இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சிலப்பதிகாரத்தில் நாட்டார் வழக்காற்று விழுமியங்கள்

ஆ. பி. ஜெபென்ஸி
இளமுனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வு மையம்,
இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,.
நெய்யூர் - 629802, கன்னியாகுமரி மாவட்டம்.


முன்னுரை

சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்திகளைப் போலவே தமிழகத்தில் காலங்காலமாக வழங்கி வரும் வாய்மொழி வழக்காறுகளாகிய நாட்டார் வழக்காறுகளில் நாட்டுபுறச் செய்திகள் காணப்படுகின்றன. எழுத்திலக்கியம் தோன்றுவதற்கு முன்பே, வாய்மொழிப் பாடல்கள் தோன்றின. எனவே, இலக்கியத்தில் காணப்படும் நாட்டார் செய்திகளுக்கு வாய்மொழிப் பாடல்களேத் தாயாக இருக்கக் கூடும் என்ற கருத்தினை அறிந்து கொள்ள முடிகிறது. காப்பிய இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் நாட்டார் வழக்காறுகள் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் நாட்டார் வழக்காற்று விழுமியங்கள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படவுள்ளது.

சிலப்பதிகாரம்

சிலப்பத்திகாரதின் ஆசிரியர் இளங்கோவடிகள். இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர். சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையான காப்பியமாகும். இது கி.பி 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது 5001அடிகளையும், 3காண்டங்களையும், 30காதைகளையும் கொண்டுள்ளது.

நாட்டார் வழக்காறு

நாகரீகம் வாய்ந்த மக்களின் மரபுவழி வந்த படைப்புகளும், நாகரீகமற்ற பழங்குடி மக்களின் மரபுவழிப் படைப்புகளும் நாட்டார்வழக்காற்றியலாகும். “எழுத்து வழக்கற்ற வாய்மொழி சார்ந்த பண்பாட்டில் எல்லாமே நாட்டார் வழக்காற்றியலாகும்” என்கிறார் பி.ஏ. போட்கின். (நாட்.வழக்காற். ப. 31)

நாட்டார்வழக்காற்றில் ஒரு சமூக அறிவியலாகவும், இலக்கியப்புலமாகவும் கருதப்படுகிறது. நாட்டார் வழக்காற்றியல் நாட்டாரைப் பற்றிய சமூக அறிவியலாகும். நாட்டார் வழக்காறுகள் மொழி சார்ந்த சமூக நடத்தைகளின் வாய்மொழி வெளிப்பாடுகள் என்ற முறையில், சமுதாய மொழியியல் சார்ந்த பொருண்மையியல், பேச்சுவினையியல், பயன் வழியியல் கோட்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையது.


விழுமியங்கள்

விழுமியங்கள்என்றால் ‘மதிப்பீடு’ என்றுபொருள் எனத் தமிழ் அகராதி கூறுகிறது. மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது. தனி மனித விழுமியங்கள் தனி மனிதருடைய வாழ்வை ஒருங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப்பகின்றனவோ, அவை பண்பாட்டு விழுமியங்கள் எனலாம். ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தில் நாட்டார் வழக்காற்று விழுமியங்கள்

நாட்டார் வழக்காற்றில் சிலப்பதிகாரம் சங்க இலக்கியத்திற்கு அடுத்த நிலையில் இசை பரந்து காணப்படும் காப்பியமாகும். நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப்பாடலை மையமாகக் கொண்டே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியிருக்க வேண்டும் என்ற கருத்து தமிழறிஞர்களிடம் காணப்படுகிறது.

நாட்டுப்புறப்பாடல்களில் முதன்மை பெறுகிற காதல் கருப்பொருளேச் சங்க இலக்கிய ஐந்திணை அகப்பொருளும் அமையப் பெறுகிறது. இக்கருத்து சிலப்பதிகாரத்தில் வரும் ‘கானல் வரி’காதை, ‘வேட்டுவவரி’காதை,‘ ஆய்ச்சியர்குரவை’, ‘குன்ற குரவை’ ஆகிய காதைகள் நாட்டார் மரபில் வரும் இசையோடு மக்களின் வாழ்வியல் வழக்காறுகளை மையப்படுத்துகின்றன.


உழவுத்தொழில்

தெய்வத்தின் தொழில் என்று உயர்வாகக் கூறப்படுவது உழவுத் தொழிலாகும். தமிழர்களின் அடையாளமாக விளங்குவது உழவுத் தொழிலாகும்.

சிலப்பதிகாரம் கானல்வரி காதையில் உழவுத்தொழிலின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது. உழவுத்தொழிலின் போது உழவரின் ஏரின் ஓசையும், வயல் வரப்புகளை உடைத்து ஓடுகின்ற நீரின் ஓசையும், புதுப்புனல் விழாக்கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சியால் ஏற்படும் ஓசையும் காணப்பட்டது. வீரமறவர்களின் போர் முழக்கத்தினை உடையது சோழனது சிறப்பாகும். நாட்டாரின் முக்கியமான தொழில்களில் ஒன்றான ‘உழவுத்தொழில்’ பற்றிக் கூறப்பட்டுள்ளது. நாட்டாரின் உழவுத் தொழிலில் உழவரின் ஏரின் சிறப்பும், நீர் வரத்து மிகுதியால் ஏற்படும் வரப்புகளின் நிலையும் ‘கானல்வரி’ காதை மூலம் இளங்கோவடிகள் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

“உழவ ரோதை மதமோதை
ஊடை நீரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழிகாவோரி
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவரி” (சில.கான. காதை. 7:17-24)

கூத்துக் கலை

சிலப்பதிகாரம் வேட்டுவவரி காதையில் கூத்தின் சிறப்பைக் கூறும்போது, கொன்றையும், துளவமும் சேரத்தொடுத்த மாலையைத் தோளின் மேல் போட்டு அமரரின் பொருட்டாக குமரிக் கோலத்தோடு கொற்றவையாகிய நீ ‘மரக்கால் கூத்து’ ஆடுவதிலும், கொற்றவை அந்நாளில் ஈடுபட்டாய் என்று அறிய முடிகிறது. நாட்டாரின் பொழுதுபோக்கு கலையான ‘கூத்து’ இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. ‘கூத்து’ வகைகளில் ஒன்றான ‘மரக்கால் கூத்து’ பற்றிக் கூறப்பட்டுள்ளது.

“ஆங்கு,
கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மேல் இட்டாங்கு
அசுரர் வாட அமரர்க்கு ஆடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே” (சில.வேட்.காதை:12:10)

கொற்றவை வழிபாடு

கொற்றவை என்னும் வேட்டை தெய்வ வழிபாடு சங்க காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. கொல்+தவ்வை = கொல்லுதலை அதாவது வேட்டையாடுதலை தொழிலாகக் கொண்டவள். காட்டு விலங்குகளையும் வேட்டுவர்களையும் காக்கும் தெய்வம் கொற்றவையாகும். சிலப்பதிகாரம் வேட்டுவவரி காதையில் கொற்றவை குறித்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.

கொற்றவைக்கு பலிக்கொடை கொடுத்து விட்டு, பலியினை ஏற்றுக்கொள்ளும் படியாக எயினர்கள் கொற்றவையை வேண்டுகின்றனர். நாட்டாரின் தெய்வ வழிபாடுகளில் கொற்றவை வழிபாடும் ஒன்றாகும். கொற்றவை வழிபாட்டையும், கொற்றவைக்குப் பலி கொடுக்கும் நிகழ்வினையும் பலியினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் வேட்டுவவரி காதை சிறப்பாக எடுத்துரைக்கிறது.

“பொருள்கொண்டு புண்செயின் அல்லதை யார்க்கும்
அருள் இல் எயினர் இடுகடன் உண்குவாய்
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்” (சில.வேட்.காதை:12:22)

தீய நிமித்தம்

ஆயர் சேரியில் பல தீய நிமித்தங்கள் தோன்றின. முதல் நாளில் உறியில் வைத்திருந்த வெண்ணெய் உறையாமையும், துள்ளி விளையாடும் ஆட்டுக்குட்டிகள் அசையாமல் சோர்ந்து கிடந்தன. இதனால் தீமை உண்டு என்று அஞ்சுவர். ஒரு நல்ல காரியத்தை எதிர்நோக்கும் போது, நிமித்தம் பார்ப்பது நாட்டார் நம்பிக்கைகளில் ஒன்றாகும். நிமித்தம் பார்க்கும் போது நல்ல நிமித்தம் நடந்தால் செல்லும் காரியமும் நல்லதாக நடக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்பட்டதை,

“உறிநறு வெண்ணெய் உருகர் உருகும்
மறிதெறித்து ஆடர் வருவது ஒன்று உண்டு” (சில.ஆய்.குரவை:17:2)

எனும் இப்பாடல் வரி விளக்குகிறது.

குரவை கூத்தாடுதல்

தீய நிமித்தங்களைப் போக்குவதற்கு ஆயர் குல மகளிர் குரவை கூத்தாடி தெய்வத்தைப் போற்றியதை,

“கோத்த குரவையுள் எத்திய தெய்வம்நம்
ஆத்தலைப் பட்ட துயர் தீர்க்க வேந்தர்” (சில.ஆய்.குரவை:17:15)

எனும் பாடல் வரி விளக்குகிறது. ஆயர் குல மகளிர் ஆடிய குரவையில் தெய்வம் தம் பசுக்களுக்கு நேர்ந்த துயரங்களை நீக்கும் என்றும், தீய நிமித்தங்கள் நீங்கி நன்மையானது நடக்கும் என்றும் நம்பினர். தீய நிமித்தத்தை நீக்க நாட்டார் தெய்வத்தை வழிபடும் பண்பும், குரவை கூத்தாடும் நிகழ்வும் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் எடுத்தாளப்பட்டுள்ளது.


கண்ணகியை வழிபடுதல்

பெண் தெய்வ வழிபாடு என்பது சிறப்பு பெற்ற வழிபாட்டு முறையாகும். சிலப்பதிகாரம் குன்ற குரவையிலும் இடம் பெற்றுள்ளது. குன்ற குரவையில் குறவர் குடியினர், கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

“என்றலும் இறைஞ்சி அஞ்சி
இணை வளைக்கை எதிர்கூப்பி
நின்ற எல்லையுள் வானவரும்
நெடுமாரி மலர் பொழிந்து
இவள் போலும் நல்குலக்கோர்
இருந் தெய்வம் இல்லை ஆதலின்” (சில.குன்;.குரவை:24:2)

குறவர் குடியினர் கண்ணகியைப் பணிந்து கைக்கூப்பித் தொழுதனர். அந்நேரத்தில் வானவர்கள் மலர்வாரி சொரிந்து கண்ணகியைக் கணவரோடு தேவர்கள் வானுலகம் கொண்டு சென்றனர். குறவர் மகளிர் வியப்பிலே ஆழ்ந்தனர். ‘இவள் போன்ற பெரிய தெய்வம் யாதும் இதுவரை நம் குலத்துக்குக் கிடையாது’ என்று கண்ணகி தெய்வத்திற்கு வழிபாடு செய்ய ஊராரை அழைத்தனர். நாட்டார் வழக்காற்றில் சிறுதெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு முறையாகும். இதற்குச் சான்றாக கண்ணகி தெய்வ வழிபாடு அமைந்துள்ளது.

முடிவுரை

சிலப்பதிகாரம் கானல்வரி காதை உழவுத் தொழிலின் சிறப்பினையும், வேட்டுவவரி காதை மரக்கால் கூத்தினையும், கொற்றவைக்கு பலிக்கொடை அளிக்கும் நிகழ்வினையும், ஆய்ச்சியர் குரவை தீய நிமித்தங்கள் பற்றியும், தீய நிமித்தங்களைப் போக்க கடவுளை வழிபடும் நிகழ்வினையும், குன்றக் குரவை பெண் தெய்வ வழிபாட்டையும் எடுத்துரைக்கின்றன. இக்கருத்துக்கள் நாட்டார் வழக்காற்று விழுமியங்களுடன் ஒத்துப்போவதை இதன் மூலம் அறிய முடிகிறது.

பயன்பட்ட நூல்கள்

1. முனைவர் பாக்கிய மேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, முதல் பதிப்பு: ஜூலை2008.

2. தே. லூர்து, நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள், முதல் பதிப்பு:1997.

3. புலியூர்க்கேசிகள், சிலப்பதிகாரம், முதல் பதிப்பு: ஜூன்1958.

4. ஜெ. ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம், முதல் பதிப்பு:1987.

5. க்ரியா, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, முதல் பதிப்பு: ஜனவரி 1992.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p291.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License