இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு

கி. ச. புனிதவதி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,
காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605008.


மற்றும்


முனைவர் வேல். கார்த்திகேயன்
இணைப் பேராசிரியர் & நெறியாளர், தமிழியல் துறை,
காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605008.


முன்னுரை

காலங்கள் மாறினாலும் கருத்து வளத்துடன் வலம் வருபவை சங்க இலக்கியங்கள். அவ்விலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் திணை சார்ந்து எழுதப்பட்டுள்ளன. அதில் கடல் சார்ந்த பகுதியில் நிகழும் தலைவன் தலைவியரின் அன்பொழுக்கங்கள் நெய்தல் திணை எனப்படும். கடலும், சூரியன் சாயுங்காலமும் முதற்பொருட்களாகவும், சுறா, புன்னை, நெய்தல், தாழை, மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் முதலியன கருப்பொருட்களாகவும், தலைவன், தலைவி காதலில் பிரிவால் வாடும் ’இரங்கல்’ உரிப்பொருளாகவும் உள்ளன. சங்க அகப்பாடல்களில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் வெளிப்படும் அழுகை மெய்ப்பாடு உவமை வழி உரிப்பொருள் சிறக்கப் பாடப்பட்டுள்ளதை ஆராய்வதே இக்கட்டுரை.

மெய்ப்பாடு

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (தொல்.பொருள்.மெய்.நூ.251)

என்று தொல்காப்பியர் தம் நூலில் எட்டுவகை மெய்ப்பாடுகளாக நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பனவற்றைக் குறிக்கின்றார்.

அழுகை மெய்ப்பாடு

அழுகை மெய்ப்பாட்டிற்கான நிலைக்களன்களாக இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின் வழித் தோன்றும். இவற்றை;
“இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (தொல்.பொருள்.மெய். நூ.253)

என்று தொல்காப்பியர் சுட்டுகிறார்.


நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு

நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு தலைவி, தலைவன், தோழி முதலிய மூன்று கூற்றுகள் வழி வெளிப்படுகின்றது. தலைவியின் களவு வாழ்க்கையால் இல்லத்தில் காப்பு மிகுதியான போதும், பருவங்கண்டு கூறும் போதும், வரைவிடை ஆற்றாளென வற்புறுத்தும் போதும், சிறைப்புறமாக தலைவன் இருக்கும் போதும், இரவுக்குறி மறுக்கும் போதும், தோழியிடம் வன்புறை மறுக்கும் போதும், காமம்மிக்க கழிபடர் கிளவியிடத்தும், வரைவிடைப் பிரிவில் வருந்திக் கூறும் போதும், நெஞ்சிற்குச் சொல்லும் போதும் நிகழ்கிறது. தலைவன் அல்லகுறிப்பட்டு நெஞ்சிற்குச் சொல்லும் போதும், தோழி கேட்பச் சொல்லும் போதும் வெளிப்படுகிறது. தோழி காப்பு மிகுதியைக் கூறும் போதும், குறைநயப்பிக்கும் போதும், சிறைப்புறமாகக் கூறும் போதும், பிரிவுணர்த்தப்பட்ட போது தலைவிக்குச் சொல்லும் போதும், வரைவு கடாதலின் போதும் தோன்றுகிறது. பரத்தை தலைவனை நொந்து கூறும் போதும் என அழுகை மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

தலைவன் பிரிந்த காலத்தில் நீ ஆற்றியிருத்தல் வேண்டுமென்று கூறும் தோழிக்குத் தலைவி அழிவுற்றுச் சொல்லியது.

“செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லா குதுமே” (குறுந்.290: 4-6)

என்று தலைவி, தோழியிடம் காமநோயைப் பொறுத்து ஆற்ற வேண்டும் என்று வற்புறுத்துவோர், காமத்தின் இயல்பினை அறிந்தது இல்லையோ? அதனைத் தாங்கும் அளவு வன்மையும் கொண்டவரோ என்று கூறுகின்றாள். பிரிந்து சென்றுள்ள எம் தலைவரைக் காணவில்லை என்று கூறியதனால், மிகுந்த துயரத்துடன் இருக்கின்றேன். அத் துயரம் மிக்க வெள்ளத்தில் பாறையின் மேல் மோதும் சிறிய நுரை மெல்ல மெல்ல இல்லாமல் போவதைப் போன்று அமைந்துள்ளது என்கிறாள்.

“நுரை கல்லில் மோதுந்தோறும் சிறிது சிறிதாகக் கரைதலைப் போல தலைவர்
பிரிவை எண்ணுந்தோறும் உயிர் தேய்ந்தொழியு மென்க” (தொல்.பொருள்.கற்பு.6.நச்சர்)

என்று கற்பியலில் தலைவியின் நிலைக்கு இப்பாடலை எடுத்துக் காட்டுகின்றார்.

இங்கு நெய்தற் திணையின் உரிப்பொருள் இரங்கல் என்பது தலைவன் பிரிவில் தலைவியின் உயிர் இழத்தலைப் போன்ற, தன்னிலையில் தாழ்ந்த அசைவு நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதை அளவு உவமத்தின் வழி அறியமுடிகிறது.

இதைப்போன்று, நற்றிணைத் தலைவியும் அறத்தொடு நின்ற பின்பும் பொருள் வழி பிரிந்துள்ள தலைவனை நினைந்து வருந்திய போது பொறுத்திரு என்ற தோழிக்கு, இன்றும் மாலைப் பொழுது வரும் என்செய்வேன் என்று வன்புரை எதிரழிந்து சொல்லுகிறாள்.

“கங்கைஅம் பேர்யாற்றுக் கரைஇறந்து இழிதரும்
சிறைஅடு கடும்புனல் அன்னஎன்
நிறைஅடு காமம் நீந்துமாறே” (நற்.369: 9-11)

கங்கை ஆற்றின் வெள்ளம் கரை கடந்து ஓடிவரும். அணையை உடைத்துச் கொண்டு விரைவான ஓட்டத்தினை உடைய நீர் வெள்ளம் போன்று, என்னுடைய ஒழுக்கத்தை அழித்து வரும் காம வெள்ளத்தை நீந்தும் வினையை அறியவில்லை தோழி, நான் எவ்வாறு பிழைப்பேன் என்று கூறுகின்றாள்.


தலைவன் வினையின் பொருட்டுப் பிரிந்து சென்றுள்ளான். தலைவியின் காமநோயைத் தடுக்க முடியாது தவிக்கும் நிலை உள்ளது. அவன்தான் அக்காம நோய்க்கு மருந்தாகக் கூடியவன்.

இந்நிலையில் காத்திரு என்றெல்லாம் கூறித் தேரேறிச் செல்லும் போது தலைவி மிகுந்த வேதனை அடைகிறாள். கங்கை ஆற்றின் வெள்ளம் போல, என்று சொல்லும் போது, அதன் வேகம் விரைந்து ஓடும் திறம் நீரைக் காக்கும் அணையை உடைத்துக் கொண்டு வருவதைப் போல, தன்னால் தடுக்கவியலாதபடி கங்கையைப் போல காமம் விரைந்து வருகிறது என்ன செய்வேன் என்கிறாள்.

புலவர் தான் உணர்த்த நினைக்கும் உணர்வினை இவ்வுவமை வழி விளக்கிச் சென்றுள்ளார். மேலும் நெய்தல் திணையின் உரிப்பொருளான இரங்கல் நிமித்தம் தலைவியின் ஏக்கம் இவ்வுவமை வழி வெளிப்பட்டுள்ளது. சிறைஅடு கடும்புனல் அன்ன என்ற வினை உவமத்தின் வழி தலைவனை இழத்தல், காமத்தைத் தடுக்கவியலாத தன் நாணத்தை இழத்தல், காத்திரு என்ற தோழியிடம் பொறுமையை இழத்தல் என்று இழத்தல் நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாட்டினை இவ் உவமை வழி அறிய முடிகிறது.

“காமப் பெருக்கின் விடுவிப்பில் உள்ள நிச்சயமின்மை, களவுக் காமத்தை உடலைக் கடந்து மனதோடு சுகிக்க முனையும் விபரீதத்தை உண்டாக்குகின்றது. ஏக்கம், காத்திருத்தலின் துயரம், தாங்க இயலாமை, தவிப்பு, நிச்சயமற்ற தன்மை, தூக்கமில்லாமை, உணவு செல்லாமை, பசலை நோய், புலம்பல் (இரங்கல்), உருகுதல், மெலிதல் என்ற பாடுகளைக் களவுக் காமத்தில் காணலாம்” (ராஜ் கௌதமன், பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள், ப.85)

என்று சங்கப் பாடல்களில் திறனாய்வை மேற்கொள்ளும் பேராசிரியர் தம் நூலில் குறிப்பிடும் கருத்து, காமத்தின் இயல்பினால் ஏற்படும் உள மாற்றத்தினை வெளிப்படுவது மேற்கூறிய பாடல்களுக்குப் பொருந்தி வருகிறது.

இதைப்போன்று, நற்றிணைப் பாடலிலும் தோழி வரைவிடை வைத்துப் பிரியும் தலைவனிடத்துக் கூறிச் செலவழுங்குவிடத்து,

“இனமீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த
வறுநீர் நெய்தல் போல” (நற்.183: 9-10)

மீன்களை மேய்ந்த செருக்கோடு நாரை நீர் வற்றிய குளத்தில் சிறிது சிறிதாக மலர்ந்து வாட்டம் உறுகின்ற நெய்தல் மலரை மிதித்துக் கெடுத்தல் போல, பொருள் ஈட்டும் உள்ளத்தொடு நீண்ட இடைவெளியில் ஒவ்வொரு காலத்தும் நின்னைப் பெற்று ஏனைய காலத்துப் பெறாது வாடியிருக்கும் தலைவியை முற்றும் நீங்கி உயிர் நீங்குதலைப் போன்று செய்கின்றாய் என்று தோழி குறிப்பிடுகின்றாள்.

“கடல் சார்ந்த இடத்தில் நெய்தற் செடி காணப்படுகின்றது. கடலோரங்களில் கழிகளில் நெய்தல் செடி காணப்படுவதாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. ‘இருங்கழி நெய்தல்’ என்று குறுந்தொகைப்பாடல் 36 கூறும். இருங்கழி ஓரத்தில் கழிசேர் மருங்கில் நெய்தல் மலர்வதாகக் கூறப்பட்டிருக்கின்றது. செடிநூலிலும் மேற்குக்கடற்கரையில் கழிகளில் (Backwaters) காணப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது” (பி.எல்.சாமி. சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், ப.55)

இங்கு நெய்தல் மலர் நீரில் வாழக்கூடியது. நெய்தல் திணை எனப் பெயர் பெறுவதற்கு பொருந்துவதாய் கடற்கரையைச் சார்ந்த இடத்தில் வளரும் இயல்புடையது. நீரின்றி வாடியிருக்கும் சூழலில் நாரையானது மீனை உண்ட மகிழ்ச்சியில் நெய்தல் மலரை மிதித்துச் செல்கிறது. நாரையைப் போன்று நீ, மீன் போன்ற பொருள் வேட்கையில் நெய்தல் மலர் போன்ற தலைவியைப் பரிந்து வாடவிடுதல் தகாது என்கிறாள்.

நாரை - தலைவன்

மீன் - பொருள்

வாடிய நெய்தல் மலர் - தலைவி

மலரை நாரை மிதித்தல் - தலைவன் பொருட் பிரிவு

நீர் இருந்தால் நெய்தல் மலர் செழித்திருக்கும். நீர் வற்றிவிட்டதனால் வாடி இருக்கின்றது. அம்மலர் நீரின்றி செழிப்பான நிலையிலிருந்து தாழ்ந்திருத்தலைப் போல, தலைவன் அருகில் இல்லாதிருப்பதினால் செழிப்புடன் இருக்கக்கூடிய தலைவி தன்னிலையில் தாழ்ந்து இருக்கும் சூழலால் அசைவு நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாட்டினைக் கொண்டதாக வெளிப்பட்டுள்ளது. வறுநீர் நெய்தல் போல என்ற உரு உவமத்தின் பொருட்டு நெய்தற் திணையின் இரங்கல் உரிப்பொருள் வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.


இரவுக்குறியில் தோழி சொல்லியது

இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது.

“மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கெண்டி,
மணல் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே” (அகம்.10: 11-13)

அம்மூவனார் பாடியுள்ள இப்பாடலில் களவொழுக்கம் வழி அலர் எழுந்ததனால் ஏற்படும் மாற்றத்தினைத் தோழி மூலம் குறிக்கிறார். அலர் எழுந்ததை அறிந்த தலைவன் ஒருவழித் தணந்து உறையக் கருதினான். அதனைக் குறிப்பால் உணர்ந்த தோழி, தலைவன் இரவுக்குறியிடத்து வந்து மீளும் பொழுது, நின்னைப் பிரிந்து தலைவி உயிர் வாழமாட்டாள் விரைவில் மணந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறாள். இதற்கு உவமையாகக் கீழ்க்காற்றினால் நிறம் மிக்க கடல் அலைகள் மோதி உடைக்கும் மணல் மேட்டில் கிடக்கும் பழைய படகின் அழிவு போக்கிப் புதிதாகக் செய்யப்பட்ட வலையினையுடைய பரதவர்கள் உயர்ந்த மணலையுடைய கரைப்பக்கத்தில் வந்து ஒதுங்கிக் கிடக்கும் சுறா மீனை அறுத்துத் தாமும் தின்று, மணம் கமழ்கின்ற பாக்கத்தில் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும் வளம் பொருந்திய தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற இவளது அழகு இவளுக்கே உரித்தாகுமாறு நின் ஊரிடத்து மணந்து கொண்டு போதல் வேண்டும் என்கிறாள்.

உவமையில் வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலன் என்ற பயன் உவமத்தின் வழி அழகும் உயிரும் இழக்கப்படும் என்னும் இழத்தல் நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாட்டை வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

“அகவாழ்க்கையையும், புறவாழ்க்கையையும் உணர்த்துஞ் செய்யுட்கு உயிராயுள்ளது மெய்ப்பாடு; பொருளுணர்த்தற்கருவி உவமை; செய்யுட்பகுதிகள் உறுப்பு. அப்பகுதிகளின் பகுதி மரபு வழாத சொற்கள். ஆதலின், மெய்ப்பாடு, உவமை, செய்யுளுறுப்பு, மரபுச்சொல் என்ற நான்கினையும், ஆசிரியர் வெவ்வேறியலுள் விதந்தோதினார். ஆகவே, தொல்காப்பியப் பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல். மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது பகுதிகளை உடைத்தாயியற்றென்றறிக” (கா. சுப்பிரமணிய பிள்ளை, பழந்தமிழர் நாகரிகம், ப.35)

என்று அகப்பாடல்களில் உவமை வழி புறச்செய்திகள் சுட்டப்படுகின்றன.

பாடல்களின் பொருள் புரிதலுக்கும் மெய்ப்பாடும், உவமையும் பொருளதிகாரத்தில் வைத்திருப்பதை இக்கருத்து நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு எனும் ஆய்விற்கு அரணாகின்றது.

இவ்வாய்வின் வழி பெறப்படுவன

* நெய்தல் திணையின் உரிப்பொருள் இரங்கல். தலைவன் தலைவி இருவரின் களவு, கற்பு வாழ்க்கையில் பிரிந்து வாழும் சூழலில் ஏற்படும் மனவெளிப்பாடாக மேற்கூறிய பாடல்கள் அமைகின்றன.

* தலைவன் வினைமேற் சென்றுள்ள நிலையில் அவனை நினைந்து இல்லத்தில் இரங்கி இருக்கும் தலைவியின் துயரைப் பாறை மேல் போதும் சிறுநுரைப் போல் தலைவனை நினைக்குந்தோறும் உயிர் இல்லாமல் போவதாக தலைவி உரைக்கிறாள்.

* கங்கை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவரும் போதும் தடுக்கவியலாத நிலை போல தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் காமநோயைத் தடுக்கவியலாது தவிக்கிறாள்.

* தலைவன் வினையின் பொருட்டு பிரிந்துள்ளான். வினையே பெரிதென்று உள்ளான். தலைவியோ குளம் வற்றிய இடத்தில் வாடிய நெய்தல் மலராக இருக்கிறாள் என்று உவமை வெளிப்பட்டுள்ளது.

* காமத்தினைத் தடுக்கமுடியாத நிலையில் காமம் நீருடன் உவமைப் படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு மிகுதியாக வெளிப்பட்டுள்ளது.

இதன் மூலம் சங்க அகப் பாடல்களில் நெய்தல் திணையில் இரங்கல் உரிப்பொருள் சிறக்க பாடப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.


முடிவுரை

சங்கப் புலவர்கள் அகப்பாடல்களில் நெய்தல் திணையின் இரங்கல் உரிப்பொருள் சிறக்க அழுகை மெய்ப்பாட்டினை மிகுதியாக வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியுள்ளதனை மேற்கண்ட ஆய்வின் வழி பெறப்படுகின்றது. தலைவன் தலைவியின் அன்பொத்த வாழ்க்கையில் பிரிவுத்துயர் தலைவனை விட தலைவியின் வாயிலாக வெளிப்பட்டுள்ளதை இவ் ஆய்வின் வழி காணமுடிகிறது.

துணைநின்ற நூல்கள்

1. சாமி. பி.எல், சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி, சென்னை - 1.

2. சாமிநாதையர், டாக்டர் உ.வே., குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.

3. சுப்பிரமணிய பிள்ளை, கா., பழந்தமிழர் நாகரிகம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரி முனை, சென்னை - 600 108. முதல் பதிப்பு: மே, 2009.

4. செயபால், முனைவர் இரா. (உ.ஆ), சங்க இலக்கியம் அகநானூறு (புத்தகம் 1) (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை - 600 098. நான்காம் அச்சு: அக்டோபர், 2011.

5. தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் பாகம்-1, செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம் 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 001. இரண்டாம் பதிப்பு - ஆகஸ்ட் 2011.

6. நச்சினார்க்கினியர், (உ.ஆ), தொல்காப்பியப் பொருளதிகாரம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை.

7. பேராசிரியர் (உ.ஆ), தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை - 600 014. முதற்பதிப்பு 2018.

8. ராஜ் கௌதமன், பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை - 600 098. முதல் பதிப்பு: ஜூலை, 2019.

9. வேங்கடராமன் வித்துவான் ஹெச். (பதி.ஆ), நற்றிணை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை -600 090. எட்டாம் பதிப்பு - 2020.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p302.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License