இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

அற இலக்கியங்களில் கல்வி

முனைவர் து. இந்திரா
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 8.


முன்னுரை

காலமும் இலக்கியமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை ஆகும். அதனாலேயே இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்றனர். இலக்கியம் என்பது ஒரு நுண் கலை. அவை கருத்திற்கு மட்டுமே புலனாகக் கூடிய கலை. இலக்கியம் தமிழகம் சங்க காலம் முதற் கொண்டே கல்வியின் அவசியத்தை உணர்ந்துள்ளது. தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்பட்ட அதே சங்க மருவிய காலத்தில் தான் கல்வி என்னும் அறிவொளியின் அவசியத்தை உணர்த்த அற இலக்கியங்கள் முனைந்து செயல்பட்டன. அகப்புறச் சிந்தனைகளில் மாற்றம் காண முனைந்தாலும் மனித அக இருள் அகற்ற உதவும் கல்விச் சிந்தனை மேலோங்கி இருந்த காலம் அறநெறிக் காலமே. இக்காலத்தில் படைக்கப்பட்ட திருக்குறள் முதற் கொண்டே அற இலக்கியங்கள்தான் கல்வியின் முக்கியத்துவத்தை மனித குலம் உணரப் பெரிதும் வலியுறுத்தின. அதனடிப்படையில் நாலடியார், பழமொழி, திரிகடுகம் ஆகிய நூல்களில் கல்வி குறித்த சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வி

பழந்தமிழரின் கல்வி வெறும் மொழிக் கல்வியாகவும், இலக்கியக் கல்வியாகவும் அமையவில்லை என்பதனைக் கலை அறிவியல் பற்றிய பல குறிப்புகள் அவர் படைப்பிலக்கியத்தில் அமைந்துள்ளதை கொண்டு அறியலாம்.

கல்வி வாய் மூலமாகக் கற்பிக்கப்பட்டதால் மன உறுதி வலியுறுத்தப்பட்டது. அக்காலத்தில் கற்றவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தமையை அற இலக்கியப் பாடல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. கல்வியினை இரு கண்களாகப் போற்றுதல் வேண்டும். அறிவுடையோர் ஆளுவோராலும் மக்களாலும் பெரிதும் போற்றப்படுவர். அறிவில் சிறந்தவர்களைச் சமுதாய மதிப்போடும் அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்தும் பெருமைப்படுத்தும். கல்லாதவர்களுக்கு சமூக மதிப்பு வழங்கப்படவில்லை. நாலடியார், பழமொழி, திரிகடுகம் ஆகிய நூல்களில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசுகின்றன.

அறம்

மனிதனுடைய நடத்தையின் நன்மை, தீமைகளை ஆய்வதே அறம். அறம் என்பது சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் நடத்தையைப் பற்றி ஆராயும் கலை என வரையறுத்துக் கூறலாம்.


அழியாத செல்வம்

கேடில் விழுச் செல்வம் கல்வியாகும். வைத்த இடத்தில் இருந்து பிறரால் கொள்ளப்படாதது கல்வியாகும். கல்வி அழியாத செல்வம் ஆகும். கல்வியைத் தவிர மற்ற அனைத்துச் செல்வங்களும் அழியக் கூடியது. ஒருவர் தன் மக்கட்குத் தேடி வைக்கத் தக்க அழியாத செல்வம் கலவியேயாகும். “ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி, ஞானமே முக்கியம். என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக் கொள். நீ அதை மேன்மைப்படுத்து அது உன்னை மேன்மைப்படுத்தும். நீ அதைத் தழுவிக் கொண்டால் அது உன்னை கனம் பண்ணும்” (1) என விவிலியமும் ஞான மார்க்கத்தைப் பற்றி போதிக்கின்றது. அழியாத செல்வம் கல்வி என்பதை நாலடியார் கூறுகிறது.

சிறந்த அழகு

கல்வியானது ஒரு மனிதனுக்கு சமூகத்தில் அவன் வாழும் காலத்திலும் அதற்கு பின்பு அவனுக்கு புகழ் சேர்க்கக் கூடியதாக விளங்குகிறது. ஒரு மனிதனுக்கு அழகு என்பது ஆண்களினுடைய மயிர் முடியின் அழகும். மடிக்கப்பட்ட ஆடையினது கரையினழகும் பெண்கள் பூசிக் கொள்ளும் மஞ்சளின் அழகும் உண்மையான அழகு தருவன அல்ல. மன நன்மையும் நடுவு நிலைமையுமாகிய குணங்களோடுங் கூடிய கல்வியின் அழகே சிறந்த அழகாகும் என்பதை நாலடியார்

“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு” (2)

புற அழகுகள் எலலாம் அழகு அல்ல. மக்கட்குக் கல்வி அழகே உயர்ந்த அழகாகும்.

அறியாமையைத் தீர்க்கும் மருந்து

கல்வி நல்வாழ்க்கையாகிய இம்மைப் பயனை விளைவிக்கும் பிறர்க்குக் கற்பித்தலால் குறைவுபடுதல் இல்லை. தம்மை அறிவாலும், புகழாலும் விளங்கச் செய்யும் கல்வி ஒரு போதும் கெடுதல் இல்லை. ஆதலால் கல்வி அறியாமை என்னும் நோயினைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகும் என்பதனை நாலடியார்.

“இம்மைப்பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றாய்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து” (3)

என மயக்கம் தீர்க்கும் மருந்தாகக் கல்வி கூறப்படுகிறது.


காலத்தால் அழியாத கல்விச் செல்வம்

சேர்த்து வைத்த கல்வி அறிவை யாரும் திருடிக் கொண்டு போய்விட முடியாது. பிறர்க்கு வழங்குவதாலும் கல்விச் செல்வம் குறையாது வளரவே செய்யும். தனக்குப் பின் தன் சந்ததிக்கு மிச்சம் என ஒருவன் விட்டுச் செல்வது கல்வி அதனால் நாலடியார்,

“எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சை மற்றல்ல பிற” (4)

இளமையில் கற்க

இளமைப் பருவம் முதற்கொண்டே கற்றல் வேண்டும். இளமையில் கற்று முதுமையில் அதன் பயனைப் பெறவேண்டும்.

பழமொழி இலக்கியத்தில் கல்வியைப் பயில்வதற்கும் ஏற்ற இளமைக் காலத்தை வரையறுத்த போக்குக் காணப்படுகிறது. இக்காலக்கட்டமே எவ்வித புறத்தாக்கத்திற்கும் ஆட்படாத பருவம். பொறுப்புகளின் சுமை ஏறாத இளமைக்காலம் கழிந்தால் எந்தச் செயலையும் நிறைவேற்றவும் நடைமுறைப்படுத்தவும் இயலாது. இக்கருத்தை வலியுறுத்தவே.

“ஆற்றும் இளமைக் கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம் போக்கி உலகு கொண்டார் இல்லையே யில்லை
மரம் போக்கிக் கூலி கொண்டார்” (5)

என்ற பழமொழியினைத் தேர்ந்தெடுத்துள்ளார். படகில் பயணம் மேற்கொள்பவர் பயணம் செய்வதற்குப் படகின் கூலியை முன்னதாகக் கொடுத்து ஆற்றைக் கடப்பர். அது போன்று எதிர் காலத்தைச் செம்மையாகக் கடப்பதற்கு இளம் வயதில் கல்வியைக் கற்றுத் தேர்வது வாழ்க்கைப் பயணத்தைக் கடக்க ஏதுவாகும் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.


கல்விக்கு எல்லை இல்லை

படிக்குந் தோறும் அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் கற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உலகம் பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. விரைந்து செல்லும் உலகிற்கு ஏற்ப ஒருவன் கற்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

“உற்றொன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேங்
கற்றறொறுந்தான் கல்லாதவாறு” (6)

என்னும் பழமொழி பேசுகிறது. கல்விக் கற்றுச் சிறந்த அறிஞனாகத் திகழ்பவர்கள் எக்காலத்திலும் மனத்தளர்வின்றித் தாம் இதற்கு முன்பு கற்க முடியாத காலத்தைக் கழித்தற்கு வருந்தி, தினம் தினம் உதயமாகும் புதிய மெய்மைகளை அறிந்து கொள்ள எதிர்நோக்கி இருத்தலும் வேண்டும் என்னும் பொருள்பட அமைந்துள்ளது.

கற்றவர் கடமை

சொற்களை ஆராய்ந்து அதில் சிறந் நுட்பமான பொருளை மேற்கொள்ளல் பிறர் விரும்பினும் பயனற்றவைகளைச் சொல்லாதிருத்தல் உறுதி பயப்பனவற்றைக் கீழோரிடம் சொல்லாமல் மேலோரிடம் சொல்லுதல் ஆகிய மூன்றும் கற்றாரின் கடமை என்பதனை திரிகடுகம்,

“நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும் நூற்கேலா
வெண்மொழி வேண்டினும் சொல்லாமை நன்மொழியைச் சிற்றினம்
அல்லார் கண் சொல்லும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்” (7)

இங்ஙனம் கற்றறிந்தாரின் கடமையினைக் கூறிய கற்றறிந்த மேதைக்கு தான் உலகில் முதல் இடம் கிடைக்கும் எனவும் உறுதியாய் கூறுகின்றது.

நல் உலகம் அடையாதவர்

கற்றாரைக் கைவிட்டு வாழ்ந்தால் நல்லுலகம் சேரமுடியாது என எச்சரிக்கை செய்கிறது திரிகடுகம். கற்க வேண்டியவற்றைக் கற்று அறிவுடைய சான்றோரை விட்டு நீங்கி வாழ்பவனும், தாம் விரும்பியதை செய்யும் அறிவற்றன், தீமை செய்யும் பேச்சுக்காரன் ஆகிய மூவரும் நல் உலகங்களை சேராதவர்கள்.


முடிவுரை

தமிழகத்தில சங்க காலம் முதற்கொண்டு கல்வி பற்றிய சிந்தனைகள் தமிழ் இலக்கியம் இலக்கணங்களில் இடம் பெற்று வருகின்றன. இருப்பினும் சங்க மருவிய காலத்தில் தமிழகத்தில் கல்வி பற்றியச் சிந்தனைகள் மேலோங்கிக் காணப்பட்டன. கல்வி என்னும் கருவியே மனிதனின் அக இருளை அகற்றி, பேரொளியை ஏற்றும் என்னும் உண்மையை உணர்த்த அறஇலக்கியங்கள் முயன்றன என்பதை அறிய முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. விவிலியம் (நீதிமொழிள்,4:5,7,8)

2. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, நாலடியார், பா. எண்: 131

3. மேலது, பா. எண். 132

4. மேலது, பா. எண். 134

5. மு. இராசமாணிக்கம் பிள்ளை, பழமொழி நானூறு, பா. எண். 2

6. மேலது, பா. எண்.3

7. புதினெண் கீழ்கணக்கு நூல்கள் திரிகடுகம், பா. எண். 32.

பார்வை நூல்கள்

1. அண்ணாமலை. மு., தமிழ் நாட்டில் கல்வி அன்றும் இன்றும், சரசு பதிப்பகம், 44, இராமலிங்கேஸ்வர் கோயில் தெரு, வன்னியர் தேனாம் பேட்டை, சென்னை - 600 018. (முதற்பதிப்பு: டிசம்பர், 1998)

2. ஆசிரியர் குமு., பதினெண்கீழ்க்கணக்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், சென்னை- 600198, (இரண்டாம் பதிப்பு, 1981)

3. இராசமாணிக்கம் பிள்ளை. ம., பழமொழி நானூறு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை - 1. (இரண்டாம் பதிப்பு - 1954)

4. பரிசுத்த வேதாகமம், இந்திய வேதாகமச் சங்கம், 206 மகாத்மா காந்தி சாலை, பெங்களூர் - 560001. (இரண்டாம் பதிப்பு - 1930)

5. பாலசுந்தரம் பிள்ளை, தி.சு., நாலடியார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 1. (முதற் பதிப்பு - 1945)

6. மயிலை முத்து., திருக்குறள், மாணவர் மன்றம், சென்னை. (இரண்டாம் பதிப்பு - 1968)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p252.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License