இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் பூளைப்பூ

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

பூளைப்பூ என்பது இன்று காணப்படும் பூண்டுச் செடி வகை. சாம்பல் நிறம் பூசியத் தண்டுகளுடன், வெள்ளை நிறத்தில் பூக்கள் சடைசடையாய் நீண்டிருக்கும். பூளைப் பூவைப் பறித்துக் குவித்துப் பார்த்தால், சாம்பல் குவியல் போலவே இருக்கும். இது மென்மையானது. பூளைப்பூ காற்றில் சிதறியோடுவதை வீரர் முன், வீரமிலாப்படை சிதறியோடுவதற்கு உவமை சொல்வர். சங்க இலக்கியத்தில் காதலில் தோல்வியுற்றத் தலைவன் மடல் ஏறும் போது பயன்படுத்தும் பூக்களில், பூளைப் பூவும் ஒன்று. பூளைப் பூப் போல் நிலையில்லாதது இப்பிறவி என்று பக்தி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு உகந்த பூக்களில் ஒன்று. இந்தப் பூ மருத்துவ குணங்கள் நிறைந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று வீட்டில் இந்தப் பூவை வைத்தல் மரபு. இப்பூளைப்பூக் குறித்துச் சங்க இலக்கியங்களில் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி புராணங்களில் பெரியபுராணம், அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ், போன்ற இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன. கம்பராமாயணத்தில் பூளைப் பூக் குறித்து கம்பர் கூறியுள்ளக் கருத்துக்களை ஆராய்வோம்.


வீட்டின் கூரையில் வைப்பது மரபு

பொங்கல் சமயத்தில் ’காப்புக் கட்டு நோன்பு’ அன்று வீடுகள், தொழுவம் எல்லா இடங்களிலும் வேப்பிலை, ஆவாரம்பூ இலை, மாவிலையுடனும் இணைத்து பூளைப்பூக் கட்டப்படுகிறது.

கலித்தொகையில் பூளைப்பூ

காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன் ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு, மேனியில் சாம்பலைப் பூசிக்கொண்டு யாரும் சூடாத பூளைப்பூ, ஆவிரம் பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களைச் சூடிக்கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து, காண்பவர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்லுதலாகும்.

"மணிப்பீலி சூட்டிய நூலொடு, மற்றை
பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, பாத்து" (கலித்தொகை 138-7)

மடல் ஏறுவேன் என்ற தலைவன் மடலேறி நின்ற போது, தன்னைச் சுற்றிச் சூழ்ந்தக் கண்டோருக்குக் கூறியது. என்னைக் கண்ட நீங்கள் எல்லாம் விரைவாக வந்து இவ்வூரிடத்தில் என்னை முன்னர் அறியாதவர் போலப் பார்க்கின்றார். யான் கொண்டது மடல் அன்று மா என்று உணருங்கள். தலையிலும், மார்பிலும் கிடைக்கின்ற இவை, பூ அல்ல .பொன்னின் விளக்கத்தை ஒளிக்கும் ஆவிரம் பூவால் கட்டிய மாலையும் உழிஞையோடு பூளைப் பூவையும் புனத்தின் கண் மயில் உதிர்த்த பீலி முதலியவற்றையும் நூலாலே, நாவுடன் கூடிய மணியுடன் சேர்த்துக் கட்டியவையும் பூ அல்ல. யான் விரும்பிக் கட்டியப் பூந்தாராகும் என்று உணருவீராக என்று கூறினான்.

"பூ வல்ல பூளை உழிஞையோடு யாத்த
புனவரை இட்ட வயங்குதார்ப் பீலி,
பிடியமை நூலொடு பெய்ம் மணி கட்டி,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி" (கலித்தொகை 140: 7)


அகநானூற்றில் பூளைப்பூ

அகநானூற்றிலும் பூளைப்பூக் குறித்த செய்தி கூறப்பட்டுள்ளது. பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது. அறத்தால் அராவப்பட்ட ஊசியின் திரண்ட நுனியைப் போன்ற வலிமை பொருந்திய பற்களைக் கொண்ட செந்நாய், அம்மான் கூட்டத்துள் புகுந்து தாக்கியது. அதனால், மான் கூட்டம் காற்றில் அகப்பட்ட பூளைப்பூவைப் போன்று ’ஒய்’ என்று ஒலி எழுப்பிக்கொண்டு ஓடியது. ஓடிய மான் கூட்டத்தை மீண்டும் அழைப்பதற்காக, ஞாயிறு மறையும் மாலை பொழுதில் கலைமான் தன் ஆண்மைக் குரல் எழுப்பும்.

"அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளிமுனைப் பூளையின் ஒய் என்று அலறிய
கெடுமான் இனநிறை தழிய கலையே" (அகநானூறு 199)

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவர் தன் ஆற்றாமை மீதுரச் சொல்லியது. மழையினைப் பெய்து விட்டு உலக உயிர்களைப் பாதுகாப்புச் செய்திட்ட மேகம், கடையப் பட்ட பஞ்சினது துகள் பரந்து தோன்றினாற் போன்ற சிறிய மழைத்துளிகளையும், தூவுதலையும் விட்டொழித்தது. அகன்ற வகையில் இடத்து நீண்டு தண்டாக வளர்ந்த கரும்பினது திரண்ட காம்பினையுடைய வெண்ணிறப் பூக்கள், கோடைக் காலத்து பூக்கும் பூளைப் பூக்களைப் போல வாடைக்காற்றில் அசைந்தாடின.

"துவலை தூவல் கழிய அகல்வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல் வர" (அகநானூறு 217)

பொருள் வையின் போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது. தெய்வம் வாழும் ஓமை மரங்களையுடைய அத்தகைய காட்டில், பற்றி இழுக்கின்ற முள் வேலியினையுடைய புலால் நாறும் முற்றத்தில் ஓவியத்தில் எழுதி வைத்தாற் போன்ற நெடிய உடலை உடைய பூளைப் பூவினைப் போன்ற மயிரினையுடைய குட்டிகள் திங்களைச் சுற்றியுள்ள விண்மீன்களைப் போலத் தன் தாயைச் சுற்றித் திரியும்.

"நீர்முள் வேலி புலவு நாறு முன்றில்
எழுதி யன்ன கொடிபடு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை
மதிசூழ் மீனின் தாய் வழிபடூஉம்" (அகநானூறு 297)

புறநானூற்றில் பூளைப்பூ

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடிய பாடலில் பூளைப் பூவைக் குறித்துப் பாடியுள்ளார். கொம்பு அற்றுப்போன பெரிய ஆண்மான், புலியிடம் அகப்பட்டது. அதனால், தன் சிறிய மான் குட்டியைத் தழுவியபடி துள்ளும் நடையையுடைய மான் பிணை, பூளைச் செடி வளர்ந்த அச்சந்தரும் பாழிடத்தில் வேளையின் வெளிய பூவைத் தின்னும்.

"சிறு மறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக்கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே" (புறநானூறு23;19-22)

பெரும்பாணாற்றுப்படையில் பூளைப்பூ

கரகு - வரகு வைக்கோல், கரிய வைக்கோல் வேய்ந்த குடிசைகள், கார்காலத்து முகில்கள் பரந்து நிற்பது போலத் தோன்றுமாம். சிறு பூளைப்பூ வரகுச் சோற்றிற்கு உவமை

"நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி
புகர்இணர் வேங்கை வீகண் டன்ன" (பெரும்பாணாற்றுப்படை 192-195)

நீண்ட கொத்தையுடைய பூளைப்பூவைக் குறுகிய தாளுடைய வரகின் சோற்றுக்கு உவமையாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார்.


குறிஞ்சிப்பாட்டில் பூளைப்பூ

தோழியும், தலைவியும் 99 வகையான மலர்களைப் பறித்துப் பாறையில் குவிக்கும் போது பூளைப்பூவையும் பறித்துக் குவித்தனர் என்ற செய்தியைக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகின்றார்.

‘குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி’ (குறிஞ்சிப்பாட்டு 72)

பட்டினப்பாலையில் பூளைப்பூ

திருமாவளவன் போருக்குச் சென்றான். பகைவர்கள் பணிந்து தந்த தன்னுடைய அரச உரிமைகளால் பெற்ற நன்மைகளைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடையவில்லை. புதர்கள் படர்ந்த நெருங்கிய மலைகள் போலப் பல்வேறு பூளைப்பூக்களையும், உழிஞைப் பூக்களையும் சூடிய யானைகள் தன் அரசனால் போர் செய்வதற்கு வாய்ப்புப் பெற்றவர்களின் மதில்களை இடித்தன.

"பெருதல் வானத்துப் பருந்து உலாய் தடப்ப
நூறு இவர் தறுகல்போல, போர்வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி" (பட்டினப்பாலை 233-235)

சிலப்பதிகாரத்தில் பூளைப்பூ

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கனாத்திறம் உரைத்தக் காதையில் பூளைப் பூ குறித்துக் கூறப்பட்டுள்ளது.
‘அறுகு சிறுபூளை நெல்லொடு தூயஉய்ச் சென்று” (கனாத்திறம் உரைத்த காதை 43)

என்று அறுகம்புல், சிறு பூளைப்பூ, நெல் ஆகியவற்றைத் தூவி சாத்தன்கோவிலில் வணங்கியது குறித்து அறியமுடிகிறது.

சீவக சிந்தாமணியில் பூளைப்பூ

சீவக சிந்தாமணியிலும் பூளைப்பூக் குறித்துக் கனகமாலையார் இலம்பகத்தில் கூறப்பட்டுள்ளது.

"வாளி யம்பன வாட்டங் கண்ணிதன்
றோளு மென்முலைப் பாரமுந் தொன்னல
நாளு நாளினு நைந்துநைந்துள்சுடப்
பூளை மெல்லணை மேற்புற ளுங்கொலோ" (சீவகசிந்தாமணி - கனகமாலையார் இலம்பகம்-1628)

அழகுடைய அம்பு போன்ற ஒளி பொருந்திய பெருங்கண்ணால் தன்னுடைய தோளும், மென்மையான முலை பாரமும் தன் பழமையான அழகு ஒவ்வொரு நாளும் கெட்டுக் கெட்டு, உள்ளம் விரும்ப பூளை மலர் முதலியவற்றால் சமைத்த மெல்லிய அணையின் மேல் புரண்டாள். முன்பு பூளை மலரால் செய்த அணையின் மேல் துயின்றாள் கனக மாலை என்று கூறப்பட்டுள்ளது.


பெரியபுராணத்தில் பூளைப்பூ

சேக்கிழார் பாடிய பெரியபுராணத்திலும் பூளைப்பூப் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. திருநாளைப்போவார் நாயன்மார் பிறவி நிலையில்லாதது என்பது குறித்துப் பாடும் பொழுது இவ்வாறு பாடியுள்ளார்.

"நாளை போவேன் என்று
நாட்கள் செலத் தரியாது
பூளைப் பூ வாம் பிறவிப்
பிணிப்பொழியப் போவாராய்" (திருநாளை போவார் சரித்திரம்- பெரிய புராணம் 22)

இவ்வாறு நாளைப் போவேன் என்றும், நாளும் நந்தனார் சொல்லி வர நாட்களும் கழிதலால் பூளைப் பூப் போன்ற நிலையில்லாத இப்பிறவி சூழல் ஒழியத் தூதருக்கு ஒரு படுவாராய் பூம் பாலைகள் நிறைந்த கமுக மரங்கள் செரிந்த சோலைகளை உடைய ஆதனூரினின்றும் புறப்பட்டு வாளை மீன்கள் துள்ளி எழுந்து காய்வதற்கு ஏற்ற, நல்ல நீர் வளம் உடைய வயல் சூழ்ந்த தில்லையின் பக்கத்தினை அடைவாராய்.

திருப்புகழில் பூளைப்பூ

திருப்புகழிலும் அருணகிரிநாதர் பூளைப்பூக் குறித்துப் பாடியுள்ளார். பொதுப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

“பூளை யெருக்கு ...... மதிநாக
பூண ரளித்த ...... சிறியோனே
வேளை தனக்கு ...... சிதமாக
வேழ மழைத்த ...... பெருமாளே” (திருப்புகழ் 1294)

பூளைப் பூ, எருக்கு இலை, பிறை சந்திரன், பாம்பு சடையிலே அணிந்துள்ள சிவபெருமானே. பூளைப்பூ வெற்றியின் சின்னமாகக் கருதப்படுகிறது.


கம்பராமாயணத்தில் பூளைப்பூ

பூளைப்பூ இது மென்மையானது எந்த நேரத்திலும் அழியக் கூடியது. அதனால் இதனைப் பிறவிக்கு ஒப்பிட்டார். ‘மாருதம் அறைந்த பூளைப்பூ’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

பூளைப்பூ போர் நிகழ்ச்சிகட்கேயன்றி, நிறநிலையில் வெண்முகிற் கூட்டங்கட்கும், பனி மழைக்கும் நிறவுவமையாகின்றது.

1. மன்மதன்

விசுவாமித்திரர், இராமனிடம் இந்த இடத்திலிருந்துதான், மன்மதன் சிவபெருமான் மேல் மலர் அம்புகளை எய்தான். உடனே நெருப்பைப் பொழியும் நெற்றிக்கண்ணின் கோபத் தீ அவனைச் சுட்டது. அவனது பூளைப் பூப் போன்ற மென்மையான மேனி எரிந்தது. அன்று முதல் மன்மதன் ’அனங்கன்’ உடல் இல்லாதவன் ஆகிவிட்டான்.

"பொங்கு கோபம் சுட பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான்" (தாடகை வதைப்படலம் 340)

2. சீதையின் நிலை

பூளைப்பூவைப் போன்ற வெண்ணிறமான பனிமழையால் வாடிய, தண்டோடு கூடிய தாமரைப் பூக்கள் நெருங்கிய குளத்தையும், கொடிய பாம்பினால் விளங்கப்பட்ட சந்திரனையும் போல மலர் மஞ்சம் வாடிப் போகும்படி புதிய மலர்கள் பொருந்திய அம்மஞ்சனத்தைக் காதல் வெம்மையாகச் சீதை அடைந்தாள்.

"நாள் அறா நறு அமளி நண்ணினாள்
பூளை வீ புரை பனிப் புயற்குத் தேம்பிய
தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும்
வாள் அரா நீங்கிய மதியும் போலவே" (மிதிலைக் காட்சிப் படலம் 531)

3. இராவணனுக்கும், சீதைக்கும் இடையே வாக்குவாதம் இராவணனுக்கும், சீதைக்கும் இடையே வாக்குவாதம் வர, சினம் மேலிட்ட இராவணன் ‘நாளைக்கு உன் இராமன் வாடைக்காற்றில் அகப்பட்ட பூளைப் பூவைப் போல, என் இருபது தோள்களின் வாடையால் அழியப் போவதைக் காண்க’ என்றான்.

"தேறுதி நாளையே அவ்இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது பூளைவீ என வீவன் அன்றே" (சடாயு உயிர் நீத்த படலம் 861)

பூளைப் பூ என்பது பஞ்சு போன்ற அமைப்புடைய ஒரு மெல்லிய பூ. காற்று அடித்தாலே அது பறந்து போய்விடும். பழுத்த பஞ்சு, காயை வெடித்ததும் பஞ்சு காற்றிலேப் பறந்து ஓடிவிடும். அதனிலும் மெல்லியது பூளைப்பூ. இராவணனின் 20 தோள்களின் வாடை பட்டாலே, காற்று முன் பூளைப் பூ போல் இராமன் இறந்து விடுவான் என்கிறான். பஞ்சவடியில் சீதையிடம், இராவணன் தன்னுடைய ஆற்றல் குறித்துப் பெருமிதத்துடன் பேசுகிறான். பெண்ணே என்னுடைய 20 கைகளில் இருந்து வீசுவதால் வரும் காற்று, உன் இராமன் மீது பட்டால் போதும் அவன் பூளைப் பூப்போன்று விழுந்து விடுவான் என்று கூறுகிறார்.


4. வெண்ணிறமான மேகங்கள்

மேகக் கூட்டங்கள் தாம் பருகிய நீர் முழுவதும் அற்றுப்போகும்படி பெரிய மலைகளின் சிகரங்களில் எல்லாம் சென்று, மீண்டும் கடலில் இருந்து நீரை முகப்பதற்காகச் சென்றன. அவ்வாறு பூளைப் பூவைப் போல, வெண்ணிறமாகச் சென்ற மேகங்கள், இலங்கையில் இருந்து எழுந்த கொடும்புகை முற்றிலும் சுற்றிக்கொள்ள, செல்லும் வழி அறியாமல் வானிலேச் சுற்றித் திரிந்தன.

"மாளும் வண்ணம் மாமலை நெடுந்தலை தொறும் மயங்கிப்
பூளை வீய்ந்தன்ன போவன புணரியில் புனல் மீன்" (இலங்கை எரியூட்டப்படலம் 1213)

5. இராமன், இராவணனிடம் பேசுதல்

முதல் நாள் போரில் இராவணன் தோற்றுவிட, இராமன் அவனுக்கு உயிர்ப் பிச்சை அளித்தான். மூன்று உலகங்களையும் ஆள்பவனே, உனக்குத் துணையாக அமைந்த படைகள் எல்லாம், காற்றில் மோதப்பட்ட பூளைப் பூப் போலானதைக் கண்டாய் அன்றோ. எனவே நீ இப்பொழுது போர்ப் புரிய இயலாதவன் ஆகின்றாய். ஆதலால், இன்று அரண்மனைக்குச் சென்று, நாளைக்குப் படையுடன் போருக்கு வருவாயாக என்று மிக்க இளமையுள்ள பாக்கு மரத்தின் மீது வாளை மீன் துள்ளிப் பாயும் நீர் வளம் கொண்ட கோசல நாட்டிற்கு உரியவனும், கருணையுடையவனுமான இராமன் கூறினான்.

"ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை யாயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினான் நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்" (முதற் போர்புரி படலம் 1212)

’மாருத மறைந்த பூளையாயன கண்டனை" என்று தோற்ற பின் இராமன் வாயால் கேட்டும் நிலைக்கு உரியவனாகின்றான்.

இராவணன், சீதையிடம் தன் வீரத்தின் பெருமையைக் கூறி இராமனை இழிவுபடுத்த பூளைப் பூவைப் பயன்படுத்தினானோ, அதேப் பூளைப் பூவை வைத்தே இராமன், தோற்ற இராவணனிடம் கூறினான்.


6. வானரப்படையின் சினம்

வேல் ஏற்ற படலத்தில் ஆண் சிங்கம் போன்ற இராவணன் எதிர்த்துப் போர் செய்தபோது, அந்தப் போர்க்களத்தில் சேர்ந்திருந்த குரங்குப்படைகள், நாய்கள் போல இழிவடைந்து நின்றன என்பது ஏன்? நடு இரவிலே வந்து அடைந்த காளி போன்று மிகக் கொடூரமாக இராவணன் இருந்தான். வெற்றிடத்தில் காற்றின் முன் இருந்த இடம் தெரியாது ஒளித்தப் பூளைப்பூவைப் போன்றது அந்தப் போர் செய்கின்ற சினத்தைக் கொண்ட வானரப்படை.

"காளி போன்றனன் இராவணன் வெள்ளிடைக் கரந்த
பூளை போன்றது அப்பொரு சினத்து அரிகள் தன் புணரி" (வேல் ஏற்ற படலம் 34 87)

7. வசிட்டன்

இராவண வதைக்குப்பின் இராமனுக்கு முடி சூட்டும் நிகழ்வு நடைபெறுகிறது. அதற்கு ஏற்ற நாளை வசிட்டன், இராமனிடம் குறிப்பிடும் இடத்தில் கம்பன் வசிட்டனை, சிவபெருமானாகக் காண்கிறான்.

"நாளை நீ மௌலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்
காளை நீ அதனுக்கு கடன்மை மீது இயற்றுக என்று
வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின் வெண்பூம்
பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் போனான்" (திருமுடி சூட்டுப் படலம் 4258)

காளை போன்ற இராமனிடம் நீ மகுடம் சூடப் பொருந்தும் நன்மை மிக்க சிறந்த நல்ல நாள் நாளைய ஆகும். நீ அதற்கு ஏற்ற காரியங்களை எல்லாம் நன்கு செய்வாயாக என்று, நெற்றிக்கண் பெற்ற மெல்லிய பூளைப் பூவை அணிந்த சிவபெருமானை ஒத்த வசிஷ்டன் சொல்லிச் சென்றதாகக் கம்பர் குறிப்பிடுகின்றார்.

முடிவுரை

பூளைப்பூ பஞ்சு போன்று மென்மையானது. காற்று அடித்தாலேப் பறந்து விடும். பக்தி இலக்கியங்களில் பூளைப்பூவைப் பிறவிக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். கம்பரும் தம் இராமாயணத்தில் போர் நிகழ்ச்சிகளுக்கும், வெண்முகிற் கூட்டங்களுக்கும், பனி மழைக்கும், மன்மதனுக்கும் உவமையாகக் கூறுகின்றார். இப்பூளைப்பூக் குறித்து சங்க இலக்கியங்களில் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி புராணங்களில் பெரியபுராணம், அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ்,கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.

2. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

3. கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.

5. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன், லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.

6. கருத்திருமன். பி. சி. கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.

7. காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், சென்னை, 2010.

8. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம், புதுச்சேரி.

9. சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017.

10. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.

11. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p318.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License