ்சிலே எம்மை நினைந்துறையுங் காதலியினூர், பகற்பொழுதெல்லாம் சூழ ஆடை பரப்பி நின்று கலைத்த வழி வெளி வந்த உடும்பை ஈட்டியாலே குத்தி, மண்ணின் முழுகி மறைந்து கிடக்கும் வரிகளையுடைய நுணலையை மண் வெட்டியாலே பறித்தெடுத்து, நெடுகிய கோடுகளையுடைய புற்றுக்களை வெட்டிப் புகை மூட்டியை வைத்துழி வெளி வந்த ஈயலைத் தாழிலே பெய்து கொண்டு, வளை தடியாலே முயலையெறிந்து பற்றிய வேட்டுவன்.

ஈயல் பிடிப்பது கபிலர் முல்லை நிலப்பாடல் கோடுகளை ஒழுங்கு பெறச் செய்து சிதைத்து மேலே விழலால் முடிமீது சேற்றைப் பூசி ஒரு துளை வைத்து அதில் புகை மூட்டியை வைத்தூதினால் உள்ளிருந்த ஈயல் வெளிவரும். அங்கே வேறொரு புழை செய்து புகை போகும் வழியுண்டாக்கி அதில் ஒரு தாழியை வைத்திருந்தால் வந்த ஈயலெல்லாம் தாழியிலே படியும் என்பதாம். (நற், பக். 76 - 77)

“ உடும்பு கொளீஈ வரிநுணல் அகழ்ந்து
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
எல்லுமுய லெறிந்த வேட்டுவன் அம்சுவல்
பல்வேறு பண்டத் தொடைமறந் தில்லத்து
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும்” (நற், பா.எ.59: 1 - 5, ப.76)

எனும் பாடல் அடிகள் புகையினால் பெற்றப் பயனைக் குறிப்பிடுகின்றது.

16. தீய புகை

மலைபடுகடாம் மலையைச் சேர்ந்த வழியினை உடைய காட்டிடத்தே செல்லுங்கால் பரணகத்தேறி உயர இருக்கும் கானவன் எய்த கணையேறுண்டு, ஓடி நெய்யிழுதை ஒத்த வெள்ளிய நிணம் நெருக்குற்று, மார்பிடத்தே புண் மிக்கதாய், நிலத்தை அகழ்தலாலே மண்ணாற் தேய்க்கப்பட்ட கொம்பினை உடையதாய் நெறி கெட்டு வீழ்ந்து கிடக்கின்ற கரிய பிணரையுடைய கழுத்தினையுடைய இருளை அற்றுக் கிடந்தாலொத்த பன்றியைக் காண்பீராயின், அதனை உலர்ந்த மூங்கில் தம்முள் இழைந்தமையானே தோன்றிக் காடெங்கும் பரவிய தீயினாலே செறிந்த புகை நாறாதவாறு வாட்டி மயிர் போகச் சீவித்தின்று என்று பதிவிடுகின்றது. நளிபுகை - செறிந்த புகை. புகை கமழ்தலாவது வாட்டுங்கால் புகை மிக்குத் தசையின் சுவையினைக் கெடச் செய்தல். தீயினில் வாட்டி வதக்குதல். (மலை, ப.105)

“முளிகழை இழைந்த காடுபடு தீயின்
நளிபுகை கமழா திறாயினர் மிசைந்து” (மலை, பா.அடி 248 - 249, ப.22)

எனும் அடிகள் இந்தச் செய்தியினைத் தெரிவிக்கின்றது.

17. பல மணம் நாறும் புகை

புறம் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியைக் காரிகிழார் பாடிய பாடலில் நின் பகைவரது நாட்டைச் சுடும் பல மணம் நாறும் புகையுறைதலான் வாடுக நினது சினம் என்பதனை,

“வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே” (புறம், பா.எ.6, 21 - 22, ப.16)

எனும் இவ்வடிகள் இதனைப் பதிவிடுகின்றது.

18. நிணஞ்சுடு புகை

மேலும் பதிற் 3. ஏறாவேணி எனும் தலைப்பில் நிணஞ்சுடு புகை பதிவாகியுள்ளது. வளவிய கொடையினை உடைய அரசே துாங்கலோசைத்தாகிய பாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவினையும், நிணத்தைச் சுடுகின்ற புகை நாற்றத்துடன் இருந்ததைப் பதிவிடுகின்றது. அக்காலத்தில் கள்ளுண்பார்க்கு நிணமும் உடனுண்ண வழங்குபவாதலின் “நிணஞ்சுடு புகை” என்றார். (பதிற், பா.எ.43: 32, ப.194)

19. மீன் சுடு புகை

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை மருதனிளநாகனார் பாடிய பாடலில் ஊார் தொறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாறும் நெடிய ஒழுங்கு வயலிடத்து மருதினது வளைந்த கோட்டைச் சுழ்ந்தது என்பதைப் “ஊர்தோறும் மீன்சுடு புகையின் ” பதிவிடுகின்றது. (புறம், பா.எ.52: 8 - 9, ப.136)

நற்றிணையில் உலோச்சனார் பாடலில் நம் மூதுார் ஆனது கொழுத்த மீன் சுடு புகை ஆனது தெருக்களினுள்ளே கலந்து காணப்படுகின்றது என்பதனை, “கொழுமீன் சுடுபுகை” என்பதைப் பதிவிடுகின்றது. (நற், பா.எ.311, 6, ப.384)

20. புகை நிழலை ஒக்கும் தலைவியின் கண்கள்

அகம் மணி நெய்தல் நிலப்பாடலில் புகைநிழல் கடுக்கும் என்பதனால் புதுக்கொல்லை ஆக்க முயலும் குறவன் மரங்களைச் சுட்டெரிக்கும் தீயின் புகை நிழலை ஒக்கும் தலைவியின் கண்கள் என்கின்றது. பழுப்பேறிய கண்கள். (அகம், மணி, பா..எ.140: 11, ப.51)

பதிற் மூன்றாம் பத்து 5. நிரைய வெள்ளம் எனும் தலைப்பில் உள்ள பாடலில் போர் முனைப்பட்ட ஊர்களில் தீப்பரவக் கொளுத்தி அழிக்க எழுந்த நெருங்குதற்கரிய சினத்துடன் காற்று மோதுதலால் கொடி விட்டெழும் பிசிராக உடைந்து நிறமமைந்த புகை கெட்டதை “கொடிவிடு குரூஉப்புகை” எனும் அடி மெய்ப்பிக்கின்றது.(பதிற், பா.எ.15: 6, ப.29)

இவ்விதமாக சங்க இலக்கியத்தில் பல்வேறு வகையில் புகை எனும் சொல்லாட்சியின் பயன்பாட்டினைப் பயன்படுத்தியுள்ளதை நாம் அறியலாம்.

(நிறைவடைந்தது)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p244a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License