இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

முல்லை நில மக்களின் ஏறுதழுவும் மரபு

முனைவர் சி. தேவி
உதவிப்பேராசிரியர்,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.


முன்னுரை

மானிடவியல் என்பது மனிதனின் நடத்தை முறை அறிவியலாகும். மனிதனைப் பற்றி ஆராயும் பிரிவே மானிடவியல் எனலாம். மானிடவியல் என்னும் அறிவுத்துறையின் வெளிப்பாடே பண்பாட்டை உலகிற்குக் கொண்டு வந்தது எனலாம். “மனித சமுதாயம் என்பது மக்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அமைப்பே” (1) என்பார் செனோபேன்ஸ். மானிடவியலை மனிதன் பற்றிய தேடல் என்பா். மானுடம் பற்றிய தேடல் முக்கியமானது, அது ஒரு பவித்திரமான பணி என்று கார்த்திகேசு சிவத்தம்பி கூறுகிறார்.

Anthropology என்ற சொல் The Study of man என்றழைக்கப்படுகிறது. “மானிடவியல் என்பது மானிடத்தோற்றம், உடலியல் தோற்றம், பண்பாட்டு வளா்ச்சி, இன வகைப்பாடு, மனித நம்பிக்கைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு மரபு சார்ந்த வெளிப்பாடு” (2) என்று அகராதி விளக்கம் நல்குகிறது.

மானுடவியல்

பண்பாட்டு மானிடவியல், சமுதாய மானுடவியல் என்ற இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

பண்பாட்டு மானுடவியல்

பண்பாட்டு மானுடவியல் நோக்கில் ஆய்வில் புகும் ஆய்வாளா்கள் மனிதனின் உயிரியல் சார்ந்தோ, பண்பாடு சார்ந்தோ, வரலாறு சார்ந்தோ, மொழி சார்ந்தோ ஆராய்கின்றனர். எனவே, மானிடவியல்,

1. உடல்சார் மானிடவியல்

2. பண்பாட்டு மானிடவியல்

3. தொல்லியல்

4. மொழியியல் என்ற நான்கு பெரும் பிரிவுகளுள் அடங்குகிறது.

பண்பாட்டின் உட்கூறுகள்

பண்பாடு என்பது இலக்கியம், கவிதை, நடனம், இசை, கோயில்கள், சடங்குகள், வேதமந்திரங்கள், தொழில்கள் போன்ற சில கூறுகள் மட்டுமல்லாது, மக்களின் நடத்தை முறைகளைக் கட்டுக்கோப்பான நிலையில் செயல்படுத்தும் ஒரு மிகப்பெரும் அமைப்பாகும். எந்திரங்களின் செயற்பாட்டிற்கு எவ்வாறு ஆயிரமாயிரம் உறுப்புகளைச் சிறப்பாக வடிவமைத்து இணைக்கின்றார்களோ, அவ்வாறே ஒவ்வொரு பண்பாட்டிலும் ஆயிரமாயிரம் கூறுகள் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு பண்பாடு என்னும் அமைப்பிற்குள் பொருத்தப்பட்டுள்ளன.

“கற்றுணரந்த நடத்தை முறையானாலும் சரி உற்பத்தி செய்யப்பட்ட பயன்படு பொருளானாலும் சரி, அதனை எந்த அளவுக்குக் குறைத்துக் காண முடியுமோ, அந்த அளவிற்குக் குறைத்துக் காணக்கூடிய ஒன்றே பண்பாட்டுக் கூறு ஆகும்” (3) என்பார் ஹோபல்.

பண்பாட்டு மானிடவியல்

1. பொருள்சார் பண்பாடு

2. பொருள் சாரா பண்பாடு

என்ற இரண்டு நிலையில் ஆராய இடமளிக்கிறது.

பொருள்சாராப் பண்பாடு என்பது பருப்பொருள் வடிவம் இல்லாதவை. இக்கூறுகள் மனத்தளவில் மட்டுமே உணரக் கூடியனவானவும், புரிந்து தெரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. அவை மானிடவியல் வழக்கில் மனவடிவங்கள் என்றும் கூறப்பெறும்.

பழக்க வழக்கங்களை தனி மனிதனும், சமுதாயம் என்ற அமைப்பும் இணைந்து உருவாக்குகின்றன. மக்களின் தேவை அடிப்படையிலேயேப் பழக்கங்கள் தோன்றுகின்றன. அவை சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற நிலையில் வழக்கங்களாக உருப்பெறுகின்றன. எனவே, நாளடைவில் வழக்கம், வழக்கம் என்ற இரண்டும் சேர்ந்து பழக்கவழக்கம் என்றாகிறது.



மரபு

பழக்கம் என்பது ஒரு கற்கும் செயலாகும். இது தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வளர்ச்சிக்கு இன்றியமையாதக் கூறாகக் கருதப்படுகிறது. “நனவுடன் தொடங்கிய செயல் நாளடைவில் நனவின்றியே நிகழக் கூடியதாக ஆகிவிடும் செயலையேப் பழக்கம் என்பர்” (4) இப்பழக்கமேப் பிற்காலத்தில் மரபு எனப்பட்டது.

க. காந்தி தான் எழுதிய “தமிழா் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்” என்ற நூலில், “ஒரு சமுதாயத்தின் உண்மை நிலையை, நாம் அறிய வேண்டுமென்றால் அச்சமுதாயத்தின் நம்பிக்கை , பழக்க வழக்கங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அச்சமுதாயத்தின் கால ஓட்டத்தில் உருவாக்கப்படுகின்ற இலக்கியங்களில் அச்சமுதாயத்தின் வெளிப்பாடாக, இத்தகு பழக்க வழக்கங்கள் பரவலாகப் பதியப்படுகின்றன” (4) என்று கூறுவர்.

தமிழ் மக்கள் சில அறங்களை வாழையடி வாழையாகப் போற்றிப் பேண வேண்டுமென்ற நோக்கில் சேரமான் கணைக்கால் இரும்பொறை மன்னனே, தம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சியைக் கூறித் தமிழினத்திற்கு என்றும் வேண்டுகோள் விடுத்துப் பாடியுள்ளார்.

“குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்னுவாளிற் றப்பார்
தொடா்ப்படு ஞமலியினிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாஒ் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத் தீத் தணியத்
தாமிரந்துண்ணு மளவை
ஈன்ம ரோவில் வுலகத்தானே” (5)

என்று நாட்டார் வழக்கு நன்கு புரியும் வண்ணம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பிள்ளை இறந்து பிறப்பினும் தசைப்பிண்டமாக பிறப்பினம் அவற்றையும் ஆளாகக் கருதிவாளால் கீறிப் புதைக்கும் வழக்கம் இருந்தது. விழுப்புண்ணோடு உயிர் துறப்பவர்க்கேச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது. மறக்குடியில் பிறந்த வீரர்களது வீரத்தை மேலும் ஊக்குவிக்க, அவர்களது தன்மான உணர்வைத் தூண்டப் பல வாசகங்கள் கூறப்படுவதுண்டு.

“உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர்” (6)

இக்குறள் வழி போர் வந்தால் உயிரைத் துச்சமெனக் கருதி போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தன் சிறப்புக் குறையாதவர் ஆவர் எனக் கூறும் வள்ளுவர் கருத்து இங்கேக் கவனிக்கத்தக்கது. இப்பண்பு நாட்டார் வழக்கில் மரபாகி நெறியாகிப் போற்றப்பட்டது.

திருமணம்

இல்லறத்தில் திருமணம் என்பது மனிதப் பண்பாடு. அன்பின் ஐந்திணை வாழ்வினைச் செம்மையாகச் செயல்படுத்த மண உறவு மிகமிகத் தேவை. தலைவனும், தலைவியும் இணையும் இல்வாழ்க்கையில் அன்பைப் பண்பாகவும், அறத்தைப் பயனாகவும் கொண்டு வாழ்வதேச் சிறந்த பண்பாகும். வேங்கை பூக்கும் காலம் திருமணம் நடத்துவதற்கு உரிய காலம், முல்லை நில மக்கள் வேங்கை மரத்தின் கீழிருந்து திருமண முடிவு செய்வர் என்பதை,

“மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம்நயந் தன்ன” (7)

என்ற பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

பழந்தமிழர் சமுதாயத்தில் திருமணம் பெண் வீட்டில் நடைபெறுவதே வழக்கமாக இருந்துள்ளது என்பதை,

“வதுவையும் ஈங்கே அயர்ப”



மணவினைச் சடங்கு

களவு மணமானாலும், கற்பு மணமானாலும், ஏறு தழுவிய பிறகே திருமணங்கள் முல்லை நிலத்தில் நடைபெற்றன. பெண்கள் திருமண வயதடைந்தவுடன் மணமகன் தேர்விற்காக ஏறு தழுவுதல் விழா பற்றி பறையறைந்து களிறு, முதலை முதலிய விலங்கினங்கள் அடைக்கப்பட்டிருக்கும். குகை போன்று தொழுவம் அமைந்திருக்கும் என முல்லைக்கலி காட்டுகிறது. தொழுவத்தை ஒட்டி பரண் அமைக்கப்பட்டிருக்கும் அதன் மீது பெண் குடும்பத்தார், ஊர் மக்கள் அனைவரும் காத்திருப்பர். பறை அறைதலைத் தொடர்ந்து ஏறு தழுவுதல் நடைபெறும். தொழுவம் நறுமணப் புகையிட்டு இறை வழிபாடுகள் செய்யப்படும். காளைகளும் வீரர்களும் போரிட களம், இருபெரும் வேந்தர்கள் போரிடும் போர்க்களம் போலக் காட்சிதரும் எனவும், பாரதப் போரிலே நடந்த தாக்குதல் போலிருந்தது எனவும் கலித்தொகையில் குறிப்புகள் உள்ளன. காளை வலியிழந்தாலோ, வீரன் சேர்ந்தாலோ ஏறு தழுவுதல் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படும். நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் மன்றத்தில் கூடி குரவைக் கூத்தாடி மகிழ்வர்.

சங்க காலத்தில் திருமணத்தின் போது ஆண்களே பெண்களுக்கு பொருள்தரும் பழக்கம் இருந்தது என்றாலும், ஏறு தழுவிய ஆண்மகனிடம் பொருள் (முலை விலை – பரிசம்) பெறுவதில்லை என்ற பழக்கம் கொண்டிருந்தனர். முல்லை நிலமக்கள் என்பதை,

“எளியவோ ஆயமகள் தோள்
விலை வேண்டா ரெம்மினத் தாயர் மகளிர்
கொலையேற்றுக் கோட்டிடைத் தாம் வீழ்வார் மார்பின்
முலையிடைப் போலப் புகின்” (8)

எனும் பாடலடிகள் சுட்டுகின்றன.


ஏறு தழுவுதல்

சங்கத் தமிழகம் வீரயுகம் சார்ந்ததாக இருந்தது. வீரயுகத்தின் வெளிப்பாடாக மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளும் அமைந்தன. அவர்தம் வீரத்தின் அளவுகோலாக ஏறுதழுவுதல் இருந்தது. வீரம் சான்ற காளையை அடக்குதல், வீரர்களின் வாழ்வில் இன்றியமையாத இடம்பெற்றது. காளையை அடக்குதல், வீரத்தின் வெளிப்பாடாக அமைந்ததற்குரிய காரணங்கள் ஆராய்வதற்குரியன.

ஏறுதழுவும் இடம் தொழூஉ எனப்பட்டது. அகன்ற அப்பகுதியில் காளைகள் பாய்ந்து வந்தன. அவற்றை வீரர்கள் அடக்கினர். அவ்விடத்தே வீரர்களின் வீர நிகழ்வைக் காணக் குழுமும் பெண்களின் இருப்பிடமாகப் பரண் அமைக்கப்பட்டது. பரண்களின் மேலிருந்தவாறு பெண்கள் வீரர்களின் ஏறுதழுவும் காட்சிகளைக் கண்டு மகிழ்வர்.

“பல்ஆன் பொதுவர் கதழ்விடைக்கோள் காண்மார்
முல்லையும் முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர் பெருமழைக் கண்ணர் மடம்சேர்ந்த
சொல்லர் கடரும் கனங்குழைக் காதினர்
நல்லவர் கொண்டார் மிடை” (9)

என்னும் பாடலடிகள் விரைந்து வரும் காளைகளை அடக்க வரும் வீரர்களைக் காண்பதற்காகப் பெண்கள் பரணைக் கைக்கொண்டனர் என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றன. மேலும் தொழூஉவானது நறுமணம் கமழும் இடமாகவும் ஏறுகளின் பாய்ச்சல் காரணமாக துகள் எழுந்த இடமாகவும் திகழ்ந்தது என்பதை,

“அவ்வழி முழக்கென, இடியென, முன்சமத்து ஆர்ப்ப-
வழக்குமாறு கொண்டு, வருபுவருபு ஈண்டி-
நறையொடு துகள்எழ நல்லவர் அணிநிற்பத்” (10)

எனும் பாடலடிகள் சுட்டுகின்றன.

கலித்தொகையின் பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் முல்லைத் திணையின் வீரவிளையாட்டினை எடுத்துரைக்கின்றன. ஏறு தழுவுதல் ஒரு ஆண்மகனின் கடமையாகும். கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் மறுபிறப்பிலும் தழுவமாட்டான் என்பதனை,

“கொல்ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆயமகள்” (11)

எல்லா நிகழ்வுகளையும் மக்களுக்கு முரசறைந்து முன்னமே அறிவிக்கும் அத்தகைய பண்பாடு முல்லை நிலத்தில் இருந்தமையை,

“எல்லாரும் கேட்ப, அறைந்து அறைந்து எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்
சொல்லுக! பாணியேம் என்றார் அறைக என்றார்
பாரித்தார்” (கலி.102 : 11-12) (12)

ஆயர்குல இளைஞர்கள் வீறு கொண்டு எழுந்து வரும் ஏறுகளைத் தெய்வத்திற்குச் சமமாக எண்ணினர். பாய்ந்து வருகின்ற காளைகளுக்குத் தெய்வத்தின் பெயர்களையும் இட்டு அழைக்கின்றனர்.

காளையும் கடவுளும்

சோழன் நல்லுருத்திரன் பாடல்களில் காளைகள் கடவுளரோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. முல்லைக்கலி நான்காம் பாடலில், காளைகள் பலவித வண்ணங்களில் தொழுவத்திற்கு அணிவகுத்து வரும் காட்சி காட்டப்பட்டுள்ளது. வெண்மை நிறமுடைய பலராமன் போல் ஒரு காளை, திருமாலைப் போல கரிய நிறத்தில் ஒரு காளை, சிவபெருமானின் சிவந்த நிறத்தில் ஒரு காளை என்று கடவுளரோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. கொம்புகள் வளைந்த நிலையில் இருக்கும் சிவப்புக் காளையைக் குறிக்கும் பொழுது, சிவபெருமான் சூடியுள்ள பிறைச் சந்திரனை உவமையாக்கியுள்ளார் புலவர் என்பதை,

“கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடணி சேயும்” (மு.க.3) (13)

என்ற பாடலடி மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஏறு தழுவும் முன் வழிபாடு

எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி பெற, இறைவனை முதலில் வணங்கும் மரபு தமிழர்களிடம் இயல்பாகவே இருந்து வந்துள்ளது. ஏறு தழுவும் இளைஞர்களும் தொழூஉவினுள் புகுவதற்கு முன்னர் நீர்த்துறையிலும் ஆலமரத்தின் கீழும் பழமையான வலிமை பொருந்திய மரங்களின் கீழும் உறையும் தெய்வங்களை முறையாக வழிபட்டனர் என்பதை,

“துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ” (14)

என்ற பாடலடிகளால் அறிய முடிகிறது. இயற்கையை வழிபட்ட தமிழர்களின் மாண்பினையும் இதனால் அறியலாம்.


ஏறு தழுவும் முன் பறை சாற்றுதல்

சங்கக் காலத்தில் முல்லை நிலத் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஆடவன் தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். தலைவியின் இல்லத்தில் காளை ஒன்று செருக்கும் வலிமையும் மிக்கதாக வளர்க்கப்பட்டு வரும். அக்காளையை ஆடவன் ஏறு தழுவுதலில் கலந்து கொண்டு அடக்கிக் காட்ட வேண்டும். அவ்வாறு அடக்கிக் காட்டுபவனுக்கே அப்பெண் உரிமைப்பட்டவன் ஆவாள்.

“முள்எயிற்று ஏஎர் இவளைப்பெறும் இதுஓர்
வெள்ஏற்று எருத்து அடக்குவான்... ... ...
... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ...
என்றாங்கு
அறைவனர்” (15)

என்னும் பாடலடிகள் ஏற்றை அடக்குபவனே தலைவியைப் பெற இயலும் என்று முரசறைந்து அறிவிக்கப்பட்ட தன்மையினைத் தெரிவிக்கின்றன. பொது இடங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு முரசறைந்து தகவலை அறிவிக்கும் தன்மையினை இதனால் அறிய இயலுகின்றது.

தொழுவில் காரி புள்ளிகளை உடைய வெண்மையான காளை, வளைந்த கோடுகளைக் கொண்ட சிவந்த காளைகள், கபிலை நிறமுடைய ஏற்றினைப் பற்றிய குறிப்பும் உள்ளன. மேகக் கூட்டங்கள் திரண்டு எழுந்ததைப் போல தொழுவினுள் புகுந்தன என்பதைக் கலித்தொகை புலப்படுத்துகிறது.

ஏறுகளைத் தழுவுதற்குள் களம் புகுந்த வீரர்கள் எருதுகளின் கொம்புகளைப் பிடித்து மார்பிலே பொருந்தும்படி தழுவினர். சிலர் கழுத்திடத்தே அடங்கின் கிடந்து அக்காளையின் திமிலைத் தழுவினர். சிலர் தோளுக்கு நடுவே கழுத்தைப் புகவிட்டு இறுகப் பற்றிக் கிடந்தனர். சிலர் கொம்புகள் தம்மீது படுவதை அஞ்சாது ஏற்றுக் கொண்டனர்.

“மருப்பில் கொண்டும் மார்பு உறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில் இறப் புல்லியும்
தோள் இடைப் புகுதந்தும் துதைந்தபாடு ஏற்றும்
நிரைபு மேல் சென்றார்” (16)

என்னும் பாடலடிகள் ஏறுதழுவிய வீரர்களின் தன்மைகளைக் குறிப்பிடுகின்றன. ஏறுதழுவிய வீரர்களின் எதிர்ப்புக்கு ஏறுகளின் கொம்புகளும் தாழ்ந்தன. ஏறு தழுவிய வீரர் தன் நெடிய தோளால் ஏற்றின் கழுத்தை இறுகத் தழுவினான். அதன் திமிலிடத்தேத் தோன்றி அவ்வேற்றைப் பெரிதும் வருந்தினான். ஏற்றிற்குத் தாளாமல் பல வீரர்களும் கலங்கிய நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறு தழுவ வந்த வீரர்களைக் காளைகள் சிதைத்த காட்சிகள் பலவும் நெய்தற்கலியில் இடம்பெற்றுள்ளன. தன்னைத் தாக்க வந்த இளைஞனைச் சாவக் குத்தி தன் கொம்புகளுக்கு இடையில் கொண்டு அவனுடலைச் சாய்க்கின்றனவாய் எருதுகள் திகழ்ந்தன. வீரர்களைத் தாக்கிப் பாய்ந்த காளைகள் காண்பதற்குத் துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து பகைவர் நடுவே தன் வஞ்சினத்தை நிறைவேற்றிய வீமனைப் போலவும், எருமைக்கடா மீது ஏறி வரும் கூற்றவனுடைய நெஞ்சைப் பிளந்து குடரைக் கூளிக்கு இடும் பசிய நிறத்தை உடைய கடவுளைப் போலவும் தன் தந்தையைக் கொன்றவனைத் தன் ஆற்றலின் வலிமையால் தலையைத் திருகிக் கொன்ற அசுவத்தாமனைப் போலவும் காட்சியளித்தன. வலிமை வாய்ந்த தம் கோடுகளில் குருதி சாய்ந்த குடல் சூடியவையாகவும் ஏறுகள் திரிதந்தன அத்தகைய ஏறுகளையும் அஞ்சாமல் வீரர்கள் அடக்கினர்.

“குருதிக் கோட்டொடு குடர் வலந்தன
கோட்டொடு சுற்றிக் குடர்வலந்த ஏற்றின்முன்
ஆடிநின்று அக்குடர் வாங்குவான் பீடுகாண்” (17)

என்னும் பாடலடிகள் ஏறுகள் குடர் சூடித் திரிந்த காட்சிகளை எடுத்துரைக்கின்றன. ஏறுகளின் அழகிய மருப்பினால் குத்திச் சரிந்த குடர்களைப் பருந்துகள் பற்றிக் கொண்டு மேலே சென்றன. அவற்றிடமிருந்து தவறி விழுந்த குடர்கள் ஆலமரத்தின் மீதும் கடம்பமரத்தின் மீதும் வீழ்ந்து அங்கு வாழும் தெய்வங்களுக்கு சூட்டப்பட்ட மாலைகளைப் போலக் காட்சியளித்தன. இவ்வாறு ஏறுகள் வலிமையின் சிம்மங்களாகத் தொழூஉவிலே திரிந்தன.


ஏறுதழுவுதலின் நிறைவு

ஏறு தழுவிய பின்னர் தொழூஉவினது பாண்டவரும் நூற்றுவரும் போரிட்ட போர்க்களத்தையும், இருபெரு வேந்தர்கள் தம்முள் மாறுபட்டு எதிர்ப்பட்ட போர்க்களத்தையும் ஒத்துக் காணப்பட்டது. புழுதி பாய்ந்து காணப்பட்டது. புழுதி பாய்ந்து காணப்பட்ட களத்தில் வீரர்கள் காளைகளை அடக்கிய போது, அவர்களது வெற்றி அறிவிக்கப்பட்டது. தலைவன் கொல்லேற்றினைத் தழுவிக் கொண்டமையால் தனக்கு ஏற்படும் இன்பத்தைத் தலைவி, தான் மோர் விற்றுச் சேர்த்த செல்வத்தைப் போன்றது என்று மகிழ்கிறாள். கொல்லேற்றுக் கோட்டினைத் தழுவ, அஞ்சும் ஆயனை மறுமையிலும் தலைவி புல்லுவதில்லை. ஏறு தழுவிய வீரனுக்குத் தலைவியை அவளுடைய தமர் விருப்பத்துடன் தமர் மகிழ்ந்தனர் என்பதனை,

“திண்தோள் திறல்ஒளி மாயப்போர் மாமேனி
அம்துவர் ஆடைப் பொதுவனோடு ஆய்ந்த
முறுவலான மென்தோள் பாராட்டி சிறுகுடி
மன்றம் பரந்தது உரை” (18)

என்னும் பாடலடிகளால் அறிய இயலுகின்றது. அவ்விடத்தே மக்கள் குரவைக் கூத்தாடி மகிழ்ந்தனர்.

சங்கத்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை மரபினைப் பின்பற்றி மரபு நிறைந்த வாழ்வு வாழ்ந்தனர். மரபு மீறல் வாழ்வியல் அறங்களுக்குப் புறம்பானது என்று கருதப்பட்ட காரணத்தால், மரபு என்ற பொருள்சாராப் பண்பாடு பண்டையோரால் மதிக்கப்பட்டது.

அடிக்குறிப்புகள்

1. பக்தவச்சல பாரதி, பண்பாட்டுமானிடவியல் ப.20

2. கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் ப. 30

3. கழக தமிழ் அகராதி ப. 108

4. பக்தவச்சல பாரதி, பண்பாட்டுமானிடவியல் ப. 165

5. முனைவர் க.காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், அணிந்துரை

6. புறம் 74

7. குறள் 778

8. கலித்தொகை 41

9. கலித்தொகை 105

10. கலித்தொகை113

11. நெ.க. 103 :5-9

12. நெ.க. 101

13. கலித்தொகை 103 : 63-64

14. நெ.க. 101 : 13-14

15. நெ.க.104 : 18-26

16. நெ.க. 105 : 30-33

17. நெ.க. 103 : 27-29

18. நெ.க.102: 36-39

துணைநின்ற நூல்கள்

1. பக்தவத்சல பாரதி. சீ, பண்பாட்டு மானிடவியல், அடையாளம் பதிப்பகம், திருச்சி. (1990).

2. கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை. (திசம்பர், 1981).

3. முனைவர் க.காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. (முதல் பதிப்பு 1980).

4. சுப்பிரமணியன். ச.வே. (உரைஆ.), பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு கோவிலூர் மடாலயம், கோவிலூர். (முதல் பதிப்பு 2003).

5. சுப்பிரமணியன். ச.வே. (உரைஆ.), பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. (மூன்றாம் பதிப்பு, செப்டமபர் 2017)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p271.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License