இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சங்கப்புலவர்கள் பார்வையில் பறக்கும் பறவைகள் - பகுதி 4

முனைவர். ப. பாண்டியராஜா


கூட்டமாகவும், ஒன்றிரண்டாகவும், தனியாகவும் பறவைகள் பறப்பது ஓர் இனிய காட்சி. ஒவ்வொரு நேரத்திலும் அவை ஒவ்வொருவிதமாகப் பறக்கின்றன. அதை உற்று நோக்கி, அதற்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவதில் சங்கப் புலவர்கள் வல்லவர்கள். பறவைகள் பறப்பதைப் பறை என்றார்கள் அவர்கள். இந்தப் ‘பறை’களின் வகைகளைப் பற்றி அவர்கள் கூறியிருப்பதையே இந்தக் கட்டுரைத் தொடரில் ஆய்ந்துவருகிறோம். நிரைபறை, மென்பறை ஆகியவற்றை முதற் கட்டுரையிலும், வா(வு)ப்பறை, துனைபறை ஆகியவற்றை இரண்டாம் கட்டுரையிலும் குறும்பறை, நோன்பறை ஆகியவற்றை மூன்றாம் கட்டுரையிலும் கண்டோம். இங்கு இன்னும் சில வேறு வகைப் ‘பறை’களைப் பற்றிக் காண்போம்.



7. வன்பறை

வல் பறை வன்பறை ஆனது. வல் என்பதற்கு வலிமை என்ற பொருள் இருந்தாலும், விரைவான, மிகுந்த கடுமையான என்ற பொருளும் உண்டு. விரைவாக அம்பு எய்யும் ஓரி என்னும் மன்னன் / வள்ளல் வல் வில் ஓரி என்று அழைக்கப்பட்டான். கடுமையுடன் சேர்ந்த விரைவு கொண்ட ஒரு பறத்தல் எப்படி இருக்கும்?

பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன் ஒருவன், தான் செல்லும் ஒரு வறண்ட பாலை நில வழியில், ஒரு யா மரத்தைப் பார்க்கிறான். அதன் உச்சியில் ஒரு கிளையில் அமர்ந்திருக்கும் பருந்து தன் சீழ்க்கையிடும் குரலில், தன் பெடையை அழைப்பதைக் கேட்கிறான். அப்போது அவனுக்குத் தன் தலைவியின் நினைவு மிக, அவன் பிரிவுத் துயரத்தால் ஏங்குவதை ஓர் அழகிய பாடலால் புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் கூறுவதைப் பாருங்கள்.



கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் - அகம் 33:3 - 6

இதன் பொருள்:

கிளைகளில் தளிர்களை இழந்த செங்குத்தான நிலையினை உடைய யா மரத்தில், ஒன்றாக மிக உயர்ந்துள்ள ஒரு கிளையில் இருந்த விரைந்த பறத்தலை உடைய சிள்ளென்று ஒலிக்கும் பருந்தின், தன் இரையைக் கொள்ள வல்ல ஆண்பறவை, வளைந்த வாயினை உடைய தனது பேடையைத் தன்னிடன் வரும்படி அழைக்கும்.

இங்கு, உயரமான ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஆண்பருந்தையே புலவர் காட்டினாலும், அதனை வன்பறைச் சேவல் என்கிறார்.



பருந்து (common Kite) என்பது இன்றைக்கு நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளைப் போல் ஏறக்குறைய காணாமற் போய்விட்ட ஒரு பறவையாகும். சிற்றூர்களில் இது மிக அதிகமான உயரத்தில் வட்டமிட்டவாறே மெதுவாகப் பறந்து கொண்டு திரிவதைக் காணலாம். தன் சிறகுகளைக் கூட, எப்போதாவது சிலமுறை அசைத்துக் கொண்டு, விரிந்த இறக்கைகளுடன் ஏறக்குறைய ஒரு Glider விமானம் போன்று மெதுவாக வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். ஊருக்கு வெளிப்பக்கம் உள்ள திறந்தவெளிகளில் வளைகளை விட்டு வெளியே ஓடும் சிறு எலிகளையோ, ஊருக்குள் தெருக்களில் தம் தாய்க் கோழியுடன் குப்பைகளில் மேய்ந்துகொண்டிருக்கும் குஞ்சுகளையோ கண்டால், மிகுந்த வேகத்துடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல், படு வேகமாகப் பாய்ந்து, கீழிறங்கித் தனது இரையைத் தன் கால்களினால் கவ்விக்கொண்டு மீண்டும் உயரே செல்லும் வன்மை படைத்தது பருந்து. இதனையே புலவர் கோள் வல் சேவல் என்றும், இது அவ்வாறு பறக்கும் திறன் உடையது என்பதைக் குறிக்க வன்பறைப் பருந்து என்றும் கூறுகிறார். இது, நாம் முன்பு கண்ட துனை பறை ஆகாது. துனை பறை என்பது இறக்கைகளை வேகமாக அடித்தவண்ணம் விரைந்து பறப்பது. வன்பறை என்பது அம்புபோல் விரைவாகப் பாய்வது.


8. கடும்பறை

கடு அல்லது கடும் என்பதற்குப் பல பொருள் உண்டு. கடும் பசி, கடும் கோபம், கடும் வேகம் ஆகிய சொற்களில் வரும் கடும் என்ற சொல் மிக்க என்ற பொருளைத் தரும்.

கடும் பரிப் புரவிக் கைவண் பாரி - அகம் 78/22

என்பதற்கு ‘மிக்க விரைவினையுடைய குதிரையையும் கைவண்மையையுமுடைய பாரியின்’ என்று உரை சொல்கிறது.

துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் - அகம் 9/16

என்பதற்கு விரைந்து செல்லும் குதிரைகளை வலியாற் செலுத்தி மேலும் மேலும் முடுக்கின்ற என்று உரை சொல்லுகின்றது. வேகமாகப் படிக்கும்போது இவற்றுக்கிடையே வேறுபாடு தெரியாது. துனை என்பது விரைவு; கடும் என்பது மிக்க விரைவு. கடும் பரிக் குதிரைகள் இன்னும் வேகமாகப் போக முடியாது. ஆனால் துனை பரிக் குதிரைகளை இன்னும் வேகமாகச் செலுத்த முடியும். எனவேதான் துனை பரி துரக்கும் என்று புலவர் கூறியுள்ளார். துரக்கும் என்பதற்கு மேலும் முடுக்கிவிடும் என்று பொருள். எனவே, நாம் முன்பு பார்த்த துனை பறை என்பது வேகமாகப் பறத்தலைக் குறிக்கும். இப்போது காண்பது மிக வேகமான பறத்தல். Express இரயிலுக்கும் Super fast இரயிலுக்கும் உள்ள வேறுபாடு இது. அப்படி மிக வேகமான பறத்தல் எப்படி இருக்கும்? தும்பி எனப்படும் தேனீக்கள் அவ்வாறு பறக்குமாம். எப்படி என்று பார்ப்போம்.



தெய்வங்கள் விரும்பும் மலர்களைத் தும்பிகள் மூசுதல் இல்லை; அவ்வாறு செய்தால் அவை தம் சிறகுகளை இழக்கும் என்பது சங்க கால நம்பிக்கை. அப்படி ஒரு தும்பியைப் பதிற்றுப்பத்து காட்டுகிறது.

மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய்ப்
பறை கண்ணழியும் பாடு சால் நெடுவரை - பதிற்றுப்பத்து 67:19-21

பூத்திருக்கும் காந்தள் பூவை நீங்காது படிந்து, தாது உண்ட

விரைந்து பறத்தலை உடைய தும்பி, (அப் பூ)தெய்வத்தால் விரும்பப்படுவதாதலால்

தன் பறக்கும் திறமையை இழக்கும் பெருமை கொண்ட நெடிய மலை

என்பது இதன் பொருள்.

தாதுண்ணும் தும்பி எவ்வாறு விரைந்து பறக்கும்? ஒருவேளை, விரைந்து பறக்கும் இயல்பை உடைய தும்பி தாதுண்ண வருகிறது என்ற பொருள் கொள்ளலாம். அதற்குத் துனை பறைத் தும்பி என்றலே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

கடும் பறை என்பதற்கு வலிமையான சிறகுகள் என்ற பொருள் கொண்டு, தனது சிறகுகள் வலைமையானவை என்ற செருக்குக் கொண்டு, தும்பி தெய்வம் விரும்பும் பூவை ஊதியது; எனவே தன் பறக்கும் திறனை இழந்தது என்று வேறோர் உரையும் கூறுகிறது. ஆனால், இது நமது எண்ணத்தைத் தும்பியின் மீது ஏற்றிச் சொல்வது போல் இருக்கிறதல்லவா?

ஊது என்பதற்குத் (வண்டு)தேன் குடி என்ற பொருள் உண்டெனினும், ஒலியெழுப்பு (hum) என்ற பொருளும் உண்டு. கீழ்க்கண்ட அடிகளைக் கவனியுங்கள்.

ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் - நற் 187/8

வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ - நற் 249/6

வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே - குறு 260/2

வண்டு தாது ஊத தேரை தெவிட்ட - ஐங் 494/1

சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத - கலி 123/2

வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத - கலி 127/3

சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ - அகம் 304/11

மற்ற ஒலிகளோடு தும்பிகளும் இயைந்து ஊத - வண்டு ஊதுவதால், அதன் ஒலி புலியின் உறுமல் என்றெண்ணி அஞ்ச - என்று பொருள்தரும் அடிகளில் ஊது என்பது ஒலி எழுப்பு என்ற பொருள்தானே தருகிறது. அடுத்து, தும்பிகள் ஊதுவதால் மலர்கள் மலர்கின்றனவாம். எப்படி? மலர்ந்த பூக்களில்தான் தும்பிகள் தேன் உண்ணும். எனவே, இங்கு ஊதுதல் தேன் குடித்தல் ஆகாது - ஒலி எழுப்புதலே. தும்பிகள் எவ்வாறு ஒலி எழுப்பும்? பெரும்பாலான பறவைகள் தம் தொண்டையினின்றும் குரல் எழுப்பி, அலகின் மூலமாய் வெளிவிடும். தும்பிகளின் இறக்கைகள் வேகமாய் அசைக்கப்படும்போது அவை எழுப்பும் ஒலியையே தும்பிகளின் ‘ரீங்காரம்’ என்கிறோம். இவ்வாறு இறக்கைகள் வேகமாய் அசைக்கப்படும்போது, அவற்றினின்றும் காற்று வேகமாக வெளிக்கிளம்புகிறது. இதனால் மலரும் தறுவாயில் இருக்கும் போதுகள் மலர்ந்துவிடும் என்பதையே, ‘சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ’ என்கிறார் புலவர். இதை நன்கு புரிந்துகொள்ள தும்பிகளின் இறக்கைகளின் அமைப்பைத் தெரிந்திருக்க வேண்டும்.



ஏனைய பறவைகளைப் போலன்றி, வண்டினங்களுக்கு நான்கு இறக்கைகள் உண்டு - வலப்பக்கம் மேல் கீழாய் இரண்டும் அவ்வாறே இடப்பக்கமும் - கொஞ்சம் பெரியதும் சிறியதுமாய் (Bees all have two pairs of wings , the hind pair being the smaller of the two). இவை நொடிக்குப் பத்து முதல் பதினைந்து அடி தூரம் பறக்கும் (They can fly ten to fifteen feet per second). இதுதான் துனை பறை. ஆனால் அவை தம் சிறகுகளை நொடிக்கு 230 தடவை அடிக்கின்றன (honeybee flaps its wings 230 times every second). இத்துணை விரைவாகச் சிறகுகள் அசைவதால்தான் அவற்றினின்றும் (ரீங்காரம்)ஒலியும் எழுகிறது - காற்றும் உருவாகிறது. இதுவே கடும் பறை.



மேலும், ‘மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய’ என்ற தொடரில் உள்ள மாறாது என்ற சொல்லில்தான் புலவர் பொடிவைத்திருக்கிறார். தும்பி, மலரின் மீது அசையாமல் (மாறாது) அமர்ந்திருக்கும்போது, தம் சிறகுகளை எவ்வளவு வேகமாக அசைத்துக்கொண்டிருக்கிறது என்பதை இரண்டாம் படம் தெளிவாகக் காட்டுவதைப் பார்க்கலாம். இதுவேதான் கடும்பறை என்றும் உணரலாம்.

(பறவைகள் இன்னும் பறக்கும்...)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p52c.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License