இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியங்களில் மடலேறுதல்

முனைவர் செ. சுதா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர்..


பண்டைத் தமிழர்கள் செம்மாந்த வாழ்வினை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் வாழ்க்கை திட்டமிட்ட கட்டமைப்பை உடையதாக இருந்தது. அவர்கள் தாம் வாழ்ந்த சமுதாயம் போற்றிக் காத்து வந்த மரபுகளை போற்றிக் காப்பவர்கள் ஆகவும், தம் முன்னோர் கற்றுக் கொடுத்த பழக்க வழக்கங்களை போற்றுபவர்கள் ஆகவும் இருந்தனர். இத்தகையச் சிறப்புகளுக்கு எல்லாம் அவர்களின் மரபே காரணமாக அமைந்தது.

பழக்கம், வழக்கம், மரபு எனும் மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க இயலாதவை. எளிதில் மாற்ற முடியாதவை. எனவே “பழக்கம் என்பது தனி மனிதனைச் சார்ந்தது என்றும், வழக்கம் என்பது சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு என்பது சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்” (1). அவ்வகையில் பழக்கம் வழக்கமாகி நிலைபெற்ற மடல் ஏறுதல் குறித்து சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கேக் காணலாம்.

மடலேறுதல் என்பது ஆடவன் ஒருவன், தான் விரும்பியப் பெண்ணை மணம் செய்வதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்று. காதல் கைகூடுமோ இல்லை, கைவிட்டுப் போகுமோ என்ற அச்சத்தில், ஆண்மகன் தன் காதலை ஊரார்களின் முன்னிலையில் தெரியப்படுத்துதல் அல்லது தன் காதலை உணர்த்தல் மடல் என்பதன் பொருளாகும்.

சங்க இலக்கியங்களில் குறிஞ்சித்திணைப் பாடல்களிலும், நெய்தல் திணைப் பாடல்களிலும் மடலேறுதல் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. ஆடவன் ஒருவன் தன் மனதில் நினைத்தப் பெண்ணை மணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் வேட்கையின் அடிப்படையில் தன் நாணத்தை விட்டு மேற்கொள்ளும் மடலேறும் நிகழ்வு பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொல்காப்பியர் மடலேறுதலுக்கான சூழலை,

“ஏறிய மடல் திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (2)

என்னும் சூத்திரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார். இச்சூத்திரத்திற்கு விளக்கம் கூறும் தமிழண்ணல், “உலகில் பெரிதும் காணப்படுவன, அளவான் அமையாது மிகுதிப்படும் காம உணர்வு நிலைகளேயாகும். தலைவியைத் தமர் தர மறுக்கும் நிலையிலும் இது நிகழும். பனங்கருக்காற் செய்த குதிரை வடிவான ஒன்றில், தலைவி படமும் பெயரும் எழுதிய ஒன்றை வைத்துக் கொண்டு எருக்கம் மாலை முதலியன அணிந்து, அதன் மேல் ஏறி ஊர்வது, ரத்தம் கசிய உயிர் விடுவதாகும். மடலேறுவேன் என வாயால் அச்சுறுத்துவது அன்பின் ஐந்திணையுள் அடங்கும். அல்லாமல் மடலேறிவிடுவதில் முடியுமாயின், அது பெருந்திணையின் பாற்படும். இருவரும் இளமைக் காலமெல்லாம் பிரிந்திருக்க நேர்ந்து காலமெல்லாம் வீணேக் கழிவது இளமை தீர்திறம். தேறுதல் சொல்லிச் சொல்லித் தெளிவிக்க முடியாது பெருகிய காமத்தால் வருந்துவது. அடுத்தது, ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்னும் நிலை பறவை ,விலங்குகளைப் பார்த்துப் பேசுதலும், தனக்குத்தானேப் பேசிக்கொள்ளுதலுமாகிய நிலை இது” (3) என்று மேற்கொண்ட சூத்திரத்திற்குத் தரும் விளக்கம், மடல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது. கிடைக்காத இன்பத்தைப் பெற நினைத்தல், காலத்தால் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனதற்கான இரங்கி வருத்தம் கொள்ளல், இன்பம் நிறைவேறாத இடத்துப் புலம்புதல் என்னும் களங்களில் மடலில் பங்களிப்பு நிகழ்ந்ததை அறியமுடிகிறது .

மடல் என்பதற்கு, க. காந்தி தரும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. “ஓர் ஆடவன் ஒரு பெண்ணைக் களவுடனோ அல்லது களவின்றியோ அடைய மேற்கொள்ளும் வழிமுறையே மடலேறுதல் எனப்படும். தன் காதலின் திண்மையினைத் தலைவன் தன்னை வருத்திக் கொள்வதன் வாயிலாகப் பிறர்க்கு அறிவித்து ஊராரது அனுதாபத்துக்காளாகி அவர்களின் வாயிலாகத் தனது காதலை முற்றுவிக்கக் கையாளும் உத்தியாகவேத் தென்படுகிறது” (4)

மடலேறுதல் தன் எண்ணம் கைகூடாத நிலையில் நிகழ்கின்ற செயல் ஆதலால், மடலேறுதல் நாணம் துறந்த நிலையிலேயே நடைபெறும் என்பதைத் தொல்காப்பியம் தெளிவுபடுத்துகிறது.

“அச்சமும் நாணும் மடறும் முந்துறுதல்
நிச்சமும் பொற்குரிய என்ப” (5)

பெண் அச்சம், நாணம், மடம் என்னும் பண்புகளைத் தனக்குரிய காப்பாகக் கொண்டவள். தன் குணத்தைப் பொதிந்து காட்டும் இயல்புடையவள். அதனால், பெண் மடலேறுதல் இல்லை. ஆனால் ஆண்மகன் தன் மனத்தில் மூண்ட காமத்தின் காரணமாகத் தலைவியை அடையப் பெறாத மனநிலையில் மடலேறுதலாகிய செயலை நிகழ்த்தற்கு மனம் கொள்கிறான். அதன் முதல்நிலை நாணம் துறத்தலாகும். மடலேறுதல் இழிவு என்றேக் கருதப்பட்டது. தலைவியை நினைத்து மிகுதியான காதலால் துன்புறுதல் தலைவனுக்கு உரியதே அன்றித் தலைவிக்கு இல்லை. தலைவி, காமம் மிக்க கழிபடர் கிளவியில் பேசுதல் மட்டுமே உண்டு.

“எத்திணை மருங்கினும் மகடூ உ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான” (6)

- இச்சூத்திரம், பெண்கள் மடலேறாப் பெருந்தக்க நிலையினை அறிதற்குச் சான்றாக விளங்குகிறது. தலைவன் தன் காதல் கைகூடாத நிலையில் சிறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை,

“வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கி” (7)

என்னும் அகப்பாடல் தெளிவுபடுத்துகிறது.


மடலேறுதல் குறித்து, “காமம் மிக்க தலைவன் பனை மடலால் குதிரையைப் போல் ஓர் உருவம் அமைத்து, அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும், தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையிலேந்தி அதன் மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடலேறுதல் என்பர். அங்ஙனம் அவன் வருவதைக் கண்ட ஊரினர், இன்னவரைக்கும் இவனுக்கும் நட்பு உண்டு என்பதை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர். அது கேட்டுத் தமர் மணம் புரிவிப்பர். மடலேறும் தலைவன் சூடும் தன்மையில்லாத எருக்கமாலை, ஆவிரம்பூ மாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கமென்று தெரிகிறது” (8) என்னும் உ. வே. சாமிநாதையரின் கருத்து மடல் ஏறுவானின் சூழல் மற்றும் தோற்றத்தைத் தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.

தான் விரும்பிய பெண்ணுக்காக மடல் ஏறுதற்கான சூழல் இலக்கிய வழக்காகவே பெரும்பான்மையும் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றிலும் மடல் குறித்த குறிப்புகள் உள்ளன. ஆண்கள் ஏறிச்செல்லுதற்கான மடல் என்னும் குதிரை, பெண்ணை எனும் பனை மடலால் செய்யப்படுவதாகும். பெண்ணை என்பது கூந்தல் பனையைக் குறிக்கும். நற்றிணை மடலை நன்மா என்னும் பெண்ணை மடல் என்றும் குறிப்பிடுகிறது. இதனை,

“சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குவிமுகி ழெருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி” (9)

“வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல்லே முருவலெனப் பல்லூர் திரிதரு
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே” (10)

என்னும் சான்றுகள் தெளிவாக்கும். குறுந்தொகை மடலை பெண்ணை மாமடல் என்றும், பனை படு கலிமா என்றும் குறிப்பிடுகிறது.

“விந்தலைப் பெண்ணை விளையல் மாமடல்” (11)

“ பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனை படு கலிமா” (12)

மடல் ஏறுதல் மனமுறிவின் அடிப்படையிலான நிகழ்வு என்பதால் பிறரின் கவனத்தைக் கவர்ந்து தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதே இங்கு நோக்கமாக அமைகிறது. அதனால், பிறரால் விலக்கப்படும் பொருட்கள் மடலில் கவனிக்கத்தக்கவை ஆகின்றன. மடல் ஏறுபவர்கள் பயன்படுத்தும் மலர்கள் சாதாரணமாக யாரும் பயன் கொள்ளாமல் விலக்கும் மலர்களாகும். அம்மலர்களே மடலேறுதலில் பயன்படுகின்றன. குறிப்பாக, ஆவிரை பூளை, எருக்கு ஆகியன பயன்பட்டன என்பதை இலக்கியச் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. இதனை,

“அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப
ஓங்கிடும் பெண்ணை மடலூர்ந்தென்
எவ்வநோய்” (13)

“மாவென் நுணர்மின் மடலென்று மற்றிவை
பூவல்ல பூளை யுழிங்கையோ டியாத்த
புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி” (14)

“ விழுத்தலைப் பெண்ணை வளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி
வெள்ளென் பணிந்து பிறர் எள்ளத் தோன்றி” (15)

- என்னும் சான்றுகள் வெளிப்படுத்தும். மடலேறுதல் ஆண்மகனைப் பொறுத்தவரை நாணம் துறந்த செயலாகவும், ஊரார்களைப் பொறுத்தவரை இரக்கம் கொள்ளத்தக்க செயலாகவும், விளையாட்டுப் பருவத்தில் உள்ளவர்களுக்குக் கேலிக்குரியதாகவும் அமைந்திருப்பதை இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தலைவன் மடலேறி வரும்போது சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து வந்தமையினை நற்றிணைப் பாடல் எடுத்துக்காட்டுகிறது.

“சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குவிமுகி ழெருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்” (16)

தலைவனின் இரங்கத்தக்க நிலை கண்டு இவனை ஏமாற்றியவர் எவளோ என்னும் மன உணர்வில் தலைவன் மடல் ஊர்ந்து வரும் நிலை, இரங்கத்தக்க அவன் கோலம் ஆகியவற்றைக் கண்டு ஊர் மக்கள் பேசும் நிலையினைக் குறுந்தொகைச் செய்யுள் எடுத்துக்காட்டுகிறது.

“பொன்னே ராவிரை புதுமலர் மிடைந்த
பன்னூன் மாலைப் பனை படு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட்
... ... ... ... ... றவள் பழி நுவலு மிவ்வூர்” (17)

மடல் குறித்துச் சங்கச் செவ்வியல் பனுவல்களில் காணப்படும் செய்திகள் மடல் என்பது தான் விரும்பிய நிலையிலும் , விரும்பாத நிலையிலும் பெண்ணை அடையும் பொருட்டுத் தாமாக நாணம் விட்டுச் செய்யும் செயல் என்பதை அறிய முடிகிறது.


தன் செயல் மூலம் பிறரின் இரக்க உணர்விற்கும், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, நினைத்த பெண்ணை அடைதல் இதன் நோக்கம் என்பதை இலக்கியங்கள் நுட்பமான கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளன. பண்டைக்காலத்தில் சமூகத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகியல் மற்றும் இலக்கிய வழக்காக மடல் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.

அடிக்குறிப்புகள்

1. க .காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், ப .15

2. தமிழண்ணல், தொல்.பொருள் .அகத் .54

3 .தொல்.பொருள். அகத் .997, வரை, ப .309

4. க. காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், ப.16

5. தொல்.பொருள். அகத் .96

6. தொல்.பொருள். அகத் .38

7. அகம்.322 :1-4

8. உ. வே. சாமிநாதையர், குறுந்தொகை, மூலமும் உரையும், ப.42

9 . நற்.220 :1-3

1 0. மேலது ,146 :1-3

1 1. குறுந்.182:1

1 2. மேலது,173-2

1 3. கலி.138 :8-10

1 4. மேலது.139:3-5

1 5 . குறுந். 182:1-3

1 6. நற்.220:1-4

1 7. குறுந். 220 :1-6

துணைநூற் பட்டியல்

1. உ. வே. சாமிநாதையர் (பதி) , குறுந்தொகை, கழகவெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு - 1947

2. உ. வே. சாமிநாதையர் (பதி), நற்றிணை நானூறு, கழக வெளியீடு, சென்னை, ஐந்தாம் பதிப்பு -1976

3. நச்சினார்க்கினியர் உரை - கலித்தொகை, கழக வெளியீடு, சென்னை, ஏழாம் பதிப்பு -1967

4. இராசரத்தினம். கு , சங்க இலக்கியத்தில் பொதுமக்கள், குகன் பதிப்பகம், திருவாரூர், முதற் பதிப்பு - 2004

5. இலக்குவனார். சி, சங்க இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, முதற்பதிப்பு -1966

6. க. காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், புலம் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - 2007

7. சண்முகம்பிள்ளை, சங்கத்தமிழர் வாழ்வியல், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, இரண்டாம் பதிப்பு - 1997

8. தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு -இலக்கிய வகைகள், செல்லப்பா பதிப்பகம், மதுரை, முதற்பதிப்பு - 2005

9. பரமசிவானந்தம். அ மு., சமுதாயமும் பண்பாடும், தமிழ்க் கலைப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு -1962

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p292.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License