இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

காதல் உள்ளம்

முனைவர். வி.தேன்மொழி


“ஆயகலைகள் அறுபத்தி நான்கு” என ஆன்றோர் கூறுவர். பொதுவாகக் கலை என்னும் வரையறைக்குள் இலக்கியமும் உட்பட்டுள்ளது. ஆதி கிரேக்கர்களே “கவிதைக்கலை” (Poetics) என்னும் சொல்லைப் பயன்படுத்தினர் என “இலக்கியக் கலை” என்னும் நூலில் அ. ச. ஞானசம்பந்தன் குறிப்பிடுகின்றார். “உணர்ச்சிகரமான ஓசை நயமுள்ள மொழிகளின் மூலம் உறுதியாகவும் கலைத் தன்மையோடும் வெளிப்படுத்தும் மனித மனமே கவிதை” என்று பிரிட்டானிகா கலைக் களஞ்சியம் கூறுவதை வழி மொழிகிறார் ஹட்சன். “ஒவ்வொரு கோணத்திலும் கவிதை என்பது உணர்ச்சிகளின் மொழி” என்கிறார் வின்செஸ்டர்.

கற்றுத் தீர வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இலக்கியம் கற்பவர்க்கு இல்லை. ஆயினும் அனைத்து மொழிகளிலும் இலக்கியம் தொடந்து இயற்றப்படுகின்றது. கற்கப்படுகின்றது. விமர்சிக்கப்படுகின்றது. இவ்வாறு நடக்கும் தொடர் நிகழ்விற்குத் தன் அனுபவத்தை அல்லது கற்பனையை நயத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என்ற மனித இனத்தின் உந்துதலே காரணம் ஆகும். கற்பவன் இலக்கியப் படைப்புகளைக் கற்கும் போது படைப்பாளன் பெற்ற அனுபவத்தைத் தானும் பெறுகின்றான். படைப்பாளன் கருதியதை விடவும் அதிகமாக அதன் நயத்தினை உணர்ந்து இன்புறுகின்றான். அது மட்டுமல்லாது அப்படைப்பின் இன்பத்தில் தோய்ந்து தன் கவலைகளை மறக்கிறான். ஆகவே கற்பதால் பெறும் பயன் ஒன்றையே இலக்கியம் கற்றல் என்னும் நிகழ்வு சார்ந்துள்ளது எனக் குறிப்பிடலாம். இதனை முருகியல் இன்பம் என்று இலக்கியவாதிகள் குறிப்பிடுகின்றனர்.



பொதுவாகக் காதல் சார்ந்த கவிதைகளே கற்பவரைக் கரைய வைக்கிறது என்பது பொதுவான கருத்து. ஆனாலும் பக்தி சார்ந்த கவிதைகளும் ஆழ்ந்து நோக்குங்கால் உணர்வுப்பூர்வமான நயத்தினை கற்பவருக்கு ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் எழுதிய இறைக்காதலைக் குறிப்பிடலாம். இவரைப் பக்தி இலக்கியம் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று குறிப்பிடுகின்றது. மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று வாழ்ந்தவர் ஆண்டாள். இவருடைய அன்பு முழுவதும் இறைவனையே சார்ந்து, பொங்கித் ததும்பியதனை இவருடைய படைப்புகள் புலப்படுத்துகின்றன. அவர் வடித்த பாடல்களில் ஒன்று.

“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொ சித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே”

- இப்பாடல் காதல் கொண்ட பெண்ணுள்ளம் ஒன்று இறைவனின் இயல்பினைப் பற்றி வெண்சங்கிடம் வினவுவதாய் அமைந்துள்ளது. கருப்பூரத்தின் வாசனையும் இறைவன் சூடிய கமலப்பூவினுடைய வாசனையும் இறைவனுடைய சிவந்த வாயின் இனிமையும் அதன் வாசனையும் எவ்வாறு இருக்கும்? இதனை நான் விருப்பமுடன் கேட்கின்றேன். ஆழ்கடலில் இருந்த வெண்சங்கே நீ இதனைக் கூறுவாயாக! என்று கேட்கிறது இப்பெண்ணுள்ளம். மேலோட்டமாகப் பார்க்கும்போது இத்தகைய பொருளைத் தருவதாய் அமைந்திருந்தாலும் ஆழ்ந்து நோக்குங்கால் அழுத்தமான உணர்வுப் பதிவினைத் தருவதாய் இப்பாடல் அமைந்துள்ளது.



வெண்சங்கினை வினவும் முறை கவிதையின் அழகினை மெருகூட்டுகிறது. மாதவனின் இயல்பினைப் பற்றி அறிந்து கொள்ள மாதவனின் கையில் இருந்த சுதர்சன சக்கரம், துயில் கொள்ளும் பாம்பணை போன்றவைகளைக் கேட்காது சங்கினை வினவுகின்றது ஆண்டாளின் காதல் உள்ளம். இதன் காரணம் என்ன தெரியுமா? பாரதப் போரை முடிக்க சங்கினை எடுத்து ஊதியவன் மாதவன். ஆகவே திருமாலின் வாய்ச்சுவை, வாசனை ஆகியவற்றை பாம்பணையை விடவும் சுதர்சன சக்கரத்தினை விடவும் திருமாலின் வாயை முத்தமிட்ட வெண்சங்கே நன்கறிந்திருக்கும். அதனாலேயே “சொல்லாழி வெண்சங்கே” என வினவுகின்றார். திருமாலின் மீதான ஆண்டாளின் காதல் சங்கினைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

டால்ஸ்டாய் கலையைப் பற்றிக் குறிப்பிடும்போது “கலை என்பது அதனிடத்துப் பழகுகிறவர்களை உணர்வு வலையில் சிக்கச் செய்ய வேண்டும்” என்று ‘கலை என்றால் என்ன?’ (Tolstoy, "What is Art?" -Sec15) என்னும் தம் கட்டுரையில் விளக்கம் தருகின்றார். டால்ஸ்டாயின் இக்கூற்றினை நிறுவுவதாய் அமைந்துள்ளது ஆண்டாளின் பாடல்.

“கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ” என வினவும் தொனியில் தான் அருகில் இருந்து அனுபவிக்காத ஏக்கம் ததும்பி வழிகின்றது. மனிதக் காதலில் மூழ்கித்ததும்பும் உள்ளங்களுக்கிடையே இறையன்பில் ஏங்கித் தவிக்கும் இனிய உணர்வுப் பதிவின் பெட்டகமாக ஆண்டாளின் பாடல் விளங்குகிறது எனின் அது மிகையாகாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p30.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License