இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

இசை எனும் இன்பம்

கிருஷ்ணன், சிங்கப்பூர்


"கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம், பழி பாவங்களும் நிறைந்த இந்த உலகை விட்டு அழைத்துச் செல்கிறது" என்கிறார் கவிஞர் தாகூர்.

இசை மனதில் தோன்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இசை முத்தமிழ்க்கு முன்னும், இயலுக்குப் பின்னும், நாடகத்திற்கு இடையில் நின்று இரண்டோடும் இணைந்து இயங்குவது. ஒசையும் நயமும் இசைந்து மனதுக்கு இன்பம் அளிப்பது இசை. இசை மன இறுக்கத்தைத் தளர்த்துகிறது - கோபதாபங்களைத் தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களைத் தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது.

-என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.

இசை வாழ்க்கையைத் தெய்வீகமாக்குகிறது. இசை மூலம் இறைவனை அடையலாம் என்று நிருபித்தவர்கள் நம் பெரியோர்கள். சங்க காலம், தொல்காப்பிய காலம் அதற்கு பின் வேத காலம்; இடைக்காலம் என்றெல்லாம் வரலாற்று காலங்களில் தோன்றிய நூல்கள் எல்லாம் இசையை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே காட்டுகின்றன. இசை மக்களுக்குக் காலம் காலமாக பண்பாட்டுக் காவல் கருவியாக ஆன்மீக உணர்வு - சமய நெறி - கோவில் வழிபாடு, நாட்டியம், மொழி உணர்வு என்று இருந்து வருகிறது. தமிழ் இசை வளர்ச்சி அடைந்தால் தமிழ்ப் பண்பாடும் வளர்ச்சியும் அடையும்.



தமிழ் மூன்று வகை - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

இயற்றமிழ்- சத்து, இசைத்தமிழ் - சித்து, நாடகத்தமிழ்- ஆனந்தம் என்பார்கள்.

இசைத் தமிழின் ஏற்றம்

முத்தமிழ் வித்தகத்தில் இசை நடுநாயகமாகத் திகழ்கிறது.

"ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே"

-என்கிறார் அப்பர் பெருமான்.

ஒசையிலிருந்து உலகம் உண்டாயிற்று என்று ஞானநூல் கூறுகிறது.

ஆட வல்லானுடைய திருக்கரத்தில் விளங்கும் உடுக்கையின் ஓசையில் உலகம் தோன்றியது.

"தோற்றந் துடியதனில்"

- உண்மை விளக்கம்.

எங்கும் நீர்மயமாகி எல்லாம் ஒடுங்கியபோது சிவபெருமான் வீணை வாசித்து மீளவும் உலகத்தை மலரச் செய்தார் என்று அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்:

"பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளன் றெம்மிறை நல்விணை வாசிக்குமே"



நவக்கிரங்களாகிய ஒன்பது கோள்களையும் சிவபெருமான் வீணை வாசித்து அவற்றின் கொடுமைகளை நீக்கி நல்லவராகச் செய்கிறார் என்று திருஞான சம்பந்தனார்.

"வேயுறு தோளியபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லந்தென்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாராவர்க்கு மிகவே"

இறைவனை வேண்டித் தவஞ் செய்து அசுவதரன், கம்பளதரன் என்ற இரு கந்தவர்கள் குண்டலமாகிச் சிவமூர்த்தியின் செவிகளில் அகலமாக இருந்து கொண்டு, இடையறாது இசைபாடி இறைவனை மகிழ்விக்கின்றார்கள்.

யாழ் வாசித்து உதயணன் மதயானையை அடக்கினான் என்று உதயண காவியம் கூறுகின்றது.

குழந்தையும், பாம்பும், பசுவும் இசை கேட்டுத் தம்மை மறந்து விடுகின்றன.

உண்மையான இன்பம்

இன்பத்தை விரும்பாத உயிர்களே இல்லை. எல்லா மதத்தவரும், எல்லாத் தேசத்தவரும் எல்லாக் காலத்தவரும், எல்லாக் கட்சியினரும் இன்பத்தை விரும்புகிறார்கள். எனக்குத் துன்பம் வேண்டும் என்று, எங்காவது, எவரேனும் கூறுகிறார்களா ? இன்பத்தை அடைந்தவர்கள் கோடிக்கொருவரும் இலர். ஏன்? இன்பத்தை விரும்புகிறார்களே அன்றி இன்பத்தைப் பெறும் வழியைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர் இல்லை.

நம்மில் அநேகர் பொருளால் இன்பம் வரும் என்று பிழையாகக் கருதி வாழ்நாள் முழுவதும் பொருள் தேடி வாடி வருந்தி ஓடி அலைந்து உழன்று இன்பத்தைப் பெறாது துன்புற்று மாய்கிறார்கள். பெருந்தனம் படைத்தவர்கள் அல்லும் பகலும் துன்புற்று துடிப்பதைக் கண் கூடாகப் பார்க்கின்றோம். ஆதலால் பொன்னால் பொருளால் இன்பம் இல்லை. விளக்கைக் கனியெனக் கருதி அதில் வீழ்ந்து மாயும் மாந்தர் பலர் துன்புறுவதை எங்கும் காண்கிறோம்.



"மதலையைப் பெறுநாள் துன்பம் வளர்த்திடு நாளுந் துன்பம்
விதலை நோயடையில் துன்பம் வியன் பருவத்துந் துன்பம்
கதமுறு காவர் வந்து கைப்பற்றில் கணக்கில் துன்பம்
இதமுறு பாலர் தம்மால் எந்நாளுந் துன்பமாகும்... (குசேல உபாக்யானம்)

"மனைமக்கள் சுற்றம் என்னும் மாயா
வலையைக்க அறியாதே
வினையிற் செருக்கியடி நாயேன்
விழலுக்கிறைத்து விடலாமே'.." (திருப்புகழ்)

"கற்பகமரத்தின் கீழ்வாழும் பெருஞ்சுகத்தை விரும்பி நான் பெருந்துன்பம் அடைந்தேன் "

என்று இந்திரனுடைய புதல்வன் ஆன்றான்.

"தண்டேன் துளிக்குந் தருழற்கீழ் வாழ்க்கை வெஃகிக்
கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோது என்றே கண்டேன்"

ஆதலால் பொன்னாலும், பொருளாலும், நிலபுலங்களாலும் சுகமில்லை என்பது உண்மை. எங்கே, எதனால் இன்பம் எய்தும்? எங்கே மனம் ஒடுங்குகின்றதோ, அங்கேதான் இன்பம் விளைகின்றது.

மனம் அடங்க இசை

மனம் அடங்கியிருக்கும் இடம் சுகம் ஆரம்பம். இந்தச் சுகத்தை மறைகள் எல்லாம் முழங்குகிறது.

"சும்மா விருக்கச் சுகஞ்சுக மென்று கருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவும் கேட்கும் அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பி என் பேதைமையால்
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்குள் சுகம்...." (வள்ளலார்)

இனிச் சும்மா இருப்பதாகிய மனம் அடங்கும் நிலை எவ்வாறு உண்டாகும் என்று சிந்திப்போம்.



பேய் மனம் எளிதில் அடங்காது, ஒடுங்காது. எண்ணில்லாத காலமாக அலைந்து அலைந்து, அதன் கொட்டத்தை அடக்குவது மிகவும் கடினம். வடநாட்டில் மனம் அடங்கக் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை சில துறவிகள் கையாளுகின்றார்கள். நமது தென்னாட்டில் மனம் அடங்கக் கண்டு பிடித்த வழி இசைப் பாடலேயாகும்.

சங்கீதம் தெரிந்தவர் தம்பூராவை மீட்டிப் பாட்டினால் கேட்டவர்கள் மனம் அப்படியே ஒருமைப்பாட்டை அடைந்து விடுகின்றது. சங்கீதத்தின் மூலம், இசை மூலம் பக்தி என்பது இறைவனோடு நம்மை இணைப்பதுடன் மனிதர்க்கு ஏற்படும் நோய்களையும் குறைபாட்டையும் இறைவன் அருளால் அகற்றிடும் மாமருந்தாகவும் திகழ்கிறது. பிணி தீர்க்கும் இசை என்பது வழக்கமான சங்கீதமோ அல்லது பாடல்களோ அல்ல. அதற்கென்று தனிப்பட்ட சில சாஸ்திரங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. அந்த சாஸ்திர விதிகளின்படி ஒரு சித்த புருஷன், ஒரு யோகி முயற்சி செய்தால் இசையின் வாயிலாகப் பிணிகள் அகற்றும் சாத்தியமுண்டு.

கல்யாணி, வாசந்தி, கோசலம், அனுமத்தோடி, சிவரஞ்சனி, புராகாகிய இராகங்கள் பிரகிருதி தத்துவத்தின் மாசுபடாத தொனியாகக் கொண்டவை.

1. நீலாம்பரி ராகம் சுகமான நித்திரை தரும்.
2. ஸ்ரீராகம் நல்ல ஜீரண சக்தியைத் தரும்.
3. சாமா மன உளைச்சலை தடுக்கும்.
4. சங்கீத சிகிச்சையும் ஒருவகை மருந்தாகப் பயன்படுகிறது. எனவே இனிய நாதம் மருந்தாக, ஓடி அலையும் மனத்தை ஒடுங்கச் செய்யும் பேராற்றலையுடையது.

இசை உயிரையும் உய்விக்கும்; பயிரையும் வளர்க்கும். கயிலை மலையைப் பேர்த்த இராவணன் இசையால் பாடி உய்வு பெற்றான். நாயன்மார்கள், ஆழ்வார்கள் நாளும் இன்னிசையால் தமிழை வளர்த்தார்கள். தமிழ் வேதப் பாடல்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழில் இசைத்து வாசித்து உலகுக்கு இன்பத்தை வழங்கினார்.(தமிழ் நாடு, ப.தண்டபாணியின் "திராவிட இசை" என்ற குறிப்பிலிருந்து...)

இன்று உலகெல்லாம் வழங்கி வரும் இசை முறைகள் எல்லாம் திராவிட இசையினின்று தோன்றியவையே. தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் பரவிச் சென்றபோது தங்கள் இசையையும் உடன் கொண்டு சென்றனர். எனினும் அந்தந்தப்பகுதிகளின் தட்பவெப்ப நிலைகளுக்குக்கேற்ப அது சில மாற்றங்களுடன் வளர்ந்து வந்துள்ளது எனக் கூறவேண்டும்.

ச ரி க ம ப த

இப்புவியெங்கும் வழங்கிவரும் இசைமுறைகளுக்கெல்லாம் அடிப்படையாய் இசை விளங்குபவை ச, ரி, க, ம, ப, த என்னும் ஏழு சுரங்களே. இவற்றை உலகுக்குத் தந்தவர்களும் பழந்தமிழர்களே. தமிழர்கள் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி.விளா தாரம் என்றழைத்த ஏழு இசை ஒலிகளுக்கும் முதலில் ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு நெடில் உயிரெழுத்துகளைக் குறிகளாக வைத்தனர். காலப்போக்கில் அந்த ஏழு இசை ஒலிகளுக்கும் பொருத்தமான தமிழ் எழுத்துகளாகிய ச, ரி, க, ம, ப, த என்பனவற்றைக் குறியீடுகளாகத் தமிழர்கள் மாற்றியமைத்தார்கள். வாய்ப்பாட்டுக்கு மட்டுமல்லாது இசைக்கருவிளை வாசிக்கக்கூடத் தமிழர்கள் பின்னர் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினர். அப்போது ஏற்பட்டவையே ச, ரி, க, ம, ப, த, என்னும் ஏழு தமிழ் குறியீடுகள். இது குறித்து சிகண்டி என்னும் முனிவரால் பண்டை நாளில் இயற்றப் பட்டுள்ள தமிழ் வெண்பா பின் வருமாறு எடுத்தியம்புகிறது.

முற்காலத்தில் இசை வழங்கிய எல்லாக் குழற் கருவிகளுக்கும் 'வங்கியம்' என்னும் பொதுப் பெயர் உண்டு. வங்கியத்தின் ஏழு துளைகளிலிருந்தும் இசை பிறக்கும் பொழுது அது எழுத்தால் பிறக்கும். ச, ரி, க, ம, ப, த என்பன அந்த எழுத்துகள். அந்த ஏழு எழுத்துகளையும் மாத்திரை குறையாது வாசித்தால் அவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும்.



குழலும் யாழும்

இன்று இசைக்குத் தாரச் சுருதியைக் கூட்டும் தம்புராவைப் பற்றி " கல்லாட்டம்" என்னும் பழைய பழந்தமிழ் இலக்கிய நூலில்தான் முதன் முதலில் தம்புராவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

யாழ்களில் தும்புரு யாழ் என்று ஒரு வகை யாழ் முன்னால் தமிழகத்தில் இருந்தது. அதுவே பிற்காலச் சுருதிக் கருவிக்கு அடிப்படையாகும். அந்தத் "தும்புரு" என்னும் தமிழ்ப் பெயரே பின்னர் வடமொழியில் தம்புரா எனத் திரிந்து வழங்கப்பட்டது. குழலும் யாழும் இசைக் கருவிகளில் முதன்மையானவை. முதன்முதலாகக் குழல் வசித்தவர் குமாரக் கடவுள்.

"குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன் " (திருமுருகாற்றுப்படை)

முதன்முதலாக யாழ் வாசித்தவர் சிவபெருமான். இதற்கு "வீணா தட்சிணாமூர்த்தியே" சான்று.

"குழலினிது யாழ் இனிது என்ப"

என்கிறார் திருவள்ளுவர்.

இறைவனை நமது தாய்மொழியால் பாடித் துதிப்பது மிகவும் சிறந்தது. பொருள் தெரிந்து பாடுகின்ற போது மனம் ஒன்றுகின்றது.

இனிமையும் நீர்மையும் தமிழாகும்.மொழிகளில் சிறந்த மொழி தமிழ், ஏனைய மொழிகள் கனமானவை. தமிழ் இலகுவான மொழி. கனமான உடம்புடையவனும் மென்மையான உடம்புடைவனும் நடக்கத் தொடங்கினால் பருத்த உடம்புடையவன் பிந்துவான்; மென்மையுள்ளவன் முந்துவான். வன்மையான பிற மொழிகள் பிந்தும், மென்மையான தமிழ் முந்தும். அதனாலே,

"முந்து தமிழ்மாலை கோடிக்கோடி "

-என்கிறார் அருணகிரி சுவாமிகள்

இறைவனுடைய செவியில் முந்திச் சென்று சேரும் மொழி தமிழ். அது இனிய மொழி. என்றுமுள்ள இளந்தமிழ், சாவாதது; மூவாதது, தேவாமிர்தம் போன்ற தித்திக்கும் மொழி. சித்திக்கும் முத்திக்கும் உரியது தமிழ். தேவாரம் முதலிய திருமுறைகளும், திருப்புகழ் தமிழ்மறைகளும் இசைமயமானவை. அகத்திய முனிவருடைய சீடர் பன்னிருவர்களில் ஒருவரான சிகண்டி முனிவர் "இசை நுணுக்கம்" என்ற நூலைத் தந்தவர்.

மனம் அடங்க - மனம் நிலை பெற, இசை எனும் இன்பத்தில் நாமும் மயங்கி மகிழ்வோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p5.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License