இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் அறுபதினாயிரம் என்ற பேரெண்ணின் சிறப்பு


முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

கம்பர் தம் இராமாயணத்தில் அணி, சொல்லாட்சி,கற்பனை,என்று பல சிறப்புகளைக் கொண்டு இயற்றியுள்ளார்.திருமாலே, இராமனாக அவதாரம் எடுத்து இராவணனை வதம் செய்தார் என்பதைக் கூறும் இந்நூலில் அறுபதினாயிரம் என்ற பேரெண் சிறப்புக்குரியதாகவே அமைத்துள்ளார் என்பதை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தசரதனின் ஆட்சி காலம் அறுபதினாயிரம்

சூரியக் குலத்து அரசர்களில் மிகுதியான காலம் எடுத்து ஆண்டவன் தசரதன். அறுபதினாயிரம் ஆண்டுகள் என்று தசரதன் தனக்கு மகப்பேறு வாய்க்காத குறையை வசிஷ்டரிடம் தெரிவிக்கும் இடத்தில் அறுபதினாயிரம் ஆண்டு காலம் அரசாண்டேன் என்று ஆண்டுக் கணக்கைக் குறிப்பிடுகின்றான்.

"அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறுபகை ஒடுக்கி இவ்உலகை ஓம்பினேன்
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ" (திருஅவதாரப்படலம் 183)

புத்திரப்பேறு வாய்த்துத் தலையில் நரை தோன்றிய நிலையில் தான் அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து மூப்பெய்தி கலைத்து விட்டதாகத் தசரதனே கூறுகிறான்.

"வெய்யவன் குலமுதல் வேந்தர் மேலவர்
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால்
ஐ இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்" (மந்திரப்படலம் 13)


தசரதனின் அமைச்சர்கள் அறுபதினாயிரம்

தசரதனின் அமைச்சர்கள் மொத்தம் அறுபதினாயிரம் பேர் என்றாலும், தசரதனுக்கு நன்மை ஏற்படுத்துவதில் அனைவருக்கும் ஒரே எண்ணம் என்று நினைக்கத்தக்க, மிகச்சிறந்த ஆராய்ச்சித்திறம் பெற்றவர்கள். அவர்கள் மடங்கி விழும் கடலைப் போல அந்த மண்டபத்தில் வந்து நிறைந்தார்கள்.

"அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்
பெறல் அருஞ் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர்
மறி திரைக்கடல் என வந்து சுற்றினார்" (மந்திரப்படலம் 10)

தசரதன் தனக்கு கிடைத்த அறுபதினாயிரம் ஆண்டு அரசாட்சியைக் கூட, தன் பலத்தாலும் தன் முயற்சியாலும் கிடைத்தது என்று அவன் ஒருபோதும் எண்ணியதும்இல்லை, சொன்னதும் இல்லை.

தசரதன் கோசல நாட்டை அறுபதினாயிரம் ஆண்டுகள் கட்டிக் காத்தான். ஆண்டுக்கு ஒரு மனைவி வீதம் அறுபதினாயிரம் மனைவிமார்கள் அவனுக்கு உண்டு என்று புராணங்களும் பேசுகின்றன. கம்பராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது.

மகளிர் அறுபதினாயிரம்

தாமரை அரும்பு போன்ற வெண்மையான கொங்கைகளை உடைய வர்ணிக்க முடியாத வனப்பைப் பெற்ற இலக்குமியை விடச் சிறந்த அழகு பொருந்திய அறுபதினாயிரம் என்னும் எண்ணிக்கைக் கொண்ட மகளிர் பவளத்தாலும், ரத்தினத்தாலும், பசும்பொன்னாலும், ஒளி வீசும் மகரத்தாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒப்பில்லாத வண்டிகளில் ஓவியத்தைப் போல ஏறி அமர்ந்து அரசியர்களின் பக்கங்களில் சென்றார்கள்.

“துப்பினின் மணியின் பொன்னின் சுடர் மரகதத்தின் முத்தின்
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் போல ஏறி
முப்பத்திற்று இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கைச்
செப்ப அருந்திருவின் நல்லார் தெரிவையர் சூழப் போனார்” (எழுச்சிப் படலம் 749)

தசரதன் இறந்தவுடன் துவளும் தன்மையுள்ள சிறந்த மலர்கள் கொண்ட பூங்கொடிகளைப் போன்ற அவன் மனைவியர் அறுபதினாயிரம் பேரும் தாம் அணிந்த மாலைகளும் மற்றும் உள்ள அணிகலன்களும் தம்முடைய இடைகளை விளங்கித் தோன்ற இலையில்லாத தாமரை மலர்கள் நிறைந்த பூக்காட்டிலே மலை குகையில் வாழும் மயில்கள் புகுவது போல ஈமத் தீயில் இறங்கி மூழ்கினர்.

“இழையும் ஆரமும் இடையும் மின்னிட
குழையும் மா மலர்க்கொம்பு அனார்கள் தாம்
தழை இல் முண்டகம் தழுவு கானிடை
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார்” (பள்ளிப்படைப்படலம் 920)


சகரப் புத்திரர்கள் அறுபதினாயிரம்

அகலிகைப் படலத்தில் விசுவாமித்திரன், இராமனுக்கு கங்கை ஆற்றின் வரலாற்றைக் கூறும் போது, சகரப்புத்திரர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றார். நூறு அஸ்வமேத யாகம் செய்தவன் சாகரன். அம்மன்னனின் 2 மனைவிகளில் சுமதி என்ற கருடனின் உடன்பிறந்த தங்கை வயிற்றில் தோன்றிய அறுபதினாயிரம் சகரப் புத்திரர்களின் புகழோ கடல் உள்ளளவும் அலை போல் என்றும் உழைத்துக் கொண்டிருக்கிறது.

சகரனுடைய புத்திர பௌத்திரர்கள்

“விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார்” (அகலிகைப் படலம் 511)

சகரப் புத்திரர்கள் அறுபதினாயிரம் வரும் கபில முனிவரின் சினத்தினால் எரிந்து சாம்பலானார்கள்.

தசரதனின் குல முன்னோனான சகரனின் புத்திரர்கள் அறுபதினாயிரம் இவர்கள் அனைவரும் பாதாளத்தில் கபில முனிவரின் வெகுளியால் எரிந்து சாம்பல் மேடாயினர். திருமணமாகாமலேயே சகரப் புத்திரர்கள் இறந்ததனாலும், ஆட்சிக்கட்டிலே ஏறாது போனதனாலும், இவை இரண்டும் தசரதனுக்குப் பெரும் குறையாகவேப் பட்டது. தன்னுடைய பாட்டன்களான சகரப் புத்திரர்களின் விருப்பினை நிறைவேற்றவும், அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், தசரதனே முயன்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு வீதம் அறுபதினாயிரம் ஆண்டு, இப்புவியைத் தாங்கி ஆளுக்கொரு மனைவி வீதம் அறுபதினாயிரம் பெண்களை மணந்து, தன் குல முன்னோர்களை மோட்சம் பெறச் செய்தவன் என்று ’தசரதன்’ என்ற நூலில் ரா. தர்மராஜன் குறிப்பிடுகிறார். தானும் ஒரு சத்திரிய வம்சத்தவன் அதனால், பரசுராமன் இலக்கிற்கு ஆட்படாது இருக்கவே, அறுபதினாயிரம் ஆண்டு காலத்தில் தசரதன் அறுபதினாயிரம் மனைவிகளை மணந்து மணக்கோலத்தில் இருப்பதற்குக் காரணம் கற்பிப்பது திறனாய்வாளர்கள் என்று தசரதன் என்ற நூலில் ரா. தர்மராஜன் 69 ஆவது பக்கத்தில் கூறுகிறார்.

அக்ரோணி சேனைகள் அறுபதினாயிரம்

அறுபதினாயிரம் அக்ரோணி சேனைகளும் காட்டுக்குச் சென்ற இராம பிரானை அழைத்து வரப் புறப்பட்ட பொழுது, பரதனைப் பின் தொடர்ந்து சென்ற படைகளின் எண்ணிக்கை ஆன்றவரால் என் தொகுதியில் மிகுதி என கூறப்பட்ட அறுபதினாயிரம் அக்ரோணிகள் ஆகும்.

“கான்தலை நண்ணிய காளையின்படர்
தோன்றலை அவ்வழித் தொடர்ந்து சென்றன
ஆன்றவர் உணர்த்திய அக்ரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே” (கங்கை காண் படலம் 989)

வீரர்கள் அறுபதினாயிரம்

ஏவலாளர் வில்லை மண்டபத்திற்கு கொண்டு வருக என அரசன் சனகன் ஆணை தெரிவித்ததால், மிகுந்த வலிமையுடைய யானையைப் போன்றவரும் மலை போலத் திரண்ட மயிர் அடர்ந்த தோள்களை உடையவருமான அறுபதினாயிரம் வீரர்கள் வில்லின் நடுநடுவே தூண்களை நுழைத்துத் தோளிலேச் சுமந்து கொண்டு வந்தனர்.

"உறு வலி யானையை ஒத்த மேனியர்
செறுமயிர்க் கல் என திரண்ட தோளினர்
அறுபதினாயிரம் அளவு இல் ஆற்றலர்
தறிமடுத்து இடையிடை தண்டில் தாங்கினர்" (கார்முகப்படலம் 617)


மாசனப்புத்திரர்கள் அறுபதினாயிரம்

பாலகில்யர் பிரம்மனது மயிரிலிருந்து தோன்றியவர்கள். அவனுடைய மாசனப்புத்திரர்கள் இவர்கள் அறுபதினாயிரம் என்பர். பெருந்தவம் புரிந்தவர்கள். இவர்கள் கட்டைவிரல் அளவுள்ள குறுவடிவினர். நாளும் கதிரவனின் இரதத்தை வலம் வந்து கொண்டிருப்பவர்.

"பண்டைய அயன் தரு பாலகில்லரும்
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அத்
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனைக் களிக்கும் சிந்தையர்" (அகத்தியப்படலம் 118)

முடிவுரை

கம்பராமாயணத்தில் அறுபதினாயிரம் என்ற பேரெண் சிறப்பானதாகும். தசரதனின் ஆட்சிக்காலம் அறுபதினாயிரம், அமைச்சர்கள் அறுபதினாயிரம், மனைவியர் அறுபதினாயிரம், சகரப்புத்திரர்கள் அறுபதினாயிரம், அக்குரோணிசேனைகள் அறுபதினாயிரம், வில்லைத் தூக்கி வந்த வீரர்கள் அறுபதினாயிரம், பிரம்மனின் மானசப்புத்திரர்கள் அறுபதினாயிரம் என்பதைக் கம்பராமாயணத்தின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

துணைநூற்பட்டியல்

1. செல்வம். கோ, கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை. 2016.

2. ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

3. ஞானசம்பந்தன் அ.ச., இராமன் பன்முக நோக்கில், சாரு பதிப்பகம், சென்னை, 2016.

4. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p326.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License