இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் வரங்களும் சாபங்களும்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

மனிதர்கள், தேவர்கள், அரக்கர்கள் என்று அனைவருமே தாங்கள் விரும்பிய விருப்பங்கள் நிறைவேற, இறைவனை நினைத்து உடலை வருத்தி, கடுமையாகத் தவம் செய்வர். அவ்வாறு செய்தால், அவர்களின் கடுமையான தவத்தைக் கண்டு மகிழ்ந்து, அவர்களுக்கு அவர்கள் விரும்பியதை இறைவன் அளிப்பது வரமாகும். அவர்களேச் செய்யக்கூடாத, செய்யத்தகாத, செயல்களைச் செய்யும்போது, மனம் வருத்தப்பட்டு அவர்கள் மீது, பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது சாபமாகும். கம்பராமாயணத்தில் வரங்களும், சாபங்களும் இடம் பெற்றுள்ளன என்பதைச் சொல்வதாக இக்கட்டுரை அமைகிறது.

இராவணன் பெற்ற வரம்

தவத்தின் மூலமாக பிரம்மனிடமிருந்து மூன்றறைக் கோடி ஆயுட்காலம் பெற்றவன். சிவபெருமானிடமிருந்து 'சந்திரஹாசம்' என்ற வாளைப் பெற்றவன். இந்த வாளினால்தான் சடாயுவின் சிறகினை இராவணன் வெட்டி வீழ்த்தினான். தன்னுடைய தவப்பெருமையால் பெற்ற நான்முகனின் வரத்தினாலும், சிவபெருமான் வரத்தினாலும் மேம்பாடு உடையவன் ஆனான்.

“தாளுடை மலருளான் தந்த அந்தம் இல்
நாளுடை வாழ்க்கையன் நாரி பாகத்தன்" (சடாயு உயிர் நீத்த படலம் 847)

இராவணன் வரம் பெற்றதை சடாயு உயிர் நீத்த படலத்தில் கூறப்பட்டுள்ளது.

கும்பகர்ணன் பெற்ற வரம்

இராமனுக்கும், கும்பகர்ணனுக்கும் இடையே போர் நடைபெற்ற போது, தான் இறந்து விடுவோம் என்பதை நன்கு உணர்ந்த கும்பகர்ணன், இராமபிரானிடம், "எம் பகைவர்களான முனிவர்களும், தேவர்களும் மூக்கு இல்லாத முகம்" என்று ஏளனத்தோடு என் முகத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் அவ்வாறு காணாதபடி என் கழுத்தை அறுத்திடுக, அறுத்த பின்பு என் பெரியத்தலையைக் கரிய கடலுக்குள் மறைத்து விடுவாயாக, உன்னிடம் எனக்காக நான் வேண்டிக் கொள்வது இதுவே..." என்று கூறி முடித்தான்.

“நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய் நீக்கியபின் நெடுந் தலையைக் கருங் கடலுள்” (யுத்த காண்டம்- கும்பகர்ணன் வதைப் படலம் 1570)

கும்பகர்ணன் வரம் பெற்ற செய்தி, கும்பகர்ணன் வதைப்படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.


இராவணன் துணைவர்களும் வரம் பெற்றவர்கள்

இராவணன், அவன் தம்பி கும்பகர்ணன் மட்டுமல்ல, அவனுடைய துணைவர்களும் வரம் பெற்றுள்ளனர்.

"அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம் இல்
வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர்" (யுத்தகாண்டம் - இலங்கை வேள்வி படலம் 488)

அகம்பன், நிகும்பன், கும்பன், மகோதரன், ஆகியோரும் வரம் பெற்றவர்கள் என்பதை இலங்கை வேள்விப்படலம் பாடலின்படி அறிய முடிகிறது.

வாலி பெற்ற வரம்
வாலியின் எதிரில் யார் நின்று போர்செய்தாலும், அவர்கள் பெற்றுள்ள நல்ல வரங்களும், வலிமைகளுமாக உள்ளவற்றில் தன்னையேச் சரிபாதி வலிமை சேரும் என்ற வரத்தைப் பெற்றுள்ளான்.

"பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில்" (வாலி வதைப் படலம் 255)

வாலி வரம் பெற்ற செய்தி, வாலி வதைப்படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.


கைகேயி பெற்ற வரம்

சம்பராசுரனுக்கும், தசரதனுக்கும் நடைபெற்ற போரின் போது, கைகேயி தேரோட்டியாகச் செயல்பட்டாள். வண்டியின் அச்சு முறிந்த போது, தன்னுடைய விரலை வைத்துத் தேரோட்டிச் சென்று, தசரதனை வெற்றி பெறச் செய்தாள். மிகவும் மகிழ்ந்த தசரதன் கைகேயிக்கு இரு வரங்களை அளித்தான். அவ்விரு வரங்களையும் தேவைப்படும்போது, பெற்றுக் கொள்வதாக கைகேயி கூறினாள். இராமரின் பட்டாபிசேகம் அறிவிக்கப்பட்ட போது, அந்த இரு வரங்களில் ஒன்றினால், பரதன் நாடாளவும், சீதையின் கேள்வன் பதிநான்கு வருடங்கள் காடாளவும் வரம் கேட்டாள்.

"ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்" (அயோத்தியா காண்டம்- கைகேயி சூழ் வினைப் படலம் 191)

கைகேயி வரம் பெற்ற செய்தி, கைகேயி சூழ்வினைப்படலத்தில் இடம் பெற்றுள்ளது.

இரணியன் பெற்ற வரம்

பெண்ணினாலும், ஆணினாலும், அலியினாலும், உயிர் உடையவற்றாலும், உயிர் இல்லாதவற்றாலும், அஃறிணைப் பொருட்களாலும், படைக்கலன்களாலும், மந்திரத்தாலும் இறக்க மாட்டான். மண்ணிலும், விண்ணிலும் இறக்க மாட்டான்.

"பெண்ணின் பேரெழில் ஆணினில் அலியினில் பிறிதும்
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான்
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான்
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால்” (இரணியன் வதைப் படலம்143)

திருமால், நான்முகன், சிவனாலும் இறக்கமாட்டான். நீரில், காற்றில், தீயில், மண்ணில் எந்தப் பொருட்களினாலும் இறக்க மாட்டான். தேவர்கள், முனிவர்கள் சாபத்தினாலும் இறக்க மாட்டான். மாளிகை உள்ளேயும், வெளியேயும் இறக்க மாட்டான். தெய்வத்தன்மை வாய்ந்த படைக்கலன்களாலும் இறக்க மாட்டான். நள்ளிரவிலும் இறக்க மாட்டான். பகலிலும் இறக்க மாட்டான். எமதருமனும் அவன் உயிரை எடுக்க மாட்டான். தன்னைப் பெற்ற தந்தையாலும் இறக்க மாட்டான் என்பதே அவன் பெற்ற வரமாகும்.

இரணியன் வரம் பெற்ற செய்தி, இரணியன் வதைப் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.

தசரதனுக்குக் கிடைத்த சாபம்

தசரதன் வேட்டையாட விருப்பம் கொண்டு, காட்டிற்குச் சென்றான். யானை, சிங்கங்களைத் தேடி அலைந்த போது, ஓரிடத்தில் யானை நீர் அருந்தும் சத்தம் கேட்க, அவ்விடத்திற்கு அம்பைச் செலுத்தினான். சலபோசன முனிவர்க்கும், அவர் மனைவிக்கும் கண் தெரியாததால் அவர் மகன் சுரோசணன் அவர்களைப் பாதுகாத்து வந்தான். அப்பெற்றோர்களுக்கு தாகம் தீர்ப்பதற்காகத் தண்ணீர் எடுத்துவர வந்த சுரோசணன் மேல் அம்பு பட, குரல் கேட்ட தசரதன் பதறிப் போய் அக்குரல் கேட்ட இடத்திற்கு ஓடி வர, மரண வேதனையில் தவித்த சுரோசணன், அனைத்து விபரங்களையும் கூறி, பெற்றோர்களுக்குத் தண்ணீர் கொடுத்து விடுங்கள்” என்று கூறி உயிர் விட்டான்.

தண்ணீருடன் சென்ற தசரதனை விசாரித்தப் பெற்றோர், "மனம் உடைந்து, நாங்கள் இப்போதே விண்ணுலகம் செல்கிறோம். நீயும் உன் மகன் உன்னை விட்டுப் பிரிய விண்ணுலகம் அடைவாயாக" என்று சாபமிட்டனர்.

இந்தச் சாப வரலாறு இராமன் காடு சென்றதால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தால், தசரதன் கோசலையிடம் கூறும் இடத்தில் அமைந்துள்ளது.

"விண்ணின் தலை சேருதும் யாம் எம்போல் விடலை பிரிய
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா” (அயோத்தியாகாண்டம் - நகர்நீங்குபடலம் 377)

இராவணனுக்குக் கிடைத்த சாபம்

1. வேதவதி தந்த சாபம்

2. நந்திதேவர் தந்த சாபம்.

3. பிரம்மன் தந்த சாபம்


வேதவதி தந்த சாபம்

வேதவதி குசத்துவ முனிவரின் புதல்வி. முனிவர் வேதம் ஓதிக் கொண்டிருக்கும் சமயத்தில், குழந்தை பிறந்ததால் அவளுக்கு ‘வேதவதி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அவள் வளர்ந்து பருவமடைந்த போது, அவள் அழகில் மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்து கொள்ள விரும்பினர். ஆனால், முனிவர் தன் மகளுக்குத் திருமால்தான் தகுந்த வரன் என்று எண்ணினார். அவளை மணந்து கொள்ள விரும்பி 'சம்பு' என்ற அரக்கன் முன் வந்து விருப்பத்தைச் சொல்ல, முனிவர் மறுக்க, அரக்கன் முனிவரைக் கொன்றான், அவர் மனைவியும் இறந்தார். தந்தையின் விருப்பப்படியேத் திருமாலையே மணக்க வேதவதி தவம் இருந்தாள். அவளைக் கண்ட இராவணன், அவளை மணக்க ஆசைப்பட, அவள் மறுக்க அவளை வலியத் தீண்டினான். அதனால் சினமடைந்த வேதவதி, "பிரம்மன் அளித்த வரத்தின் பலத்தால் ஆணவத்தோடு நீ என்னைத் தீண்டியதால் உன்னைக் குலத்தோடு அழிக்க, நான் மீண்டும் பிறந்து வருவேன். உன் மரணத்துக்குக் காரணமான நோயாக நானே ஆவேன்” என்று சொல்லிவிட்டுத் தீயில் பாய்ந்து உயிரை விட்டுவிட்டாள்.

"தீயிடைக் குளித்தவத் தெய்வக் கற்பினால்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ" (இராவணன் மந்திரப் படலம் 92)

இந்தச் சாப வரலாறு விபீடணன், இராவணனுக்கு அறிவுரைக் கூறும் போது இடம் பெற்றிருக்கிறது.

நந்தி தேவர் தந்த சாபம்

இராவணன், தேவரை வருத்துதலைக் கேட்ட குபேரன், சகோதரன் என்ற உரிமையைப் பற்றி, "நான் தவத்தால் சிவபெருமானிடம் தோழமைப் பெற்றேன். நீ தேவரை வருத்தாதே" என்று தூதனிடம் சொல்லி அனுப்ப, அத்தூதனை வெட்டி எறிந்து, குபேரனுடன் யுத்தம் செய்யப் போய், மணிபந்திரனைக் கொலை செய்து, குபேரனை அடித்து, அவனிடம் இருந்த புஷ்பக விமானத்தைப் பிடுங்கிக் கொண்டு, அந்த விமானத்தில் ஏறி சரவணத்தருகல் வருகையில் விமானம் நின்றிட, நந்திதேவன், இராவணனைப் பார்த்து, "இது சிவபெருமானின் இருக்கை நீ போகல் தகாது" என்று கூறினார். இதற்கு இராவணன் நந்திதேவரைக் கண்டு, "குரங்கு முகன்" என்று பரிகசிக்க, நந்திதேவர் கோபம் கொண்டு, "உன் பட்டணம் குரங்கால் அழிக" என்று சாபமிட்டார்.

"நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூல வான் குரங்கால் குறுகும் கோள் அது” (இராவணன் மந்திரப் படலம் 91)

இந்தச் சாப வரலாறு, விபீஷணன் இராவணனுக்கு அறிவுரை கூறுமிடத்தில் இடம் பெற்றிருக்கிறது.

பிரம்மன் தந்த சாபம்

படைப்பின் தலைவனான பிரம்மதேவன், இராவணனிடம், “உன்னைக் கூடும் விருப்பமற்ற பெண்களின் உடலை நீ வலியத் தொடுவாயானால் அக்குற்றத்திற்காக, தெய்வத்தன்மைப் பொருந்திய உன் பத்துத் தலைகளும் மீண்டும் முளைக்கமுடியாதபடி நிலத்தில் சிதறி விழும்” என்று சாபமிட்டார்.

"மேவு சிந்தைஇல் மாதரை மெய் தொடின்
தேமேவுவன் தலைசிந்துக நீ என" (சுந்தரகாண்டம்- சூளாமணி படலம் 625)

இந்தச் சாப வரலாறு சூளாமணி படலத்தில் இடம் பெற்றுள்ளது.


அகலிகைக்குக் கிடைத்த சாபம்

கௌதம முனிவரின் மனைவி அகலிகை மிகுந்த அழகுடையவள். தேவர்களின் தலைவனான இந்திரன், இவள் மேல் ஆசை கொண்டு, முனிவர் இல்லாத நேரத்தில் முனிவரின் ஆசிரமத்திற்கு, அந்த முனிவர் வடிவில் வந்தான். வந்திருப்பவன் தன் கணவன் அல்ல, இந்திரன் என்று தெரிந்திருந்தும், அகலிகை இந்திரனுடன் சேர்ந்தாள். முனிவர் ஆசிரமம் வர, இந்திரன் பூனை வடிவில் வெளியேற, அனைத்தையும் தெரிந்து கொண்ட முனிவர், அகலிகையைக் கல்லாகும்படி சாபமிட்டார். இந்திரனுக்குப் பெண்களின் அடையாளமாக உள்ள பெண்குறிகள் ஆயிரம் உன் உடம்பில் தோன்றும் என்றும் சாபமிட்டார்.

"ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினான் அவைஎலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம்" (பாலகாண்டம் - அகலிகைப் படலம் 478)

இந்த சாபவரலாறு பாலகாண்டம் அகலிகைப்படலத்தில் விசுவாமித்திரர் இராமனிடம் கூறுமிடத்தில் உள்ளது.

கவந்தனுக்குக் கிடைத்த சாபம்

'தனு' என்னும் பெயரையுடைய ஒரு கவந்தன், 'ஸ்தூலசிரஸ்' என்னும் முனிவரது சாபத்தால் அரக்கப் பிறப்பை அடைந்தான். தங்கள் கரத்தால் சாபநிவிர்த்தி பெற்றேன் என்று கூறுகிறான். ஆரண்யகாண்டத்தில் இராமனும், இலக்குவணனும் சீதையைத் தேடிக் கொண்டு வரும்போது, கவந்தன் அவர்களுடன் போரிடுவான். அப்போது, கவந்தன் சாபம் பெற்ற வரலாறு கூறப்பட்டுள்ளது.

"சந்தப்பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர்
கந்தர்ப்பன் சாபத்தால் இக் கடைப்படு பிறவி கண்டேன்" (ஆரண்யகாண்டம்- கவந்தன் படலம் 1177)

விராதனுக்குக் கிடைத்த சாபம்

'தும்புரு' என்னும் பெயரை உடையவன் குபேரனுக்குரிய வானுலகத்தில் வாழ்பவன். ரம்பை மேல் வேட்கைக் கொண்டு, அவளிடம் ஊடல் கொண்டு, கூடலும் கொண்டு அவளை அடைந்ததால், குபேரன், விராதனுக்கு அரக்கவடிவம் பெற சாபமிட்டான். உன்னுடைய திருவடி தீண்டப் பெற்றதால் நான் சாப விமோட்சம் பெற்றேன் என விராதன் இராமனிடம் கூறினான்.

"கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்க மைந்தன் ஆயினேன்” (ஆரண்ய காண்டம்-விராதன் வதைப் படலம் 65)

இது ஆரண்ய காண்டத்தில் இராமன், சீதை, இலக்குவணனுடன் வர, விராதன் அவர்களுடன் போரிட்டான். அப்போது இந்தச் சாபவரலாறு கூறப்பட்டுள்ளது.

வாலிக்குக் கிடைத்த சாபம்

வாலிக்கும், துந்துபி என்ற அரக்கனுக்கும் இடையே போர் நடைபெற்றது. வாலி துந்துபியைக் கொன்று, அவனை இழுத்து வீசி எறிந்தான். அப்போது அவ்வசுரனின் உயிர், மேல் உலகத்துக்குச் செல்ல, உடல் இம்மண்ணுலகத்தில் விழுந்தது. முடை நாற்றத்தையுடைய துந்துபியின் உடல் வானத்தின் உச்சியைத் தாக்கி அங்கு படிந்துப் பின், உருசிய மலையை அடைந்தது. அங்கிருந்த ‘மதங்க முனிவர்’, ”பிணத்தை எறிந்து ஆசிரமத்தைத் தூய்மைக் கெடச் செய்தவன் இங்கு வரின், அவன் தலை வெடித்து இறப்பான்” என்று வாலிக்குச் சாபமிட்டார்.

"கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான்
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின்” ( துந்துபிப் படலம் 191)

வாலிக்கு மதங்க முனிவர் சாபமிட்ட வரலாறு கிட்கிந்தா காண்டம் துந்துபிப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.


சுயம்பிரபைக்குக் கிடைத்த சாபம்

‘மயன்’ என்ற அசுரன் தேவப்பெண்களுள் ஒருத்தியின் இன்பத்தை விரும்பினான். அந்த அழகிய தேவமாது என் உயிர் போன்ற தோழி. அந்த அசுரன் என்னை மன்றாடிக் கேட்டதால், நான் அவளைத் தேவ உலகிலிருந்து இந்துருட்ச பிலத்தில் சேர்க்க, இருவரும் இங்கு தங்க, இந்திரன் சினந்து விபரம் தெரிந்து கொள்ள, “நீ இந்த நகரிலேயே தங்குக என்றும், நகரத்தைக் காக்கும் வேலை உன்னுடையது என்றும் கூறி சாபமிட, இராமனால் அனுப்பப்படும் வானரர்கள் இங்கு வந்தால், அப்போது உன் துன்பம் நீங்கும்" என்றார்.

"வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான்" (கிட்கிந்தா காண்டம்- பிலம் புக்கு நீங்கு படலம் 873)

இந்த சுயம்பிரபை சாபவரலாறு கிட்கிந்தா காண்டம் பிலம்புக்கு நீங்கு படலத்தில் இடம் பெற்றுள்ளது.

இலங்காதேவி தன் வரலாறு கூறுதல்

அனுமன் இலங்கை சென்று ஊருக்குள் நுழையும் போது, இலங்காதேவி அவனைத் தடுத்துச் சண்டையிட்டாள். அனுமன் அவளை அடித்துக் கீழே தள்ளிய போது, இலங்காதேவி, "இந்த இலங்கை நகரை நான் எவ்வளவு காலம் காப்பேன் என்று பிரம்மனிடம் வினவிய போது, மிக்க வலிமை பெற்ற ஒரு குரங்கு கையினால் உன்னை அடித்து வருத்தும் போது, நீ இலங்கையை விட்டு வந்து என்னைக் காண்பாய், அதற்குப் பின், இலங்கை அழிவது உறுதி" என்று பிரம்மன் உரைத்ததை அனுமனிடன் கூறிவிட்டுச் சென்றாள்.

"கைத்தலம் அதனால் தீண்டிக் காய்ந்த அன்று என்னைக் காண்டி
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான்" (சுந்தர காண்டம்- ஊர்தேடுபடலம் 188)

இக்கதை சுந்தரகாண்டம் ஊர்த்தேடு படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இந்திரன் பெற்ற சாபம்

திருமகளின் பூமாலையை இந்திரனுக்குக் கொடுக்க, அவன் இகழ்ந்ததால் துர்வாசமுனிவர் சாபமிட்டார். இந்தச் சாபத்தினால் இந்திரனின் செல்வம் அனைத்தும் கடலில் மூழ்கி விட, தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்த போது, எழுந்தவற்றுள் சந்திரனும் ஒருவன். அது போலக் கடலில் இருந்து மைநாகமலையும் எழுந்தது.

"பூவால் இடையூறு புகுந்து பொறாதநெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட வேலை குளித்த எல்லாம்" (சுந்தரகாண்டம்- கடல்தாவு படலம் 45)

இந்திரன் பெற்ற சாப வரலாறு சுந்தரகாண்டம் கடல் தாவு படலத்தில் இருக்கிறது.


முடிவுரை

இராவணன் வரங்களாக மூன்றரை கோடி ஆயுட்காலமும், சந்திரஹாசம் வாளையும் பெற்றான். கும்பகர்ணன் தலையைக் கடலுள் மறைத்து விடும்படியான வரத்தை இராமனிடம் பெற்றான். கொம்பன், மகோதரன் ஆகியோர்களும் வரம் பெற்றவர்கள். வாலி எதிரில் யார் நின்றாலும், அவர்கள் அடைந்துள்ள நல்லவர்கள் வலிமை நலமாக உள்ளவற்றில் சரி பாதி வழியில் சேரும் வரம் பெற்றவன். தசரதனிடமிருந்து, கைகேயி பரதன் நாடாளவும், இராமன் பதினான்கு வருடங்கள் வனம் ஏகவும் வரம் வாங்கினாள். பெண்ணாலும், ஆணாலும், அலியினாலும் உயிர் உடையவற்றாலும், உயிர் இல்லாதவர்களாலும், அஃறிணைப் பொருட்களாலும், படைக்கலன்களாலும், மந்திரத்தாலும் இறக்கமாட்டான். மண்ணிலும், விண்ணிலும் இறக்கமாட்டான் என்ற வரம் பெற்றவன் இரணியன். தசரதனுக்குக் கிடைத்த சாபம், இராவணனுக்குக் கிடைத்த சாபம், அகலிகைக்குக் கிடைத்த சாபம், கவந்தனுக்குக் கிடைத்த சாபம், விராதனுக்குக் கிடைத்த சாபம், வாலிக்குக் கிடைத்த சாபம், சுயம்பிரபைக்குக் கிடைத்த சாபம், இலங்காதேவி தன் வரலாறு கூறுதல், இந்திரனுக்குக் கிடைத்த சாபம் ஆகிய சாபங்கள் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளன.

துணை நூற்பட்டியல்

1. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் (தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8), வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p285.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License