இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

புலம் பெயர்தல்

முனைவர் சி. சேதுராமன்


அன்று தொட்டு இன்று வரை புலம் பெயர்தல் என்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. புலம் என்பதற்கு இடம் எனப் பொருள் கொண்டு இடம் பெயர்தல் என்று இதனைக் குறிப்பிடலாம். இடம் பெயர்தல் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நடந்து வரக்கூடிய ஒன்றாகும். நாகரிகமற்ற காலத்தில் மனிதன் நாடோடியாக ஒவ்வொரு இடமாகப் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தான்.

புலம்பெயர்தலும் இயற்கையும்

மனிதன் தனது தொடக்கக் காலத்தில் இருந்தே கூட்டம் கூட்டமாகப் புலம் பெயர்ந்து வாழ்தலைக் கடைப்பிடித்து வந்தான். பறவைகள், விலங்குகள் போன்றவை உணவிற்காகவும், நீருக்காகவும், வாழிடங்களுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இயற்கையாக இடம் பெயர்தல் உண்டு. இயற்கையே இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனலாம்.

வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்குப் பறந்து வந்து இங்கு தங்கி தனது இனத்தை விருத்தி செய்து கொண்டு மீண்டும் அது முடிந்தவுடன் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்கின்றன.

புலம்பெயரக் கூடியவை பெரும்பாலும் மீண்டும் தங்களது பூர்வீக இருப்பிடத்திற்குத் திரும்புவதுண்டு. இல்லையெனில் புதிதாகத் தாங்கள் வந்த இடத்திலேயே தங்கி விடுவதும் உண்டு. சில விலங்குகள் மற்றும் பறவையினங்கள் ஒவ்வொரு இடமாகப் புலம் பெயர்ந்து கொண்டு செல்வதுமுண்டு.

தொல்காப்பியம்-சங்க இலக்கியம் இவற்றில் புலம்பெயர்தல்

சங்க காலத்திலும் இப்புலம் பெயர்தல் என்பது அதகமாக நிகழ்ந்திருப்பதற்குச் சான்றுகள் உள்ளன. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள,

‘‘திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே”

என்ற நூற்பாவிற்கு உரை எழுதும் உரையாசிரியர்கள் ஒரு நிலத்திலுள்ளவை மற்றொரு நிலத்திற்கு வந்து திரியினும் அதனை நீக்க மாட்டார்கள்” என்று உரை எழுதுகின்றனர். இங்கு திரிதல் என்பதற்கு உலவி வருதல் என்று பொருள் கொள்ளலாம். வழக்கத்தில் ஒருவன் வீட்டில் தங்காது வெளியிடங்களுக்குச் சென்று வந்தால் அவனைப் பார்த்து வீட்டில் உள்ள பெரியோர்கள், ‘‘எங்கே போய் திரிந்து விட்டு வருகின்றாய்?“ என்று கேட்பர். இங்கு திரிதல் இடம் விட்டு இடம் சென்று வருதல் என்ற பொருளைக் குறிக்கின்றது. திணை மயக்கம் என்பது, மலையில் வசிக்கும் (குறிஞ்சி) பறவைகளோ, விலங்குகளோ, காடு, வயல் சார்ந்த இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று உறைந்து (தங்கி) வருவதனைக் குறிக்கும். இதனைப் புலம்பெயர்தல் என்று கூறலாம்.



நிலம் என்பதை இடம் எனக் கொண்டால் மலை (குறிஞ்சி), காடு (முல்லை), வயல் (மருதம்), கடல் (நெய்தல்), மணல் சார்ந்த இடம் (பாலை) என ஐந்நிலமும் ஐந்து வகையான நிலப்பகுதிகளைக் (இடங்களாக) குறிக்கும் எனலாம். முல்லை நில மக்கள் பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பாற்பொருள்களை மருத நிலத்திற்கு எடுத்துச் சென்று விற்று வந்தனர். கடற்புரத்தில் வசித்த பரதவர், உமணர் போன்றோர் மீன், உப்பு ஆகியவற்றை மருத நிலத்திற்குக் கொண்டு சென்று உப்பையும், மீனையும் கொடுத்து விட்டு நெல்லையும், பிற உணவுப் பொருள்களையும் பெற்று வந்தனர். எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

பட்டினப்பாலை இத்தகு செய்திகளை விரிவாக எடுத்துரைக்கின்றது. இவை பெரும்பாலும் வணிகத்திற்காகப் புலம் பெயர்தலைக் குறிக்கின்றது. இங்ஙனம் வணிகத்திற்காகப் புலம் பெயர்தல் என்பது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிகழ்வதுண்டு.

புலம்பெயர்தல் வகைகளும் அதற்கான காரணங்களும்

புலம்பெயர்தலை தற்காலிமாகப் புலம் பெயர்தல், நிரந்தரமாக இடம் பெயர்தல் என்று இரு வகையாகப் பகுக்கலாம். தற்காலிகமாக இடம் பெயர்தல் என்பது தாங்கள் கொண்டு சென்ற பொருள்களை ஓரிரு நாள்களில் விற்று விட்டு மீண்டும் தங்களிருப்பிடத்திற்கு வந்து விடுதலைக் குறிக்கும். சிலர் வணிகத்தின் பொருட்டுத் தங்களிருப்பிடத்தை விட்டு நெடுந்தொலைவு சென்று அங்கேயே தங்கி விடுவதும் உண்டு. இத்தகைய புலம்பெயர்தலைப் “பிரிவு” பற்றிக் குறிப்பிடும் போது தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

“ஓதல் பகையே தூதிவை பிரிவே”

என கல்விக்காகவும், பகைப் புலம் நோக்கிப் படையெடுக்கும் காரணமாகவும், பொருள் காரணமாகவும், தூதுவராகச் செல்வதற்காகவும் (பணி காரணமாக இடம்பெயர்தல்) புலம் பெயர்தல் உண்டு. இத்தகைய புலப்பெயர்வுகள் தற்காலிகமானவையாகும். அவ்வாறு புலம் பெயர்ந்து சென்றோர் தாங்கள் மேற்கொண்ட பணி முற்றுப் பெற்றவுடன் மீளத் தம்முடைய இருப்பிடத்திற்குத் திரும்பி வந்து விடுவர். போர் காரணமாகப் புலம் பெயர்ந்து சென்று மீண்டதை முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை போன்றவை குறிப்பிடுகின்றன.



சங்க காலத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டு மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் நட்பின் காரணமாகத் தூண்டப்பட்டுப் புலம் பெயர்ந்து, சோழநாடு வந்து தனது நண்பன் கோப்பெருஞ்சோழன் இறந்த இடத்திலேயே இறந்தார். இஃது நிரந்தரப் புலம் பெயர்தலை சார்ந்ததாகும். குறிஞ்சி நிலமாகிய மலை நாட்டில் நண்பர் பாரியுடன் வசித்து வந்த கபிலர் தனது நண்பர் மூவேந்தர்களது சூழ்ச்சியினால் கொல்லப்பட்டவுடன் பரம்பு மலையை விட்டுப் புலம் பெயர்ந்தார். பாரியின் மகள்களை மணமுடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் பரம்புமலைக்கு வந்து அங்கு வடக்கிருந்து உயிர் துறந்தார். தனது நண்பன் தன்னிடம் கொடுத்த கடமையை நிறைவேற்றி விட்டு மீண்டும் பரம்பு மலைக்கு வந்து அங்கு வடக்கிருந்து உயிர் துறந்ததைப் புறநானூறு தெளிவுறுத்துகின்றது. கபிலர் புலம் பெயர்ந்தது தற்காலிகப் புலம் பெயர்தலைச் சேர்ந்ததாகும்.

இங்ஙனம் புறநானூறு பல்வேறு வகையாக இப்புலம்பெயர்தலை எடுத்துரைக்கின்றது.

ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் புலம் பெயர் மக்களைப் பற்றியதாக அமைந்திலங்குகின்றது. இவை ஒரு நிலத்தில் உள்ளோர் தங்களுக்கு அருகில் உள்ள நிலத்திற்குச் சென்று வாழ்ந்ததைக் குறிப்பிடுகின்றது.

“புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்”

என்று வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்தவர்களைப் பற்றி பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது.

“பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய” (சிலம்பு)

எனப் புலம் பெயராது ஒரே இடத்தில் மக்கள் வாழ்ந்த செய்தியையும் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களின் வறுமையைப் போக்குவதற்குப் புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள், பொருநர், விறலியர் ஆகியோர் தங்களின் வாழிடத்தை விட்டு வள்ளல்கள் இருக்கும் இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றதை ஆற்றுப்படை இலக்கியங்கள் தெளிவுறுத்துகின்றன. அங்ஙனம் சென்றவர்கள் பரிசில்களைப் பெற்று மீளத் தாம் வாழ்ந்த பகுதிகளுக்குச் சென்று வறுமையில் வாடியோரோடு தங்கள் பெற்ற செல்வங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தனர்.

தலைவன் தான் விரும்பிய தலைவியை மணப்பதற்குரிய பொருளைத் தேடி வேறு புலத்திற்கு இடம் பெயர்ந்து சென்று பொருளீட்டி மீண்டு வந்து தலைவியை மணந்து கொண்டதையும், தன் மனையையும், தன்னைச் சேர்ந்தோரையும் வளமாக வாழ வைக்கக் கருதிய தலைவன் தனது தலைவியைப் பிரிந்து பொருளீட்டப் புலம் பெயர்ந்து சென்றதையும் அக இலக்கியங்கள் குறிப்பிடுவது நோக்கத் தக்கதாகும். வணிகத்திற்காகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து சென்றதையும் இலக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன.



காப்பியங்களில் புலம்பெயர்தல்

கண்ணகியுடன் புகாரை விட்டு நீங்கி மதுரைக்குக் கோவலன் சென்றது பொருளீட்டும் வகையில் அமைந்தது புலப்பெயர்வு நிகழ்வாகும். கணவனைப் பறிகொடுத்து விட்டு மதுரையைத் தீக்கிரையாக்கி விட்டு மனமொடிந்த நிலையில் பாண்டிய நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து சேரநாட்டிற்குச் சென்று கண்ணகி அங்கு தெய்வமாவதைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.

மணிமேகலைக் காப்பியம் பிறருடைய பசிப்பிணியைப் போக்கிட ஆபுத்திரன், மணிமேகலை ஆகியோர் புலம் பெயர்ந்து சென்றதை விவரிக்கின்றது. மேலும் இதே காப்பியம் சாதுவன் வணிகத்தின் பொருட்டுப் புகாரிலிருந்து புலம் பெயர்ந்து சென்று மீளவும் பொருளுடன் புகாருக்கு வந்த தற்காலிகப் புலம் பெயர்தலை விவரிக்கின்றது.

சீவகசிந்தாமணியில் தனது குறிக்கோளை அடைவதற்காகச் சீவகன் ஒவ்வொரு நாடாகப் புலம் பெயர்ந்து சென்று மீண்டும் தனது நாட்டிற்கு வந்து பகை முடித்து அரசனாகின்றான். சீவகனது புலம் பெயர்வு நிகழ்வு தற்காலிகமானதும், காரிய வெற்றியைக் குறித்துமானதுமாகும்.

சங்க இலக்கியங்களும், காப்பிய இலக்கியங்களும் கூறக்கூடிய புலம் பெயர்தல் பொருளீட்டுதல், நாடு காவல், பகை முடித்தல் உள்ளிட்ட தற்காலிகப் புலம் பெயர்தலாகும். சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சி இலக்கியங்ள் குறி சொல்லும் குறத்தி குறிசொல்லும் தன் திறனை வைத்துப் பல நாடுகளுக்கும் தன்னிருப்பிடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து சென்று பல்வேறு பரிசுப் பொருள்களைப் பெற்று மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்த்தை எடுத்துரைக்கின்றன.



புலம்பெயர் இலக்கியங்கள்

இன்றைய நிலையில் இலக்கியங்கள் கூறும் புலம்பெயர்தலுக்கான காரணங்கள் மிகுந்திருப்பினும், வேறு சில புதிய காரணங்களும் இதில் சேர்ந்துள்ளன. பொருளீட்டல், வேலை, கல்வி, மருத்துவம், சாதீயப் பூசல், வறுமை, வேலையின்மை, உள்நாட்டுப் போர், அயல்நாட்டாரின் படையெடுப்பு, அரசியல் ஆகிய காரணங்கள் புதிதாகப் புலம் பெயர்தலுக்குரியனவாக விளங்குகின்றன. இருப்பினும் உள்நாட்டுப் போர் காரணமாகவும், மனித உரிமை மீறல்களின் காரணமாகவும் மக்கள் தங்களது வாழிடங்களை விட்டு அயல்நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்று அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கி விடுகின்றனர்.

அதுபோல பொருளீட்டுவதற்காகப் புலம்பெயர்ந்தோரும் தாம் சென்ற நாடுகளிலேயே குடியுரிமை பெற்று நிரந்தராமாகத் தங்கி வாழ்கின்றனர். இவ்வாறு வாழ்வோர் தங்களது பண்பாட்டை மறவாது அதனைப் பின்பற்றி வாழ்கின்றனர். இவ்வாறு புலம் பெயர்ந்து வாழ்வோர் தங்களது நிலையையும், தங்களது தாயகத்தின் நினைவுகளையம், தங்களது கனவுகளையும், தாங்கள் புலம் பெயர்ந்து சென்ற போது அடைந்த துயரங்களையும், புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் தங்களது வாழ்க்கை நிலையையும் குறித்து பல்வேறு விதமான இலக்கியங்களைப் படைக்கின்றனர். இத்தகைய இலக்கியங்களே புலம் பெயர்ந்தோர் படைத்த இலக்கியங்களாகப் பரிணமிக்கின்றன.

ஈழத் தமிழர்களின் இலக்கியங்களும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் படைக்கின்ற இலக்கியங்கள் அனைத்தும் புலம் பெயர் இலக்கியங்களாக விளங்கி அவை புதியதொரு இலக்கிய வரலாறாக அமைந்திலங்குகின்றன எனலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p46.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License